Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன­வாத நிலைப்­பாடு நாட்­டுக்கு நன்மை தரப் போவ­தில்லை

Featured Replies

  • இன­வாத நிலைப்­பாடு நாட்­டுக்கு நன்மை தரப் போவ­தில்லை
இன­வாத நிலைப்­பாடு  நாட்­டுக்கு நன்மை  தரப் போவ­தில்லை
 
 

இன­வாத நிலைப்­பாடு நாட்­டுக்கு நன்மை தரப் போவ­தில்லை

“அரச தலை­வர் அவர்­களே! மிகச் சிர­ம­மா­ன­தொரு வேலையை நாம் மேற்­கொண் டோம். ரொட்டி சுடும் கல்­லைச் சூடாக்க நாங்­கள் வரு­டக் க­ணக்­கான நாள்­களை புகை­யில் கழித்­தோம். அவ்­வி­தம் அந்­தக் கல்லை, ரொட்டி சுடு­வ­தற்­கா­கவே நாம் சூடாக்­கிக் கொடுத்­தோம். ஆனால் தற்­போது பார்க்­கும்­போது அது தீப்­பற்றி மூண்­டெ­ரி­கி­றது. நாங்­கள் அதனை ரொட்டி சுடு­வ­தற்­கா­கத்­தான் தயார் செய்­தோம். ஆனால் அந்த ரொட்டி தற்­போது கரு­கிச் சாம்­ப­ரா­கிப் போயுள்­ளது.’’

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முத­லாம் திக­தி­யன்று மேற்­கண்ட கருத்தை வெளி­யிட்ட பிர­மு­கர் சாதா­ர­ண­மான ஒரு­வ­ரல்­லர். வணக்­கத்­துக்­கு­ரிய மாது­ளு­வேவ சோபி­த­தே­ரரே மனம் நொந்த நிலை­யில் அவ்­வி­தம் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார்.

மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான அரசை அகற்றி, நியா­ய­மான சமூ­க­மொன்றை உரு­வாக்­கும் முயற்­சி­யில் முன்­னின்று பாடு­பட்ட சோபி­த­தே­ரர், தாம் உயி­ரி­ழக்கு முன்­னர் மைத்­தி­ரி­பால அர­சுக்கு விடுத்த கடைசி அறி­வு­றுத்­தல் இது­வா­கும்.

உண்­மை­யில் மைத்­தி­ரி­பால சிறி­சேன அரசு மற்­றெல்­லோ­ரது ஆலோ­ச­னை­க­ளை­யும்­விட, சோபித தேர­ரது ஆலோ­ச­னைக்கே முன்­னு­ ரிமை வழங் கிச் செயற்­பட்­டி­ருக்­க­வேண்­டும். மகிந்­த­வின் தலை­மை­யி­லான அரசை அகற்றி, மைத்­தி­ரி­பால தலை­மை­யி­லான அர­சைப் பத­வி­யில் அமர்த்த சோபித தேரர் மேற்­கொண்ட முயற்­சி­கள் பெரும் பெறு­ம­தி­மிக்­கவை.

ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தில் சோபி­த­தே­ர­ரது பங்கு முக்கியத்துவமானது

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திக­திய அர­சி­யல் தலை­மைத்­துவ மாற்­றத்­தின் பின்­னர், சோபி­த­தே­ரர் பொது சமூ­கங்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­ வப்­ப­டுத்தி ஐ.தே.கட்­சி­யு­டன் உடன்­ப­டிக்­கை­யொன்றை மேற்­கொண்­டார்.

