Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி தேர்தலும் பிரியப் போகும் கூட்டுக் கட்சிகளும்

Featured Replies

உள்ளூராட்சி தேர்தலும் பிரியப் போகும் கூட்டுக் கட்சிகளும்

 

தமிழ் தேசிய இனத்தின் ஆயுத ரீதி­யான உரிமைப் போராட்டம் மௌனிக்கச் செய்­யப்­பட்ட பின்­னரும் கடந்த மஹிந்த அர­சாங்கம் வெற்­றி­வா­தத்தில் திளைத்­தி­ருந்­த­துடன், தமிழ் தேசிய இனத்தை தொடர்ந்தும் அடக்கி ஆள்­வதில் கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. இதன் விளை­வாக தமிழ் தேசிய இனத்தின் பெரு­வா­ரி­யான ஆத­ர­வுடன் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு மூன்­றாண்­டுகள் நெருங்கும் நிலையில் நல்­லாட்சி எனக் கூறப்­படும் மைத்­திரி, - ரணில், அர­சாங்கம் கடும் நெருக்­க­டி­களை உள் நாட்டில் எதிர்­நோக்கி வரு­கின்­றது. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் சர்­வ­தேச ரீதியில் இலங்­கைக்கு எதி­ராக இருந்த அழுத்­தங்­களை தமிழ் தேசிய இனத்தின் தலை­மை­களின் உத­வி­யுடன் மைத்­திரி, - ரணில் அர­சாங்கம் குறைத்­தி­ருக்­கின்­றது. 

சர்­வதேச சமூ­கத்­துடன் கைகோர்த்து செயற்­படக் கூடிய நிலையை  உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. ஐ.நா மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்­றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்கக் கூடிய நிலைமை உரு­வா­கி­யது. ஐ.நா.வில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு மீண்டும் இந்த அர­சாங்கம் கால நீடிப்­பையும் பெற்­றி­ருக்­கின்­றது.

ஆனால், பாதிக்­கப்­பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைமை சர்­வ­தேச ரீதியில் இலங்­கைக்கு எதி­ராக காணப்­பட்ட அழுத்­தத்தை வினைத்­தி­ற­னு­டனும், இரா­ஜ­தந்­தி­ரத்­து­டனும் கையாண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு பதி­லாக அரசின் நிகழ்ச்சி நிர­லுடன் இணைந்து சென்­றி­ருக்­கின்­றது. 

சர்­வ­தேச நெருக்­க­டி­களை சமா­ளிக்கும் நிலையில் உள்ள அர­சாங்கம் உள்­நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­களை சமா­ளிக்க முடி­யாத நிலை­யி­லேயே அதன் இரு பிர­தான கட்­சி­களும் காணப்­ப­டு­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகிய இரண்டும் இணைந்து உரு­வாக்­கிய இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் டிசம்பர் 31 ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வரு­கி­றது. மஹிந்த தலை­மை­யி­லான பொது எதி­ர­ணியும் இந்த அர­சாங்­கத்­திற்கு எதி­ரான பிர­சா­ரங்­களில் தீவி­ர­மாக ஈடு­படத் தொடங்­கி­யுள்­ளது. கடந்த மஹிந்த ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­களை விசா­ரணை செய்து ஊழ­லற்ற ஆட்­சியை உரு­வாக்கப் போவ­தாக ஆட்சி மாற்­றத்தின் போது இரு தலை­வர்­களும் கூறிய போதும் அதனை துரி­த­மாக செயற்­ப­டுத்த விருப்­ப­மின்றி அல்­லது இய­லா­மையில் இருப்­ப­தையே காண­மு­டி­கி­றது. நல்­லாட்சி எனக் கூறப்­படும் இந்த அர­சிலும் முறை­கே­டுகள் தொடர்பில் சில அமைச்­சர்கள் சிக்­கி­யுள்­ளமை தென்­னி­லங்­கையில் இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளிலும் விமர்­ச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. 

