Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அர­சியல் சூழ்­நிலை மாறு­கி­றதா? மன­மாற்றம் ஏற்­ப­டு­கி­றதா? : சிந்­தி­யுங்கள்

Featured Replies

அர­சியல் சூழ்­நிலை மாறு­கி­றதா? மன­மாற்றம் ஏற்­ப­டு­கி­றதா? : சிந்­தி­யுங்கள்

 

தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக ஏற்­பட்­டு­வரும் சூழ்­நிலை மாற்­றத்­தையும் சிங்­கள மக்­க­ளி­டையே ஏற்­பட்­டு­வரும் மன­மாற்­றத்­தையும் நாம் மிகவும் கவ­ன­மாக கருத்தில் கொள்­ள­வேண்டும்.

 அதேவேளை, தமிழ்­பேசும் மக்­களின் அர­சியல் தீர்வை முன்­னெ­டுத்­து­வரும் த.தே.கூட்­ட­மைப்பு தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா சம்­பந்தனுக்கு ஆட்­சி­யா­ளரும் சிங்­கள அர­சியல் கட்சித் தலை­வர்­களும் வர­வேற்­ப­ளிப்­பதும் மற்­றுமோர் சாத­க­மான சூழ்­நி­லை­யாகும்.

 தலைவர் சம்­பந்தனின் அர­சியல் அணு­கு­முறை, அர­சியல் அனு­பவம், இரா­ஜ­தந்­திரம் அவரை தமிழ் மக்­களின் பெரும் தலை­வ­ராக மதிக்க வைத்­துள்­ளது.

 சம்­பந்தனின் அர­சியல் திற­மையும் ஆற்­றலும் அவரை இந்த நிலைக்கு உயர்த்­தி­யது. இன்­றைய கால­கட்­டத்தில் அவர் ஆற்­றி­வரும் பணிகள் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு ஒரு அர­சியல் தீர்வைக் கொண்­டு­வரும் என்ற நம்­பிக்கை உரு­வாகி வரு­கி­றது.

 இன்று சர்­வ­தே­ச­ நா­டுகள் சம்பந்தனுக்கு பெரும் மதிப்­ப­ளித்து வரு­வ­தையும் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். இதுவும் ஒரு சூழ்நிலை மாற்றம்.

இடைக்­கால அறிக்கை தொடர்­பாக கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்தா அளுத்­க­மகே ஆற்­றிய உரை­யின்­போது, “வட­கி­ழக்கு மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட­வேண்டும்; அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் கூட்டு எதிர்க் கட்­சி­யி­னரைத் தப்­பான கண்­கொண்டு பார்­க­்க வேண்டாம். அதி­காரப் பகிர்­வுக்கு நாம் பூரண ஒத்­து­ழைப்பை வழங்­குவோம். எதற்கும் பயம் கொள்­ள­வேண்டாம். நாம் மதிக்கும் உன்­ன­த­மான அர­சியல் தலை­வர்­களில் சம்­பந்­தனும் ஒரு­வ­ராவார். அவ­ருக்­கான மதிப்பு எமக்கு எப்­போதும் உள்­ளது. அவர் நீண்­ட­கா­ல­மாக தமிழ் மக்­க­ளுக்­காகப் போரா­டி­வ­ரு­கின்றார். அவ­ரு­டைய காலத்தில் எப்­ப­டி­யா­வது பிரச்­ச­ினையைத் தீர்த்­து­வி­ட­வேண்டும். ஆகவே நாம் ஒத்­து­ழைப்பு வழங்­குவோம்” என்றார்.

இந்த அடிப்­ப­டையில் இடைக்­கால அறிக்கை பற்­றிய விவா­தத்தில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் தலை­வர்கள் வெளி­யிட்ட கரு­த்­துக்­களை ஆராய்ந்து பார்க்­க­வேண்டும். இடைக்­கால அறிக்கை தொடர்­பாக நெடுஞ்­சா­லைகள் மற்றும் உயர்­கல்வி அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல உரை­யாற்­று­கையில்,

“இலங்கை வர­லாற்றில் இரண்டு சந்­தர்ப்­பங்­களில் அர­சியல் அமைப்­புகள் தனித்­து­வத்தைப் பாது­காக்க அனை­வரும் ஒன்­றி­ணை­ய­வேண்டும்” என்றார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் உரை­யாற்­று­கையில்