முக்­கிய 14 விட­யங்­களை உள்­ள­டக்கி வரை­யப்­பட்ட அந்த உடன்­ப­டிக்­கை­யில் கீழ்க் குறிப்­பி­டப் ப­டும், புனர்­நிர்­மா­ணங்­களை மேற்­கொள்­ளல், புதிய நாடா­ளு­மன்­றத்தை அர­ச­மைப்பு உரு­வாக்­கல் சபை­யாக ஆக்கி நடை­மு­றை­யி­லுள்ள நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழித்து நாடா­ளு­மன்­றம் பொறுப்­புக்­கூ­றத்­தக்க அமைச்­ச­ரவை அர­ச­மைப்­பொன்றை உரு­வாக்க முன்­னு­ரிமை வழங்­கல், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் மூலம் நாடா­ளு­மன்­றம் உரு­வாக்­கப்­பட்ட பின்­னர் அர­ச­மைக்­கும் அதி­கா­ரத்­தைப் பெற்ற கட்­சியை மாற்ற இய­லாத விதத்­தி­லான சட்­ட­மொன்றை அர­ச­மைப்பு விதி­க­ளில் உள்­ள­டக்­கல் போன்ற முக்­கிய அம்­சங்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

குறித்த அந்த ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே ஐ.தே.கட்சி மற்­றும் சுதந்­தி­ரக் கட்சி என்­பவை இணைந்து இணக்­கப்­பா­டொன்றை எட்­டின. நிறை­வேற்று அரச தலை­வர் பத­வியை ஒழிப்­ப­தென்­பது மைத்­தி­ரி­பால ஏற்­றுக்­கொண்ட முக்­கிய அம்­ச­மாக அமைந்­தி­ருந்­தது.

ஆனால் தற்­போது சுதந்­தி­ரக் கட்­சியோ ‘‘மைத்­தி­ரி­பால அவ்­வி­தம் இணக்­கப்­பா­டொன்­றுக்கு ஒப்­புக் கொண்­டி­ருந்­தா­லும், சுதந்­தி­ரக் கட்­சி­யின் நிலைப்­பாடு அது­வல்ல’’ எனத் தெரி­வித்­துள்­ளது. அந்த வகை­யில் சுதந்­தி­ரக் கட்சி ஒரு நிலைப்­பாட்­டி­லும் தாம் மற்­றொரு நிலைப்­பாட்­டி­லும், இருப்­ப­தாக மைத்­தி­ரி­யால் உணர இய­லாது எனக் கூறி­விட இய­லாது.

‘‘எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் தேசி­யத்­தின் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளும் சகல பிரி­வினை முயற்­சி­க­ளை­யும் நான் கடு­மை­யாக எதிர்க்­கி­றேன்; வெறுக்­கி­றேன். நான் எனது வாழ்­நாள் முழு­வ­தும் பிரி­வி­னை­ வா­தத்­துக்கு எதி­ரா­கப் போராடி வந்­துள்­ளேன்; தற்­போ­தும் போராடி வரு­கின்­றேன்; எனது உயிர்­பி­ரி­யும் நாள் வரை போரா­டு­வேன்’’ என பிரி­வி­னை­வா­தத்­துக்கு எதி­ரான கடும் கொள்கை நிலைப்பாட்­டைக் கடைக்­கொண்­ட­வர் தென்­னா­பி­ரிக்­கா­வின் முன்­னாள் அரச தலை­வர் நெல்­சன் மண்­டேலா.

பல்­லாண்­டு­கள் கால­மாக ஐரோப்­பா­வின் குடி­யேற்ற நாடா­க­வி­ருந்த தென்­னா­பி­ரிக்­கா­வில் நில­விய அடி­மைத்­தளை நடை­மு­றைக்கு எதி­ரா­கப் போரா­டிய அவர், இன­பே­த­மற்ற உல­கொன்­றுக்­கா­கக் கனவு கண்ட பெரு­ம­கனா­வார்.

