Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடிவேலுவின் சம்பளம், மீனாவுக்குப் பதில் ரேவதி! ‘தேவர் மகன்’ ஃப்ளாஷ்பேக் #25YearsOfThevarMagan

Featured Replies

வடிவேலுவின் சம்பளம், மீனாவுக்குப் பதில் ரேவதி! ‘தேவர் மகன்’ ஃப்ளாஷ்பேக் #25YearsOfThevarMagan

 

‘தேவர் மகன்’ படம் ரிலீஸாகி கால்நூற்றாண்டு கடந்தும் அந்தப்படம் உருவாக்கிய அதிர்வலைகளும் பெரிய தேவர், சக்தி, மாயன், இசக்கி... என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இன்றும் நம் மனங்களில் பசுமையாக உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக அப்போது பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். கமல்ஹாசன்மீது இயல்பிலேயே அன்புள்ளவர். கமலின் அம்மாவான ராஜலட்சுமியின் பெயரையே தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்து இருப்பவர். அந்த ‘ராஜலட்சுமி ஃபிலிம்ஸ்’ மூலம் 'காதலா காதலா', 'பஞ்ச தந்திரம்', 'வல்லவன்' உள்பட பல படங்களைத் தயாரித்தார். சமீபத்தில் வெளியான 'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் நடிகராகவும் பலரால் அறியப்பட்டார். இவர், அன்றைய தன் ‘தேவர் மகன்’ நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். 

தேவர் மகன்

 

'தேவர் மகன்' படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் பொள்ளாச்சியிலேயே படமாக்குவது என்று கமல்சாரும், டைரக்டர் பரதனும் முடிவு செய்தனர். நான் லொகேஷன் பார்க்க ஒரு வாரத்துக்கு முன்பே பொள்ளாச்சிக்குச் சென்றுவிட்டேன். முதல்நாள் ஷூட்டிங் ஆழியாறு அணைக்கு அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் என்று திட்டமிட்டு படப்பிடிப்புக்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். ஏராளமான கார்கள், ஜெனரேட்டர் என எங்கள் டீம் அனைவரும் அங்கு குவிந்துவிட்டோம். கோவை விமான நிலையத்திலிருந்து கமல் சார், பரதன், பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் நேராக அங்கு வந்தனர். 

முன்பு 'சிங்கார வேலன்' ஷூட்டிங்குக்காக கமல்சார் அங்கு வந்திருந்தபோது எஸ்டீம் காரை பயன்படுத்தினார். ஆனால் அங்கு அந்தக் கார் கிடைக்காததால் அம்பாஸிடர் காருடன்தான் சென்றிருந்தேன். ‘காரா முக்கியம்’ என்பதுபோல், கமல் சார், பரதன், பி.சி.ஸ்ரீராம் ஆகியோருடன் நானும் அதில் அமர்ந்து லொகேஷனுக்கு வந்தோம். எல்லோரும் காலை டிபன் முடித்து ஷூட்டிங்குக்குத் தயாரானோம். கெளதமி ஷாக்ஸ் மாட்டிக்கொண்டு குளத்தில் இறங்குவதுபோன்ற காட்சியை எடுக்க திட்டமிட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் இயக்குநர் பரதன், திடீரென 'பேக்கப்...' என்று சொல்ல எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி. பிறகு அப்படியே ஒட்டுமொத்த ட்ரூப்பும் வேறு லொகேஷன் நோக்கிச் சென்றோம். கடைசியாக பரதன் மாலை நாலு மணிக்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கேதான் ஆட்டின் மடியிலிருந்து பாலை கமல் சார் கவுதமியின் முகத்தில் பீச்சி அடிப்பதுபோன்ற காட்சி முதன்முதலாக படமாக்கப்பட்டது.

