Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்கவைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்

Featured Replies

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்கவைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்

 
 

சேகர் ரெட்டி

Chennai: 

சேகர் ரெட்டியின் டைரி விவகாரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது, அது தன்னுடைய டைரி அல்ல என்று கூறும் சேகர் ரெட்டி, அமலாக்கத்துறையிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்ன? ஒரு பத்திரிகை பேட்டியைப் போன்ற நேர்த்தியோடு அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளும் அதற்கு சேகர் ரெட்டி அளித்த பதில்களும் இங்கே அப்படியே...

 

''2014 முதல் 2016 வரை எவ்வளவு தங்கம் வாங்கினீர்கள்? எதற்காக வாங்கினீர்கள்?''

''2014 ஜனவரி முதல் எஸ்.ஆர் மைனிங் நிறுவனத்திலிருந்து வரும் வருமானத்தில், மீதம் இருக்கும் தொகையை தங்கம் வாங்க நினைத்தோம். அதற்காக ஒவ்வொரு மாதமும் தங்கம் வாங்கி முதலீடு செய்ய நானும் எங்கள் நிறுவன பங்குதாரர்களான ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரும் முடிவு செய்தோம்.  அதை சீனிவாசலுவிடம் சொன்னோம். அவர் பிரேம் மூலம் வாங்கி சேமித்து வைத்தார். எதிர்காலத்துக்காக தங்கத்தை நாங்கள் சேமித்து வைத்தோம். 2016 ஆம் ஆண்டு வரை இப்படிச் சேமிக்கப்பட்ட தங்கத்தின் அளவு 160 முதல் 190 கிலோ வரை இருக்கலாம். அதன் துல்லியமான விபரம் சீனிவாசலுக்குத்தான் தெரியும்.''

''தங்கத்தை முறையாக கணக்கில் காட்டினீர்களா?''

''2014-2015, 2015-2016 ஆம் நிதியாண்டுகளில் தங்கத்தைக் கணக்கில் காட்ட நாங்கள் மறந்துவிட்டோம். ஆனால், 2016-2017ஆம் நிதியாண்டில் தங்கத்தைக்  கணக்கில் கொண்டுவந்து வரி கட்டத் திட்டமிட்டிருந்தோம். அதற்கு அட்வான்ஸ் வரியும் செலுத்தியிருந்தோம். ஆனால், அதற்குள் வருமானவரித்துறை சோதனை நடந்துவிட்டது.''

''நீங்கள் குவித்து வைத்துள்ள தங்கம் எல்லாம், கணக்கில் காட்டப்படாத பணத்தில் வாங்கப்பட்டதுதானே?''

''எங்களுக்குச் சொந்தமான லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வந்த வருவாய், தனியார் யார்டில் இருந்து மணல் வாங்கி விற்பனை செய்ததில் கிடைத்த வருவாய் ஆகியவற்றில் வாங்கிய தங்கம் இவை. இவற்றைக் கணக்கில் காட்ட மறந்துவிட்டோம். வரும் நிதி ஆண்டில் கணக்கில் காட்டத் திட்டமிட்டிருந்தோம்.''

''இதில் ராமச்சந்திரன், ரத்தினம் பங்கு பற்றி கூறுங்கள்?''

''ரெய்டில் பிடிபட்ட பணம், தங்கம் எல்லாம் என்னுடைய தனிப்பட்ட சொத்துகள் அல்ல. அவை எஸ்.ஆர் மைனிங்ஸ் பெயரில் உள்ளன. அதில் ராமச்சந்திரனும், ரத்தினமும் பங்குதாரர்கள். அதனால்தான், தற்போது இதற்கான வரியை எஸ்.ஆர் மைனிங் நிறுவனத்தின் பெயரில் கட்டுகிறேன் என்று கடிதம் கொடுத்துள்ளேன்.''

''எஸ்.ஆர் மைனிங்ஸ்க்குச் சொந்தமான உடமைகள் என்னென்ன?'' 

