Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கி.ரா. கதைகள்

Featured Replies

கி.ரா. கதைகள்

 

white_spacer.jpg

கி.ரா. கதைகள் white_spacer.jpg
title_horline.jpg
 
white_spacer.jpg
 

p48c.jpg ஒரு தலை

அவளைப் பார்த்தான் அவன்.

சூரிய ஒளி தாக்கிய பனி நீரைப் போல அவனுள் இருந்த எல்லாமே காணாமல் போய், அந்த வெற்றிடத் தில் அவள் புகுந்து சக்கென்று அமர்ந்து கொண்டாள். அப்படியே அவளைச் சுமந்து வந்தான், கிடைக்காத புதைய லாய்!

தலையணையில் அவன் சாயும் போதெல்லாம், அவள் தலையும் பக்கத்தில்!

மனம்விட்டுப் பேசினான்; முகம் வைத்துக் கொஞ்சி முயங்கினான்.

ரொம்ப நெருக்கமாகிவிட்டார் கள்.

அவன் தனிமையில் இருக்கும்போது வா என்றால் வந்துவிடுவாள்.

முட்டையின் மேல் படிந்து அடை காப்பது போல் காத்தான். அடை மழை போல் பிரியத்தைப் பொழிந் தான். ஆனந்த உலகில் சஞ்சரித் தான்.

நீடித்துக்கொண்டிருந்தது இப்படி.

சில நாட்கள் கழித்து....

முதன்முதலில் அவளைக் கண் டானே, அதே இடத்தில் இன்றும் கண்டான் அவளை.

நிறை மனசுடன் புன்னகைத்துக் கொண்டே அவளை நெருங்கினால்... வேற்று ஆளைப் பார்ப்பது போல மருண்டு திகைக்கிறாள்; விலகுகிறாள்!

‘ஓஹோ, அப்படியா! சரீ, போ!

எனக்குள் ஒரு நீ இருக்கிறாய்;

காலமெல்லாம் அவளோடு சுகித்திருப்பேன்’ எனச் சொல்லிக் கொண்டு திரும்பினான்!

 

 

 

p48b.jpg உத்தி

‘‘இந்தத் தேர்தல்ல நீங்க கட்டா யம் நிக்கணும்; ஒங்களெப் போல நல்லவங்க விலகி விலகிப் போகப் போயித்தான் மோசமானவங்க நின்னு ஜெயிச்சிருதாங்க!’’

‘‘முடியாது, முடியாது! தேர்தல்ல யாவது, நா நிக்கிறதாவது... அந்தப் பேச்சே வேணாம்!’’

‘தயவுசெஞ்சு அப்படிச் சொல்லப் படாது’ என்று எம்புட்டோ மன்னா டிப் பார்த்தார்கள். ‘சாவக் காணேன்‘ என்று பலமாகத் தலையைக் குலுக்கி விட்டார் நல்லான். ஊர்க்காரர்கள் கவலைப்பட்டார்கள்.

‘‘நல்லானைத் தேர்தல்ல நிக்க வைக்க நானாச்சி’’ என்று முன் வந்தார் மன்னபுலி.

‘‘காலக் கொடுமை பெருச்சாளி காவடி எடுத்து ஆடுனதாம்! பஞ்சா யத்து போர்டு தலைவருக்கு ஒங்க புள்ளிக்காரன் நிக்காம் போலிருக்கெ?’’ என்றபடி நல்லான் வீட்டுக்குள் நுழைந்தார்.

‘‘நின்னுட்டுப் போறாம்; நமக் கென்ன?’’

‘‘நமக்கென்னவா; என்ன முதலாளி இப்படிச் சொல்லுதியெ! ஊரு நண்ட ழிஞ்ச காடா ஆகிப் போயிரும்! ஆனா, நீங்க நிக்கப் போறதாத்தாம் ஊர் பூராவும் பேசிக்கிடுதாங்க’’ என்று சொல்லிவிட்டு, ‘‘அவரு நின்னா டிப் பாஸிட்டு கூடக் கிடைக்காதுன்னு சொல்லிக்கிட்டு அலையுதாம் ஒங்க புள்ளிக்காரன்!

அந்த ஆளின் பெயரைச் சொல்லக் கூடப் பிடிக்காத அளவுக்கு வெறுப்பு இருந்ததால், ‘புள்ளிக்காரன்’!

‘‘அவன் இன்னொண்ணும் சொல் லிட்டலையுதாம்! ‘நல்லான் தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டா, எம் ஒரு பக் கத்து மீசைய எடுத்துருதேம்’னு சவால் விட்டிருக்காம்!’’

நல்லான் முகத்தில் யோசனை படிய ஆரம்பித்தது.

‘இப்படியாப்பட்டவங்களுக்கு நாம தனீயா புத்தி புகட்ட முடியாது; ஊரைச் சேத்துக்கிடணும்; சமயம் இதுதாம்’ என்று தோன்றிவிட்டது அவருக்கு.

‘‘சரீப்பா; நா நிக்கெம்’’ என்று உறுதிபடச் சொன்னார் நல்லான்!

 

 

 

 

 

p48a.jpg காலம் காலம்

உழவர் சந்தை நிறுத்தத்தில் நகரப் பேருந்து வந்து சல் என்று நின்றது. பேகொண்ட கூட்டம். தாத்தா முண்டியடித்து படிக்கட்டில் கால் வைத்ததுதான் தெரியும்... அப்படியே அத்தாசமாக உள்ளே தள்ளி, சருகைக் காற்று கொண்டுபோவதைப் போல நடூ இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவைத்துவிட்டது. சுவர் வைத்தது போலக் கூட்டம்.

