Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடுமாறும் கூட்டரசு

Featured Replies

தடுமாறும் கூட்டரசு

 
தடுமாறும் கூட்டரசு

மீன் விற்­பனை நிலை­ய­மொன்றை ஆரம்­பித்த வியா­பாரி ஒரு­வ­ரி­டம் வந்த அவ­ரது நண்­பர்­கள் சிலர் இவ்­வ­ளவு நல்ல மீன்­களை விற்­கும் கடைக்கு ஒரு விளம்­ப­ரப் பலகையைப் பொருத்­தி­னால் நல்­ல­தல்­லவா? என்­றார்­கள். மீன் விற்­பனை நிலை­ய­மொன்றை ஆரம்­பித்த வியா­பாரி ஒரு­வ­ரி­டம் வந்த அவ­ரது நண்­பர்­கள் சிலர் இவ்­வ­ளவு நல்ல மீன்­களை விற்­கும் கடைக்கு ஒரு விளம்­ப­ரப் பலகையைப் பொருத்­தி­னால் நல்­ல­தல்­லவா? என்­றார்­கள்.

நண்­பர்­க­ளது யோச­னைக்­க­மைய விளம்­ப­ரப்­ப­ல­கை­ யொன்­றைப் பொருத்­தி­னார் அந்த வியா­பாரி. ‘‘இங்கு புதிய மீன்­கள் விற்­ப­னைக்கு உள்ளன’’ என­வும் அதில் பொறித்திருந்தார் அவர்.

ஒரு­நாள் அங்கு சென்ற பண்­டி­த­ரொ­ரு­வர் விளம்­ப­ரப் பல­கை­யைப் பார்த்­து­விட்டு ‘‘இங்கு மீன் மட்­டுமே விற்­பனை செய்யப்படுவதால் ‘இங்கு’ என்ற சொல் அவ­சி­ய­மற்­றது’’ எனத் தெரிவித்தார்.

இதையடுத்து ‘இங்கு’ என்ற சொல் விளம்­ப­ரப் பல­கை­யில் இருந்து நீக்­கப்­பட்­டது. மறு­நாள் அங்கு சென்ற மற்­றொரு பண்­டி­தர், ‘‘இங்கு நீர் பழைய மீன்­கள் எதனை­யும் விற்­க­வில் லையே? ஆத­லால் ‘புதிய’ என்ற சொல் அவ­சி­ய­மற்­றது’’ எனக் கூறி­னார்.

அந்த வியா­பா­ரிக்­கும் அது சரி­யெனப் ­பட்­ட­தால் ‘புதிய’ என்ற சொல்லை விளம்­ப­ரப் பல­கை­யில்  இருந்து அகற்­றி­வி­ட் டார்.

இப்­போது விளம்­ப­ரப் பலகை ‘மீன்­கள் விற்­ப­னைக்கு உள்ளன’ என்ற வாக்கியத்­து­டன் குறு­கிப் போனது. மறு­நாள் அங்கு சென்ற மற்­றொரு பண்­டி­தர், விளம்­ப­ரப் பல­கை­யில் மேலும் தவறு இருப்­ப­தாக வாதிட்­டார்.

‘‘இங்கு மீன்­க­ளைத் தவிர வேறெ­து­வும் விற்­பனை   செய்­யப்­ப­டு­ வ­தில்லை என்­ப­தால், விற்­ப­னைக்கு உள்ளன ’’ என்ற வச­னம் மட்­டும் போது­மா­னது என்ற அவ­ரது வாதத்­துக்கு இணங்கி, மீன்­கள் என்ற சொல்­லும் விளம்­ப­ரப் பல­கை­யில் இருந்து அகற்­றப்­பட்­டது.

மறு­நாள் அங்கு சென்ற மற்­றொரு பண்­டி­தர்,‘‘ நீர் மீன் எத­னை­யும் இல­வ­ச­மாக வழங்­கு­வ­தில்­லையே? ஆத­லால் விற்­ப­னைக்கு என்ற சொல் அவ­சி­ய­மற்­றது’’ எனத் தெரிவித்தார்.

அதில் நியா­யம் இருப்­ப­தாக எண்­ணிய வியா­பாரி, அந்­தச் சொல்­லை யும் விளம்­ப­ரப் பல­கை­யி­லி­ருந்து நீக்­கி­ய­தால் கடை­சி­யில் ‘உள்ளன’ என்ற ஒற்­றைச் சொல்­லு­டன் மட்­டுமே விளம்பரப் பலகை காட்­சி­ய­ளித்­தது.