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை வெளி­யா­கி­யுள்ள நிலையில் தென்­னி­லங்­கையின், பௌத்த அடிப்­ப­டை­வாத, இன­வாத சக்­தி­களால் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஊடாக நாடு பிளவு அடையப் போவ­தாக தீவிர பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்கு தென்­னி­லங்­கையின் சில ஊட­கங்­களும் துணை போகின்­றன. இது புதிய அர­சாங்­கத்­திற்கு மேலும் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன்,  மகா­நா­யக்க தேரர்­களின் மன­நி­லை­யிலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இதன்­கா­ர­ண­மாகவே அண்­மையில் வவு­னி­யா­விற்கு விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அச்சு ஊட­கங்­களை கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில், ஊட­கங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்ள ஊடகச் சுதந்­தி­ரத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு உண்­மைக்கு மாறான பொய்­யான கருத்­துக்களை பக்கம் பக்­க­மாக எழுதி மக்கள் மத்­தியில் அவற்றை பரப்பி வரு­வ­தா­கவும் மகா­நா­யக்­கர்­களை தவ­றாக வழி­ந­டத்த முற்­ப­டு­வ­தா­கவும் அச்சு ஊட­கங்­களை ஜனா­தி­பதி கடு­மை­யாக விமர்­சித்தும் இருந்தார். இத்­த­கைய விமர்­சனம் என்­பது தென்­னி­லங்­கையில் மைத்­திரி, - ரணில் அர­சாங்கம் எதிர்­கொள்ளும் நெருக்­க­டியின் வெளிப்­பாடு என்­பதை மறுத்து விடவும் முடி­யாது. 

இந்த அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு வடக்கு, கிழக்கு பகு­தி­களில் வாழும் தமிழ் தேசிய இனம் பெரு­வா­ரி­யாக தமது வாக்­கு­களை வழங்­கிய போதும் இன்று இந்த அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்­கை­யி­ழந்­த­வர்­க­ளாக அர­சிற்கு எதி­ரான போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நடந்­தது என்ன....? என நீதி கோரியும், தமது பூர்­வீக நிலங்­களை விடு­விக்க வலி­யு­றுத்­தியும், அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் தொடர் போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. தமிழ் மக்­களின் தலை­மை­யாக கரு­தப்­படும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த அர­சாங்­கத்­திற்கு முண்டு கொடுத்து வரும் நிலையில் மக்கள் தாமா­கவே, தன்­னெ­ழுச்­சி­யாக போராட்­டங்­களை கடந்த 9 மாதங்­க­ளாக தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வரு­கின்­றமை இந்த அர­சாங்­கத்தை மேலும் நெருக்­க­டிக்குள் தள்­ளி­யி­ருக்­கின்­றது. அர­சிற்கு ஆத­ர­வாக செயற்­படும் கூட்­ட­மைப்பு தலை­மைக்கு எதி­ரா­கவும் மக்கள் அவ்­வப்­போது தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தவும் துணிந்து விட்­டனர். இது இந்த அர­சாங்­கத்தின் மீது மக்கள் கொண்­டுள்ள விரக்­தியின் வெளிப்­பாடே. தமிழ் தேசிய இனத்தின் தொடர்ச்­சி­யான போராட்டம் கார­ண­மாக சர்­வ­தேச நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரி­களும், ஐ.நா. நிபு­ணர்­களும் இலங்­கையை அவ்­வப்­போது எச்­ச­ரித்தும் வரு­கின்­றனர். இந்த நிலையில் அர­சாங்கம் ஆனது வடக்கு, தெற்கு என வேறு­பாடு இல்­லாமல் ஒட்­டு­மொத்த இலங்­கை­யி­லுமே சவால்­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றது. நாட்டில் உள்ள பல உள்­ளூ­ராட்சி சபை­களின் பத­விக்­காலம் முடி­வ­டைந்து இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேல் கடந்­துள்ள நிலை­யிலும் அதற்கு உட­ன­டி­யாக தேர்­தலை நடத்த முடி­யாத நிலையே உள்­ளது. எல்லை மீள்­நிர்­ணயம், புதிய தேர்தல் முறை­யி­லான சட்ட திருத்தம் என்­பன நடந்­தாலும், உண்­மையில் பிரிந்து நின்று தனித்து தேர்­தலை எதிர் கொள்ளக் கூடிய நிலையில் இரு பிர­தான கட்­சி­களும் இல்லை. தற்­போது உள்ள அர­சியல் சூழலில் உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெறும் பட்­சத்தில் மஹிந்­தவின் கை ஓங்கி விடலாம் என்ற ஒரு வித அச்­ச­நிலை மைத்­திரி தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யிடம் காணப்­ப­டு­கின்­றது. எதிர்­வரும் ஜன­வரி 27 ஆம் திகதி உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­தலாம் என உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனாலும் அது அந்த நேரத்தில் நடை­பெ­றுமா என்­பது சந்­தே­க­மா­கவே உள்­ளது. 

