Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீண்­ட­கால எண்­ணக்­கரு அர­சாங்­கத்­திடம் இல்லை

Featured Replies

நீண்­ட­கால எண்­ணக்­கரு அர­சாங்­கத்­திடம் இல்லை

p13-09d705b604bb5e19798ba3ea5caa810ac987af7e.jpg

 

மட்­டு. மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞா.ஸ்ரீநேசன் கேசரிக்கு வழங்கிய செவ்வி

பேச்­சு­வார்த்­தை­களில் நூற்­றுக்கு நூறு நம்­ப­ மு­டி­யா­விட்­டாலும் கூட எமது மக்­களின் முன்­னை­ய­கால நிலை­யி­னைக்­க­ருத்­திற்­கொண்டு அவர்­களின் துய­ரங்­களைத் துடைத்­தெ­றிந்து சுதந்­தி­ர­மாக வாழ­வைக்­க­வேண்டும் என்ற சித்­த­னையின் அடிப்ப­டையில் எமது கட்சி இன்று பய­ணித்துக் கொண்டு இருக்­கின்­றது. ஆகவே அர­சாங்கம் தொடர்பில் முழு­மை­யாக திருப்­தி­ய­டைய முடி­யா­துள்­ளது. ஆனால், முன்னர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இணைந்து தீர்வு விட­யத்தில் பேரம் பேசி­யி­ருந்தால் இல­கு­வாக தீர்­வினை எட்­டி­யி­ருக்­கலாம் அது துர­திர்ஷ்டவ­சமாய் போ­யுள்­ளது என மட்­டக்­க­ளப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரி­வித்தார் =சம­கால அர­சியல் நிலை குறித்து கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொட­ர்ந்து கேள்விக்கு பதி­ல­ளிக்­கையில், 

 

கேள்வி: தற்­போ­தைய அர­சியல் நிலை பற்றி கூறுங்கள். 

 

பதில்: தற்­போ­தைய அர­சியல் நிலை­பற்றி கூறு­கின்­ற­பொ­ழுது நடந்து கொண்­டி­ருக்­கின்ற விடயம் இடைக்­கால அறிக்கை மற்றும் அர­சியல் அமைப்பு சம்­பந்­த­மா­னது. இவ் விட­யந்தான் அர­சி­யலில் தற்­போது பேசப்­ப­டு­வதாக காணப்­ப­டு­கின்­றது. நீண்ட கால­மாக புரை­யோ­டிப்போய் இருக்­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்­வினை காண­வேண்டும் என்­றதன் அடிப்­ப­டையில் இடைக்­கால அறிக்கை பற்­றியும் புதிய அர­சி­ய­ல­மைப்பு பற்­றியும் தற்­போது கலந்­தா­லோ­சிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அதன் அடிப்­ப­டையில் இடைக்­கால அறிக்கை என்­பது முடி­வான அறிக்­கை­யாக இருக்­கப்­போ­வதும் இல்லை. இதனை இறு­தி­யான அறிக்­கை­யாக நிறை­வேற்­று­வ­தற்கு பல தடங்கல்கள் இருந்­தாலும் இனங்­க­ளுக்­கி­டையில், மதங்­க­ளுக்­கி­டையில் நல்ல ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தி இந்த நாட்டில் அனை­வரும் இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் வாழ­வேண்டும் என்ற சூழலை உரு­வாக்­கு­வ­தற்கு பொறு­மை­யுடன் எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் சம்­பந்தன் செயற்­பட்­டுக்­கொண்டு இருக்­கின்றார்.

இந்த விட­யத்தில் முற்­போக்­கான சிந்­தனை கொண்ட சிங்­கள தலை­மை­களும் மக்­களும் ஆத­ரவு வழங்­கு­கின்ற அதே­வே­ளையில் வழங்­கம்­போல பேரி­ன­வாத சக்­தி­களும் இதற்கு எதி­ராக செயற்­பட்டு கொண்டு இருக்­கின்­றன. எது எப்­ப­டி­யாக இருந்­தாலும் கடந்த காலத்தில் கற்­றுக்­கொண்ட பாடங்­களை கருப்­பொ­ரு­ளாக வைத்­துக்­கொண்டு நிகழ்­கா­லத்தில் இவற்­றினை பகுத்­தா­ராய்ந்து கொண்டு எதிர்­கா­லத்தில் இந்த அர­சி­ய­ல­மைப்­பினை அமைப்­பதன் ஊடாக இலங்­கையில் வாழு­கின்ற சகல மக்­களும் மகிழ்ச்­சி­க­ர­மாக வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்கும் நோக்­குடன் எமது தலைவர் செயற்­பட்­ டுக்­கொண்டு இருக்­கின்றார். இதுதான் இன்­றைய அர­சியல் நிலை­யா­க­வுள்­ளது. 

