Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத்தில் சிங்கள ஏகாதிபத்தியமும் மறுக்கப்படும் தமிழர் இறையாண்மையும்

Featured Replies

தமிழர் தாயகத்தில் சிங்கள ஏகாதிபத்தியமும் மறுக்கப்படும் தமிழர் இறையாண்மையும்

 

தமிழர் தாயகத்தில் சிங்கள ஏகாதிபத்தியமும்  மறுக்கப்படும் தமிழர் இறையாண்மையும்

மருத்துவர் சி. யமுனாநந்தா

ஈழத்தமிழர்களின் பாரம்பரிய ஆட்சியானது இலங்கையின் வடக்கே அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்தினை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் செல்வாக்கு கிழக்கே பொத்துவில் வரையும் மேற்கே புத்தளம் வரையும் இருந்தது. கி. பி. 1619இல் போர்த்துக்கேயர் தமிழ் மன்னன் சங்கிலியனை வீழ்த்தி தமிழரின் இறையாண்மையைப் பறித்தனர். இதனால் தமிழரின் இறையாண்மை போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சி அடைந்தது. கண்டியில் 2ம் இராஜசிங்கனின் தலைமையில் தமிழர்களின் அரசு 1815 வரை ஆட்சி செலுத்தியது. பின் ஆங்கிலேயரால் வெல்லப்பட்டு தமிழர்களின் இறையாண்மை தொலைக்கப்பட்டது. 1948இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் சுதந்திரம் கொடுத்தபோது தமிழர்கள் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கீழ் அடக்கப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழர் இறையாண்மை 2009இல் வீழ்த்தப்பட்டது. சிங்கள ஏகாதிபத்தியம் தமிழ் மக்களை நான்கு வழிகளில் அடக்குகின்றது. அவையாவன :

(01) சிங்கள பௌத்த கலாசார ஏகாதிபத்தியம் (Cultural Imperialism).
இலங்கையின் அரசியலமைப்பே சிங்கள பௌத்தத்தை முதன்மையாக வைத்தே உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழர்களும், தமிழர் பிரதேசங்களும் கலாசார ஏகாதிபத்தியத்திற்குள் அடக்கப்படுகின்றன. சிங்கள மொழி தமிழ் மக்களுக்குத் திணிக்கப்படுகின்றது.

(02) இராணுவ ஏகாதிபத்தியம் (Military Imperialism)
முற்று முழுதாகச் சிங்களவர்களால் ஆன இராணுவம், கடற்படை, விமானப்படைகள் இலங்கையின் வடக்கு கிழக்கினை ஆக்கிரமித்து பாரிய தமிழின அழிப்பினை மேற்கொண்டு தமிழர் தாயகத்தினைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

(03) அரசியல் ஏகாதிபத்தியம் (Political Imperialism)
இலங்கை அரசியலமைப்பும் பாராளுமன்றும், ஜனாதிபதியும் சிங்கள இனவாதிகளாலேயே நிர்வகிக்கப்படும் பெரும்பான்மை பலம் உடையது. இதன்மூலம் தமிழாகள் அடக்கப்படும் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழர் தாயகப் பிரதேசங்களுள் அரசியல் ரீதியாகச் சிங்களப் பகுதிகளாக மாற்றும் நடவடிக்கைகளும், சிங்களக் குடியேற்றங்களும் அபிவிருத்தி என்ற போர்வையில் நடைபெற்று வருகின்றன. கல்லோயாத் திட்டத்தில் ஆரம்பித்த இந்த அரசியல் ஏகாதிபத்தியம் தற்போது வடமாகாண ஆளுனரின் கீழ் நாவற்குழி வரை பரந்துள்ளது. மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதியாகச் செயற்படுவோரும் சிங்கள அரசின் நிழல் பிரதிநிதிகளாகச் செயற்படும் அரசியல் சூழலினைத் தற்போதைய அரசியல் ஏகாதிபத்தியம் தமிழருக்குப் பாதகமாக ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அரசியலின் சார்புகளும், ஐ. நா மனித உரிமை அவை வரை பாதகமாகவே உள்ளது. இவற்றியை அரசியல் ஏகாபத்தியம் எனலாம்.

(04) பொருளாதார ஏகாதிபத்திய மூலமான அடக்கு முறைகள் (Economic Imperialism)
தொடர் இனக்கலவரங்கள் மூலம் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுவிட்டன. 1958, 1977, 1983 இனக்கலவரங்கள் இதற்கு சிறந்த உதாரணங்கள். அடுத்து வேலை வாய்ப்புக்கள். கல்வியில் இனரீதியான பாகுபாடு உள்ளது. இதற்கு 1972ம் ஆண்டு தரப்படுத்தல் ஓர் உதாரணம். அடுத்து இராணுவ நடவடிக்கையால் 1983 தொடக்கம் 2009 வரை தமிழர்கள் உயிர்கள் மட்டுமன்றி சொத்துக்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

தமிழர் நிலங்கள், கடல்கள், காடுகள் என்பன பாதுகாப்பு என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு விட்டன. இலட்சக்கணக்கான மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு அகன்று விட்டனர். மலையக மக்களுக்குதிட்டமிட்டமுறையில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் உழைப்புச் சுரண்டல்கள் நடைபெறுகின்றன. இவற்றிற்கு அப்பால் நுண்கடன் என்ற போர்வையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் அடக்கப்பட்டு உள்ளனர். அடுத்து இனரீதியாக பொருளாதார முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு பல தடைகள் உள்ளன. இவற்றில் ஊழல்கள், தரகுப்பணம் வழங்கல் என்பனவும் அடங்கும்.