சிங்­கப்­பூரை உரு­வாக்­கிய சிற்­பி­யின் இலங்கை குறித்த நிலைப்­பாடு

‘‘ஒரு இனத்­துக்கு இருக்க வேண்­டிய அடிப்­படை அம்­சங்­க­ளென சொந்த இனக்­கு­ழு­மம், பொது­வான மொழி, பொது­வான கலா­சா­ரம் என்­பவை ஆரம்­பத்­தில் எம்­மி­டம் இருந்­த­தில்லை. நாம் தென்­சீன, தென்­னிந்­திய, பாகிஸ்­தான் மற்­றும் பங்­க­ளா­தேஷ் (பாகிஸ்­தா­னி­லி­ருந்து பிரி­வ­தற்கு முன்­னர்) இலங்கை மற்­றும் தீவுக் கூட்­டங்­க­ளி­லி­ருந்து வந்து குடி­யே­றிய சமூ­கங்­க­ளைக் கொண்­டி­ருந்­தோம். இத்­த­கைய சகல நாடு­க­ளி­லி­ருந்­தும் வந்து குடி­யே­றிய இனத்­த­வர்­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து நாட்டை நிர்­வ­கிக்க இய­லுமா என்ற சிக்­கல் நிலை எம்­முன் பூதா­க­ர­மாக எழுந்து நின்­றது.

மேற்­கண்­ட­வாறு கருத்து வெளி­யிட்­ட­வர் சிங்­கப்­பூரை உரு­வாக்­கிய சிற்­பி­யா­கக் கொள்­ளப்­பட்ட சிங்­கப்­பூ­ரின் தலைமை அமைச்­சர் பொறுப்பு வகித்த லீகு­வான் யூ என்ற பெரு­ம­கனா­வார். ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தன் மூல­மா­க­வே­ யன்றி இரண்டு மூன்று பிரி­வு­ க­ளாக நாட்­டைப் பிரித்து அந்த நாட்டை முன்­னேற்ற இய­லா­தெ­னக் கூறி­ய­வர் லீகு­வான்யூ. நாட்­டில் வாழும் சக­ல­ருமே சிங்­கப்­பூர் பிர­ஜை­கள்­தான் என்ற உணர்வை அங்கு வாழ்ந்த பல்­வேறு நாட்­ட­வர்­கள் மனங்­க­ளில் நிலை­பெ­ற­வைத்து, சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு இனக்­கு­ழு­மங்­க­ளை­யும் சிங்­கப்­பூ­ரின் தேசிய அன்­னி­யோன்ய நிலைப்­பாட்­டுக்கு ஒன்­றி­ணைத்­த­தன் மூலம் லீ குவான் யூ சிங்­கப்­பூரை உல­கின் தலைசி­றந்த நாட­னெ்­றா­கக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தில் வெற்­றி­கண்டவர்.

1948ஆம் ஆண்­ட­ள­வில் ஆசி­யப் பிராந்­தி­யத்­தில் முன்­னேற்­ற­ ம­டைந்த நாடா­கத் திகழ்ந்­தது ஜப்­பானே ஆகும். அதற்­க­டுத்த இரண்­டா­வது நிலை­யில் இலங்கை திகழ்ந்து வந்­தது. சிங்­கப்­பூ­ரைச் சிறந்­த­தொரு நாடாக உரு­வாக்­கக் கடு­மை­யாக உழைத்த லீ குவான் யூ, இலங்­கைக்கு பய­ணம் மேற்­கொண்­ட­வேளை, சிங்­கப்­பூரை இலங்கை போன்ற நாடாக ஆக்­கு­வதே தமது கன­வா­கும் எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.

அவ்­வி­தம் தெரி­வித்த லீ குவான் யூ, பின்­னர் ஒரு கால­கட்­டத்­தில், இத்­த­கைய எதிர்­கால எதிர்­பார்ப்­பைக் கொண்­டி­ருந்த இலங்கை, சுதந்­தி­ரம் பெற்­ற­தன் பின்­னர் எத்­த­கைய விதத்­தில் பின்­ன­டை­வுக்கு உட்­பட்­ட­தென்­ப­தைத் தாம் கண்டு கேட்டு உணர்ந்­த­தா­கக் கூறி­யி­ருந்­தார். அது இன, மத பேதங்­கள் அடிப்­ப­டை­யில் முரண்­பா­டு­க­ளுக்கு உட்­பட்­ட­த­னால் ஏற்­பட்ட விளை­வே­யா­கும்.

