Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோகம் இழைத்தது யார்? : ஆயுதக் குழுக்­க­ளுக்கு அரு­கதை இல்­லையா?

Featured Replies

துரோகம் இழைத்தது யார்? : ஆயுதக் குழுக்­க­ளுக்கு அரு­கதை இல்­லையா?

acbbc7b0f6c6883beef4e74cfcfd22e0-bc5644c796d2b3b51c85e8e0c70a13ee7d587327.jpg

 

மாவீரர் நாளன்று கிளி­நொச்­சியில் நடந்த மாவீ­ரர்­களின் பெற்­றோர்­களை கௌர­விக்கும் நிகழ்வில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், வெளி­யிட்­டி­ருந்த கருத்து தற்­போ­தைய அர­சியல் சூழலில் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய விடயம் ஒன்றைத் தொட்டுச் சென்­றி­ருந்­தது.

“2009ஆம் ஆண்­டுக்கு முன்னர் ஆயுதக் குழுக்­க­ளாக இருந்­த­வர்கள் இப்­போது மாவீரர் நாள் பற்றிப் பேசு­கி­றார்கள். விடு­தலைப் புலி­களை அழிக்க உத­விய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரும் மாவீரர் நாள் பற்றிப் பேசு­கி­றார்கள். இவர்கள் அர­சுடன் இணைந்து எப்­படிச் செயற்­பட்­டார்கள் என்­பது எமக்குத் தெரியும்” என்று கூறி­யி­ருந்தார் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம்.

தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வுள்ள சூழலில் அர­சி­யல்­வா­திகள் புதிய புதிய குண்­டு­களைப் போடு­வது வழக்கம்.

இப்­போது உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடை­பெ­றப்­போ­கின்ற நிலையில், இதுவும் ஒரு தேர்தல் காலத்துக் குண்டா அல்­லது உண்­மை­யி­லேயே இது தமிழ் மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்­டிய விடயம் தானா என்று ஆரா­யப்­ப­டு­வது முக்­கியம்.

கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தின் மேற்­படி கருத்தில் இரண்டு விட­யங்கள் உள்­ளன.

முத­லா­வது-, மாவீரர் நாள் பற்றிப் பேசும் உரிமை ஆயுதக் குழுக்­க­ளுக்கு இருக்­கி­றதா என்ற கேள்வி.

இரண்­டா­வது- விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்கு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சுடன் இணைந்து செயற்­பட்­டதா என்ற கேள்வி.

இந்த இரண்டு விட­யங்­க­ளையும் இனிப் பார்க்­கலாம்.

மாவீரர் நாள் என்­பது, விடு­தலைப் புலி­களால், விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இருந்து உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒரு நாள் தான்.

ஆனால் காலப்­போக்கில், விடு­த­லைப புலிகள், தமது அமைப்பில் இணைந்து செயற்­ப­டாத – போராட்­டத்தில் உயிர் நீத்த பல­ரையும் மாவீ­ரர்­களின் பட்­டி­யலில் சேர்த்­தி­ருந்­தார்கள்.

தங்­கத்­துரை , குட்­டி­மணி போன்ற ரெலோ தலை­வர்­க­ளையும், ஈரோஸ் அமைப்­புடன் இணைந்து போராடி உயிர் துறந்­த­வர்­க­ளையும் அவ்­வாறு புலிகள் மாவீரர் பட்­டி­யலில் சேர்த்­தி­ருந்­தார்கள்.

இருந்­தாலும், தமி­ழீழ விடு­த­லைக்­காக போரா­டிய எல்­லோரும் புலி­களின் மாவீரர் பட்­டி­யலில் இடம்­பெ­ற­வில்லை. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற அமைப்­பு­களில் இருந்து உயி­ரி­ழந்­த­வர்­களை புலிகள் மாவீ­ரர்­க­ளாக சேர்த்துக் கொள்­ள­வில்லை. அவர்­களைப் புலிகள் அங்­கீ­க­ரிக்­க­வு­மில்லை.

ஒரு கால­கட்­டத்தில், ஏனைய இயக்­கங்கள் விடு­தலைப் புலி­களால் தடை செய்­யப்­பட்­டி­ருந்­ததும், மேற்­படி அமைப்­புகள் துணை ஆயுதக் குழுக்­க­ளாக, அரச படை­யி­ன­ருடன் இணைந்தும், இந்­தியப் படை­யி­ன­ருடன் இணைந்தும் புலி வேட்­டை­யா­டி­யதும் வர­லாறு.