கேள்வி: நீங்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சார்­பாக அதி­கப்­ப­டி­யான வாக்­கு­க­ளைப்­பெற்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கி­யி­ருக்கின்றீர்கள்! இதன் அடிப்­ப­டையில் மக்கள் உங்கள் மீது வைத்­தி­ருந்த அபி­லா­ஷை­களை நிறை­வேற்றி வரு­கின்­றீர்­களா?

பதில்: -­தமிழ் மக்­களை பொறுத்­த­மட்டில் முத­லா­வ­தாக இருக்­கின்ற விடயம் புரை­யோ­டிப்போய் இருக்­கின்ற இனப்­பி­ரச்­சி­னை தீர்க்­கப்­ப­ட­வேண்டும். அதன் ஊடாக இந்த நாட்டில் சமத்­து­வ­மாக இரண்டாம் தர­ப் பிர­ஜை­யாக வாழக்­கூ­டாது என்­ப­துதான் தமிழ் மக்களின் முதன்­மை­யான கருத்­தா­கவும் இருக்­கின்­றது. அதுதான் எமது மாவட்ட மக்­களின் நிலைப்­பா­டா­கவும் இருக்­கின்­றது. எனவே இந்த பிரச்­சி­னையை தீர்க்­க­வேண்டும் என்­பதன் அடிப்­ப­டை­யில்தான் எமது கட்சி முழு­மை­யாக செயற்­பட்டு வரு­கின்­றது. இதற்­கான பூரண ஒத்­து­ழைப்­புக்­களை பாரா­ளுமன்ற உறுப்­பினர் என்­ற­ வ­கையில் நானும் வழங்கி வரு­கின்றேன்.

மக்­க­ளி­டத்தில் இரண்­டா­வது காணப்­படும் விடயம் யாதெனில் அபி­வி­ருத்தி சம்­பந்­த­மானதாகும். அதிலும் விளம்­பரம் இல்­லா­விட்­டாலும் கூட நாங்கள் அவ்­வப்­போது செய்­து­கொண்டு வரு­கின்றோம். உதா­ர­ண­மாக பாரா­ளு­மன்­றத்­திற்கு சென்­ற­வுடன் எமது பிர­தே­சத்தில் காணப்­ப­டு­கின்ற பல்­வே­று­பட்ட குறை­பா­டு­களை பாரா­ளு­மன்றம் உட்­பட பல இடங்­க­ளிலும் எடுத்­தி­யம்பி வரு­கின்றோம்.

இதன் அடிப்­ப­டையில் வர­வு–­செ­ல­வுத்­திட்டம் நிறை­வே­று­வ­தற்கு முன்னர் எங்­க­ளது எதிர்­க்கட்சித் தலைவர் உங்­க­ளது பிர­தே­சங்­களில் காணப்­படும் பிரச்­சி­னைகள் சம்­பந்­த­மான அறிக்­கை­யினை தரும்­படி கோரி­யி­ருந்­தார். அதன் அடிப்­ப­டையில் அதனை வழங்­கி­யி­ருந்தேன். அதில் குறிப்­பிட்ட முத­லா­வது விடயம் என்­ன­வெனில் எமது மாவட்­டத்தில் படு­வான்­கரை எழு­வான்­கரை என்று பிர­தேசம் துண்­டு­பட்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றது இந்த வேறு­பாட்­டினை போக்கி போக்­கு­வ­ரத்தில் ஏற்­படும் அபா­யங்­க­ளையும் கால­தா­ம­தங்­களை தடுப்­ப­தற்­காக இப்­பி­ர­தே­சங்கள் இணைக்­கப்­பட வேண்டும். இணைப்­ப­தற்கு பாலங்கள் மிக­ முக்­கி­ய­மான தேவை­யாக இருக்­கின்­றன என்­ப­தனை நாங்கள் சுட்­டி­காட்டி இருந்தோம்.

