Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடைக்கால அறிக்கை மீதான எதிர்ப்பும் அரசின் நிலைப்பாடும்

Featured Replies

இடைக்கால அறிக்கை மீதான எதிர்ப்பும் அரசின் நிலைப்பாடும்

 

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை குறித்து அர­சியல் யாப்பு சபை­யான பாரா­ளு­மன்­றத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் முதலாம் திக­தி­வரை மூன்று தினங்கள் தொடர்ச்­சி­யாக இடைக்­கால அறிக்கை குறித்து விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த விவா­தத்தை அடுத்தே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி வரைபு தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு­வா­னது ஆரா­ய­வுள்­ளது.

புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யா­னது கடந்த மாதம் 21 ஆம்­ தி­கதி அர­சியல் யாப்­பு­ ச­பை­யான பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து புதிய அர­சியல் யாப்­புக்­கான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. புதிய அர­சியல் யாப்­புக்­கான பணி­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக நிறுத்­த­வேண்டும் என்ற கோரிக்­கையும் தற்­போது முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அர­சாங்­கத்தின் இந்த முயற்­சிக்கு அஸ்­கி­ரிய, மல்­வத்து உட்­பட நான்கு பௌத்த பீடங்­களும் கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­துள்­ள­துடன் புதிய அர­சியல் யாப்­புக்­கான பணி­களை இடை­நி­றுத்த வேண்டும் என்றும் கோரிக்­கை­ வி­டுக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட ஏனைய பௌத்த அமைப்­புக்­களும் அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்பில் தமது விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­துள்­ளன.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் புதிய அர­சியல் யாப்­புக்­கான நட­வ­டிக்­கை­களை முற்­று­மு­ழு­தாக எதிர்த்­துள்­ளனர். இந்த முயற்­சி­யா­னது நாட்டை பிள­வு­ப­டுத்தும் வகையில் அமையும் என்று இவர்கள் கடும் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கின்­றனர். அர­சியல் யாப்­புக்­கான நட­வ­டிக்­கை­களை முறி­ய­டிப்­ப­தற்­காக பொது எதி­ர­ணியின் சார்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் தலை­மையில் எலிய என்ற அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட வேறு­பல அமைப்­புக்­க­ளையும் உரு­வாக்­கி­யுள்ள பொது எதி­ர­ணி­யினர் சிங்­கள மக்­களின் மனங்­களை மாற்றும் வகையில் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

 முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து செயற்­பட்டு வரும் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யான கமால் குண­ரட்ன புதிய அர­சியல் யாப்­புக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­ப­வர்­களை கொன்­றொ­ழிக்­க­வேண்டும் என்று கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார். புதிய அர­சியல் யாப்­புக்­கான பணி­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் துரோ­கி­க­ளா­கவே கணிக்­கப்­ப­ட­வேண்டும் என்று அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இதே­போன்றே பொது எதி­ர­ணியின் உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்­சவும் புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்க முயலும் பாரா­ளு­மன்­றத்தை குண்­டு­வைத்து தகர்க்­க­வேண்டும் என்று கடும்­தொ­னியில் கருத்து தெரி­வித்­துள்ளார்.

புதிய அர­சியல் யாப்பு செயற்­பாட்­டுக்கு எதி­ராக பொது எதி­ர­ணி­யா­னது ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் போராட்­டங்­க­ளையும் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­களை செய்­துள்­ளது. இன்­றைய தினம் பாரா­ளு­மன்ற நுழை­வா­யி­லுக்கு முன்­பாக பொது எதி­ர­ணியின் சார்­பாக ஆர்ப்­பாட்­டம் இடம்­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலை­யில்தான் அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை குறித்த விவாதம் இன்­றைய தினம் ஆரம்­பிக்­கின்­றது.

இந்த விவா­தத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் உட்­பட அர­சாங்­கத்­த­ரப்­பினர் புதிய அர­சி­ய­ல­மைப்பின் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­த­வுள்­ளனர். அர­சி­யல்­யாப்பு முயற்­சிக்கு கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­து­வரும் பொது எதி­ர­ணியின் உறுப்­பி­னர்கள் இடைக்­கால அறிக்­கைக்கு தமது கடும் எதிர்ப்­பினை தெரி­விப்­பார்கள் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

உண்­மை­யி­லேயே நாட்டில் உண்­மை­யான நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மானால் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். தற்­போ­தைய நிலையில் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது புதிய அர­சியல் யாப்பின் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­கா­ரப்­ப­கிர்வின் மூலம் தீர்வைக் காண்­ப­தற்கு முயன்­று­வ­ரு­கின்­றது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போதும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போதும் புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கு மக்கள் ஆணை வழங்­கி­யி­ருந்­தனர். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் 62 இலட்சம் மக்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பின் தேவைக்­கான ஆணையை வழங்­கி­யி­ருந்­தனர்.

