Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் சந்தேக வினாக்கொத்து

Featured Replies

அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் சந்தேக வினாக்கொத்து
 

அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் உறுப்புரைகளின் ஊடாக, “ஏக்கிய ராஜ்ய” என்பது “பெடரல்” வரை (ஒற்றையாட்சி அமைப்பு சமஷ்டி) எவ்வாறு மொழிப்பெயர்ப்புக்கு உள்ளானது என்பது தொடர்பில் சந்தேகம் கொண்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அவை தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு கோரி, அரசாங்கத்துக்கு வினாக்கொத்தொன்றை அனுப்பிவைத்துள்ளது.  

இந்தப் பிரச்சினை தொடர்பில், தெளிவான மற்றும் சரியான பதிலை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.  

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை (23) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டு, அந்த வினாக்கொத்து, கடிதமொன்றின் ஊடாக அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  

இலங்கை சட்டத்தரணிகள் சங்கடத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வாவின் கையொப்பத்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வினாக்கொத்தில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

01. புதிய அரசமைப்புக்கான தேவை என்ன? 

02. (அ) இலங்கை இன்னும் ஒற்றையாட்சியாக இருக்கிறதா? 

(ஆ) அப்படியென்றால், ஒற்றையாட்சி எனும் பதத்தை சுருக்கமாக விளக்குக. 

 03. மாகாணங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்படும்? 

04. (அ) மத்திய அரசாங்கத்துக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ, தேவையேற்படின், அந்த அதிகாரங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றதா? 

(ஆ) அப்படியாயின் அது எவ்வாறு? 

05. ஏதாவது தகுதியான நிலைமையின் கீழ், ஜனாதிபதிக்கு தன்னுடைய அதிகாரங்களை நேரடியாக மாகாணங்களில் செயற்படுத்துவதற்கான இயலுமை உள்ளதா? 

06. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுகின்றதா? 

07.(அ) நீதிமன்ற முறைமை எப்படி? 

(ஆ) அரசமைப்புக்குள் நீதிமன்றம் இருக்கிறதா? 

(இ) அப்படியாயின், நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமிக்கப்படுவது எவ்வாறு? 

08. (அ) உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியனவற்றுக்கான நீதியரசர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகின்றனர்?  

(ஆ) 1. அவ்வாறு நியமிப்பதற்கான ஏதாவது முறைமையொன்று இருக்கின்றதா?  

2. அவ்வாறெனின், அந்த முறைமை என்ன?  

09. உயர்நீதிமன்ற நீதியரசர்களை நீக்குவது எவ்வாறு?  

10. நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களுக்கான நீதவான்கள் மற்றும் நீதிபதிகளை நியமித்தல், அவர்களுக்கு இடமாற்றம் வழங்குதல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியன, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக மட்டுமே மேற்கொள்ளப்படுமா?  

11. (அ) அரசமைப்பில் செயற்படுத்தக்கூடிய அடிப்படை உரிமை என்ன?  

(ஆ) அந்த அடிப்படை உரிமை, எந்த நீதிமன்றத்தின் ஊடாக செயற்படுத்த முடியும்?  

12. அரசமைப்புக்கு ஒத்திசைவில்லாத சட்டமூலத்தை, வரையறுக்கப்பட்ட காலத்துக்கு விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளதா?  

உள்ளிட்ட கேள்விகளே அந்த கடிதத்தின் ஊடாகக் கேட்கப்பட்டுள்ளன.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசமைப்புத்-திருத்தம்-தொடர்பில்-சந்தேக-வினாக்கொத்து/175-206067

  • தொடங்கியவர்

ஒரு­மித்த நாடு என்­பதன் அர்த்தம் என்ன?

p6-840bacf9376ceca88ef17d56731504ddacf8c6ce.jpg

 

சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் கேள்வி; அர­சி­ய­ல­மைப்­புக்­கான தேவை உள்­ளது என்றும் அறி­விப்பு   
-(எம்.எப்.எம்.பஸீர்)