மறு­நாள் அங்கு சென்ற மற்­றொரு பண்­டி­தர் ‘‘இங்கு மீன் விற்­கப்­ப­டு­கி­றது என்­ப­தால்தானே கடை­யைத் திறந்து வைத்­தி­ருக்­கி­றீர்? உள்ளன என்ற இந்த ஒற்­றைச் சொல் விளம்­ப­ரம் பெரி­தாக எதை­யும் சுட்­டிக்­காட்­ட ­வில்லை. எனவே அந்த விளம்­ப­ரப் பல­கை­யையே அகற்­றி ­வி­டும்’’ என்று ஆலோ­சனை கூறி­னார்.

அதன்­படி விளம்­ப­ரப் பலகை அகற்­றப்­பட்­டது. சில நாள்­க­ளின் பின்­னர் அந்­தக் கடையே இழுத்து மூடப்­பட நேர்்ந்தது.

இன்றைய கூட்டு அரசு, நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­க­ வுள்ள புதிய அர­ச­மைப்­புக்கு வாளி­யைப் புரட்­டிப் போட்டுத் தண்ணீர் மொள்ள முனைபவர்கள், மீன் வியா­பா­ரிக்கு அவ­ரது கடையை மூட வழி­காட்­டி­ய­வர்­கள் போன்ற சிலரே.

நாட்­டின்  நீண்ட காலப் பிரச்­சி­னைக்­கான நிரந்­த­ர­மான தீர்­வொன்­றைக் காண்­ப­தற்­குக் கிட்­டி­யுள்ள அரி­ய­தொரு சந்­தர்ப்­பத்தைக் கெடுக்கும் வகையில் மகிந்த தரப்­பி­னர்­கள் இல்­லாத பூத­மொன்றை உரு­வாக்கி சிங்­கள மக்­க­ளைக் குழப்­பி­ய­டிக்க முயல்­கின்­ற­னர்.

மக்­கள் வழங்­கிய ஆணையை செயற்­ப­டுத்த முய­லும் கூட்டு அரசு

நிறை­வேற்று அர­ச தலை­வர் பத­வி­யற்ற, புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கல் என்­பது கூட்டு அர­சின் வாக்­கு­று­தி­க­ளில் முக்­கி­ய­மா­ன­தொன்று. அந்த வாக்­கு­று­திக்­க­மை­யவே 62 லட்­சம் வாக்­கா­ளர்­கள் மைத்­தி­ரிபா­ல­வுக்­குத் தமது வாக்­கு­களை வழங்­கி­யி­ருந்­த­னர்.

பெரும்­பான்­மை­யான மக்­கள் அனு­ம­தித்்த அர­சொன்று கொண்­டு­வ­ர­வுள்ள அர­ச­மைப்பை, எந்­த­வ­கை­யில்  வேண்­டாம் என மறு­த­லிக்க முடி­யு­மென்­பது புரி­ய­வில்லை.

இந்­தக் கூட்டு அரசு அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற அடிப்­ப­டை­யாக அமைந்­ததே, நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை நீக்கி, புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வரு­வோ­மென்ற வாக்­கு­று­தியே.

அதன் அடிப்­ப­டை­யில் நாடா­ளு­மன்­றத்­தால் அச­ர­மைப்­புச் சபை­யொன்று நிறு­வப்­பட்டு, உப­கு­ழுக்­கள் ஊடாக விரி­வாக ஆரா­யப்­பட்டு, அர­ச­மைப்­புக்­கான விதி­கள் உரு­வாக்­கப்­பட்டுள்­ளன.

இவற்­றுக்கு மேல­தி­க­மாக லால் விஜே­நா­யக்க என்­ற சட்டத்தரணி ஒருவரது தலை­மை­யில் நிய­மிக்­கப் பட்ட குழு மூலம், புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான பொது­மக்­க­ளது அபிப்­பி­ரா­யங்­கள் திரட்­டப்­பட்டு அறிக்­கை­யொன்று சமர்்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பான நாடா­ளு­மன்ற உப குழுக்­க­ளில் கூட்டு எதி­ர­ணி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் அங்­கம் வகிக்­கின்­ற­னர். சில உப­கு­ழுக்­க­ளின் தலை­வர்­க­ளா­கக் கூட கூட்டு எதி­ரணி நாடாளுமன்ற உறுப்­பி­னர்­கள் பதவி வகிக்­கின்­ற­னர்.

இந்த நிலை­யில், புதிய அர­ச­மைப்­பொன்று தற்­போது அவ­சி­ய­மில்லை என அஸ்­கி­ரிய மற்­றும் மல்­வத்தை பீடா­தி­ப­தி­கள் தெரி­வித்­துள்­ள­தாக ஊட­கங்­க­ளில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது.