 நவம்பர் 16 ஆம் திக­திக்குள் வர்த்த­ ­மானி அறி­வித்தல் வெளி­யிட்டால் மட்­டுமே ஜன­வரி மாதத்தில் தேர்தல் நடத்­து­வது பற்றி யோசித்து முடி­வெ­டுக்க முடியும். வர்த்­த­மானி அறி­வித்­தலே வராத  நிலையில் தேர்தல் திக­தியை நிர்­ண­யிப்­பது கடினம் என்று தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தி­ருக்­கின்­றமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

புதிய தேர்தல் முறையின் கீழ் உள்­ளூ­ராட்­சி­சபைத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­மையால் அந்த முறையின் கீழான ஒரு பரீட்­சார்த்த கள­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த கரைத்­து­றைப்­பற்று மற்றும் புதுக்­கு­டி­யி­ருப்பு ஆகிய இரு பிர­தேச சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை முதலில் நடத்­து­வது குறித்தும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கி­றது. இதன் மூலம் இந்த புதிய தேர்தல் முறையின் நன்மை, தீமை குறித்து ஆராய்­வ­தற்கு இரு பிர­தான கட்­சி­களும் முனைப்பு காட்­டு­வ­தா­கவே தெரி­கி­றது. 

இந்த விட­யத்தில் வடக்கு, கிழக்கில் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்­றுள்ள தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடும் தென்­னி­லங்கை போன்றே உள்­ளது. கூட்­ட­மைப்பு தலைமை மீதும் மக்கள் கோபம் கொண்­டுள்ள நிலையில் போரினால் மிகவும் பாதிக்­கப்­பட்ட அந்த போரின் சாட்­சி­யங்­க­ளா­க­வுள்ள அந்த இரண்டு பிர­தே­சங்­களின் தேர்­தல்­களில் கூட்­ட­மைப்பின் வாக்கு வங்கி எந்­த­ள­விற்கு இருக்­கின்­றது என்­பதை ஆராய்­வ­தற்­கான கள­மா­கவும் அந்த தேர்­தலை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலைமை குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்சி பரி­சீ­லிக்­கலாம். இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியைப் பொறுத்த வரையில் இந்த தேர்­தலில் தமது செல்­வாக்கு சரி­வ­டைந்தால் ஏனைய தேர்­தல்­க­ளிலும் அது தாக்­கத்தை செலுத்தும் என்ற கார­ணத்­தினால் அர­சாங்­கத்­திடம் தனக்­குள்ள செல்­வாக்கைப் பயன்­ப­டுத்தி அனைத்து உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு முயற்­சித்து வரு­வ­தாக தெரி­கி­றது. இதற்­கா­கவே இப்­பெ­ழுது மாற்றி அமைக்­கப்­பட்ட பிர­தேச சபை­களின் எல்­லைகள் தொடர்பில் மாவட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­க­ளாக திகழ்­கின்ற அர­சாங்க அதி­பர்­க­ளிடம் மக்கள் கருத்­துக்­களை கேட்­ட­றி­யு­மாறும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட காலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலைமை தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு மாறாக செயற்­பட்டு வரு­வ­தா­கவும், இந்த அர­சாங்­கத்தை நெருக்­க­டி­களில் இருந்து பாது­காத்து முண்டு கொடுத்து வரு­வ­தா­கவும் பர­வ­லான குற்­றச்­சாட்டு  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்சி தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை புறந்­தள்­ளியும், தன்­னிச்­சை­யா­கவும், செயற்­ப­டு­வ­துடன் நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் இணக்க அர­சியல் என்னும் பெயரில் சர­ணா­கதி அடைந்து விட்­ட­தா­கவே மக்கள் கருதும் நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொண்டு வரப்­பட்ட ஐ.நா. தீர்­மானம் வலு­வி­ழந்­ததில் இருந்து கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது வரை உள்ள சர்­வ­தேச நெருக்­க­டி­களை குறைப்­ப­தற்கும், தமிழ் மக்­க­ளது அபி­லா­ஷை­க­ளையும், அவர்­க­ளது கோரிக்­கை­க­ளையும் புறந்­தள்ளி கொண்டு வரப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பை ஏற்கச் செய்­வ­திலும் தமி­ழ­ரசுக் கட்சி அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­கின்­றது.