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி நடத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையில் தமிழில் இலங்கை ஒரு­மித்த நாடு என கூறப்­பட்­டுள்­ளது. அதன் சிங்­

கள வடி­வத்தில் ' ஏகீய ராஜ்ய' என கூறப்­பட்­டுள்­ளது. அதன் அர்த்தம் பிள­வு­

ப­டாத நாடு (நொபெந்­துனு ரட்ட) என்­ப­தாகும். எனினும் தமிழில் ஒரு­மித்த நாடு என்­பதன் அர்த்தம் பிராந்­தி­யங்­களின் கூட்டால் ஒன்று சேர்க்­கப்­பட்ட நாடு என்­ப­தாகும்.

பிராந்­தி­யங்­களே இல்­லாத ஒரு நாட்டில் பிராந்­தி­யங்­களின் கூட்டால் ஒன்று சேர்ந்த நாடு எனும் அர்த்தைக் கொடுக்கும் ஒரு­மித்த நாடு என்ற சொற்­ப­தத்தை பயன்­ப­டுத்­து­வதன் நோக்கம் என்ன என்­பதில் நியா­ய­மான சந்­தேகம் எழு­கி­றது என இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யூ.ஆர்.டி. சில்வா கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

சிங்­க­ளத்தில் ஒரு சொல்­லையும் அதற்கு நேர் மாற்­ற­மாக தமிழில் இன்­னொரு சொல்­லையும் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பி­லேயே இந்த சந்­தேகம் எழு­கி­றது. எனவே அது தொடர்பில் விளக்கம் கோரி நாம் அர­சாங்­கத்­துக்கு அறிக்கை அணுப்­பி­யுள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நேற்று பிற்­பகல் கொழும்பு - புதுக் கடையில் உள்ள இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலை­மை­ய­கத்தில், எதிர்­வரும் தேசிய சட்ட மாநாடு 2017/2018 தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் பின்னர் கேச­ரிக்கு பிரத்­தி­யே­க­மாக வழங்­கிய விஷேட குறு­கிய செவ்­வியின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

முதலில் செய்­தி­யாளர் சந்­திப்பில் உரை­யாற்­றிய சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர், ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்­பி­லான விட­யங்­களை தெளிவு படுத்­தினார். அவர் அங்கு குறிப்­பி­டு­கையில்

' மக­நா­யக்க தேரர்கள் புதிய அர­சி­ய­ல­மைப்போ திருத்­தங்­களோ தேவை­யில்லை என்று தெரி­விப்­பது தொடர்பில், ஜனா­தி­பதி உள்­ளிட்ட பல தலை­வர்கள் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக நான் அறி­கின்றேன். உண்­மையில் மகா­நா­யக்க தேரர்கள் தவ­றாக வழி நடாத்­தப்­பட்­டி­ருக்­கலாம். இன்னும் அர­சி­ய­ல­மைப்பு அறி­முகம் செய்­யப்­ப­ட­வில்லை. தற்­போது இடைக்­கால அறிக்கை மட்­டுமே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் காங்­கிரஸ் தவிர ஏனைய அனைத்து கட்­சி­களும் முன்­வைத்­துள்ள யோச­னை­களே அந்த இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அவை தொடர்பில் ஆரா­யப்­படல் வேண்டும். இந்த இடைக்­கால அறிக்கை தொடர்பில் நாம் எமது நிலைப்­பாட்டை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் என்ற ரீதியில் தெளி­வாக அர­சாங்­கத்­துக்கு அறி­வித்­துள்ளோம். அதில் உள்ள பல தெளி­வற்ற விட­யங்­களை தெளி­வு­ப­டுத்­தவும் கோரி­யுள்ளோம்.

இதற்­கான பதிலை சட்ட மாநாட்­டுக்கு வரும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, எமக்கு அளிப்பார் என நாம் எதிர்ப்­பார்க்­கின்றோம்.