1953ஆம் ஆண்­டில் நாட்­டில் வட­ப­கு­திக்­குப் பய­ணம் மேற்­கொண்ட ஐ.தே.கட்சி அர­சின் தலைமை அமைச்­சர் சேர்.ஜோன். கொத்­த­லா­வல , சிங்­க­ளம் மற்­றும் தமிழ் ஆகிய இரு­மொ­ழி­க­ளுக்­கும் நாட்­டில் சம அந்­தஸ்து வழங்­கப்­ப­டு­மெ­னக் கூறி­யமை தென்­ப­கு­தி­யைக் குழப்­பத்­தில் ஆழ்த்­தி­யது. சேர்.ஜோன், சிங்­கள இனத்­தைக் காட்­டிக் கொடுத்­து­விட்­ட­தாக எதிர்க்­கட்­சித் தரப்­பி­னர் குற்­றம்­சாட்­டி­னர்.

தலைமை அமைச்­சர் சேர்­ஜோ­னு­டன் முரண்பட்ட சுதந்­தி­ரக் கட்­சித் தலை­வர்­கள்

பெளத்­த­ம­தத் துற­வி­கள் தரப்­பி­னர் சேர்.ஜோனுக்கு எதி­ராக தீவிர எதிர்ப்பை வெளிக்­காட்­டி­ய­து­டன், பண்­டா­ர­நா­யக்க மற்­றும் பிலிப் குண­வர்த்­தன போன்ற இன­வாத அர­சி­யல்­வா­தி­கள் எரி­யும் நெருப்­பில் எண்­ணெய் வார்த்­தமை போன்று, ஐ.தே.கட்சி அர­சுக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்­குத் தூண்­டு­தல் அளித்து வந்­த­னர்.

இத்­த­னைக்­கும் தலைமை அமைச்­சர் சேர்.ஜோனோ, பெளத்த துற­வி­கள் எத்­த­கைய எதிர்ப்பை மேற்­கொண்­டா­லும் நான் என்­னு­டைய கொள்கை யில் இருந்து ஒரு­போ­தும் பின்­வாங்­கப் போவ­தில்லை என்ற நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருந்­தார்.

‘அப்­ப­டி­யா­னால் நாம் சிங்­கள மொழியை அரச கரும மொழி ஆக்­கு­வோம்’ என 1956ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­தல் வேளை­யில் பண்­டா­ர­நா­யக்கா தமது தேர்­தல் குறித்த கொள்கை நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­னார்.
மக்­கள் அலை பண்­டா­ர­நா­யக்க­ வின் நிலைப்­பாட்­டால் கவ­ரப்­பட்டு பண்­டா­ர­நா­யக்க­வுக்கு ஆத­ர­வா­கத் திரண்­டெ­ழுந்­தது.

அந்த நாடா­ளு­மன்­றப் பொதுத்­தேர்­த­லில் ஐ.தே.கட்­சிக்கு ஆக எட்டே எட்­டுத் தொகு­தி­க­ளில் மட்­டும் வெற்றி கிட்­டி­யது. சேர்.ஜோனி­னது கொள்கை நிலைப்­பாட்­டா­ லேயே தோல்வி கிட்­டி­யது என­வும், நாட்­டின் தேசி­யப் பாது­காப்­புக் குறித்து அவர் அக்­கறை கொள்­ளா­த­த­னா­லேயே அத்­த­கைய பின்­ன­டைவை ஐ.தே.கட்சி அரசு சந்­திக்க நேர்ந்­த­தென வும் பலர் அர­சுக்கு எதி­ராக விமர்­ச­னம் முன்­வைத்­த­னர்.