தேவர் மகன் 

மனைவி கமலா அம்மாவுடன் ஷூட்டிங்கு வந்திருந்தார் சிவாஜி சார். அவர் தனக்கு நெருக்கமான நண்பரின் வேட்டைக்காரன் புதூரில் உள்ள பங்களாவில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டுவிட்டு திரும்புவார். இதற்கிடையில் சிவாஜி சாருக்கும் கமல் சாருக்கும் படப்பிடிப்புக்கு யார் முதலில் வருவது என்பதில் கடும் போட்டி. காலை ஆறு மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். இருவரில் ஒருவர் வந்துதான் அந்தக் கட்டடத்தின் வாட்ச்மேனையே எழுப்புவார்கள். இருவரின் போட்டியைப் பார்த்து இயக்குநர் பரதன் ஓரிருமுறை கண்கலங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். போட்டி அந்தளவுக்கு இருக்கும். சிவாஜிசார் காலை ஆறு மணிக்கு வந்தால் மதியம் இரண்டு மணிக்குத் திரும்பிவிடுவார். எப்போதாவது இரவு படப்பிடிப்பு இருந்தால் மதியம் இரண்டு மணிக்குமேல் வருவார். 

இந்தப் படத்தில் சிவாஜிசார் காலத்தில் நாடகத்தில் நடித்துவந்த 'காக்கா' ராதாகிருஷ்ணனும் கள்ளபார்டும் நடித்தே ஆகவேண்டும் என்பதில் கமல் சார் உறுதியாக இருந்தார். நாங்கள் நடிகர் சங்கத்தை அணுகி அவர்களின் போன் நம்பர், விலாசத்தைக் கேட்டோம். இன்று உள்ளதுபோல் அப்போது நடிகர் சங்கத்தில் எந்த டேட்டா பேஸும் பெரிதாக இருக்காது. அதனால், 'எங்களிடம் இல்லை 'என்று சொல்லிவிட்டனர். பிறகு நாங்களாகவே தேடி அலைந்து அவர்களைக் கண்டுபிடித்து ஒப்பந்தம் செய்தோம். பிறகுதான் நாசருக்கு அப்பாவாக 'காக்கா' ராதாகிருஷ்ணனும், ரேவதிக்கு அப்பாவாக கள்ளபார்ட்டும் நடித்திருந்தனர். படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை முதலில் 'கவிதாலயா' அனந்து சாரிடம் ஒப்படைத்தார் கமல்சார்.

தேவர் மகன்

முதலில் ரேவதி நடிக்கும் கேரக்டரில் அப்போது உச்சத்தில் இருந்த மீனாவை ஒப்பந்தம் செய்திருந்தோம். மீனாவும் படப்பிடிப்புக்காகப் பொள்ளாச்சி வந்துவிட்டார். படத்தின் முக்கிய காட்சியான வேலிச்சண்டை காட்சியை மீனா, கள்ளபார்ட்டை வைத்து பரதன் படமாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பேசிய வசனம் குறித்து கமல்சாரும் டைரக்டரும் விவாதம் செய்தனர். மீனாவும், கள்ளபார்ட்டும் பேசிய வசனங்களில் கமல்சாருக்குத் திருப்தியில்லை. இதனால் படப்பிடிப்பு யூனிட்டை மட்டும் பொள்ளாச்சியில் அப்படியே விட்டுவிட்டு பரதன், பி.சி.ஸ்ரீராம், கமல்சார், நான் நால்வரும் அங்கிருந்து ஊட்டிக்கு புறப்பட்டோம். இரண்டு நாளில் முடிந்துவிடும் என்று நினைத்து இருந்த டிஸ்கஷன் ஒரு வாரம் தொடர்ந்தது. பிறகு அங்கிருந்தபடியே பொள்ளாச்ச்சியில் இருந்த மீனா உள்ளிட்ட யூனிட்டை சென்னைக்கு திரும்பச் சொல்லி விட்டோம். ஊட்டியில் ஒரு மாதம் டிஸ்கஷன் நடத்தப்பட்டது. அங்கேயே அமர்ந்து கதை, திரைக்கதை, வசனத்தை கமல் சாரே எழுதினார். இதற்கிடையில் மீனா தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ஏகப்பட்ட படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் அவரால் 'தேவர் மகன்' படத்தில் நடிக்க முடியவில்லை. பிறகுதான் அவரின் கேரக்டருக்கு ரேவதி நடித்தார்.
                    
வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் இந்தப்படம்தான் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கியது. அவர் அப்போதுதான் 'என் ராசாவின் மனசுல' படத்தில் நடித்து முடித்து இருந்தார். 'தேவர் மகன்' படத்துக்காக மொத்தம் 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசி, ஆறுமாதம் கால்ஷீட் வாங்கி இருந்தேன். பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த வடிவேலுவுக்கு அம்மை வந்து மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கென்று தனியாக மருத்துவம், உதவியாளர் வைத்து அவரை கவனமாக பார்த்துக்கொண்டோம். 'இது நடிகரோட புரொடக்‌ஷன் கம்பெனி அதனால நடிகர், நடிகைகளுக்கு மரியாதை குறைவாக எதுவுமே நடக்கக்கூடாது. பெரிய நடிகர், சின்ன நடிகர் என்கிற பாகுப்பாடு பார்க்காம எல்லோருக்கும் ஏசி அறையே ஏற்பாடு பண்ணுங்க. குறிப்பாக அவங்க இதுக்கு முன்னாடி வாங்கின சம்பளத்தைவிட அதிகமாக கொடுக்கணும்" என்று கமல்சார் என்னிடம் கறாராக சொல்லி விட்டார், நானும் அதையே ஃபாலோ பண்ணினேன். 

'தேவர் மகன்' ஆரம்பம் முதல் ரிலீஸ்வரை எனக்குக் கிடைத்த சம்பளம் 16 ஆயிரத்து 500 ரூபாய். பொள்ளாச்சியில் இருக்கும் மணீஸ் லாட்ஜில் எல்லோருக்கும் அறை புக் செய்து இருந்தோம். அங்கே இரண்டு அறைகளில் மட்டுமே ஏ.சி இருந்தது, அப்போது 'பொண்ணுமணி' படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி வந்திருந்த கார்த்திக்குக்கு ஒரு ஏ.சி அறையும், செளந்தர்யா ஏ.சி இல்லாத அறையிலும் தங்கிக்கொண்டனர். பரதன், பி.சி.ஸ்ரீராம், ரேவதி என்று யாருக்குமே ஏ.சி அறைகள் கிடைக்கவில்லை. இதனால் கமல் சார் மறுநாளே மணீஸ் லாட்ஜில் உள்ள அனைத்து அறைகளிலும் தன் சொந்த செலவில் ஏ.சி சாதனத்தை பொருத்தினார்.

தேவர் மகன்

முதல் ஷெட்யூல் 53 நாட்கள், இரண்டாவது ஷெட்யூல் 30 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்தது. இப்போது ஏகப்பட்ட ஜெனரேட்டர்கள் பயன்படுத்தும் சூழலில் அன்று ஒரேயொரு ஜெனரேட்டரை மட்டுமே வைத்துக்கொண்டு மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்தோம். இதுவரை எத்தனையோ படங்களில் பொள்ளாச்சியை பார்த்து இருப்பீர்கள், ஆனால் 'தேவர் மகன்' படத்தில் பார்த்த லொகேஷன்களை வேறு எந்த படத்திலும் பார்த்திருக்கமாட்டீர்கள். அதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். அவர் மட்டுமின்றி அவரிடம் அன்று உதவி ஒளிப்பதிவாளர்களாக இருந்தவர்கள் யார்யார் என்று சொன்னால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். கே.வி.ஆனந்த், ஜீவா, பாலசுப்ரமணியெம், எம்.எஸ்.பிரபு, திரு என்று பின்னாளில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்கள் இவர்கள்தான் அன்றைய அவரின் உதவியாளர்கள். 

 

படத்தில் பெரிதாக பேசப்பட்ட கமல் சாரும், நாசரும் மோதிக்கொள்ளும் க்ளைமாக்ஸ் காட்சி தளி என்கிற இடத்தில் படமாக்கப்பட்டது. சாப்பிடும் உணவு உள்பட எங்கும் எப்போதும் படியும் புழுதியில் மிகவும் கஷ்டப்பட்டு அந்தக்காட்சியை படமாக்கினார்கள். இப்படியான கஷ்டங்கள்தான் அந்தப் படம் கால்நூற்றாண்டு கடந்தும் நம் மனதில் நிற்க காரணம். நூற்றாண்டு கடந்தாலும் அப்போதும் ‘தேவர் மகன்’ நம்மை நிச்சயம் ஈர்க்கும்!”

http://cinema.vikatan.com/tamil-cinema/106035-vadiveluss-salary-meena-was-first-choice-devar-magan-rewind.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.