விடு­தலைப் புலி­களின் அங்­கீ­கா­ரத்­துடன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்ட போது, அதில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் தமிழ்க் காங்­கிரஸ் போன்ற அர­சியல் கட்­சி­களும் இணைத்துக் கொள்­ளப்­பட்­டன.

அர­சுடன் இணைந்தும், அரச புல­னாய்வுப் பிரி­வு­க­ளுடன் தொடர்­பு­களை வைத்­தி­ருந்த நிலை­யிலும் கூட, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்­ற­வற்றை புலிகள் ஏற்றுக் கொண்­டி­ருந்­தார்கள்.

பின்னர், புலி­களால் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருந்த போதிலும் கூட, இந்த அமைப்­பு­களில் இருந்து உயி­ரி­ழந்­த­வர்­களை புலிகள் மாவீ­ரர்­க­ளாக ஏற்றுக் கொள்­ள­வில்லை.

ஏனென்றால், இந்த அமைப்­பு­களால் புலிகள் பலர் கொல்­லப்­பட்டு மாவீ­ரர்­க­ளாக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அது­போ­லவே, இந்த அமைப்­பு­களில் இருந்த பலர், அர­ச­ப­டை­க­ளு­டனும், இந்­தியப் படை­க­ளு­டனும் இணைந்து செயற்­பட்­ட­போது, துரோ­கிகள் என்று புலி­களால் கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள்.

எனவே, ஏனைய இயக்­கங்­களில் இருந்­த­வர்­களை மாவீ­ரர்கள் என்ற பட்­டி­ய­லுக்குள் கொண்­டு­வர புலிகள் விரும்­ப­வில்லை.

அதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் உள்­வாங்­கப்­பட்ட பின்னர், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்­பன, புலி­களால் கொல்­லப்­பட்ட தமது தலை­வர்­க­ளான சிறி­ச­பா­ரத்­தினம் மற்றும் பத்­ம­நாபா போன்­ற­வர்­க­ளை ஏனோ தானோ என்று தான் நினைவு கூர்ந்து வந்­தனர்.

2009ஆம் ஆண்டு விடு­தலைப் புலிகள் இயக்கம் அழிக்­கப்­படும் வரையில் இந்த நிலை தான் இருந்­தது. இப்­போது சிறி­ச­பா­ரத்­தி­னத்தை ரெலோ பெரி­ய­ளவில் நினைவு கூரு­கி­றது. பத்­ம­நா­பாவை ஈ.பி.ஆர்.எல்.எவ். நினைவு கூரு­கி­றது. உமா மகேஸ்­வ­ரனை புளொட் நினைவு கூரு­கி­றது.

அதே­வேளை, இந்த எல்லாக் குழுக்­களும், தமது அமைப்பில் இருந்து போராடி இறந்த தலை­வர்­க­ளையும், போரா­ளி­க­ளையும் நினைவு கூரு­வ­துடன் விடு­தலைப் புலி­களின் மாவீ­ரர்­க­ளையும் நினைவு கூரு­கி­றார்கள். ஏனென்றால் இது தான் அர­சியல்.

விடு­தலைப் புலி­க­ளுக்கும் , மாவீ­ரர்­க­ளுக்கும் தமிழ்­மக்கள் மத்­தியில் இருக்­கின்ற ஈர்ப்பு, இவர்­க­ளையும் அதனை நோக்கி நகர வைத்­தி­ருக்­கி­றது.

அனை­வ­ரது இலட்­சி­யமும் ஒன்று என்­பதால், மாவீ­ரர்­களை நினைவு கூரு­கிறோம் என்று அந்த அமைப்­புகள் கூறினால் அது நிரா­க­ரிக்­கப்­பட முடி­யாத கருத்தும் கூட.

இப்­ப­டி­யான நிலையில், மாவீ­ரர்கள் பற்றிப் பேசு­கின்ற தகைமை, அரு­கதை தனியே விடு­தலைப் புலி­க­ளுக்கும் அவர்கள் சார்ந்த அமைப்­பு­க­ளுக்கும் தான் உள்­ளது என்ற வாதம் எந்­த­ள­வுக்கு சரி­யா­னது?

