Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதி­காரம் இல்­லாத பாரா­ளு­மன்­றத்தை குண்­டு­வைத்து தகர்ப்­பதே மேலா­னது...விமல் வீர­வன்­சவின் கட்சி மீண்டும் வலி­யு­றுத்­தி­யது

Featured Replies

அதி­காரம் இல்­லாத பாரா­ளு­மன்­றத்தை குண்­டு­வைத்து தகர்ப்­பதே மேலா­னது

Sp29-10427c5a0d06ba0ad331099b23722f9fd02a420f.jpg

 

விமல் வீர­வன்­சவின் கட்சி மீண்டும் வலி­யு­றுத்­தி­யது

(ஆர்.யசி)

பிள­வு­ப­டாத இலங்­கையை உரு­வாக்­கு­வதே எமது பிர­தான நோக்­க­மாகும். ஆகவே, புதிய அர­சியல் அமைப்பை தோற்­க­டிப்­ப­தையே இலக்­காக கொண்டு செயற்­பட்டு வரு­கின்றோம் என்று தேசிய சுதந்­திர முன்­னணி தெரி­வித்­தது.

அதி­காரம் இல்­லாத பாரா­ளு­மன்றம் இருப்­பதை விடவும் குண்­டு­ வைத்து தகர்ப்­பதே மேலா­னது. இதுவே கட்­சியின் நிலைப்­பாடு எனவும் அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயந்த சம­ர­வீர தெரி­வித்தார்.  

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே இக்­க­ருத்­தினை குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், ஐக்­கிய இலங்­கையை இரண்­டாக பிள­வு­ப­டுத்தும் மிகவும் பார­தூ­ர­மான ஒரு செயற்­பாட்­டினை இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இன்னும் ஒரு சில நாட்­களில் அதற்­கான அடித்­த­ளத்தை பாரா­ளு­மன்­றத்தில் இருந்து ஆரம்­பிக்­க­வுள்­ளனர்.  

தமிழர் பிரி­வி­னை­வா­தி­களின் நீண­ட­கால பிரி­வினை கோரிக்­கையின் மூல­மாக 13 ஆம் திருத்த சட்­டத்­தினை முழு­மை­யா­கவும் அதற்கு மேலா­கவும் சென்று வழங்­கு­வ­தற்­கான தீர்­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. மாகா­ண­ச­பைகள் மத்­திய அர­சாங்­கத்தின் தலை­யீ­டுகள் இல்­லாது செயற்­ப­டவும் , காணி, பொலிஸ், நிதி அதி­கா­ரங்கள் முழு­மை­யாக மாகா­ண­ச­பைகள் வச­மாக்­கவும் முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் ஆளுநர் நிரா­க­ரிக்­கப்­பட்டு ஜனா­தி­பதி தலை­யி­ட­மு­டி­யாத நிலை­மையை ஏற்­ப­டுத்­தவே இப்­போது நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­க­பட்டு வரு­கின்­றன.

இக் கார­ணி­களை இலக்கு வைத்தே புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆகவே அதி­கார பகிர்வு என்ற ரீதியில் மத்­திய அர­சாங்­கத்தின் பிடியில் இருந்து மாகா­ண­ச­பைகள் விடு­ப­டு­மாயின் அதன் பின்னர் பாரா­ளு­மன்றம் ஒன்று இயங்­கு­வதோ அல்­லது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை ஒன்று நாட்டில் இருப்­பதோ அர்த்­த­மற்ற விட­ய­மாகும்.

 அவ்­வா­றான நிலையில் பாரா­ளு­மன்­றத்தை குண்டு வைத்து தகர்ப்­பது மட்டும் அல்ல, பாரா­ளு­மன்­றத்தின் மீது இடி விழ­வேண்டும், அண்­மையில் தென்­னி­லங்­கையில் விழுந்த எறி­கல்லும் பாரா­ளு­மன்­றத்தின் மீது விழ­வேண்டும்.

இந்த பார­ளு­மன்றம் அதி­காரம் இல்­லாது இயங்­கு­வதில் எந்­த­வித அர்த்­தமும் இல்லை. இத­னையே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார். தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் நிலைப்­பாடும் இது­வே­யாகும். பிய­சிறி விஜ­ய­நா­யக மாற்றுக் கருத்­தினை முன்­வைத்­துள்­ளதால் அவர் கூறிய கருத்­துக்கள் சரி­யென கருத வேண்டாம்.

அண்மைக் கால­மாக அவர் எமது கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­ட­வில்லை. அவ­ருக்கு கட்­சியின் நிலைப்­பா­டுகள் தெரி­ய­வில்லை. ஆகவே அவ­ருக்கு எதி­ராக கட்சி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

மேலும், தேசிய சுதந்­திர முன்­னணி எப்­போதும் தேசிய பிரச்­சி­னை­யினை அடிப்­ப­டை­யாக வைத்தே அர­சியல் செய்து வரு­கின்­றது. நாட்டில் பல்­வேறு பிரச்­சி­னைகள் இன்று காணப்­ப­டு­கின்ற நிலை­யிலும் நாம் தேசிய பிரச்­சி­னை­யி­னையே பிர­தா­ன­மாக பார்க்­கின்றோம்.