இதன்­போது ஏழு பாலங்­களை நாங்கள் சுட்டிக்­காட்­டி­யி­ருந்தோம். இதனை கட்­டித்­ த­ரு­வதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கூறி­யி­ருந்தோம். மற்றும் வாழைச்­சேனை காகித ஆலையை திருத்தி அமைத்து இயங்­க­வைக்­கப்­பட வேண்டும், மண்­டூரில் காணப்­படும் ஓட்டு தொழிற்­சாலை, தேவ­புரம் என்ற இடத்தில் இருக்­கின்ற அரிசி ஆலையை இயங்க செய்­ய­வேண்டும்; சந்­தி­வெ­ளியில் காணப்­ப­டு­கின்ற அரச அச்­சகம் போன்ற விட­யங்­களை பிரஸ்­தா­பித்து இருந்தோம் மாத்­தி­ர­மல்­லாது கர­டி­யனாற்றில் காணப்படும் விவ­சா­யப்­பண்ணை அதனை மீண்டும் இயங்க செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்; தும்­பங்­கே­ணியில் காணப்­ப­டு­கின்ற ஏற்று நீர்ப்­பாசனம் பற்­றியும் இவ்­வா­றாக பல்­வே­று­பட்ட அபி­வி­ருத்­தி­க­ளையும் மேற்­கொள்­வ­தற்­கான பூர்­வாங்க ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.

இதன் பிர­காரம் வரவு – செலவுத் திட்­டத்­தின்­போது வழைச்­சேனை தொழிற்­சாலை­யையும் மண்டூர் ஓட்டுத் தொழிற்­சாலை­யையும் திறப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக நிதி­ய­மைச்சர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். மற்றும் 2016 ஆம் ஆண்டில் முதற்­கட்­ட­மாக நான்கு பாலங்­களை அமைத்­து­ த­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை மேற்­கொள்­ளப்­படும் என உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர். அந்த வகையில் பங்­கு­டா­வெ­ளி­பாலம், திகி­லி­வெட்டை பாலம், கிண்­ணை­ய­டி­பாலம், ராண­மடு மாலை­யர்­கட்டு பாலம் போன்­ற­வை­யாகும். அடுத்­த­கட்­ட­மாக குறு­மண்­வெளி மண்­டூர்­பாலம், அம்­பி­ளாந்­துறை பாலம், காஞ்­சி­ரங்­குடா பாலம் மற்றும் தொடங்­க­ப்பட்ட நிலையில் முடி­வு­றாமல் இருக்கும் பாலங்கள் தொடர்பில் அடுத்­த­டுத்­தாண்­டு­களில் செய்­து­த­ரு­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளனர். இத­னை­விட 16 க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை வழங்­கி­யுள்ளோம். பல்­க­லைக்­கழகத்தில் 37 பேரை நிரந்­த­ர­மாக்­கி­யுள்ளேன். இவ்­வாறு இந்த இரண்டு வரு­டங்­க­ளுக்குள் இவ்­வா­றான அபி­வி­ருத்தி வேலை­களை முன்­னெ­டுத்­துள்ளேன்.

 

 

 

கேள்வி: தற்­போ­தைய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் திருப்­தி­யான நிலையில் உள்­ளீர்­களா?

பதில்: இ­லங்கை அர­சியல் வர­லாற்­றினை நாங்கள் பார்க்­கின்­ற­போது அடிப்­ப­டை­வாதத்­தினை வைத்து அர­சி­யல் ­செய்­கின்ற நிலை­யினை நாங்கள் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. ஐந்து ஆண்டு அர­சியல் செய்­ய­வேண்டும் என்ற எண்­ணம்தான் அர­சாங்­கங்­க­ளுக்கு இருந்­ததே தவிர நீண்­ட­கால போக்­கு­டைய அர­சியலை மேற்­கொண்­ட­தாக தெரி­ய­வில்லை. இது ஐக்­கிய தேசிய கட்­சி­யாக இருந்­தாலும் சரி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யாக இருந்­தாலும் தமிழ் மக்­க­ளுக்கு பாதிப்­பான பல ­சட்­டங்­களை நிறை­வேற்றி இருக்­கின்­றன. இவ்­வா­றான செயற்­பாட்டின் ஊடா­கவே எமது இனப்­பி­ரச்­சினை என்­பது நீண்­ட­கால பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது.