மாவீ­ரர்­களை நினைவு கூரு­வது, இன்று தமிழ் மக்­களின் ஒரு பாரம்­ப­ரிய மர­பாக மாறி­விட்ட நிலையில், தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அர­சியல் கட்­சி­களும், அமைப்­பு­களும் கூட அதற்குள் உள்­வாங்­கப்­படும் ஒரு சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்­களை ஒரு­மைப்­ப­டுத்தும் ஒரு விட­ய­மாக மாவீரர் நாள் மாறி­வரும் நிலையில், அர­சுடன் இணைந்து செயற்­பட்­ட­வர்கள், ஆயுதக் குழுக்கள் என்று அடை­யா­ளப்­ப­டுத்தி சிலரை ஒதுக்கி வைப்­பது முறை­யா­னதா?

2001ஆம் ஆண்டில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில், அதே ஆயுதக் குழுக்­க­ளுடன் இணைந்து கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தேர்­தல்­களில் போட்­டி­யிட்­டி­ருக்­கிறார்.

இப்­போதும், ஈ.பி.ஆர்.எல்.எவ்­வுடன் இணைந்து புதிய கூட்­ட­ணியை அமைக்கப் போகிறார்.

இத்­த­கைய நிலையில் ஆயுதக் குழுக்கள் பற்றிப் பேசு­கின்ற அரு­கதை அவ­ருக்கு இருக்­கி­றதா என்ற கேள்வி உள்­ளது.

தாம் இல்­லாத தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இணைந்து கொண்ட புளொட்­டையும், இனிமேல் இணை­யலாம் என்று எதிர்­பார்க்­கப்­படும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி­யையும் தான் அவர் ஆயுதக் குழுக்­க­ளாகச் சுட்­டு­கிறார் போலுள்­ளது.

விடு­தலைப் புலி­களின் காலத்­தி­லேயே, தமிழ் ஆயுதக் குழுக்­களை அர­வ­ணைத்துச் செல்லும் முடிவு எடுக்­கப்­பட்­டது. அதனால் தான் கூட்­ட­மைப்பில் அவர்­க­ளையும் இணைய வாய்ப்பு அளிக்­கப்­பட்­டது.

இன்று தமிழ் மக்கள் மத்­தியில் அர­சியல் செய்யும் தமிழ்க் கட்­சி­களில் தமி­ழ­ரசுக் கட்சி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி, தமிழ்க் காங்­கிரஸ் ஆகி­யன தான் ஆயுதக் குழுக்­க­ளாக இயங்­கா­தவை.

அந்தத் துணிச்­சலில் தான் தமிழ்க் காங்­கிரஸ் தலை­வ­ரான கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம் அவ்­வாறு கூறி­யி­ருக்­கலாம். தமி­ழ­ரசுக் கட்­சியும், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும் கூட ஒரு காலத்தில் தமிழ் இளை­ஞர்கள் ஆயு­த­மேந்தத் தூண்­டு­த­லாக இருந்­தவை தான்.

ஆனால் தமிழ்க் காங்­கிரஸ் கட்சி ஆயுதப் போராட்­டத்தில் இருந்து முற்­றிலும் வில­கியே இருந்­தது.

அதனால் தான், 2004இல் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் உத­ய­சூ­ரியன் சின்­னத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போட்­டி­யிட முடி­யாத நிலையை ஆனந்­த­சங்­கரி ஏற்­ப­டுத்­திய போது, தமி­ழ­ரசுக் கட்­சியின் சின்­னத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சின்­ன­மாக பிர­பா­கரன் அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அப்­போது, தமிழ்க் காங்கிஸ் கட்­சியின் சைக்கிள் சின்­னத்தை புலிகள் அங்­கீ­க­ரிக்­க­வில்லை. ஏனென்றால் ஆயுதப் போராட்­டத்­துக்கு தமிழ்க் காங்­கிரஸ் எந்த வகை­யிலும், பங்­க­ளிப்புச் செய்­த­தில்லை.

இப்­ப­டி­யான பின்­ன­ணியில், தமிழ்க் காங்­கி­ரசின் இன்­றைய தலை­வ­ரான கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், முன்னர் ஆயுதக் குழுக்­க­ளாக இயங்­கிய கட்­சிகள் மாவீரர் நாள் குறித்துப் பேசு­கின்ற அரு­க­தை­யற்­றவை போலப் பேச முற்­ப­டு­வது அபத்தம்.

