Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியன்மாரில் சீனாவின் பொருளாதார நலன்களும் ரோஹிங்யா நெருக்கடியும்

Featured Replies

மியன்மாரில் சீனாவின் பொருளாதார நலன்களும் ரோஹிங்யா நெருக்கடியும்

 

சீனா ஏனைய நாடு­களின் உள்­நாட்டு நெருக்­க­டி­களில் நேர­டி­யாக தலை­யீடு செய்­யாமல் இருந்து வந்த இது கால வரை­யான போக்கை இப்­போது கைவிட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றதோ என்ற கேள்­வியை மியன்மார் ரோஹிங்யா நெருக்­க­டிக்கு அது முன்­வைத்­தி­ருக்கும் தீர்வுத் திட்டம் தவிர்க்க முடி­யாமல் எழுப்­பு­கி­றது.

ரோஹிங்யா நெருக்­க­டியைத் தணிப்­ப­தற்கு சீனா மூன்று கட்டத் திட்டம் ஒன்றை முன்­வைத்­தது. மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்தில் யுத்த நிறுத்­த­மொன்றை கொண்டு வரு­வது முத­லா­வது கட்டம். இது அங்கு இடம் பெறு­கின்ற வன்­மு­றை­களை முடி­வுக்கு கொண்டு வரு­வதை நோக்­க­மாகக் கொண்­டது. அக­திகள் பிரச்­சினை தொடர்பில் மியன்­மாரும் பங்­க­ளா­தேஷும் பேச்சுவார்த்­தை­களை நடத்­து­வது இரண்­டா­வது கட்டம். ராக்கைன் மாநி­லத்தின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு உத­வு­வ­தற்கு சர்­வ­தேச சமூ­கத்­திடம் வேண்­டுகோள் விடுப்­பது மூன்­றா­வது கட்டம்.

பங்­க­ளா­தேஷும் மியன்­மாரும் சீனாவின் திட்­டத்தை ஏற்றுக் கொண்­டு­விட்­டன. ஆனால் முத­லா­வது கட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­ன­தாக இரண்­டா­வது கட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த தொடங்­கு­வதை சாத்­தி­ய­மாக்கக் கூடிய அறி­கு­றி­களே தென்­ப­டு­கின்­றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ராக்கைன் மாநி­லத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கை­களின் விளை­வாக அங்­கி­ருந்து பாது­காப்புத் தேடி பங்­க­ளா­தே­ஷுக்கு ஓடிய சுமார் 6 இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­க­ளையும் நாட்­டுக்கு திருப்­பி­ய­ழைப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் தொடர்பில் பங்­க­ளா­தேஷும் மியன்­மாரும் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை ஒன்றை செய்து கொண்­டுள்­ளன. மியன்­மாரின் தலை­நகர் நைப்­பி­யி­தோவில் வைத்து கடந்த வெள்ளிக்­கிழமை அந் நாட்டின் அர­சாங்க கட்­சியின் தலை­வி­யான ஆங் சாங் சுகியும் பங்­க­ளாதேஷ் வெளியு­றவு அமைச்சர் ஏ.எச்.முஹமட் அலியும் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டார்கள். இதற்கு முன்­ன­தாக சீனாவின் வெளியு­றவு அமைச்சர் வாங்யி பங்­க­ளா­தே­ஷுக்கும் மியன்­மா­ருக்கும் விஜ­யங்­களை மேற்­கொண்டு இரு நாடு­க­ளி­னதும் அர­சாங்­கங்­க­ளுடன் பேச்சு வார்த்­தை­களை நடத்தி சீனாவின் மூன்று கட்ட திட்­டத்­துக்கும் இணக்­கத்தைப் பெற்றுக் கொண்டார். சீனாவின் திட்டம் சரி­யா­ன­தொரு திசை­யி­லா­னது என்­பதே சர்­வ­தேச சமூ­கத்தின் பொது­வான அபிப்­பி­ரா­ய­மாக இருக்­கின்ற போதிலும் சமா­தா­னத்­துக்­கான பாதை தடை­க­ளையும் சவால்­க­ளையும் நிறை­யவே கொண்­டது என்­பதில் சந்­தே­க­மில்லை.

புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் பங்­க­ளா­தேஷில் இருந்து ரோஹிங்யா அக­தி­களை திருப்­பி­ய­ழைப்­ப­தற்­கான செயன்­மு­றைகள் இரு மாதங்­களில் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் மூலம் அறி­யக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. பங்­க­ளா­தேஷில் உள்ள ரோஹிங்யா அக­திகள் தங்­க­ளது தனிப்­பட்ட விப­ரங்­களை நிரப்பி அனுப்­பு­வ­தற்­கான பதிவு விண்­ணப்­பப் ப­டி­வங்­களை மியன்மார் அர­சாங்கம் டாக்­கா­வுக்கு அனுப்பி வைத்­தி­ருக்­கி­றது. அந்த படி­வங்கள் பூர்த்தி செய்­யப்­பட்டு பங்­க­ளாதேஷ் அர­சாங்கம் அவற்றை திருப்­பி­ய­னுப்­பிய பிறகு சாத்­தி­ய­மா­ன­ளவு விரை­வாக அக­தி­களை திருப்­பி­­ய­ழைக்க தயா­ராக இருப்­ப­தாக மியன்மார் அர­சாங்க தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ரோஹிங்­யாக்கள் மேலும் அக­தி­க­ளாக வெளியே­று­வதைத் தடுப்­ப­தற்கும் ராக்­கைனில் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் மக்­க­ளுக்கு உட­னடி நிவா­ர­ணத்தை வழங்­கு­வ­தற்கும் வச­தி­யாக யுத்த நிறுத்தம் ஒன்றை பிர­க­டனம் செய்ய வேண்டும் என்­பதே பெய்­ஜிங்கின் அணு­கு­மு­றையின் முதல் கட்­ட­மாகும். ஆனால் இது இன்­னமும் சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

யுத்த நிறுத்­த­மா­னது பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில் அதை மதித்து மியன்மார் இரா­ணு­வமும் பிர­தான ரோஹிங்யா தீவி­ர­வாதக் குழு­வான அராகன் ரோஹிங்யா விடு­தலை இரா­ணு­வமும் வன்­மு­றையை நிறுத்திக் கொள்­வ­தாக இருந்­தாலும் கூட யுத்த நிறுத்­தத்தை மதிக்கத் தயா­ரில்­லாத வேறு பிரி­வுகள் இருக்கக் கூடும். ரோஹிங்­யாக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களில் ராக்கைன் பௌத்த பாது­காப்பு குழுக்கள் முக்­கிய பங்கு வகித்து வரு­கின்­றன. ரோஹிங்­யாக்­களை அச்­சு­றுத்­து­வ­தையும் தாக்­கு­வ­தையும் இந்த குழுக்கள் நிறுத்­துமா? பிர­க­ட­னப்­ப­டுத்தக் கூடிய யுத்த நிறுத்த உடன்­ப­டிக்கை ஒன்­றுக்குள் இந்த பௌத்த குழுக்­க­ளையும் உள்­ள­டக்­க­வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தாகும்.

ரோஹிங்யா தீவி­ர­வா­தி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கென்று கூறிக் கொண்டு மியன்மார் இரா­ணுவம் ராக்கைன் மாநி­லத்தில் நட­வ­டிக்­கை­களை நான்கு மாதங்­க­ளுக்கு முன்பு தீவி­ரப்­ப­டுத்­தி­யது. அப்­பாவி ரோஹிங்யா முஸ்லிம் குடி­மக்­களே பெரிதும் பாதிக்­கப்­பட்டு அயல் நாடான பங்­க­ளா­தே­ஷுக்கு தப்­பி­யோடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். சுமார் 6 இலட்சம் பேர் என்று மதிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்ற ரோஹிங்யா அக­தி­களை தங்க வைத்து பரா­ம­ரிப்­ப­தென்­பது பங்­க­ளாதேஷ் போன்ற ஒரு நாட்­டுக்கு சுல­ப­மான காரியம் அல்ல. சர்­வ­தேச மனி­தா­பி­மான உதவி நிறு­வ­னங்­களும் அக­தி­க­ளுக்கு நிவா­ரண உத­வி­களை வழங்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்ற போதிலும் நில­வரம் பரி­தா­ப­க­ர­மா­ன­தா­கவே இருக்­கின்­றது.

சீனா ஏனைய நாடு­களின் உள்­நாட்டு நெருக்­க­டி­களில் நேர­டி­யாக தலை­யீடு செய்­வ­தில்லை என்­பது ஒரு வர­லாற்று ரீதி­யான போக்­காக இருந்து வந்­தி­ருக்­கின்­றது. ஆனால் ரோஹிங்­யாக்­களின் நெருக்­க­டியில் சீனா தன் முனைப்­புடன் செயற்­பட்­டி­ருப்­பதைக் காணக் கூடி­ய­தாக இருக்­கி­றது. அதற்கு அடிப்­ப­டைக்­கா­ரணம் இந்த நெருக்­க­டியில் சீனாவின் சொந்த நலன்கள் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­றன என்­ப­தே­யாகும்.