இவற்­றை­யெல்­லாம் ஒரு சிறி­து­தா­னும் கணக்­கில் எடுக்­காத சேர்.ஜோன் கொத்­த­லா­வல, பொதுத் தேர்­த­லில் வெற்­றி­யீட்­டி­யி­ருந்த பண்­டா­ர­நா­யக்கவி­டம் அர­சுப் பொறுப்பை முறைப்­படி ஒப்­ப­டைத்­து­ விட்டு, தமது கந்­த­வ­ளைத் தோட்­டத்­தில் சென்று ஓய்­வா­கப் பொழு­தைக் கழிக்க முடிவு செய்து அதற்­க­மை­யச் செயற்­பட்­டார்.

இன­வா­தத்­தைத் தூண்டி அரச அதி­கா­ரத்­தைப் பண்­டா­ர­நா­யக்க கைப்­பற்­றிக் கொண்­டா­லும் பாதிக்­கப்­ப­டப்­போ­வது எந்­தத் தரப்­பி­னர் என்­பது மிக விரை­வில் தெரி­ய­வ­ரு­மெ­ன­வும் சேர்.ஜோன் தெரி­வித்­திருந்தார்.

தலைமை அமைச்­சர் பண்­டா­ர­நா­யக்க தவறு இழைத்­த­தாக சுதந்­தி­ரக் கட்சி ஆத­ர­வா­ளர்­கள் குற்­றச்­சாட்டு

காலப்­போக்­கில் சிங்­க­ளத்தை அரச கரு­ம­மொ­ழி­யாக்க பண்­டா­ர­நா­யக்க தாம­திப்­ப­தா­கக் குற்­றஞ்­சாட்டி அவர் பத­விக்கு வரு­வ­தற்கு ஆத­ர­வ­ளித்த பெளத்த துற­வி­கள் உட்­பட்ட இன­வா­தத்­த­ரப்­பி­னர் பண்­டா­ர­நா­யக்க­வுக்­குப் பல­வ­ழி­க­ளில் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்த ஆரம்­பித்­த­னர்.

காலப்­போக்­கில் அத்­த­கைய எதிர்ப்­பு­ணர்வு தீவி­ர­ம­டைந்து கடை­சி­யில் பண்­டா­ர­நா­யக்க பெளத்த துற­வி­யொ­ரு­வ­ரால் சுட்­டுப்­ப­டு­கொலை செய்­யப்­பட நேர்ந்­தது.

பண்­டா­ர­நா­யக்­க­வின் பூத­வு­ட­ லுக்கு இறுதி மரி­யாதை செலுத்­தச் சென்ற சேர் ஜோன் கொத்­த­லா­வல, ‘‘இவ்­வாறு நடக்­கக்­கூ­டு­மென நான் எதிர்­பார்த்­தேன். நான் கட்டி வைத்­தி­ருந்த நாய்­களை பண்­டாரநாயக்க அவிழ்த்து விட்­டி­ருந்­தார். அவை­கள் பண்­டாரநாயக்­க­வையே கடித்­துக் குத­றி­விட்­டன’’ எனக் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார்.

சேர் ஜோன் இன­வா­தி­க­ளையே அவ்­வி­தம் விமர்­சித்­தி­ருந்­தார். அந்த வகை­யில் அவர் இன­வா­தப் போக்­கில் ஒருபோதும் செயற்­ப­ட­வில்லை. இன்­றைய மைத்­திரி – ரணில் கூட்டு அர­சும்­கூட நடுநி­லைப் போக்­கில், மிதவாதப் போக்கில் செயற்­ப­டு­கி­றது என்றே இன்று கடும் கோட்­பாட்­டா­ளர்­கள் தரப்­பால் விமர்­சிக்­கப்ப­டு­கி­றது.