இன்­றைய நிலையில் அர­சுடன் பேச்­சு­வார்த்­தைகள் பல­த­ரப்­பட்ட வகையில் இடம்­பெற்று கொண்டு இருக்­கின்­றது. நாங்கள் இவற்றில் திருப்­திப்­ப­டு­வ­தாக இருந்தால் வடக்­கு ­கி­ழக்கு இணைப்பு, சமஷ்டி முறை­யி­லான ஒரு அடிப்­ப­டைத்­தீர்வு இது­போன்ற இன்னும் சில விட­யங்கள் கிடைக்­க­வேண்டும் என்­பது தமிழ் மக்­களின் ஏகோ­பித்த கருத்­தாக இருக்­கின்­றது. எனவே, இப்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற பேச்­சு­ வார்த்­தை­களில் நாங்கள் முழு­மை­யாக திருப்­திப்­ப­டக்­கூ­டி­ய­தாக இல்லை. இருந்­தாலும் எமது மக்­களின் முன்­னை­ய­கால நிலை­யி­னைக்­க­ருத்­திற்­கொண்டு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்­க­ வேண்டும் என்று எம­து கட்சி செயற்­பட்­டுக்­கொண்டு இருக்­கின்­றது. குறித்­த ­பேச்சு­வார்த்தை தொடர்பில் நூற்­றுக்­குநூறு நம்­ப­ மு­டி­யா­து­விட்­டாலும் எமது மக்­களின் துய­ரங்­களை துடைத்­தெ­றிந்து அவர்கள் ஓர­ளவு சுதந்­தி­ர­மாக வாழ­வேண்டும் என்ற சிந்­த­னையில் எமது கட்சி இன்று பய­ணித்துக் கொண்டு இருக்­கின்­றது. ஆகவே, அர­சாங்கம் தொடர்பில் முழ­ுமை­யாக திருப்­தி­ய­டைய முடி­யாது.

கேள்வி: இவ்­வா­றான நிலையில் உங்­க­ளு­டைய கட்சி தலைவர் சம்­பந்தன் அடுத்த தீபா­வ­ளிக்கு தீர்­வு­கி­டைக்கும் என்ற உறு­தி­மொ­ழி­யினை மக்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளாரே இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: உண்­மையில் நாங்கள் பார்க்­கின்­ற­போது அழு­த­ழுதும் பிள்­ளையை அவள்தான் பெற­வேண்டும் என்பர். நாங்கள் எதிர்­க்கட்­சியில் இருந்­தாலும் ஆளும் கட்­சி­யோடு விரும்­பியோ விரும்­பா­மலோ பேசித்தான் ஆக­வேண்டும். அவர்­க­ளோடு பேசித்தான் தீர்­வு­களை காண­வேண்டும் என்­றதன் அடிப்­ப­டையில் கடந்த காலங்­களில் பல ஏமாற்­றங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்றோம். உண்­மையில் கடந்த காலங்­களில் ஒரு­மித்த நாட்டில் வாழ்­வ­தற்கு தமிழ் மக்கள் விரும்பி இருந்­தார்கள். பின்னர் சமஷ்டி முறையின் கீழ் வாழ்­வ­தற்கு செய்­த­வர்கள் தனிச்­சிங்கள் சட்­டத்­தினை கொண்டு வந்­த­வர்­கள்தான். அத­னையும் தர­ம­றுத்­தார்கள். இவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டதன் கார­ணத்­தி­னால்தான் இறு­தியில் ஆயு­தப்­போராட்டம் வெடித்­தி­ருந்­தது.