''எஸ்.ஆர் மைனிங்ஸ்க்குச் சொந்தமான வாகனங்கள், வாடகை வாகனங்கள், ஆர்.சி புத்தகம் பற்றிய விவரங்கள், வங்கியில் வாங்கப்பட்டுள்ள கடன்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் ஆடிட்டருக்குத்தான் தெளிவாகத் தெரியும். அவரிடம் கேட்டுச் சொல்கிறேன். அந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாகவும் சமர்ப்பிக்கிறேன். மணல் குவாரிகள், தமிழகத்தில் எஸ்.ஆர் மைனிங் மூலம் செயல்படவில்லை. யார்டு மூலமும் செயல்படவில்லை. தமிழகத்தில், மணல் குவாரிகள் பொதுப்பணித்துறை மற்றும் தனிநபர்கள் மூலம் செயல்படுகிறது. மணல் குவாரி வைத்திருப்பவர்கள், மணல் யார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் மணல் அள்ளி விற்கும் தனிநபர்களுக்கு வாகனங்களை மட்டும் வாடகைக்கு அனுப்புகிறோம். அதன் மூலம் எங்களுக்கு வருவாய் வருகிறது.''

''உங்கள் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு எவ்வளவு ஊதியம், வாடகை வாகனங்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கிறீர்கள்?'' 

''எஸ்.ஆர் மைனிங்ஸ் வாடகைக்கு விடும் லாரி டிரைவர்களுக்கு கொடுக்கப்படும் வாடகைத் தொகை பற்றிய விபரம் ராமச்சந்திரன் மற்றும் ரத்தினத்துக்குத்தான் தெரியும். அதுபற்றிய விபரங்கள் எனக்கு எதுவும் தெரியாது.''

சேகர் ரெட்டி''மணல் குவாரிகளில் பணிகள் நடைபெற்றபோது போலீஸ் கேஸ் எதுவும் பதிவு செய்யப்பட்டதா?''

''பொதுப்பணித்துறை மூலம் அந்தப் பணிகள் நடைபெறுவதால், அதுபற்றிய விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. மேலும் தனிப்பட்ட முறையிலும் என் நினைவில் உள்ளவரை அதுபோன்ற போலீஸ் கேஸ் எதுவும் பதிவு செய்யப்பட்டது கிடையாது.'' 

''உங்களுக்கு ஒருநாளைக்கு இந்தத் தொழிலில் எவ்வளவு தொகை கிடைக்கிறது?''

''தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்தத் தொழில் மூலம் எங்களுக்கு ஒரு நாளில் 1 கோடியே 20 லட்சம் முதல் 1 கோடியே 50 லட்சம் வரை வசூலாகும். இதில் டீசல், வாடகை, டிரைவர் படி, ஆயில் செலவு, டயர் தேய்மானம் எல்லாம் போக எங்களுக்கு 50லட்சம் வரை மிச்சமாகும். தமிழகம் முழுவதிலுமிருந்து இப்படி வசூலாகும் தொகையை பாபு, ராஜேந்தர் என்ற இருவரும் வசூல் செய்து சென்னைக்கு கொண்டுவருவார்கள்.'' 

''ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் மாதம் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் வசூலாகும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அவர்கள் அப்படி வசூலாகும் தொகையை அனுப்பி வைப்பதாகவும், அதை நீங்களே நிர்வகிப்பதாகவும் சொல்லியுள்ளனர். அதுபற்றிய விபரங்களைச் சொல்லவும்?''

''எனக்குத் தெரிந்தவரையில் 2016 ஏப்ரல் மாதம் முதல்தான் 40 முதல் 45 கோடி ரூபாய் வசூலானது. இதை அனைத்து பங்குதாரர்களும்தான் நிர்வகிப்பார்கள். குறிப்பாக நான், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துபேசி முடிவு செய்வோம். நான் மட்டும் தனியாக முடிவு செய்யமாட்டேன்.''

''உங்களிடம் கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளில் 93 கோடி, புதிய ரூபாய் நோட்டுகளில் 34 கோடி ஆகியவை கணக்கில் காட்டப்பட்ட பணமா?''