அர­சியல் அமைப்பு தொடர்பில் அனைத்து தரப்­புக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­களும் உள்­ள­டக்­கப்­படல் வேண்டும். இடைக்­கால அறிக்­கையில் அர­சியல் அமைப்பு தொடர்பில் நாம் கொடுத்த யோச­னைகள் கூட சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இந்த அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் மகா­நா­யக்க தேரர்­க­ளுடன் கல்ந்­து­ரை­யா­டப்­படல் வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே போன்றே ஏனைய மதங்­களின் மதத் தலை­வர்­க­ளி­னதும் அபிப்­பி­ரா­யங்கள் அவர்­க­ளுடன் கல்ந்­து­ரை­யா­டப்­பட்டு பெறப்­ப­ட­வேண்டும். அப்­போதே அர­சி­ய­லுக்கு அப்பால் சென்று நாட்­டுக்கு சிறந்த அர­சியல் யாப்பை உரு­வாக்க முடியும்.

உண்­மை­யி­லேயே புதிய அர­சியல் அமைப்­புக்­கான தேவை உள்­ளதா இல்­லையா என்ற கேள்­விக்கு முழு­மை­யாக இல்லை என மறுத்து பதி­ல­ளிக்க முடி­யாது. நாட்­டுக்கு அர­சியல் அமைப்பு ஒன்றின் தேவை இருக்­கு­மாயின் அதனை எப்­போது, எப்­படி கொண்டு வர வேண்டும் என்­பதை பொறுப்­புடன் அர­சாங்­கமே தீர்­ம­னைக்க வேண்டும்.

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான ஆரம்­பமே உள்­ளது. அந்த அர­சியல் அமைப்பின் இறுதி வடிவம் இன்னும் இல்லை. எனவே ஆரம்ப வடி­வத்தை வைத்து அர­சியல் அமைப்பின் முடிவை அல்­லது இறுதி வடி­வத்தை பற்றி பேசு­வது பொருத்­த­மற்­றது. என்றார்.

இந்­நி­லையில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் பின்னர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யூ.ஆர்.டி. சில்வா கேச­ரிக்கு பிரத்­தி­யே­க­மாக குறு­கிய நேர செவ்­வி­யொன்­றினை வழங்­கி­ய­போது குறிப்­பி­டு­கையில்

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி நடத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையில் தமிழில் இலங்கை ஒரு­மித்த நாடு என கூறப்­பட்­டுள்­ளது. அதன் சிங்­கள வடி­வத்தில் ' ஏகீய ராஜ்ய' என கூறப்­பட்­டுள்­ளது. அதன் அர்த்தம் பிள­வு­ப­டாத நாடு ( நொபெந்­துனு ரட்ட) என்­ப­தாகும். எனினும் தமிழில் ஒரு­மித்த நாடு என்­பதன் அர்த்தம் பிராந்­தி­யங்­களின் கூட்டால் ஒன்று சேர்க்­கப்­பட்ட நாடு என்­ப­தாகும். பிராந்­தி­யங்­களே இல்­லாத ஒரு நாட்டில் பிராந்­தி­யங்­களின் கூட்டால் ஒன்று சேர்ந்த நாடு எனும் அர்த்­தத்தைக் கொடுக்கும். ஒரு­மித்த நாடு என்ற சொற்­ப­தத்தை பயன்­ப­டுத்­து­வதன் நோக்கம் என்ன என்­பதில் நியா­ய­மான சந்­தேகம் எழு­கி­றது. சிங்­க­ளத்தில் ஒரு சொல்­லையும் அதற்கு நேர் மாற்­ற­மாக தமிழில் இன்­னொரு சொல்­லையும் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பி­லேயே இந்த சந்­தேகம் எழு­கி­றது. எனவே அது தொடர்பில் விளக்கம் கோரி நாம் அர­சாங்­கத்­துக்கு அறிக்கை அணுப்­பி­யுள்ளோம்.