இந்த நாடு பிளவு படு­வதை எம்மால் அனு­ம­திக்க முடி­யாது. புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்கி இல்­லாத பிரச்­சினை ஒன்­றினை உரு­வாக்க முயற்­சித்து வரு­கின்­றனர்.

புதிய அர­சியல் அமைப்­பினால் தேசிய பிரச்­சி­னைக்கு ஒரு­போதும் தீர்வு கிடைக்­கப்­போ­வ­தில்லை. அன்று ரணில் சந்­தி­ரிக்கா ஆட்­சியின் போதும் இவ்­வா­றான குழப்­பங்கள் ஏற்­பட்ட நிலையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியே முன்­வந்து நாட்­டினை காப்­பாற்­றி­யது.

அதேபோல் சுனாமி நிவா­ரணம் என்ற பெயரில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க சில மோச­டி­களை செய்து புலி­களை பல­ம­டைய செய்த போதும், வடக்கு கிழக்கு இணைப்பு என்ற திட்டம் முன்­வைக்­கப்­பட்ட போதிலும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியே அனைத்து பிரச்­சி­னை­க­ளிலும் முன்­னின்று இந்த நாட்­டிற்­காக போரா­டி­யது.

முதலில் நாடு. பின்­னரே ஏனைய அனைத்தும் என்ற கொள்­கையில் நின்று செயற்­பட்ட தேசிய வாதிகள் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பணத்தில் புலி­க­ளுக்கு துணை­போகும் அர­சி­யலை மக்கள் விடு­தலை முன்­னணி முன்னெடுத்து வருகின்றது. அரசியல் அமைப்பு எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. ஆகவே அதனை தடுக்க நாம் சகல விதத்திலும் போராடுவோம். அரசியல் அமைப்பினை தோற்கடிக்க 76 ஆதரவு வாக்குகள் தேவைப்படுகின்றன.

அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். எமது ஒரே நோக்கம் அரசியல் அமைப்பினை தோற்கடிப்பதாகும். அதற்கான சகல நடவடிக்கைகளையும் தேசிய சுதந்திர முன்னணி முன்னெடுக்கும் என்றார். 

http://epaper.virakesari.lk/

  • தொடங்கியவர்

பாராளுமன்றிற்கு குண்டு வீச முனையும் விமல் வீரவன்சவிடம் இருந்து மீழுவோமா! தீபச்செல்வன:-

 
 
mahinda-and-vimal.jpg
 
 
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் கூறி வருகின்றது. அதன் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றும் இலங்கைப் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. புலிகள் இல்லாத இன்றைய நாட்களில் குறித்த அறிக்கை தென்னிலங்கை இனவாதிகளுக்கு வெறும் வாயிற்கு மெல்ல அவல் கிடைத்த கதையாகிவிட்டது.
 
புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கில் நடாத்திய பகிரங்க கருத்தமர்வுகளில் தமிழ் மக்கநெறளள் தமது அபிலாசைகளை வலியுறுத்தி இருந்தார்கள். வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாநிலத்தில் சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்பது முக்கியமான அரசியல் உரிமையாக மக்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனினும் புதிய அரசியலமைப்பு வடக்கு கிழக்கு மக்களின் உணர்வுகளை புறந்தள்ளியிருப்பதாகவே தோன்றுகிறது.
 
புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்றும் சமஷ்டி இல்லை என்றும் கூறப்படுகின்றது. எனினும் அது தான் புதிய அரசியல் அமைப்பு என்றும் இலங்கை அரசால் சொல்லப்படுகின்றது. இதில் மிகவும் சிரிப்பூட்டும் விடயம் என்னவென்றால் அந்தப் புதிய அரசியலமைப்பை இலங்கை பாராளுமன்றத்தில் வைத்து எரிக்கப்போகின்றேன் என்று விமல் வீரவன்ச கூறியிருப்பதுதான். தமது அரசியலுக்காக எதையும் எரிக்கக்கூடியவர்கள் விமல் வீரவன்சக்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
 
இவ்வாறு முன்னர் கூறிய விமல் வீரவன்ச, புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தால், நாடாளுமன்றத்திற்கு குண்டு போடப்போவதாக  கூறியுள்ளார். ஒரு நாட்டில் ஜனநாயகத்தை, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் இடமாக பாராளுமன்றம் மதிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை இலங்கைப் பாராளுமன்றம் பாதுகாத்தது. தமிழ் மக்களுக்கு எதிரான போரை புனிதப்படுத்தியது.
wimal-mahi.jpg
இலங்கைப் பாராளுமன்றம் பேரினவாதிகளின் பேரினவாதத்தை நிறுவும் இடமாகவே காணப்படுகின்றது. விமல் வீரவன்சக்கள் கடந்த காலத்தில் இந்தப் பாராளுமன்றத்தில் வைத்து தமிழ் மக்கள்மீது போர் தொடுக்க வேண்டும் என்று சூளுரைத்தார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்திலும் மகிந்த ராஜபக்ச காலத்திலும்  மக்கள் விடுதலை முன்னணியினர் போருக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். பயங்கரவாதிகளுடன் சமாதான ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து போரை தொடங்குங்கள் என்று இதே பாராளுமன்றில் முழக்கமிட்டனர்.
 
