Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்சியாளர்கள் மீதான நம்பிககையீனத்தால் புதிய அரசியலமைப்பை எதிர்க்கிறோம்

Featured Replies

ஆட்சியாளர்கள் மீதான நம்பிககையீனத்தால் புதிய அரசியலமைப்பை எதிர்க்கிறோம்

 

கலா­நிதி நாலக்க  கொட­ஹேவா  கேச­ரிக்கு செவ்வி 

 

நேர்­காணல்: ஆர்.ராம்–
படப்­பி­டிப்பு: உதேஷ் இந்­திக்க

 

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கு­வ­தற்கு நாம் எதி­ரா­ன­வர்கள் இல்லை. ஆனால் ஆட்­சியில் உள்ள தலை­வர்கள் மீதான நம்­பிக்கை கேள்விக் குறி­யா­க­வுள்­ளது. அதன் கார­ணத்­தி­னா­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை எதிர்க்க வேண்­டி­யுள்­ளது என வியத்­மக என்னும் தொழில்­வாண்­மை­யா­ளர்கள் அமைப்பின் ஏற்­பாட்­டாளர் கலா­நிதி நாலக்க கொட­ஹேவா தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- ஐ.நா.வில் புலம்­பெயர் அமைப் புக்கள், அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள், சர்­வ தேச நாடுகள் மூலம் இலங்­கைக்கு பாரிய அப­கீர்த்­தியும், கடும் நெருக்­க­டியும் ஏற்­ப­ட­வுள் ள­தாக சுட்டிக்­காட்டி வரு­கின்­றீர்கள். இருப் பினும் தேசிய அர­சாங்கம் ஐ.நா. சர்­வ­தேச தரப்­புக்­களின் அழுத்­தத்­தி­லி­ருந்து நாட்டை விடு­வித்­தி­ருப்­ப­தா­க­வல்­லவா வாதி­டு­கின்­றது?

பதில்:- ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையால் இலங்கை மிகப்­பெரும் நெருக்­க­டிக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய பேரா­பத்து உள்­ளது. இலங்­கையில் யுத்தம் நிறை­வ­டைந்­ததும் யுத்­தக்­குற்­றங்கள், மனித உரி­மை மீறல்கள் இடம்­பெற்­ற­தாக முதலில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

இதன்­போது ஐ.நா.வின் பொதுச்­செ­ய­லாளர் பான் கீ மூன் தனக்கு தேவை­யான இலங்கை குறித்த தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக தருஸ்மன் குழுவை நிய­மித்­தி­ருந்தார். இது ஐ.நா. பாது­காப்­புச்­ச­பையின் அனு­ம­தி­யுடன் உரு­வாக்­கப்­பட்ட குழு­வொன்­றல்ல.

அந்­தக்­குழு இலங்­கைக்கு நேரில் வர­­வில்லை. இருப்­பினும் அக்­குழு இலங்கை குறித்த அறிக்­கையை தயா­ரித்­தது. அந்த அறிக்­கையில் குறிப்­பிட்ட விட­யங்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்தி அப்­போ­தைய அரசு ஆறு நிபு­ணர்­களை நிய­மித்து அதில் காணப்­படும் தவ­று­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

ஆனால் அதன் பின்னர் ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானங்களின் பிர­காரம் நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்கு குறித்த தருஸ்மன் அறிக்­கையை மையப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். அர­சாங்­கத்­தினால் பரஸ்­பரம் முரண்­பா­டான விடயங்கள் இருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யொன்றை மையப்­ப­டுத்­தியே தற்­போ­தைய ஆணை­யாளர் ஹுசேனின் அறிக்­கையும் காணப்­ப­டு­கின்­றது.

அவ்­வா­றி­ருக்­கையில் பொறுப்­புள்ள அர­சாங்கம் ஒன்று ஆணை­யா­ளரின் அறிக்­கையை முழு­மை­யாக ஆராய்ந்து அதில் காணப்­படும் முரண்­பா­டு­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்க வேண்டும். ஆனால் தற்­போது ஆட்­சியில் உள்ள அர­சாங்கம் எந்­த­வி­த­மான சிந்­த­னையும், ஆய்வும் இன்றி சர்­வ­தே­சத்­தி­னையும், ஐ.நா.வினையும் நண்­பர்­க­ளாக்கிக் கொள்ள வேண்டும் என்­ற­வொரு குறு­கிய நோக்­கத்தின் அடிப்­ப­டையில் அதனை ஏற்­றுக்­கொண்டு தான் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட ஐ.நா. மனித உரி­மைகள் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது.