“இலங்கை வாழ் மக்­க­ளுக்கு வர­லாற்று பூர்­வ­மான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. இந்­த­சந்­தர்ப்­பத்தை நாம் தவ­ற­விடக் கூடாது. எனவே இனங்­க­ளி­டையில் முரண்­பாடு இல்­லாமல் வாழும் சூழலை உரு­வாக்­கு­வ­தற்கே நல்­லாட்சி அர­சாங்கம் முயற்சி மேற்­கொண்­டுள்­ளது. எப்­ப­டி­யா­யினும் இனப் பிரச்­சி­னையைத் தீர்க்­க­வேண்டும். இதன் பிர­கா­ர­மே­சு­தந்­தி­ரக்­கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒன்­றி­ணைந்­துள்­ளன. இதன்­படி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும்­ ஒரு மேசைக்கு வந்­துள்­ளனர். ஆகவே இனிமேல் சந்­தர்­ப்பம் கிடை­யாது” என்றார்.

தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்­றும்­அ­ர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ­ க­ணேசன் உரை­யாற்­று­கையில்,

“தேசி­யப்­பி­ரச்­சினை தீர்­வுக்கு அதி­காரப் பகிர்வு அவ­சி­ய­மாகும். இதனைத் தீர்த்து வைக்கும் நோக்­கு­டனே புதிய அர­சியல் அமைப்­பு­ப் ப­ணி­க­ளை­ஆ­ரம்­பித்­துள்ளோம்.தமது தனி­நாட்டுக் கோரிக்­கையை கைவிட்டு இரா.சம்­பந்தன் தற்­போது இலங்கை இராஜ்­ஜிய வியூகத்­துக்கு வந்­துள்ளார். இதன் கார­ண­மாக தெற்கு மக்­க­ளுடன் பேச­வந்­துள்ளார். எனவே, சம்­பந்­தனை வெறும் கையுடன் அனுப்­ப­வேண்டாம். அவ்­வாறு அனுப்­பினால் மன்­னிக்க முடி­யாத குற்றம் என்­ப­தை­ ம­றந்து விடா­தீர்கள்” என்று கூறினார்.

ஜனா­தி­பதி மாளி­கையில் நடை­பெற்ற தேசிய தீபா­வளிப் பண்­டி­கையில் கலந்­து­கொண்ட எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் உரை­யாற்­று­கையில்,

“புதிய அர­சியல் அமைப்பின் மூல­மா­கவே நீண்­ட­கா­லப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­ப­ட­ வேண்டும். இந்த செயற்­பா­டு­களில் பிள­வு­படாத நாட்­டினுள் அதி­காரப் பகிர்­வு­களை முன்­வைத்து சம­ாதா­னத்தை உரு­வாக்க வேண்டும். புதிய அர­சியல் அமைப்பை தயா­ரிக்கும் பணி­களைக் குழப்­பு­வ­தற்கு இரண்டு தரப்­பிலும் சிலர் முயற்­சிக்­கின்­றார்கள்.

ஆனால் நாங்கள் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்­ள­ அ­ர­சியல் அமைப்பு தயா­ரிப்புப் பணி­க­ளுக்கு ஒட்­டு­மொத்த தமிழ் மக்கள் சார்பில் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வோம்­ என்ற உறுதிமொழியை ஜனா­தி­ப­திக்கு வழங்­கு­கிறேன். புதிய அர­சியல் உரு­வாக்­கத்தில் தமிழ்­மக்­களின் பூர­ண­ஆ­த­ரவு கிடைக்கும்” என்றார்.

யாழ்ப்­பாணம் மறை ­மா­வட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்­பி­ர­காசம் வெளி­யிட்ட அறிக்­கையில்,

“அதி­கா­ரங்­களை உச்­ச­க்கட்டம் பகிர்­வ­தற்கு கூட்டு அரசு இணங்­கி­யுள்­ள­தாக பிர­தமர் ரணில் கூறி­யுள்ளார். அது வெறும் வாய் மொழியில் அல்­லாமல் நடை­மு­றையில் வர­வேண்­டும் எனக் கூறி­யுள்ளார்.