ஆனால், மல்­வத்தை பீடா­தி­பதி தற்­போது வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ண­மொன்றை மேற்­கொண்­டுள்­ளார். இத்­த­கைய நிலை­யில் அவர் புதிய அர­ச­மைப்­புக் குறித்­துக் கருத்து வெளி­யிட்­ட­ார் என்று எவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தென்­பது  கேள்­விக்கு உரி­ய­தொன்றே.

1972 மற்­றும் 1978 ஆம் ஆண்­டு­க­ளில் தயா­ரிக்­கப்­பட் டஅ­ர­ச­மைப்­புக்­கள் குறித்து பொது­மக்­க­ளது அபிப்­பி­ரா­யங்கள் கோரப்­பட்­ட­தில்லை. அது­மட்­டு­மன்றி, அந்­தந்த வேளை­க­ளில் ஆட்சி அதி­கா­ரத்­தில் இருந்த கட்­சி­க­ளது கருத்து நிலைப்­பா­டு ­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே அவை தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவ் வே­ளைய அர­சு­க­ளுக்கு நாடா­ளு­மன்­றத்­தின் மூன்­றில் இரண்டு மடங்கு பெரும்­பான்மை இருந்­ததன் கார­ண­மாக அது சாத்­தி­ய­மா­யிற்று.

தற்­போது முன்­வைக்­கப்­பட் டுள்ள அரசமைப்புச் சட்டமூலம் சகல கட்­சி­க­ளது யோசனைகளை உள்ளடக்கி மேற்­கொள்­ளப்­பட்­ட­து­டன், இணக்­கம் காணப்­ப­டாத யோச­ னை­க­ளும் அவற்­றில் அடங்­கி­யுள்­ளன.

தமது தேவையை நிறை­வேற்றவே அர­ச­மைப்பை உரு­வாக்­கினார் ஜே.ஆர்.

1978 ஆம் ஆண்­டில் ஜே.ஆர்.ஜெய­ வர்த்­தன புதிய  அர­ச­மைப்பை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பித்த வேளை என்.எம்.பெரேரா சுக­வீ­ன­முற்­றி­ருந்த நிலை­யி­லும், அந்த அர­ச­மைப்­பால் விளை­யத்­தக்க ஆபத்­துக்­கள் குறித்து நன்கு உணர்ந்­தி­ருந்­தார்.

ஜே.ஆரால் தயா­ரிக்­கப்­பட்ட அந்த அர­ச­மைப்­பி­லுள்ள பயங்­க­ரம் குறித்து ஆரம்­பித்­தி­லி­ருந்தே தெரிந்து வைத்­தி­ருந்த இரண்டு பிர­மு­கர்­கள் ஜே.ஆரும், என்.எம்.பெரே­ரா­வும் ஆவார்­கள்.

1978 ஆம் ஆண்­டில் தாம் தயா­ரித்த அர­ச­மைப்­பில் பொதிந்­துள்ள பயங்­க­ரம் குறித்து ஜே.ஆர். அந்த  வேளை­யில் எது­வித கருத்­தும் வெளி­யி­ட­வில்லை.

அது அவ­ரு­டைய தேவை­யின் பொருட்டு உரு­வாக்­கப்­பட்ட அர­ச­மைப்­பாக இருந்­த­மையே அதற்­கான கார­ண­மா­கும். ஆனால் என்.எம்.பெரே­ராவோ குறித்த அந்த அர­ச­மைப்­பில் பொதிந்­துள்ள பயங்­க­ரம் குறித்து நாட்டு மக்­க­ளுக்கு எடுத்து விளக்­கி­னார்.

அது­மட்­டு­மன்றி புதிய அர­ச­மைப்­பால் ஏற்­ப­டத்­தக்க பாதிப்­புக்­கள் குறித்து 1979ஆம் ஆண்­டில் என்.எம்.பெரேரா விளக்க நூலொன்­றை­யும் எழுதி வெளி­யிட்­டி­ருந்­தார். தாம் உரு­வாக்­கிய அர­ச­மைப்பு மூலம் தம்­மால் ஒரு பெண்ணை ஆணா­கவோ அல்­லது ஒரு ஆணைப் பெண்­ணா­கவோ ஆக்க இய­லா­தே­யொ­ழிய, மற்­றெல்­லா­வற்­றை­யும் நிறை­வேற்ற முடி­யு­மென ஜே.ஆர். அந்த வேளை­யில் பெரு­மை­ய­டித்­துக் கொண்­டார்.