சேர் ஜோன் தலைமை அமைச்­ச­ரா­கச் செயற்­பட்ட வேளை­யில் நாடு­கு­றித்து அக்­கறை காட்­டாத தலை­வ­ரென எதிர்­கட்­சி­யி­னர் அவரை விமர்­சித்து வந்­த­னர். ஆனால் ஒன்­றரை வரு­டங்­கள் வரைமட்­டுமே தலைமை அமைச்­ச­ரா­கப் பதவி வகித்த சேர். ஜோன், தனது பத­விக் காலத்­தில் முதன்­மு­த­லாக இலங்­கை­ப் பிரஜையான சேர் ஒலி­வர் குண­தி­ல­கவை தேசா­தி­ப­தி­யாக நிய­மித்து இலங்கை அர­சி­யல் வர­லாற்­றில் புதிய சகாப்­தம் ஒன்றை ஏற்­ப­டுத்­தி­னார்.

நாட்­டின் சகல சுதந்­தி­ர­தி­னக் கொண்­டாட்­டங்­க­ளின் போதும் இலங்­கைத் தேசிய கொடி­யு­டன் பிரிட்­டன் கொடி­யை­யும் ஏற்­றி­வைக்­கும் நடை­மு­றையை முதன்­மு­த­லில் கைவிட்டு நாட்­டின் தேசி­யக் கொடியை மட்­டுமே ஏற்­றி­வைக்­கும் வழக்­கத்தை ஆரம்­பித்து வைத்­த­வர் சேர் ஜோனே. அது­மட்­டு­மன்றி, இலங்­கைக்கு ஐ. நா. சபை­யின் உறுப்­பு­ரி­மை­யை முதன் முதலில் பெற்­றுக் கொடுத்­த­வ­ரும் சேர் ஜோன் கொத்­த­லா­வ­லவே.

அந்த வகை­யில் சேர் ஜோன் இலங்­கை­யின் தலைமை அமைச்­ச­ரா­கச் செயற்­பட்ட குறு­கிய காலம், இலங்கை அர­சி­யல் வர­லாற்­றில் முக்­கி­ யத்­து­வம் பெற்­றுத் திகழ்ந்­தது. இன்­றைய கூட்­டாட்சி அர­சின் மீதும்கூட, கூட்டு எதி­ர­ணி­யி­னர் சிங்­கள இனம் குறித்து அரசு முக்­கி­யத்­து­வம் வழங்­கிச் செயற்­ப­டு­வ­தில்லை என்று குற்­றம் சாட்டி வரு­கின்­ற­னர்.

ஆனால் மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் அவர்­கள் எவ்­வாறு மனம் போன­ப­டி­யெல்­லாம் செயற்­பட்­டார்­கள் என் பது குறித்து சிந்­தித்துப் பார்க்­க அவர்கள் தவ­றி­யுள்­ள­னர். தாம் உயி­ரி­ழப்­ப­தற்கு முன்­னர் கூட்டு ஆட்­சித் தரப்­பி­ன­ருக்­கும், எதி­ர­ணித் தரப்­பி­ன­ருக்­கும் சேர்த்து வேண்­டு­கோ­ளொன்றை விடுத்த காலஞ்­சென்ற சோபித தேரர், கட்­சி­க­ளது கொள்கை நிலைப்­பா­டு­களை ஒரு­பு­றம் ஒதுக்கி வைத்­து­விட்­டுச் சகல தரப்­பி­ன­ரும் ஒன்­றி­ணைந்து நாடா­ளு­மன்­றத்தை அர­ச­மைப்­புச் சபை­யாக மாற்றி புதிய அர­ச­மைப்­பொன்றை உரு­வாக்­கு­மாறு கோரி­யி­ருந்­தார்.

நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழித்­துக் கட்டி நாட்டை முன்­னேற்­றப் பாதை­யில் இட்­டுச் செல்­லு­மாறு கோரி­யி­ருந்­தார்.சோபித தேர­ரது மேற்­கு­றித்த கோரிக்­கையை மறந்­து­போய்­விட்ட தரப்­பி­னர்­கள், மீண்­டும் அதனை நினை­வு­ப­டுத்­திப் பார்த்­தல் இன்­றைய காலத்­தின் தேவை ­யாக ஆகி­யுள்­ளது.

http://newuthayan.com/story/48310.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.