Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சரவை பேச்சாளர் தயாசிறியின் யதார்த்தமான நிலைப்பாடு

Featured Replies

அமைச்சரவை பேச்சாளர் தயாசிறியின் யதார்த்தமான நிலைப்பாடு

 

நாட்டில் தமிழ் பேசும் மக்­களின் தேசியப் பிரச்­சி­னைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நியா­ய­மான அர­சியல் தீர்­வைக்­கா­ண­வேண்டும் என்ற கோரிக்­கைகள் வலுத்­து­வரும் நிலையில் அதற்கு எதி­ரான போக்­குகள் அனைத்து மட்­டத்­திலும் காணப்­ப­டு­கின்­றன. ஒரு துளி­ய­ள­வு­கூட தேசிய இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு தயா­ரில்லை என்­ப­தனை இன­வாத சக்­திகள் வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன. அத்­துடன் சில பௌத்த தேரர்­களும் தீர்­வுத்­திட்­டத்தை உள்­ள­டக்­கப்­போகும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கக்­கூ­டாது என கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன. எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரு­வதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­­டு­வதாக கூறி­வ­ரு­கின்­றது.

குறிப்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரு­வதில் உறு­தி­யாக இருப்­ப­தா­கவே காட்­டிக்­கொள்­கின்­றனர். மேலும்

அமைச்சர் ராஜித சேனா­ரட்ன, இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா

போன்­றோரும் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் அதி­காரப் பகிர்வின் முக்­கி­யத்­துவம் மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யதன் தேவை என்­பன தொடர்பில் தொடர்ந்து வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றனர்.

இந்­நி­லையில் இணை அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­க­ரவும் நேற்று முன்­தினம் நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைக்­க­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை மிகவும் வலு­வான முறையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

குறிப்­பாக தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு இறுதி சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ள­தா­கவும் அந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தீர்வை அடைந்­து­வி­டு­வது மிகவும் கட்­டா­ய­மா­ன­தாகும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்த அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர இன­வா­திகள் இதனை குழப்­பு­வ­தற்கு முயற்­சிப்­ப­தா­கவும் கவலை வெளியிட்­டி­ருக்­கின்றார்.

தமிழ் மக்­க­ளுக்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை அவர்­க­ளுக்கு தீர்­வுத்­திட்டம் எதற்கு என கேள்­வி­யெ­ழுப்­பிய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மிகவும் தைரி­யத்­துடன் பதி­ல­ளித்த அமைச்சர் தயா­சிறி தமி­ழர்­க­ளுக்கு அபி­வி­ருத்தி மற்றும் அர­சியல் அதி­கார பிரச்­சினை இருக்­கின்­றது என்­ப­தனை ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான அர­சியல் பிரச்­சினை இருக்­கின்­றது. அதனை தீர்த்து வைக்­க­வேண்­டி­யது எமது கட­மை­யாகும். அதனை புறந்­தள்ளி செயற்­பட முடி­யாது. அந்த மக்­களின் அர­சியல் பிரச்­சி­னையை தீர்க்­கா­விடின் எதிர்­கா­லத்தில் மேலும் பல்­வேறு நெருக்­க­டிகள் நாட்­டுக்கு ஏற்­படும். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்­ததும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மக்­களை மீட்­டெ­டுத்தோம். ஆனால் அதன் பின்னர் நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுப்­பதில் பாரிய நெருக்­க­டிகள் இருக்­கின்­றன. இந்­நி­லையில் மாகா­ண­ச­பை­க­ளுக்கு அதி

­கா­ரங்கள் வழங்­கு­வது தொடர்பில் பேசப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக நான் ஒரு மாகா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக இருந்­தி­ருக்­கின்றேன் என்று அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

 எனக்கு மாகா­ண­ச­பை­களின் அடிப்­படைப் பிரச்­சி­னைகள் என்­ன­வென்று தெரியும். குறிப்­பாக ஆளு­நரின் தலை­யீட்­டினால் பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­படும். வடக்கு மட்­டு­மல்ல நாட்டின் அனைத்து மாகா­ண­ச­பை­க­ளிலும் இந்தப் பிரச்­சினை ஏற்­படும். நான் சில வேளை­களில் ஆளு­ந­ருடன் சண்­டை­பி­டித்த சந்­தர்ப்­பங்­களும் உள்­ளன. எனவே தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு அதி­காரப் பகிர்வு முறை­மைக்கு நாம் செல்­ல­வேண்டி உள்­ளது .தமிழ் தரப்­பிலும் தற்­போது பாரிய இன­வா­திகள் உரு­வெ­டுத்து வரு­கின்­றனர். இதனால் சம்­பந்தன் சுமந்­திரன் போன்ற மித­வாதத் தலை­வர்­க­ளுக்கு பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது என்றும் அமைச்சர் எடுத்­து­ரைத்­தி­ருந்தார்.