அதன்­பின்னர் ஐ.நா.மனித உரிமை பேரவை குறிப்­பிட்ட விட­யங்­களை ஏற்­றுக்­கொண்­டதால் அதற்­கான கால அவ­கா­சத்­தி­னையும் அர­சாங்­கத்­திற்கு ஐ.நா. வழங்­கி­யி­ருக்­கின்­றது. தற்­போது ஆறு மாதங்­க­ளா­கின்ற நிலையில் ஐ.நா.மனித உரிமை பேரவை அறிக்­கையில் குறிப்­பிட்ட விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த ஆரம்­பித்­தி­ருக்க வேண்டும். ஆனால் உள்­நாட்டில் அதற்­கு­ரிய நிலை­மைகள் இல்லை. ஆணை வழங்­கிய மக்­களும் உடன்­பாட்­டினைக் கொண்­டி­ருக்­க­வில்லை. ஆகவே தற்­போது அர­சாங்கம் ஐ.நா.வின் பொறிக்குள் சிக்­கி­யுள்­ளது.

அவ்­வா­றா­ன­தொரு சூழலில் தான் நாங்கள் ஜெனி­வா­வுக்குச் சென்று யதார்த்த நிலை­மை­களை கூறினோம். நாங்கள் அர­சாங்­கப்­பி­ர­தி­நி­திகள் அல்ல. ஆகையால் எம்மால் நிலை­மையை விளக்கி குர­லெ­ழுப்ப முடி­யுமே தவிர வேறெ­துவும் செய்ய முடி­யாது. அவ்­வா­றி­ருக்­கையில் அங்கு அர­சாங்­கத்தின் எந்­தப்­பி­ர­தி­நி­தி­களும் சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை.

இந்­தி­யா­வி­லி­ருந்து வைகோ தலை­மை­யி­லான 20 இற்கும் அதி­க­மான குழு­வினர் புலம்­பெ­யர்ந்­துள்ள விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வான அமைப்­புக்கள் சில­வற்­றுடன் இணைந்து இலங்கை தொடர்பில் இல்­லா­த­வற்­றை­யெல்லாம் கூறு­கின்­றார்கள். அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களின் ஆத­ரவைப் பெற்று அவற்­றினூடாக நேரத்­தினை பெற்­றுக்­கொண்டு அவர்கள் மாறி­மாறி உப­குழு மற்றும் பக்க நிகழ்­வு­களில் எமது நாட்­டுக்கு அப­கீர்த்தி ஏற்­ப­டுத்தும் கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர்.

உதா­ர­ண­மாக கூறினால், இலங்கை கிரிக்கெட் அணியை இந்­தியா வென்றால் வடக்கில் உள்ள இரா­ணு­வத்­தினர் தமிழ் இளை­ஞர்­களை வீடு புகுந்து தாக்­கு­கின்­றார்கள். வடக்கில் ஒவ்­வொரு நாளும் இரா­ணு­வ ­மு­கா­மிற்குள் பாலியல் துன்­பு­றுத்­தல்கள், வல்­லு­ற­வுகள் இடம்­பெ­று­கின்­றன. தனி­யான தமி­ழீழ­மாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்டும். இப்­ப­டி­யெல்லாம் கூறு­கின்­றார்கள்.

உண்­மை­யி­லேயே தற்­போது அப்­ப­டி­யெ­து­வுமே நடை­பெ­ற­வில்லை.அத்­த­கைய பொய்­யு­ரைக­ளுக்கு எதி­ராக நாட்­டுக்­காக குர­லெ­ழுப்­பி­ய­போதே முர­ண்­பா­டான வாத­வி­வா­தங்கள் இடம்­பெற்­றன. வைகோ உள்­ளிட்ட தமி­ழ­கத்­தினை சேர்ந்­த­வர்­க­ளுக்கு இலங்கை குறித்து பேசு­வ­தற்கு என்ன அருகதை இருக்­கின்­றது?

அவர்கள் தமது அர­சியல் இலா­பத்­துக்­காக செய்யும் ஒரு வேலை தான் இது­வாகும். இத்­த­கைய நிலை­மை­களை எதிர்த்து நிற்­ப­தற்கு நாட்டின் ஆட்­சி­யா­ளர்­களில் ஒருவர் கூட அங்­கி­ருந்­தி­ருக்­க­வில்லை என்­பது தான் துர­திர்ஷ்­ட­வ­ச­மான விடயம்.

கேள்வி:- ஐ.நா.விடத்தில் இலங்கை சிக் கிக்­கொண்­டுள்­ள­தாக நீங்கள் கூறி­னாலும், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குறிப் பிட்ட விட­யங்­க­ளான சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அனு­ம­தியேன், இரா­ணுவ வீரர்­க­ளுக்கு தண் டனை வழங்க இட­ம­ளியேன், வெளிநாட்டு நீதி­ப­தி­க­ளுக்கு இட­மில்லை போன்ற நிலைப்­பாட்­டிலேயே தற்­போதைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் உறு­தி­யாக உள்­ள­னரே?  