1978 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தற்­போதும் நடை முறையில் உள்ள அர­சி­ய­ல­மைப்பில் இலங்கை 'ஏகிய ராஜ்ய' என்றே சிங்­க­ளத்தில் கூறப்­பட்­டுள்­ளது. நடை முறை அர­சியல் யாப்பில் ஒற்றை ஆட்சி என கூறப்­பட்­டுள்­ளது. சிங்­க­ளத்தில் மாறாத பதம் தமிழில் மாறும் போது நியா­ய­மான சந்­தேகம் எழு­வது நியா­ய­மா­ன­தே­யாகும். எனவே தான் நாம் இந்த விடயம் உள்­ளிட்ட 12 விட­யங்கள் தொடர்பில் அர­சாங்­கத்­திடம் விளக்கம் கோரி­யுள்ளோம். என்றார்.

இது இவ்­வாறு இருக்க இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் அர­சாங்­கத்­திடம் புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் விளக்கம் கோரி­யுள்ள 12 விட­யங்­களும் வரு­மாறு:

01. புதிய அர­சியல் அமைப்­புக்­கான அவ­சியம் என்ன?

02. அ. இலங்கை தொடர்ந்தும் ஒற்றை ஆட்சி ( ஏகிய ராஜ்ய) நாடா?

      ஆ. அப்­ப­டி­யாயின், 'ஏகிய ராஜ்ய' எனும் விட­யத்தை சுருக்­க­மாக விளக்­கவும்

03. மாகா­ணங்­க­ளுக்கு எவ்­வா­றான அதி­கா­ரங்­களை வழங்­கு­வீர்கள்

04. அ. மத்­திய அர­சுக்கோ அல்­லது பாரா­ளு­மன்­றத்­துக்கோ அந்த அதி­கா­ரங்­களை அவ­சியம் ஏற்­ப­டு­மாயின் மீளப் பெற முடி­யுமா?

     ஆ. அப்­ப­டி­யானால் அது எப்­படி?

05. ஏதா­வது பொருத்­த­மான நிலை­மையின் போது ஜனா­தி­ப­திக்கு தமது அதி­கா­ரத்தை மாகா­ண­மொன்­றுக்குள் நேர­டி­யாக செலுத்­த­லாமா?

06. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வதா?

07. அ.நீதி­மன்ற கட்­ட­மைப்பு எவ்­வா­றா­னது?

      ஆ. அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­டுமா?

      இ. அப்­ப­டி­யானால் நீதி­மன்­றங்கள் தொடர்பில் நீதி­ப­தி­களை நிய­மிப்­பது எப்­படி?

08. அ. உயர் நீதி­மன்றம் மற்றும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றங்­க­ளுக்கு நீதி­ப­தி­களை நிய­மிப்­பது எப்­படி?

     ஆ. 1 - அவ்­வா­றான நிய­ம­னங்­க­ளுக்கு முறைமை ஒன்று உள்­ளதா?

           2 - அப்­ப­டி­யானால் அந்த முறைமை என்ன?

09. உயர் நீதிமன்ற நீதியரசர்களை பதவி விலக்குவது எப்படி?

10. இலங்கை பூராகவும் உள்ள மாவட்ட, நீதிவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமித்தல், இடமாற்ரம்ச் எய்தல் தொடர்பில் நீதிச் சேவை ஆணைக் குழு ஊடாக மட்டும் நடவடிக்கை முன்னெடுப்பதா?

 11. அ. அரசியலமைப்பின் படி உறுதிப்படுத்தபப்டும் அடிப்படை உரிமைகள் என்ன?

      ஆ. அந்த அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவது எந்த நீதிமன்றங்களின் ஊடாக?

 12. அரசியலமைப்புக்கு உட்படாத சட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லைக்குள் விசாரணை செய்யும் அதிகாரம் நீதிமன்றுக்கு உள்ளதா?

 இந்த 12 விடயங்கள் தொடர்பிலேயே சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.