இந்­த­ கா­ல­கட்­டத்தில் நாங்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் இணைந்து பேரம்­பேசி தீர்­வினை பெறு­வ­தற்கு முயற்­சித்­தி­ருந்தால் நிச்­ச­ய­மாக சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்­வினை பெற்­றி­ருக்­க­மு­டியும் துர­திர்ஷடவ­ச­மாக போராட்டம் மௌனிக்­கப்­பட்­டதன் கார­ணத்­தினால் இந் நிலை தவ­ற­வி­டப்­பட்­டுள்­ளது. இதற்கு 2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்­கு வாழ் மக்கள் வாக்­க­ளிக்­கா­ததன் கார­ணத்­தினால் மஹிந்த இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யானார். அவர் பல அவ­ல­நி­லை­களை ஏற்­ப­டுத்தி சென்­றி­ருந்தார். தற்­போது தமிழ் மக்­களின் கூடு­த­லான பலத்­தினைப் பெற்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு இரா­ஜ­தந்­திர ரீதி­யான பலத்­தினை மாத்­திரம் வைத்துக் கொண்டு சர்­வ­தே­சத்தின் இரா­ஜ­தந்­திர உத­வி­யோடு பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றது. இத­னை நூற்­றுக்­கு­நூறு நம்­பா­விட்­டாலும் சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்­போடும் பார்­வை­யோடும் எமது தலைவர் பெற்­றி­ருக்­கின்ற அரசியல் ஞானத்­தோடும் தமிழ் மக்கள் விரும்­பக்­கூ­டிய அனு­ப­விக்கக் கூடிய தீர்­வினைப் பெறு­வதே நோக்கம். எனவே, தற்­போ­தைய அர­சுடன் எப்­ப­டி­யா­வது பேசித்தான் ஆக­வேண்டும்.

அந்த வகையில் தற்­போது ஒரு தீர்வை அடை­ய­வேண்டும் என சம்­பந்தன் நம்­பு­கின்றார். நம்­பிக்கை என்­பது ஒரு­வ­ரி­டத்தில் இருக்க வேண்டும். எந்த இடத்தில் விட்­டுக் ­கொ­டுக்க வேண்டும்; இறுக்கிப் பிடிக்க ­வேண்டும் என்­றதன் அடிப்­ப­டையில் அவர் செயற்­பட்டு வரு­கின்றார். இந்த இடத்தில் நாங்­களே குழப்­பி­விட்டோம் என்று எண்ணம் எவ­ருக்கும் தோன்­றாத வகை­யி­ல் இறு­தி­வ­ரைக்கும் பேச்­சு­வார்­த்தை விடயத்தில் பங்கு கொண்டிருக்கின்றோம்.இந்த இடத்தில் எங்களை ஏமாற்றிவிடலாம் என்று பெரும்பான்மை அரசியல்வாதிகள் நினைப்பார்களாக இருந்தால் உள்நாட்டில் தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற முடியாது என்ற நிலை ஏற்படும். எனவே தான், தீபாவளி வருகின்ற போது இதற்கான தீர்வு கிடைக்கவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கூடிய கருத்தினை சம்பந்தன் கூறியிருக்கின்றார். இது உண்மை­­­யாக இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சிறந்த தீபாவளியை கொண்டாடு­வார்கள். இல்லாவிட்டால் இந்த நாட்டில் தீர்வினை பெறமுடியாது. வெளிநாட்டின் ஊடாகவே தீர்வினை பெறவேண்டும் என்ற நிலை உருவாகும். ஆனால் இயன்றளவு இப்பிரச்சினையை தேசிய மட்டத்தில் தீர்த்துக்கொள்வதற்கே விரும்புகின்றார்.

 

 

 

கேள்வி: எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டி யிடுமா?

பதில்: அனைவரையும் இணைத்துக் கொண்டு ஐக்கியமாக இருப்பதே எமது தலைவர் சம்பந்தனின் நோக்கமாகும். எனவே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பலமான கட்சியாக போட்டியிடவேண்டும் என்பதையும் நாம் எண்ணுகின்றோம். எந்தக்கட்சியையும் நீங்கள் வெளியேறிச் செல்லுங்கள் என்று சொல்லும் அளவிற்கு பக்குவமற்ற கட்சியில்லை. ஆனால், சிலர் நான் பிரிந்துதான் போகப்போகின்றேன் பந்தயம்பிடி என்ற நிலையில் இருக்கின்றனர். இது அவர்களுடைய ஜனநாயக உரிமை. எனவே, தமிழரசுக்கட்சி அனைத்து கட்சிகளையும் புறந்தள்ளி தனித்து போட்டியிடாது. 

நேர்­காணல் : சுப்­ர­ம­ணியம் கம­லேஸ்­வரன்  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-17#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.