மற்­றும்­படி ரோஹிங்­யாக்­களின் அவலநிலை கண்டு மனி­தா­பி­மான உணர்­வுடன் பெய்ஜிங் தலை­யிட்­டி­ருக்­கின்­றது என்று கூறு­வ­தற்­கில்லை.

பெய்ஜிங் பங்­க­ளா­தே­ஷு­டனும் மியன்­மா­ரு­டனும் நல்ல உற­வு­களை கொண்­டி­ருக்­கி­றது. மியன்­மாரின் ராக்கைன் மாநிலம் சீனாவின் மண்­ட­லமும் பாதையும் என்ற பல யுரே­சிய நாடு­களை உள்­ள­டக்­கிய பிர­மாண்­ட­மான செயற்­றிட்­டத்தின் முக்­கி­ய­மான ஒரு இணைப்­பாக அமை­கி­றது. ராக்­கைனில் சீனா 730 கோடி டொலர்கள் செலவில் ஆழ்கடல் துறை­முகம் ஒன்றை நிர்­மா­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது. அத்­துடன் ராக்கைன் கரை­யோ­ரத்­தையும் யுனா­னையும் இணைக்கும் எண்ணெய் மற்றும் வாயு குழாய் வழி­யையும் நிர்­மா­ணிப்­ப­தற்கு 245 கோடி டொலர்­களை சீனா முத­லீடு செய்­தி­ருக்­கி­றது.

ராக்கைன் நெருக்­கடி மேலும் நீண்­ட­கா­லத்­துக்கு தொட­ரு­மாக இருந்தால் அது சீனாவின் பொரு­ளா­தார நலன்­க­ளுக்கு பாதிப்­பாக அமையும் என்­பதால் மியன்மார் மீது பெய்ஜிங் நெருக்­க­டியைப் பிர­யோ­கித்து அதன் மூன்று கட்ட சமா­தானத் திட்­டத்­துக்கு இணங்க வைத்­தி­ருக்­கி­றது. ரோஹிங்யா முஸ்­லிம்­களைத் திருப்­பி­ய­ழைக்கும் திட்டம் தொடர்­பான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை சீனாவின் நெருக்­குதல் இரா­ஜ­தந்­தி­ரோ­பாயம் பயன் தந்­தி­ருக்­கின்­றது என்­பதை வெளிக்­காட்­டு­கின்­றது.

சீனாவைப் பொறுத்­த­வரை ரோஹிங்யா நெருக்­க­டியை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்­கான அதன் திட்டம் இரா­ணுவ - பொரு­ளா­தார அணு­கு­மு­றை­யொன்றின் அடிப்­ப­டை­யி­லா­னது. நெருக்­க­டிக்கு வறுமை பிர­தான காரணம் என்று சீனா கரு­து­கின்­றது போல தெரி­கி­றது. மியன்மார் அர­சாங்­கத்­தினால் ரோஹிங்­யாக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்டு வந்­தி­ருக்கும் பார­பட்­சமும் ஒடுக்கு முறை­யுமே அடிப்­ப­டையில் அவர்கள் மத்­தி­யி­லான கடும் வறு­மைக்குக் கார­ண­மாகும். வேலை வாய்ப்­புக்­களை வழங்­கு­வதன் மூலமோ அல்­லது பொரு­ளா­தார அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதன் மூலமோ மாத்­திரம் ரோஹிங்­யாக்­களின் அடிப்­படைப் பிரச்சினையைத் தீர்த்து விட முடியாது என்பதே யதார்த்தமாகும்.

ரோஹிங்யாக்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள். அந்த நிலை மாற்றப்பட வேண்டும். மியன்மாரின் பிரஜைகளாக இருப்பதற்கான உரிமைகள் அவர்களுக்கு இருக்கிறது. இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பிரஜாவுரிமை நிராகரிக்கப்படும் வரை பிரச்சினை தொடரும். தற்போதைய நெருக்கடி வெறுமனே அகதிகளுடன் சம்பந்தப்பட்டதல்ல. ரோஹிங்யாக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதன் விளைவானதே பிரச்சினை.

ராக்கைன் மாநிலத்துக்கு அமைதியை திரும்ப கொண்டு வர மியன்மாரில் ரோஹிங்யாக்கள் அனுபவித்து வருகின்ற திட்டமிட்ட வகையிலான பாரபட்சமும் ஒடுக்குமுறையும் முடிவுக்கு வர வேண்டும். அமைதியையும் உறுதிப்பாட்டையும் கொண்டு வருவதற்கான சீனாவின் திட்டத்தின் நோக்கம் ரோஹிங்யாக்களின் உரிமைகள் - நலன்களுடன் சம்பந்தப்பட்டதல்ல, மாறாக ராக்கைனில் அதன் முதலீடுகளை பாதுகாப்பதேயாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-02#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.