இதில் முன்னணியில் விமல் வீரவன்ச காணப்பட்டார். இன்று விடுதலைப் புலிகள் இல்லை. அவர்களுக்கு எதிராக செய்ய யுத்தமும் இல்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக பேசவும் இயங்கவும் விமல் வீரவன்சக்களுக்கு யுத்தம் தேவைப்படுகின்றது. வடக்கில் என்ன நடந்தாலும் புலிகள் வந்துவிட்டார்கள் யுத்தம் தொடங்கப்போகிறது என்று ராஜபக்சவினர் பிரச்சாரம் செய்கின்றனர். விமல் வீரவன்சவும் அவ்வாறு பிரச்சாரம் செய்கின்ற நபராவார்.
 
அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவானவர்களை கொலை செய்ய வேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி கமால் குணரத்தின கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச அணி ஆதரவாளரான இவர், இப்போதே இவ்வாறு கொலை வெறியுடன் பேசுகிறார் என்றும் போரை எவ்வாறு புரிந்திருப்பார் என்றும் உணர்வதாக அமைச்சர் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றம்மீதே குண்டுபோடவேண்டும் என்றும் என்று செல்லும் வீரவன்சக்கள் தமிழ் மக்கள்மீது எப்படி குண்டு போட்டிருப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
நபர்களை கொலை செய்வதாகவும், நாடாளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதாகவும் கூறுவார்களாயின் அவர்களின் மனோ நிலை பற்றி அளவீடு செய்து கொள்ள முடியும். நாடாளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் உறவினர் ஒருவர் மீளவும் நாடாளுமன்றின் மீது தாக்குதல் நடத்துவதாக கூறியிருப்பது பரம்பரை குணவியல்பாகவே கருதப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தயாசிறி கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத மனநிலையும் இவ்வாறே கட்டிக்காக்கப்படுகின்றது.
wimal-mahinda.jpg
புதிய அரசியலமைப்பில், தமிழ் மக்களின் அபிலாசைகள் உள்ளடக்கப்படவில்லை என்று தமிழ் மக்களினால் சுட்டிக்காட்டப்படும் நிலையில் அதனையே இவ்வாறு எதிர்க்கும் சிங்களப் பேரினவாதிகள், தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கும் நிலையில்  இல்லை என்ற உண்மையை இங்கே உணரவேண்டியுள்ளது. அது மாத்திரமல்ல இலங்கையில் மாற்றம் என்ற பெயரில் சிறு அசைவு இடம்பெற்றாலும் தமிழீழம் மலர்ந்துவிட்டது என்று கூறியே அரசியல் செய்வார்கள் என்பதும் உணர்த்தப்படுகின்றது.
 
இலங்கைத் தீவில் இனப்பிரச்சியையை தொடர்ந்தும் தக்க வைத்து அரசியல் செய்வதே விமல்வீரவங்சக்களின் நோக்கமாகும். தமிழ் மக்களை தொடர்ந்தும் போருக்குள்ளும், நெருக்கடிக்குள்ளும் தள்ளுவதும், அவர்களின்உரிமையை மறுத்து அடிமை கொள்வதும் தான் இவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பாராளுமன்றத்தின்மீது குண்டு  வீசுவேன் என்று சொல்லக்கூடிய நபர்களின் கைகளில் இருந்து இலங்கைத் தீவை பாதுகாக்க சிங்கள மக்கள் முன்வரவேண்டும். இதனைக் குறித்து சிங்கள மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
 
தமிழ் மக்களின் உரிமையை மறுக்கும், தமிழ் மக்களை ஒடுக்கும், தமிழ் மக்களை அழித்தொழிக்க நினைக்கும் சிங்களப் பேரினவாதிகள் அடிப்படையில் சிங்கள மக்களுக்கும் எதிரானவர்கள் என்பதை விமல் வீரவன்சவின் இக் கருத்து உணர்த்துகின்றது. மகிந்த ராஜபக்சவின் கரங்கள் சிங்கள மக்களையும் அடக்கி ஒடுக்கியதைப்போன்றதே இதுவாகும். சிங்கள மக்கள் முதலில் தம்மை பாதுகாக்க வேண்டும். தமது ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். அத்தகையதொரு நிலை வரும்பட்சத்திலேயே இத் தீவில் அமைதியும் சமத்துவமும் உரிமையை பகிரும் சூழ் நிலையும் உருவாகும்.

http://globaltamilnews.net/archives/47308

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.