Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் ஒப்படைப்பு

Featured Replies

யாழில் இளைஞர் சுட்டுக்கொலை; பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை!

 

யாழப்பாணம் அரியாலைப் பகுதியில் நேற்றையதினம் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சூட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமையவே அதுதொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தினால் 24 வயதுடய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

இதன்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும்வரை தாம் வைத்தியசாலையிலிருந்து சடலத்தைப் பொறுப்பேற்கப்போவதில்லை என உயிரிழந்தவரின் உறவினர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழில் இளைஞர் சுட்டுக்கொலை; பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை!

23 Oct, 2017

https://news.ibctamil.com/ta/internal-affairs/shooting-in-jaffna-on-death-police-action

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் ஒப்படைப்பு

 

யாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் சடலம் இன்று மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து பொலிஸாரினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த டொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் நேற்று பிற்பகல் துப்பாக்கி சூட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 25 வயதுடைய டொன் போஸ்கோ ரிஸ்மன் என்ற இளைஞர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் ஒப்படைப்பு

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கி குண்டானது அவரது நெஞ்சு பகுதியூடாக சுவாசப்பை பகுதியை துளைத்து சென்ற நிலையில் சுவாசப்பையில் ஏற்பட்ட அதித இரத்தப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்..

இந்நிலையிலேயே குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இளைஞரின் மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் ஒப்படைப்பு

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/-young-man-who-died-in-gunfire

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலை தொடர்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.