Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைதீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்!

Featured Replies

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்!

 

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்!

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்!

பொதுமக்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் உறவினர்களால் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் கூடி உணர்வுபூர்வமாக மாவீரர்களை அஞ்சலித்தனர்.

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்!

இதன்படி மாவீரர்களுக்கான ஈகச்சுடரினை மாவீரர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார்.

இதேவேளை மாவீரர் உறுதிமொழிப் பாடலும் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் குறித்த நேரத்தில் ஒலிக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பசீலனின் தாயார் ஈகைச் சுடரேற்றினார்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/maveerar-nov27-mulliyavalai

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்

முல்லைதீவு  முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில்  மாவீரர்களின் பெற்றோார்கள் உறவினா்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு தங்களின் அஞ்சலிகளை செலுத்தினர்.

mullaitivu.jpg

அந்த வகையில் முல்லைத்தீவு முள்ளியவளை  மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னா் பிரதான பொதுச் சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா  ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோா்கள் மற்றும் கலந்துகொண்டவா்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

IMG_1594.JPG

தொடர்ந்து துயிலுமில்ல பாடலான தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன பேழைகளே எனும் பாடல் ஒலிபரப்பாகியது. 

IMG_1588.JPG

இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினா்கள் மற்றும் கலந்துகொண்டவா்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்தமையினை காணக் கூடியதாக இருந்தது.

IMG_1578.JPG

சுமாா் ஆயிரத்துக்கும் அதிகமான  பொது மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_1569.JPG

IMG_1560.JPG

IMG_1551.JPG

IMG_1550.JPG

IMG_1544.JPG

IMG_1533.JPG

IMG_1531__1_.JPG

IMG_1525.JPG

IMG_1520.JPG

IMG_1518.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.