Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவிரி பிரச்சனை: மார்ச் 18ல் ஜெயலலிதா உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காவிரி பிரச்சனை: மார்ச் 18ல் ஜெ. உண்ணாவிரதம்

09 மார்ச் 2007

Blog this story

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து வெள்ளியன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்றும், அதே நாளில் மாவட்ட தலைநகரங்கள், மாநிலத்தின் இதர பகுதிகளில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போராட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி விவசாயிகளும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஜெயலலிதா, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தனது கட்சி நேரடியாக நடவடிக்கையில் இறங்கும் என்று அண்மையில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://content.msn.co.in

balloonsci5.gif

ஜெயாவின் உடம்பு இட்டலி, தோசைகளால் நிரம்பி பலூனாக ஊதி தற்போது வெடிக்கும் நிலையில் உள்ளது. செல்வி ஜெயா இப்படி அடிக்கடி உண்ணாவிரதம் இருந்தால்தான் வீங்கிப் பெருத்துள்ள பலூனிலிருந்து காற்றை மெதுவாகக் குறைத்து இன்னும் கொஞ்ச காலம் உயிருடன் இருக்க முடியும்.

balloonsci5.gif

ஜெயாவின் உடம்பு இட்டலி, தோசைகளால் நிரம்பி பலூனாக ஊதி தற்போது வெடிக்கும் நிலையில் உள்ளது. செல்வி ஜெயா இப்படி அடிக்கடி உண்ணாவிரதம் இருந்தால்தான் வீங்கிப் பெருத்துள்ள பலூனிலிருந்து காற்றை மெதுவாகக் குறைத்து இன்னும் கொஞ்ச காலம் உயிருடன் இருக்க முடியும்.

ஒரு நாள் இருந்தவுடன் உந்த உடம்பு குறையாது அவா இப்ப செல்வி ஜெயா என்றுதான் இருக்கிறா அதுக்கிடையிலை கொஞ்சக்காலம் என்று சொல்லுறிங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழுப்பை கரைக்கிற தனிப்பட்ட விடயத்திலேகூட அரசியலை பயன்படுத்துகிறார்கள்.. ஐயோ ஐயோ.. :P :lol:

டாக்டர் டயட் பண்ண சொல்லிட்டார..........? உடம்புதான் குறையும் இதெல்லாம் குறையாது..... :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெ. உண்ணாவிரதம்: வைகோ முடித்து வைக்கிறார்

மார்ச் 16, 2007

சென்னை: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேற்கொள்ள உண்ணாவிரதத்தை மாலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழச்சாறு கொடுத்து முடித்து வைப்பார் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 ஆண்டு காலமாக கடுமையாக போராடி பெற்ற காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்தும், இறுதி தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தியும் அதிமுக சார்பில் வருகின்ற 18ம் தேதி சென்னையிலும், 21ம் தேதி ஏனைய மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

18 ம்தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் தலைமை ஏற்கிறார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் காலை 9 மணி அளவில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தொடங்கி வைப்பார்.

உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக தோழமைக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்குவார்கள்.

மாலை 5 மணி அளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைப்பார். இதில் தோழமை கட்சித் தலைவர்களும் விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழ்த்தி பேச உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/03/16/admk.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தண்ணீர் கூட குடிக்காமல் ஜெயலலிதா எட்டு மணிநேரம் உண்ணாவிரதம்

சென்னை : காவிரி நீர் பிரச்னைக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஜெயலலிதா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். மேடையை விட்டு எழுந்து செல்லாமலும், தண்ணீர் கூட குடிக்காமல் 8 மணி நேரமாக :icon_mrgreen: ஜெயலலிதா மேற்கொண்ட உண்ணாவிரதத்தை மாலை 5 மணிக்கு வைகோ முடித்து வைத்தார்.

காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு துரோகம் விளைவித்து விட்டதாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. காலை 7 மணிக்கு அ.தி.மு.க., தொண்டர்கள் வள்ளுவர் கோட்டம் முன் கார், வேன், பஸ்களில் குவிந்தனர். பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த நீண்ட பந்தலில் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொண்டர்கள் உட்கார்ந்திருந்தனர். உண்ணாவிரத மேடைக்கு காலை 8:50 மணிக்கு ஜெயலலிதா வந்தார். கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றனர். மேடையில் ஜெயலலிதா ஏறி நின்றதும் திரளாக கூடியிருந்த தொண்டர்களை பார்த்து இரட்டை விரல் காட்டி கை அசைத்தார். மகளிர் அணி செயலர் வளர்மதி ஆளுயுர ரோஜா மாலையை ஜெயலதாவிற்கு அணிவித்தார். தென் சென்னை மாவட்ட செயலர் கலைராஜன் வரவேற்றார். அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சேதுராமன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், ""முதல்வர் பதவியில் இருக்கும் போதும் காவிரி நீர் பிரச்னைக்காக நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் ஜெயலலிதா. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது இப்போது இரண்டாவது முறையாக உண்ணாவிரதம் இருக்கிறார் '' என்றார். இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக தலைவர் பஷீர் அகமது பேசுகையில், ""முல்லை பெரியாறு, பாலாறு பிரச்னையை கருணாநிதி கைவிட்டு விட்டார். இதனால், தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்னையையும் கைவிட்டால் தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுவிடும். மக்கள் பிரச்னைக்காக, மக்களுக்காக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. ஆனால், தனது மக்கள் நலனுக்காக தமிழக மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார் கருணாநிதி,'' என்றார்.

மேடையில் ஜெயலலிதாவுடன் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பி.எச்.பாண்டியன், ஜெயக்குமார், வளர்மதி, முத்துசாமி, விசாலாட்சி நெடுஞ்செழியன், சுலோச்சனா சம்பத் ஆகியோர் அமர்ந்திருந்தனர். மாஜி அமைச்சர்கள் வேலுச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் சேகர்பாபு, எஸ்.வி.சேகர், செந்தமிழன் மற்றும் பாலகங்கா, ராஜேந்திரபாபு, வி.பி.ஆர்.ரமேஷ் உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சி தலைவர்கள் தாவூத்மியான்கான், ஸ்ரீதர் வாண்டையார், இஸ்மாயில் <மற்றும் விவசாய சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மேடையில் பேசியவர்களின் பேச்சுக்களை ஜெயலலிதா ரசித்து கேட்டார். மேடையை விட்டு எழாமலும், தண்ணீர் கூட குடிக்காமலும் 8 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதாவிடம் மாலை 5 மணிக்கு பழச்சாறு கொடுத்து அவரது உண்ணாவிரதத்தை ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ முடித்து வைத்தார். :angry:

-நன்றி தினமலர்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.