பதில்:- இந்த இடத்தில் தான் தமிழ் மக்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினை தவ­றாக புரிந்து கொண்­டுள்­ளார்கள். மஹிந்த ராஜ­பக் ஷ யுத்­தக்­குற்­றங்கள், இன அழிப்பு என்­பன நிக­ழ­வில்லை என்று கூறினார். இருப்­பினும் தவ­றுகள் ஏதா­வது நிகழ்ந்­தி­ருந்தால் அது தொடர்­பாக உள்­நாட்டில் காணப்­படும் நீதிச் சட்­டங்­க­ளுக்கு அமை­வாக நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக கூறி­யி­ருந்தார். ஆனால் சர்­வ­தே­சத்தின் தலை­யீட்­டிற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் அந்­தக்­க­ருத்து தவ­றாக தமிழ் மக்கள் மத்­தியில் அர்த்­தப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது.

இலங்­கையில் 1983இல் இனக்கல­வரம் நடை­பெற்­றது. அதில் தவ­றுகள் காணப்­ப­டு­கின்­றன. இதனை யாரும் மறு­த­லிக்­க­வில்லை. அதே­போன்று இரா­ணு­வத்­தி­னரால் சில தவ­றுகள் இழைக்­கப்­பட்­ட­போது இலங்கை நீதித்­து­றை­யினால் தண்­டனை வழங்­கப்­பட்ட சம்­ப­வங்­களும் நடை­பெ­றாமல் இல்லை.

தவ­றுகள் இழைக்­கப்­பட்­டி­ருந்தால் உள்­நாட்டு சட்­டங்­க­ளுக்கு அமை­வாக நிச்­ச­ய­மாக தண்­ட­னைகள் வழங்­கப்­படல் வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் முன்னாள் ஜனா­தி­ப­தியோ அல்­லது பெரும்­பான்மை மக்­களோ முரண்­பட்டு நிற்­க­வில்லை.

அப்­ப­டி­யி­ருக்­கையில் தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் எவ்­வி­த­மான கருத்­துக்­களை முன்­வைத்­தாலும் அதனை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. காரணம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யதன் ஊடாக குற்­ற­மி­ழைத்தோம் என்று குற்­றஞ்­சாட்டும் தரப்பின் கருத்­துக்­களை ஆமோ­தித்து ஏற்ற பின்னர் தற்­போது நாங்கள் குற்­ற­வா­ளிகள் இல்லை என்று கூற­மு­டி­யுமா?

 

 

 

கேள்வி:- முன்னாள் ஜனா­தி­பதி தலை­மை யி­லான அர­சாங்­கத்­தினை ஆட்­சியில் இருந்து அகற்­று­வ­தற்கு சர்­வ­தேச தரப்­புக்கள் துணை போ­யி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுக்­களை எந்த அடிப்­ப­டையில் முன்­வைக்­கின்­றீர்கள்?

பதில்:- முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் உள்ள தரப்­புக்கள் சில­வற்றை கட்­சி­மா­று­வ­தற்­காக பாரி­ய­ளவில் நிதி பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு வெளிநா­டு­களின் நிதியும், ஆத­ரவும் பெரு­ம­ளவில் காணப்­பட்­டது. குறிப்­பாக இலங்கை குறித்து தவ­றான கண்­ணோட்­டத்­தினைக் கொண்ட மேற்­கு­லக நாடுகள் இதன் பின்­ன­ணியில் இருந்­தன.

துரித அபி­வி­ருத்­தியை இலக்­காகக்கொண்டு சீனா­வுடன் கொண்ட நெருக்­கத்­தினை இந்­தியா தவ­றாக புரிந்து கொண்­ட­மையால் அந்­நாட்டின் பெரும்­பங்­க­ளிப்பும் ஆட்­சி­மாற்­றத்தில் இருந்­தி­ருக்க முடியும். காரணம் அக்­கா­லத்தில் இந்­திய மத்­திய அர­சாங்­கத்தின் பொறுப்­பினை கையி­லெ­டுத்­தி­ருந்த பார­தீய ஜனதா கட்சி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் உற­வினைக் கொண்­டி­ருக்­க­வில்லை.

அத­னை­வி­டவும் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­ற­பின்னர் புதிய ஆட்­சி­யா­ளர்­களின் வெற்­றியின் பின்­ன­ணியில் நாம் இருக்­கின்றோம் என்று அமெ­ரிக்க இரா­ஜங்க செயலாளர் ஜோன் கெரி பகி­ரங்­க­மாக கூறினார். ஆகவே இத்­த­கைய விட­யங்­களின் அடிப்­ப­டையில் பார்க்­கையில் நிச்­ச­ய­மாக சர்­வ­தேச சக்­திகள் ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ணியில் இருக்­கின்­றமை தெளிவாக புல­னா­கின்­றது.