இந்த நிலை­யில்தான் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து தேர்தல் முறை மாற்றம், நிறை­வேற்று அதிகார ஜனா­தி­பதி முறைமை நீக்கம், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு ஆகிய மூன்று விட­யங்­களை உள்­ள­டக்கி புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது. பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு பிர­தமர் தலை­மையில் வழி­ந­டத்தல் குழு உரு­வாக்­கப்­பட்­டது. இத­னை­விட ஆறு உபக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்­டன.

இவ்­வாறு அமைக்­கப்­பட்ட இந்த ஆறு உப ­கு­ழுக்­களும் தமது அறிக்­கை­களை அர­சியல் யாப்பு சபைக்கு சமர்ப்­பித்­துள்­ளன. இந்த நிலை­யில்தான் வழி­ந­டத்தல் குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்­கை­யா­னது பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்­கையில் பிள­வு­ப­டாத ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரத்தை பகிர்­வது என்ற விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த ஒரு மித்த நாடு என்ற பதம் தொடர்­பிலும் தற்­போது சர்ச்சை எழுப்­பப்­ப­டு­கின்­றது.

ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் என்று அர­சாங்கம் திரும்பத் திரும்ப கூறி­வ­ரு­கின்­றது. ஆனாலும் ஒரு­மித்த நாடு என்­பது ஒற்­றை­யாட்­சியை குறிக்­காது என்று தற்­போது இன­வா­திகள் சர்ச்­சையை கிளப்பி வரு­கின்­றனர். இடைக்­கால அறிக்­கையில் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்தோ அல்­லது சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வு குறித்தோ எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஆனாலும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது விட்­டுக்­கொ­டுப்­புடன் சக­லரும் ஏற்­றுக்­கொள்ளும் ஒரு தீர்­வினைப் பெறு­வ­தற்கு தயா­ரான நிலையில் உள்­ளது.

இவ்­வா­றான விட்­டுக்­கொ­டுப்­புடன் தமிழ் தரப்பு செயற்­பட்டு வரு­கையில் அர­சியல் சுய­நல நோக்­கங்­களைக் கொண்டு தென்­ப­கு­தி­யி­லுள்ள இன­வாத சக்­திகள் புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சினை குழப்­பு­வ­தற்கு கங்­கணம் கட்­டி­யுள்­ள­தா­கவே தெரி­கின்­றது. புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான முயற்­சியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் உறு­தி­யான நிலைப்­பாட்டில் உள்­ள­தா­கவே தெரி­கின்­றது.

அண்­மையில் அவர்கள் பொதுக்­கூட்­டங்­க­ளி­லேயே தமது நிலைப்­பாட்டை திட்­ட­வட்­ட­மாக வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். உண்­மை­யி­லேயே தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்­சி­யுடன் கூடிய சமஷ்டித் தீர்­வையே எதிர்­பார்த்­துள்­ளனர். ஆனால் புதிய அர­சியல் யாப்­புக்­கான இந்த முயற்­சியில் அத்­த­கைய தீர்வை எட்ட முடி­யாது என்று தெரிந்தும் விட்­டுக்­கொ­டுப்­புடன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைமை செயற்­பட்டு வரு­கின்­றது. ஆனாலும் இந்த விட்­டுக்­கொ­டுப்­புக்கு ஏற்ப தென்­ப­குதி அர­சியல் தலை­மைகள் நல்­லெண்­ணத்­துடன் செயற்­ப­டாமை கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மா­க­வுள்­ளது.

புதிய அர­சியல் யாப்பில் அரை­குறை தீர்வை வழங்­கு­வ­தற்­குக்­கூட தென்­னி­லங்­கையில் இன­வாத சக்­திகள் தயா­ராக இல்லை என்­ப­தையே தற்­போ­தைய எதிர்ப்­புக்கள் உணர்த்தி வரு­கின்­றன.

ஆனாலும் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அந்த ஆணைக்கு ஏற்ப இந்த விடயத்தில் அரசாங்கமானது செயற்படவேண்டும். இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரை நடைபெறும் விவாதத்தை அடுத்து புதிய அரசியல் யாப்புக்கான இறுதி வரைபுக்கான நடவடிக்கைகள் உடனடியாகவே எடுக்கப்படவேண்டும்.

தென்பகுதியில் சகல தரப்பினரையும் திருப்திப்படுத்தி தீர்வினைக் காண்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும். அரசியல் சுயநலத்திற்காக இனவாதத்தைக் கிளப்பி சிங்கள மக்கள் மத்தியில் குரோத எண்ணங்களை வளர்க்க முயற்சிக்கும் தரப்பினருக்கு எதிராக அரசாங்கமானது உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தாலும் அரசாங்கமானது மக்களின் ஆணையை கருத்தில் கொண்டு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லவேண்டும். இந்த விடயத்தில் சகல தரப்பினரும் அக்கறை கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.