 த.தே.கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் புௌாட் அமைப்பின் தலை­வ­ரு­மான த.சித்­தார்த்தன் வெளி­யிட்ட அறிக்­கையில்,

“புதிய அர­சியல் அமைப்­பிற்­கான இறுதி அறிக்கை வரும்­வரை நாம் பொறுமை காக்­க­வேண்டும். இடைக்­கால அறிக்­கையை நாம் தூக்கி எறி­வது புத்­தி­சா­லித்­த­ன­மல்ல. நாங்கள் புதிய அர­சியல் அமைப்பைக் குழப்­பு­வ­தாக இருக்­கக்­கூ­டாது. நாங்கள் இதனைக் குழப்­பி­விட்டு சர்­வ­தேச சமூ­கத்தின் முன்னால் நிற்­க­மு­டி­யாது.சர்­வ­தேச சமூகம் நீங்கள் தானே இதைக் குழப்­பி­னீர்கள், நீங்­களே உங்கள் பிரச்­ச­ினையைப் பாருங்கள் என்று எங்­களைக் கைக­ழுவி விடு­ம்” எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

பேரா­சி­ரியர் (கலா­நிதி) கண்­ண­முத்து சிதம்­ப­ர­நா­தன்­ இ­டைக்­கால அறிக்கை பற்றி வீர­கே­ச­ரியில் எழு­தி­யுள்ள கட்­டு­ரையில் காணப்­படும் அவ­ரது கருத்­துக்கள் கவ­னிக்கத் தக்­கவை.

“தமிழ் அர­சியல் தரப்­புக்கள் அனை­வரும் தங்­க­ளு­டைய சொந்த அர­சியல் இருப்­புக்­க­ளையும் சிந்­த­னை­க­ளையும் ஒதுக்­கி­வைத்­து­விட்டு இலங்­கையில் வாழும் மக்கள் அனை­வரும் இன பேத­மின்றி சிறு­பான்மை, பெரும்­பான்மை என்­றில்­லாமல் இலங்கை மக்கள் என்ற கொள்­கையில் சக­ல­ருக்கும் சம உரி­மைகள் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற பொறி­மு­றையின் அடிப்­ப­டையில் புதிய இலங்­கையின் அர­சியல் யாப்பு இருக்­க­வேண்டும் என்று வாதி­டு­வது பொருத்­த­மாக இருக்கும்.

கடந்த அறு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக இலங்கை அர­சி­யலைப் பார்த்­த­வர்கள் ஒரு உண்­மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.இலங்கை தேசத்து மக்­களை இன­பே­த­மின்றி பார்க்கும் சில சிங்­கள அர­சியல் தலை­வர்­களை இன்று பார்க்­கின்றோம். தேசிய பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்டு வர­வேண்டும் என்று சிந்­திக்­கி­றார்கள், செயற்­ப­டு­கி­றார்கள். அவர்­க­ளுக்கு மத்­தியில் கடந்த அறு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக இலங்கை அர­சி­யலில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இரா. சம்­பந்தன் இன்­றைய சிங்­கள தலை­மை­களின் நாடித் துடிப்­பு­களை நன்­றாகக் கணித்­தவர். அவ­ருக்­கு­ நி­க­ராக நாம் எவ­ரையும் தற்­போதைய சம­கால அர­சி­யலில் காண­மு­டி­யாது.

யாழ். குடா­நாட்­டிற்குள் இருந்து கொண்டு தங்கள் அர­சியல் இருப்­புக்­காக உண்­மைக்கு புறம்­பான பிர­சா­ரத்தை செய்து மக்­களைக் குழப்பும் வழி­க­ளைக்­கை­விட்டு, ஆரோக்­கி­ய­மான கலந்­து­ரை­யாடல், பகி­ரங்­க ­வி­வா­தங்கள் போன்­ற­வற்றில் தங்கள் நியா­யங்­களை எடுத்­துக்­கூறி எப்­போதும் எட்­டவே முடி­யாத இலக்­கு­களை எட்­டிப்­பி­டிக்க முடியும் என்ற எண்­ணத்தை மக்கள் மனதில் பதித்து அவர்­களை ஏமாற்­று­வதை விடுத்து இரா.சம்பந்தன் தலைமையில் பின்நின்று அவரின் அரசியல் பலத்திற்கு பக்கபலமாக நின்று புதிய அரசியல் யாப்பில் அதிஉச்சமாக எதைப்பெறமுடியுமோ அதை முன்னோக்கி செல்ல வேண்டுமென்பதே இப்போதுள்ள தேவையாகும்" என கலாநிதி சிதம்பரநாதன் எழுதியுள்ளார்.

எனவே, வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் யாரும் தாழியை உடைக்கக் கூடாது. இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு நெகிழ்ச்சித்தன்மையைக் கடைப்பிடிக்கிறது. “அரசியல் யாப்பு உருவாக்கத்தில் யார் வென்றார்கள் யார் தோற்றார்கள் என்பது அல்ல இன்றைய பிரச்சினை. அதைப்பற்றி நாம் பேசக் கூடாது. இனச்சிக்கலுக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வை எட்டுவதில் இரு சாராருமே வெல்ல வேண்டும்” என்றே த.தே.கூ. இன் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.   

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.