''இந்தப் பணம் 2016 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வந்தவை. அவற்றைக் கணக்கில் காட்ட இன்னும் அவகாசம் இருக்கிறது.''

 

... இப்படி ஆரம்பித்த சேகர் ரெட்டியின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் பரஸ்மால் வாக்குமூலத்தில், அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் மாதந்தோறும் நிதி கொடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

https://www.vikatan.com/news/coverstory/110262-we-have-a-daily-profit-of-15-crore-rupees-confesses-sekar-reddy.html

  • தொடங்கியவர்

'சேகர் ரெட்டியின் 'டைரி' குறிப்பும் அம்பலமான தமிழக அமைச்சர்களின் பெயரும்'

VIJAYABASKARADMKMINISTERHEALTHjpg
 

சி.விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி, ஓ.பன்னீர்செல்வம் (இடமிருந்து வலமாக)

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வருமான வரித்துறை சோதனைகள் மிக அதிகமாக அரங்கேறின. இனியும் தொடரலாம்.

அந்த வகையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த சோதனை 2016 டிசம்பர் 21-ம் தேதி அன்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை. தமிழக அரசியல் வரலாற்றில் இது மிகப்பெரும் கரும்புள்ளி என விமர்சிக்கப்பட்டது. காரணம், பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் ஒருவர் வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அதுவே முதன்முறை.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு சாதாரண ஒப்பந்ததாரராக வாழ்க்கையைத் தொடங்கிய சேகர் ரெட்டி அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானதும் பின்னர் கோடிகளில் புரளும் அளவுக்கு உயர்ந்ததும் பக்கம்பக்கமாக எழுதித் தீர்க்கப்பட்டன. அவருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான நெருக்கம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்பட்டது சேகர் ரெட்டியின் 'டைரி'. அந்த டைரியில் பல்வேறு பெரும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக அப்போதே தகவல் வெளியானது.

ஒவ்வொரு முறை தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோதும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், சேகர் ரெட்டியின் ரகசிய டைரி குறித்து கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று சேகர் ரெட்டியின் அந்த சர்ச்சை டைரியின் சில பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக இன்று செய்தி ஒளிபரப்பியது. அவர்களுக்குக் கிடைத்த அந்தப் பக்கங்களில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டியின் இந்த டைரி பக்கங்கள் தமிழக அரசியலை புரட்டிப்போட வாய்ப்புள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வருமான வரித்துறை சோதனைகள் மிக அதிகமாக அரங்கேறின. இனியும் தொடரலாம்.

அந்த வகையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த சோதனை 2016 டிசம்பர் 21-ம் தேதி அன்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை. தமிழக அரசியல் வரலாற்றில் இது மிகப்பெரும் கரும்புள்ளி என விமர்சிக்கப்பட்டது. காரணம், பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் ஒருவர் வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அதுவே முதன்முறை.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு சாதாரண ஒப்பந்ததாரராக வாழ்க்கையைத் தொடங்கிய சேகர் ரெட்டி அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானதும் பின்னர் கோடிகளில் புரளும் அளவுக்கு உயர்ந்ததும் பக்கம்பக்கமாக எழுதித் தீர்க்கப்பட்டன. அவருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான நெருக்கம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்பட்டது சேகர் ரெட்டியின் 'டைரி'. அந்த டைரியில் பல்வேறு பெரும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக அப்போதே தகவல் வெளியானது.

ஒவ்வொரு முறை தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோதும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், சேகர் ரெட்டியின் ரகசிய டைரி குறித்து கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று சேகர் ரெட்டியின் அந்த சர்ச்சை டைரியின் சில பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக இன்று செய்தி ஒளிபரப்பியது. அவர்களுக்குக் கிடைத்த அந்தப் பக்கங்களில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டியின் இந்த டைரி பக்கங்கள் தமிழக அரசியலை புரட்டிப்போட வாய்ப்புள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article21296344.ece

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.