அடுத்து, விடு­தலைப் புலி­களை அர­சுடன் இணைந்து தோற்­க­டித்­தது கூட்­ட­மைப்பே என்று அவர் குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கிறார். விடு­தலைப் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்ட போது அவரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்­தி­ருந்­தவர் தான். அவ்­வா­றாயின் அவ­ருக்கும் அதில் பொறுப்பு இருக்­கி­றது என்­பதை மறந்து விட முடி­யாது.

2010 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் செல்­வ­ராசா கஜேந்­தி­ர­னுக்கும், பத்­மினி சிதம்­ப­ர­நா­த­னுக்கும் வாய்ப்பு மறுக்­கப்­பட்ட பின்னர் தான், கஜேந்­தி­ர­குமார் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியை உரு­வாக்­கினார்.

அது­வ­ரையில் அவர் தாம் அங்கம் வகித்த கூட்­ட­மைப்பே விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்­தது என்­பதை கூறாமல் இருந்தார்.

கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யே­றிய பின்னர் கூட, அந்தக் குற்­றச்­சாட்டை நிரூ­பிக்கும் ஆதா­ரங்­களை அவர் ஏன் தமிழ் மக்கள் முன்­பாக வைக்­க­வில்லை என்ற கேள்வி எழு­கி­றது.

தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக கரு­தப்­பட்ட விடு­தலைப் புலிகள் அழிக்­கப்­பட்­டதில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குப் பங்கு இருந்தால் அது, மன்­னிக்க முடி­யாத குற்றம்.

அவ்­வா­றாயின் ஏன் இது­வரை அதனைக் கஜேந்­தி­ர­குமார் வெளிப்­ப­டுத்­தாமல் இருக்க வேண்டும்?

இப்­போது கூட காலம் கடந்து வட­வில்லை. புலி­களைத் தோற்­க­டிக்கக் கூட்­ட­மைப்பு செய்த இர­க­சிய உத­வி­களை அவர் அம்­ப­லப்­ப­டுத்த முன்­வர வேண்டும். அது வெறும் வாய்­வழி குற்­றச்­சாட்­டு­க­ளாக இல்­லாமல் ஆதா­ரங்­க­ளுடன் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அண்­மையில் வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்­கத்­துக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கும் இடையில் முரண்­பா­டுகள் ஏற்­பட்ட போது, ஒரு கட்­டத்தில் கஜேந்­தி­ர­குமார் தொடர்­பாக சிவா­ஜி­லிங்கம் சில கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்தார்.

போர் முடிந்த மூன்றாவது நாள் எதற்காக கஜேந்திரகுமார் புதுடில்லிக்குச் சென்றார் என்பது அதில் முக்கியமான கேள்வி. அந்தக் கேளவிக்கு கஜேந்திரகுமார் இன்னமும் பொது அரங்கில் பதிலளித்ததாகத் தெரியவில்லை.

இந்தக் கேள்வியை சிவாஜிலிங்கம் எழுப்பிய பின்னர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாயை அடைத்துக் கொண்டது. அதுபோலவே, சிவாஜிலிங்கத்தின் வாயும் புலம்பெயர் தமிழர்களால் அடைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் போராட்டத்துக்கு யார் துரோகம் இழைத்தார்கள், என்பதை அறிந்தவர்கள் அதனை பொது அரங்கில் வெளிப்படுத்துவதில் தவறில்லை.

கூட்டமைப்பை நோக்கி குற்றம் சாட்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதற்கான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினால், கூட்டமைப்பு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை நிச்சயம் உடையும்.

அதை விடுத்து அரசியல் குண்டுகளைப் போட்டு, தேர்தல் கால நலன்களை அடைய முனைந்தால், இதுபோன்ற விடயங்கள் எல்லாவற்றையும் வெறும் கட்டுக்கதைகளாகவே பார்க்கின்ற நிலை தான் ஏற்படும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-12-03#page-1

  • கருத்துக்கள உறவுகள்

உட்டுண்ணுணிகள் எங்காவது ஓட்டிதான் வாழும்.

புலி வேட்டையாடி கவுரவமாய் வாழும். 

புலி பசித்தாலும் புல்லை தின்னாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.