மேற்கத்தையவர்களால் காவுகொள்ளப்பட்ட தமிழர்களின் இறையாண்மை, சிங்கள அரசிடம் அதன் ஏகாதிபத்தியப் போக்கிற்கு உறுதுணையாக 2ம் உலகப் போருக்குப் பின்னரான அரசியல் சூழலில் வழங்கப்பட்டது. சிங்கள அரசு தனது ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்த தேசிய பாதுகாப்பு என்ற போர்வையிலும், தேசிய மயமாக்கல் என்ற போர்வையிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. மேலும் பாரிய யுத்தத்தினை மேற்கொண்டு தமிழர் தாயகத்தினை 2009இல் கையகப்படுத்தி வைத்துள்ளது. இதன் பின் எழும் சர்வதேச அழுத்தங்களைத் தவிர்க்க அல்லது சர்வதேச அனுசரணையுடனான வேலைத்திட்டங்களே தமிழர்களுக்குச் சில சலுகைகளும் உரிமைகளும் வழங்குவதாக பாசாங்கு பண்ணுதல் ஆகும். ஐ நா மனித உரிமை அவையின் தொடர் தீர்மானங்களும், இலங்கையின் அண்மைய அரசியலின் அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையும், தமிழர் மீதான ஏகாதிபத்தியத்தினைத் தக்க வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் போலி நீதிச் செயன்முறைகளாகும். அடுத்து பாதுகாப்பு ஏற்படுத்துதல், ஒப்படைப்பு செய்தல் பொறிமுறையாக ஏகாதிபத்தியத்தினை வலுப்படுத்த இந்திய கடற்படை, அவுஸ்ரேலியா கடற்படை என்பவற்றின் உதவியினைத் தமிழின அழிப்பிற்காக நேரடியாகவும், மற்றும் சீனா, ஐக்கிய அமெரிக்கா, ரஸ்சியா என்பவற்றின் கடற்கலங்களை உதவியாகவும், அன்பளிப்பாகவும் பெற்று தமிழரின் கடல்வளத்தைக் கட்டுப்படுத்துகின்றனர்.

தமிழினத்தின் மீதான ஏகாதிபத்தியம் இலங்கையில் சிங்களத்தினாலும், இந்தியாவில் வட இந்தியர்களாலும் மேற்கொள்ளப்படு-கின்றது. ஆனால் ஒவ்வொரு தேசிய இனமும் தனது இறையாண்மையைத் தானே கொண்டிருக்க வேண்டும். இது ஆளுரிமை (Pநசளழயெட டுiடிநசவல)இ மக்கள் இறையாண்மை (Pழிரடயச ளுழஎநசநபைவெல)இ நாட்டுணர்ச்சி (யேவழையெடளைஅ) உடைய அரசியலமைப்பை உடைய தேசமாக மலர வேண்டும். உண்மையில் அரசியல் அறிவு அற்றோரினால் இறையாண்மை என்ற பெயரில் ஓர் இனத்தின் இறையாண்மை பறிக்கப்படுவதற்கு உலகில் வாழும் இனக்குழுமமாக தமிழர்கள் மிளிர்கின்றார்கள். முன்னூறு ஆண்டுகள் அஸ்திரியப் பேரரசுக்குள் இருந்த செக்கோஸ்லேவியா 1918இல் இறையாண்மை உள்ள நாடாக மாறியது. பல நூற்றாண்டுகளாக இறையாண்மையைத் தொலைத்த யூத இனம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தனது நாட்டினை உருவாக்கிக் கொண்டது. அதேபோல் உலகில் இறையாண்மையைத் தொலைத்த தமிழினமும் தற்போது அதனை உறுதிப்படுத்த முற்பட்டு உள்ளது.

இறையாண்மை அரசின் மூலக்கூறுகளில் மிகவும் முக்கியமானது. இறையாண்மை இன்றி அரசு செயற்பட முடியாது. இறையாண்மை என்பது அரசியல் சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத பலம் வாய்ந்த உயர்வான அதிகாரத்தைக் குறிக்கும். இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி தமிழர் இறையாண்மை என்ற பருப்பொருளின் பரிமாணம் கையகப்படுத்த முடியாத சூழலிலேயே உள்ளது. மாவீரர்களுக்கான நினைவு நிகழ்வுகள் தமிழ் மக்களின் இறையாண்மையின் வெளிப்பாடே ஆகும். ஒரு அரசில் இறையாண்மை அதிகாரம் மக்களிடம் இருப்பதையே மக்கள் இறையாண்மை என்பர். அதாவது மக்கள் தான் சரியா, தவறா என்பதனை நிர்ணயிப்பவர்களாக இருப்பர். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை சிங்கள ஏகாதிபத்தியத்னைத் தளர்த்துவதற்கு தமிழ் இறையாண்மையை மீளப் பெற்றுக் கொள்ளுதலே ஒரே ஒரு இனக்காப்புச் செயற்பாடாக அமையும்.

ஆண்ட தலைமுறை மீண்டு மொருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை?
மாண்ட தலைமுறை மீண்டு மொருமுறை
வாழ நினைப்பதில் என்ன குறை?

என்ற வினாக்கள் தமிழர் ஏகாதிபத்தியத்தினை எதிர்ப்பதனையும், இறையாண்மையின் வேண்டுதலையும் சுட்டி நிற்கின்றன.

http://www.samakalam.com/செய்திகள்/தமிழர்-தாயகத்தில்-சிங்கள/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.