அத்­த­கைய செயற்­பாட்டை அர­ச­மைப்­புக்­கான  18 ஆவது திருத்தத் தின் ஊடாக மகிந்த ராஜ­பக்ச செய­லுரு ஆக்­கிக் கொண்­டார். நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றை­யி­னூ­டாக எதேச்­சா­தி­கார அதி­கா­ரங்­களை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ளும் அணு­கு­மு­றையை  ஜே.ஆர். கைக்­கொண்­டார்.

அதன் பின்­னர் அவர் தாம் விரும்­பிய விதத்­தில் அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­திக் கொண்­டார். ஆயி­னும் அன்று எவ­ரும் சரி ஜே.ஆரின் அத்­த­கைய எதேச்­சா­தி­கா­ரப் போக்­குக்கு எதி­ராக வீதி­யில் இறங்­கிப் போராட முய­ல­வில்லை.

ஆகக் குறைந்தது அதற்கு எதிர்ப்பு எத­னை­யு­மா­வது வெளி­யிட முன்­வ­ர­வில்லை.1978ஆம் ஆண்­டின் அர­ச­மைப்­புப் போன்ற, வேண்­டப்­ப­டாது வெறுக்­கப்­பட்ட ஆவ­ண­மெ­து­வும் இலங்கை அர­சி­யல் வர­லாற்­றில் ஒரு­போ­தி­லும் இருந்­த­தில்லை.

பல ஆண்­டு­கள் கால­மாக, தேர்­தல்­ சம­யங்­க­ளில் பல அர­சி­யல் வா­தி­க­ளால் விமர்­சிக்­கப்­பட்­ட ­தொன்­றாக அந்த அர­ச­மைப்பு அமைந்­தது. 17 ஆண்­டு­கள் கால­மா­கத் தொடர்ந்து நாட்டை நிர்­வ­கித்த ஐ.தே.கட்­சி­யின் தலை­மையி­லான அரசை மண்­கவ்வ வைத்து, 1994 ஆம் ஆண்­டில் பொது­ சன ஐக்­கிய முன்­ன­ணி­ யால் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற முடிந்­த­மைக்­கான அடிப்­ப­டைக் கார­ணமே நாட்­டுக்­குப் புதிய அர­ச­மைப்­பொன்றை உரு­வாக்கி வழங்­கு­வோம் என்ற அவர்களது வாக்­கு­று­தியே ஆகும்.

நாட்­டின் புற்­று­நோ­யான நிறை­வேற்று அரச தலை­வர் பத­வியை ஒழித்து, புதிய அர­ச­மைப்­பொன்றை உரு­வாக்­கு­வேன் எனக் கூறியே சந்­தி­ரிகா அரச தலை­வர் பத­வி­யைக் கைப்­பற்­றிக் கொண்­டார்.

ஆனால் சந்­தி­ரிகா­வால் தமது ஆட்­சிக்­கா­லத்­தில் அரசமைப்­பின் ஒரு எழுத்­தைத் தானும் அவ­ரால் மாற்ற முடிந்­த­ தில்லை. நாடா­ளு­மன்­றத்­தில் சந்­தி­ரிகா முன்­வைத்த புதிய அர­ச­மைப்­புச் சட்ட மூலம் நாடா­ளு­மன்­றத்­துக்­குள் வைத்தே எதிர்க்­கட்­சி­யி­ன­ரால் தீயிட்டு எரிக்­கப்­பட்­டது.

அடுத்து வந்த அரச தவை­ருக்­கான தேர்­த­லின்­போது ஐ.தே.கட்­சியே, தான் உருவாக்கிய அர­ச­மைப்­பில் மாற்­றம் செய்­யும் அள­வுக்கு இறங்கி வந்­தது. தமது கட்­சி­யைச் சேர்ந்த ஒரு­வ­ரூ­டாக அச­ர­மைப்­பில் மாற்­றம் மேற்­கொள்ள இணங்­கி­யது.

அதே­போன்று மகிந்த ராஜ­பக்­ச­வும் தமது ஆட்­சிக் காலத்­தில் நிறை­வேற்று அரச தலை­வர் பத­வியை ஒழித்து புதிய அர­ச­மைப்­பொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வேன் என அடிக்­கடி வாக்­கு­றுதி வழங்கி வந்­தார்.

வித்­தி­யா­ச­மான சூழ­லில் தேர்­தலை எதிர்­கொண்டார் மைத்­தி­ரி­பால

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ  வழக் கத்­துக்கு மாறா­ன­தொரு அர­சி­யல் சூழ­லி­லேயே  அரச தலை­வர்  தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­தன் மூலம் புதிய அர­சி­யல் சகாப்­த­மொன்றை அறி­மு­கம் செய்து வைத்­தார்.

ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யி­லான அர­ச­மைப்பு மாற்­றம்’ என்ற தலைப்­பின் கீழ் அவ­ரது தேர்­தல் விஞ்­ஞா­ப­னம் அமைந்­தது. அர­ச­மைப்­பில் மாற்­றம் மேற்­கொள்­ளல் என்­பதை முன்­னி­லைப்­ப­டுத்­தியே அவர் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட்­டார். அந்­தக் கொள்கை நிலைப்­பாட் டுக்கு ஆத­ர­வா­கவே பொது­மக்­க­ளும் அவ­ருக்கு வாக்­க­ளித்து அவரை அரச தலை­வ­ராக்கி வைத்­த­னர். மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னது தேர்­தல் விஞ்­ஞா­ப­னத்­தில் கீழ்க்­கா­ணும் விட­யங்­க­ளுக்கு முன் னு ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

*ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் அர­ச­மைப்­பில் மாற்­றம் மேற்­கொள்­ளல்

*எதேச்­சா­தி­கா­ரத்­துக்கு வழி­வ­குக்­கும் நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் பதவி நடை­மு­றையை ஒழித் தல்.

*அமைச்­ச­ரவை ஊடாக நாடா­ளு­மன்­றத்­து­டன் தொடர்­பு­ப­டும் நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அர­ச­மைப்பை உரு­வாக்­கல்.

*விகி­தா­சார தேர்­தல் நடை­மு­றையை மாற்­றி­ய­மைத்து சகல தேர்­தல் தொகு­தி­க­ளுக்­கு­மான பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதிப்படுத்தல்.

*நல்­லாட்­சி­யைக் கண்­கா­ணிக்­கும் பொறி­மு­றையை உரு­வாக்­கு­தல்.

* நீதித்­துறை, பொலிஸ்துறை, தேர்­தல் திணைக்­க­ளம், கணக்­காய்­வாளர் நாயகத்தின் திணைக்­க­ளம், சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் என்­ப­வற்­றுக்­கான சுதந்­திர ஆணை­க் குழுக்களை நிறு­வு­தல் என்­ப­வையே அத்­த­கைய விசேட அம்சங்களா­கும்.

1972ஆம் ஆண்­டில் இலங்­கைக் குடி­ய­ர­சின் முத­லா­வது  அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட்ட போதும், 1978ஆம் ஆண்டில் ஜே.ஆரால் உரு­வாக்­கப்­பட்ட அர­ச­மைப்­பின் போதும், மகிந்த ராஜ­பக்­ச­வி­னால் அர­ச­மைப்­புக்­கான 18ஆவது திருத்­தம் நிறை­வேற்­றப்­பட்­ட­ போ­தும் ஜன­நா­யக ரீதி­யி­லான நடை­முறைகள் எதுவும் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.

ஆனால் இம்­முறை நிறை­வேற்­றப் ப­ட­வுள்ள புதிய அர­ச­மைப்பு. ஜன­நா­யக நடை­மு­றை­களைப் பின்­பற் றியே மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

ஜன­நா­யக நடை­மு­றை­யி­னூ­டாகமுன்­வைக்­கப்­ப­டும் அர­ச­மைப்பு

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பாக பொது­மக்­க­ளது அபிப்­பி­ரா­யம் கோரப்­பட்­ட­போது, பொது­மக்­க­ளில் பலர் தாமாக முன்­வந்து தமது அபிப்­பி­ரா­யங்­க­ளைத் தெரி­வித்­த­னர்.

சாத­க­மான மற்­றும்  பாத­க­மான முறை­யி­ல­மைந்த அபிப் பி­ரா­யங்­க­ளும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டுப் பரி­சீ­ல­னைக்கு உள்­வாங்­கப்­பட்­டன.

இத்­த­கைய நிலை­யில் கட்­டு­ரை­யின் ஆரம்­பத்­தில் குறிப்­பி­டப் பிட்ட மீன் வியா­பா­ரிக்கு ஏற்­பட்ட துர­திஷ்­டம் போன்­ற­தொரு துர­திஷ்­டத்­துக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலையே கூட்டு அர­சுக்கு இன்று ஏற்­பட்­டுள்­ளது.
ஒன்­றில் அரசு, விளம்­ப­ரப் பல­கையை காட்­சிப்­ப­டுத்­தி­யாக வேண்­டும். அல்­லது அத­னைக் கழற்றி வைத்­து­விட்­டுக் கடையை மூடி­யாக வேண்­டும்.

http://newuthayan.com/story/41408.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.