நிறைந்த தீப்பெட்டியில் நடுக் குச்சியாக நிற்கிறார் தாத்தா. அவ ருக்கு முன்னால் ஒரு இளவட்டம். கல்லூரி மாணவனாக இருக்கலாம்; தோற்றம் அப்படி. அவனுக்கு முன் னால் குட்டையான ஒரு பெண்மணி. பச்சக் குழந்தையைத் தோள்மீது சாத்தி நின்றுகொண்டு அல்லல் பட்டுக்கொண்டு இருந்தாள்.

வண்டி வேகம் எடுக்கிறது. திடீர் திடீர் என்று பிரேக் போடப்படு கிறது; வளைந்து வளைந்து செல் கிறது; காற்று ஒலிப்பானில் வைத்த கையை எடுக்க மனசில்லை ஓட்டுநருக்கு.

அடுத்த நிறுத்தம் வருகிறதுபோல. அந்தப் பிள்ளைத்தாய் பக்கத்தில் ஒரு ஆள் இறங்க, நின்று ஆயத்தமான அதே வேகத்தில், அந்த இளவட்டம் சக்கென்று உட்கார்ந்துவிட்டான்.

தாத்தா, ‘அட பாவீ’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

பேருந்து வேகம் எடுத்தது. வளைந்து வளைந்து செல்லும்போது மக்களும் காற்றடிக்கும்போது சாய்ந்து கொடுக்கும் பயிர்களைப் போலச் சாய்கிறார்கள். நிறுத்தம்தோறும் சக்கையை உமிழ்வதுபோல மக்களை உமிழ்ந்துகொண்டே போகிறது பேருந்து.

தாத்தாவை யாரோ சுரண்டுவது போலத் தெரிந்ததும் திரும்பிப் பார்க்க, ஒரு கல்லூரி மாணவி! ‘‘தாத்தா! இங்கே வந்திருங்க. நா இறங்கப் போறேன்’’ என்று தெரிவித்தாள். ‘நிக்கட்டும்’ என்பது போல் தலை அசைத்தார் தாத்தா. நிறுத்தம் வருகிறது போல. அந்த பிள்ளைத்தாய் எங்கே நிற்கிறாள் என்று தாத்தா கண் களால் தேடினார்; அந்த இடத்தை இவர் அடைவதற்குள் இன்னொரு தடியாள் அதில் உட்கார்ந்து கொண் டான். ‘அட பாவி!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் தாத்தா!

வேகம் வேகம்... காலம் காலம்!

 

 

 

 

 

p48.jpg யாருடைய நாள் இது?

காலையில் எழுந்ததும், பால் பாக்கெட் வாங்க நான் போகும் போதெல்லாம் முதலில் தட்டுப்படுவது இவன்தான். தெரு திரும்பியதும் முனிசிபல் குப்பைத் தொட்டியில் துழாவிக்கொண்டு இருப்பான்.

அவனுக்கு வேண்டியது கழிவுத் தாள்கள், காலியான பால்பாக்கெட் டுகள், அட்டைப்பெட்டிகள் இப்படி. எவ்வளவுக்குக் கிடைக்கிறதோ அன் றைக்கு அதிர்ஷ்டமான நாள் அவனுக்கு. குடிக்கவும் உண்ணவும் போதும்!

பேச மாட்டான். ஊமை இல்லை. கையேந்த மாட்டான்; பிச்சைக் காரன் இல்லை.

45 வயசுக்குள் இப்படியாகிவிட் டானாம். பார்த்தவுடன் ஒரு நிமிஷம் அய்யோ என்றிருக்கும். பைத்தியம் முற்றியவர்களும் ஜாதிக் குடிகாரர்களும் தான் இப்படி குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டுத் தெருவுக்கு வந்துவிடு கிறார்கள்.

ஒருநாள், நகரத்துக்குப் போய்விட்டு லாஸ்பேட்டை திரும்பிக்கொண்டு இருந்தபோது, எதிரே ஒரு ‘பெரும் பயணம்’ வந்துகொண்டு இருந்தது. வருகிறவரத்தைப் பார்த்தால், யாரோ ஒரு மகாபிரபு பூம்பல்லக்கில் வருகிறார் போல! வாத்தியங்களும் அதிர்வேட்டு களும் முழங்க, ஆட்டமும் கொண் டாட்டமுமாக வருகிறார். போலீஸ்காரர் கள் அணிந்த தொப்பிகளைக் கையில் எடுக்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் வருகிறவர்கள் இறங்கி மரியாதை செய்கிறார்கள். ஊர்கோலம் மெதுவாக எங்களைக் கடக்கிறது. விலை உயர்ந்த அந்தப் பூம்பல்லக்கில் இருக்கும் மகானு பாவன் யார் என்று கவனித்தபோதுதான் தெரிந்தது... அட, நம்ம முனிசிபல் குப்பாண்டித் தொட்டியார்!

‘அநாதையாக விடப்பட்ட ஒருவ னுக்கு வந்த வாழ்வைப் பாரடா, மனுசா!’ என்று என்னையே கேட்டுக் கொண்டேன். பூம்பல்லக்கு அரிச்சந்திர மகாராஜனுடைய கோயிலைக் கடந்து மயான பூமிக்குள் நுழைகிறது. அந்த மயான நுழைவாயில் சுவரில் இப்படி எழுதியிருக்கிறார்கள்...

இன்று இவர்; நாளை நீ!

வாசகத்தில் ஒரு திருத்தம் வேண்டும் என்று தோன்றியது

இன்று இவர்; நாளை நாம்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.