தற்­போது இரண்டு கட்­சி­களும் இணைந்து இந்த தீர்வு முயற்­சியை எடுக்­கின்­றன. எனவே இது ஒரு­மிக சிறந்த திருப்­பு­மு­னை­யாகும். இந்த சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்டால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு சந்­தர்ப்பம் கிடை­க்காது. இறுதி சந்­தர்ப்­பமே எமக்கு கிடைத்­தி­ருக்­கி­றது. அதனை நாங்கள் சரி­யான முறையில் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும். வடக்கு மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வை முன்­வைக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதனை இனியும் காலம் கடத்த முடி­யாது. அவர்­களின் பிரச்­சி­னையைத் தீர்க்க முடி­யா­விடின் என்­னதான் செய்­வது? தமிழ் மக்கள் தற்­போது நம்­பிக்­கை­யுடன் இருக்­கின்­றனர். அந்த நம்­பிக்­கையை சீர­ழிக்­கக்­கூ­டாது எனவும் இணை அமைச்­ச­ரவை பேச்­சாளர் தயா­சிறி தீர்­வுத்­திட்டம் அவ­சி­யம்­தானா? என்று கேள்வி எழுப்­பிய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பதி­ல­ளித்­தி­ருக்­கின்றார்.

இந்தப் பிரச்­சினை 70 வரு­ட­கா­ல­மாக தொடர்­கி­றது. அதனைத் தீர்க்­க­வேண்­டிய கடமை எமக்­கி­ருக்­கி­றது. இது­தொ­டர்பில் நாங்கள் அர­சியல் தீர்­மானம் ஒன்றை எடுக்­க­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. நாம் இந்த விட­யத்தில் தள­ர­மாட்டோம். சரி­யான தீர்­மா­னத்தை எடுப்போம். தமிழ் மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் இருப்­ப­தால்தான் யுத்தம்

நடந்­தது. இவ்­வ­ளவு இழப்­புக்களும் ஏற்­பட்­டன. எனவே மீண்டும் அவ்­வா­றா­ன­தொரு நிலை­மைக்கு நாட்டை இட்டுச் செல்ல முடி­யாது. ஒற்

­றை­யாட்சி முறை­மைக்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையைத் தீர்த்­து­விட வேண்டும் எனவும் தயா­சிறி ஜய­சே­கர மிகவும் திட்­ட­வட்­ட­மாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

உண்­மையில் வாக்­கு­க­ளுக்கு பயந்து இந்த விட­யத்தில் மனச்­சாட்­சிக்கு அமைய கருத்து வெளியி­டா­தி­ருக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளு க்கு மத்­தியில் தயா­சிறி ஜய­சே­கர மிகவும் தைரி­ய­மான முறையில் உண்­

மை­யையும் யதார்த்­தத்­தையும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.

மிகவும் வலு­வான முறையில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை புரிந்து

 அவர் வெளியிட்ட கருத்­துக்­களும் எந்­த­வொரு கட்­டத்­திலும் தனது நிலைப்­பாட்­டி­லி­ருந்து சற்றும் வில­கா­மலும் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­மையும் பாராட்­டப்­ப­ட­வேண்­டிய விட­யங்­க­ளாகும். இதன்­மூலம் தென்­னி­லங்­கையில் இவ்­வாறு மித­வாத தலை­வர்கள் உரு­வா­கி­

வ­ரு­கின்­றமை தெளிவா­கின்­றது என்­ப­துடன் ஆரோக்­கி­ய­மா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது. தயா­சிறி ஜய­சே­கர தென்­னி­லங்­கையில் தனது

வாக்கு வங்­கிக்கு அபாயம் ஏற்­படும் என்று எந்­த­வி­த­மான அச்­சத்­தையும் வெ ளிக்­காட்­ட­வில்லை.

மாறாக உண்­மையை மிகவும் உரக்க கூறி­யி­ருக்­கின்றார். உண்­மை யில் தயா­சிறி ஜய­சே­கர கூறு­வ­தைப்­போன்று மிகவும் முக்­கி­ய­மான கால­கட்­டத்தில் நாம் இருக்­கின்றோம். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு விரைவில் ஒரு தீர்­வைக்­கா­ண­வேண்­டிய தீர்க்­க­மான கட்­டத்தில் அதற்

­கான நகர்­வுகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

எனவே தற்­போ­தைய இணக்க அர­சியல் சூழலை பயன்­ப­டுத்தி தீர்­வைக்­காண முயற்­சிக்­க­வேண்டும். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சிக்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். மாறாக இதனை குழப்­பி­விட்டு அதில் அரசியல் குளிர்காய எவரும் முனையக்கூடாது. புதிய அரசியலமைப்பை உரு

வாக்கி அதனூடாக பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியிலேயே அமைச்சர் தயாசிறி ஜயசேகர இருக்கின்றார். இவ்வாறு தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக நியாயமாகவும் அதேநேரம் தைரியமாகவும் பேசும் தயாசிறி ஜயசேகர போன்றோர் இந்த செயற்பாட்டில் அங்கம் வகிக்கின்றமை ஆறுதலை தருகின்றது. எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் அரசியல் ரீதி

யாக பலப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் அவர்களை போன்ற வர்களை பயன்படுத்தி விரைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வுடன் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்கவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம். 

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.