கேள்வி:- யுத்­தத்­தினை நிறை­வுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனா­தி­ப­தியால் தேசிய பிரச் சி­னைக்­கான தீர்­வொன்றை முன்­வைக்க முடி யா­து­போன நிலையில் தற்­போது புதிய அர­சி­ய ல­மைப்­பொன்றை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு இடைக்­கால அறிக்­கையும் வெளியா­கி­யுள்­ளது. அவ்­வா­றான நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி, பாது­காப்­புச்­செ­யலாளர், கூட்டு எதிர்க்­கட்சி உள்­ளிட்ட உங்கள் தலை­மை யி­லான தொழில் வாண்­மை­யாளர் குழ­வினர் அதற்கு எதி­ராக பிர­சாரம் செய்­வதேன்?

பதில்:- முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வினை வழங்­கு­வ­தற்கு தயா­ரா­கவே இருந்­தது. இருப்­பினும் சர்­வ­தேச ரீதி­யாக எழுந்த நிலை­மை­களால் அவரால் அக்­கா­லப்­ப­கு­திக்குள் முன்­னெ­டுக்க முடி­யா­து­போ­யி­ருந்­தது ஒரு ­கா­ர­ண­மாகும். இரண்­டா­வ­தாக யுத்தம் நிறை­வ­டைந்து அனைத்­துமே வீழ்ந்து காணப்­ப­டு­கின்­ற­போது அவற்றை கட்­டி­யெ­ழுப்­பாது இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் பற்றி பேசு­வது என்­பது இய­லாத கார­ியமாகும். ஆகவே தான் வடக்­கிலும் கிழக்­கிலும் அதி­க­ள­வான அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் திட்­டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்து.

அவ்­வா­றி­ருக்­கையில் தற்­போது ஆட்­சியில் உள்ள அர­சாங்­கத்தின் தலை­வர்­க­ளான மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யில்லை. இவர்கள் தொடர்ச்­சி­யாக மக்­க­ளுக்கு பொய்­களைக் கூறி திசை­தி­ருப்­பிய தலை­வர்­க­ளா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றார்கள்.

ஆகவே இவர்கள் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் தொடர்பில் மக்­க­ளுக்கு பாரிய சந்­தே­கங்­களே உள்­ளன. தற்­போது இடைக்­கால அறிக்கை வெளிவந்­தி­ருந்­தாலும் இதில் கூறிய விட­யங்கள் நிச்­ச­ய­மாக இறுதி வரைபில் இருக்­கப்­போ­வ­தில்லை. இரு தலை­வர்­களும் நிச்­ச­ய­மாக மோசடி செய்­வார்கள் என்றே நம்­பு­கின்­றார்கள்.

உதா­ர­ண­மாக 19ஆவது திருத்­தச்­சட்டம் கொண்டு வரப்­பட்­ட­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கூட திருத்­தங்­களை வாசிப்­ப­தற்கு காலத்­தினை வழங்­காது தமக்கு வேண்­டிய ஏற்­பா­டு­களை இணைத்­து­க்கொண்­டி­ருந்­தனர். குறிப்பாக இரண்டாவது வாசிப்பில் காணப்படாத ஏற்பாடுகளை மூன்றாவது வாசிப்பில் உள்வாங்கி பிரதமருக்கான அதிகாரங்களை வலுப்படுத்தியிருந்தனர்.

இதுபோன்று அண்மையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதிருந்த 20 ஆவது திருத்தச்சட்டம் இரண்டு பக்கத்தில் காணப் பட்டாலும் 21 பக்கத்தில் திருத்தங்கள் காணப் பட்டன. ஆகவே இவ்வாறானவர்கள் நிச்சய மாக இறுதிதருணத்தில் எவ்வாறான செயற்பா டுகளை மேற்கொள்வார்கள் என்று கூற முடியாது. அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வும் முடியாது. அதன் காரணத்தினாலேயே விழிப்புணர்வின்றி இருக்கும் மக்கள் மத்தி யில் பிரசாரங்களை செய்கின்றோம்.  

அவ்வாறு செய்வதால் நாங்கள் தமிழ் மக்களுக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ எதிரானவர்கள் என்று கூறிமுடியாது. இந்த நாட்டில் மீண்டுமொரு தடவை இனங்களுக் கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக் கின்றோம். குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்குமான தீர்வொன்றை வழங்குவதாக கூறியிருந்தார். அதிகாரங்களைப் பகிர்வதற்கும் தயாராகவே இருந்தார்.  

உண்மையிலேயே தமிழ் மக்கள் அதிகா ரங்கள் பகிரப்படவேண்டும் என்று கோர வில்லை. தமிழ் அரசியல்வாதிகளே அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி மக்களை குழப்புகின் றார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் எதிர்க்கவில்லை. ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை கொள்ள முடி யாது என்றார்.  

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.