தமி­ழ­ரசுக் கட்­சியின் இத்­த­கைய செயற்­பா­டு­களை பகி­ரங்­க­மாக ஈ.பி­.ஆர்­.எல்.எப். எதிர்த்து வரு­வ­துடன், ரெலோ, புளொட் என்­பன  தமி­ழ­ரசுக் கட்­சிக்­கான எதிர்ப்பு வலு­வ­டையும் பட்­சத்தில் அதனை ஒட்டி எழக்­கூ­டிய கூட்­ட­ணி­யுடன் இணை­வ­தற்கு வச­தி­யாக எந்­த­வொரு விட­யத்­திலும் தமது கருத்­துக்­களை முன்­வைக்­காமல் அமைதி காத்து வரு­கின்­றன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தமி­ழ­ரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி­.ஆர்­.எல்.எப். ஆகிய நான்கு கட்­சி­களும் தனித்­த­னி­யாக தமது வேட்­பா­ளர்­களை தேடும் பணியை ஆரம்­பித்து விட்­டன. ஒவ்­வொரு கட்­சி­களும், இந்த உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தமது இருப்பை நாடி பிடித்து பார்ப்­ப­தற்கும் தயா­ராகி வரு­கின்­றன. இந்த நிலையில் ரெலோ தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் தொகுதி பங்­கீடு குறித்து பேச்சு நடத்­து­வ­தற்கும் நேரம் கேட்டு அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.  இந்த நிலையில் அடுத்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் எப்­படி அமையும் என்ற கேள்­வியும், சந்­தே­கமும் மக்கள் மத்­தியில் எழுந்­தி­ருக்­கின்­றது. வட்­டார முறை­யி­லான புதிய தேர்தல் முறை அந்த சிக்­கலை மேலும் வலுப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. ஆக, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் என்­பது தென்­ப­கு­தியை மட்­டு­மன்றி வடக்கு, கிழக்கு என ஒட்­டு­மொத்த இலங்­கையின் அர­சியல் கட்­சி­க­ளையும் ஆட்டம் காண வைத்­தி­ருக்­கின்­றது. உள்­ளூ­ராட்சிச் சபைத் தேர்­தல்­களில் மக்கள் எடுக்கும் முடி­வு­களே அடுத்த கட்ட அர­சியல் கூட்டுக்களையும், நகர்வுகளையும் தீர்மானிக்கவும் போகிறது. 

எந்தவொரு கட்சியும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ  மக்களை சந்திப்பதற்கு தயக்கம் காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது. இதில் சில அரசியல் கட்சிகள் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவுகளை வழங்கிய போதிலும், அவர்களை வழிநடத்துவதற்கோ அல்லது தலைமை தாங்குவதற்கோ முன்வரவில்லை. மிதவாத அரசியலில் இருந்து ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலம் வரை ஆயுதப் போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டும் வகையில் பல்வேறு மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவைகளுக்கு அந்த அமைப்பினர்கள் தலைமை தாங்கியும் வழிநடத்தியும் இருந்தனர்.

இன்று அந்த அமைப்புக்களின் முதல் தர தலைவர்கள் இல்லை. இரண்டாம் நிலை தலைவர்கள் இன்று தலைமையேற்று ஜனநாயக வழி முறையில் அரசியல் கட்சிகளாக செயற்படுகின்றனர். அவர்களால் மக்களுக்கு தலைமை கொடுக்க முடியாமல் இருப்பது என்பது கவலை அளிப்பதாக இருக்கிறது. மக்கள் போராட்டங்களை கையில் எடுத்து மக்களுடன் நின்று அவர்களை ஒரு கட்டமைப்புக்குள் வழிநடத்தக் கூடியவர்களையே மக்கள் தமது தலைவர்களாகவும், தமக்கு உரியவர்களாகவும் ஏற்றுக் கொள்வார்கள். இதனை உணர்ந்து இனியாவது கட்சித் தலைவர்கள் செயற்பட வேண்டும். 

ருத்­திரன்-

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.