Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனரீதியான பிரதேச அதிகாரப் பரவலே ஒரே தீர்வு

Featured Replies

இனரீதியான பிரதேச அதிகாரப் பரவலே ஒரே தீர்வு

 

எஸ். டப்ளியூ . ஆர்.டி.பண்டாரநாயக்கவே முதலில் 1924 ஆம் ஆண்டு சமஷ்டி பற்றிக் குறிப்பிட்டதாக அண்மையில் சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். அது கரையோர சிங்களப் பெரும்பான்மையினரிடமிருந்தும் கண்டி மற்றும் சப்ரகமுவ சிங்களவரின் தனித்துவங்களைப் பாதுகாக்க அவர் முன்வைத்த சமஷ்டியாகும். எனினும் அது அமுலாகியிருந்தால் சிங்கள மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு இல்லாமற் போய்விடும். வடமாகாண தமிழர்க்கும் தனித்துவப் பிரதேச வலிமை கிடைத்துவிடும் என நினைத்தே சிங்கள மகாசபையின் தலைவராக அவர் ஆனதும் அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டார்.

1957 ஆம் ஆண்டு திருமலையில் நிகழ்ந்த தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் தந்தை செல்வா கிழக்கின் முஸ்லிம் அலகை ஏற்றுக்கொண்டபோதும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் வடக்கை வேறாகக் குறிப்பிட்டு கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூன்று அலகுகளையே குறிப்பிட்டிருந்தார். இது தந்தை செல்வாவின் சமஷ்டிகால அணுகுமுறையாகும். இதைப் பேரினவாதிகள் நிராகரித்துவிட்டனர். வடக்கு– கிழக்கு முஸ்லிம்களும் பேரினவாதிகளையே சார்ந்து நின்றனர். இதனாலேயே சமஷ்டியைக் கைவிட்டுவிட்டு சுயநிர்ணய தனி இறைமையின் அடிப்படையில் கிழக்கை இணைக்க வேண்டும் எனும் முடிவுக்கு தந்தை செல்வா வந்தார். எனினும் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நிகழ்ந்த அதற்கான மகாநாட்டில் அஷ்ரப் கலந்துகொண்டு பேசியதன் மூலமும் கிழக்கில் முஸ்லிம் வாக்குகள் சிலவற்றையேனும் பெற உழைத்ததன் மூலமும் பங்காளியாகிவிட்டார். எனினும் ஆயுதம் தூக்கிய தமிழ்ப் போராளிகள் முஸ்லிம்களின் பங்கை அங்கீகரிக்கவில்லை. சிங்களப் பேரினவாதத்துக்கு தமிழ் மக்கள் முகம்கொடுத்தது போல் தமிழ்ப் பேரினவாதத்துக்கு முஸ்லிம்கள் முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டது.

ஆக முஸ்லிம் கட்சியை அஷ்ரப் உருவாக்கியது தமிழ் மக்களுக்கு எதிராகவோ குறுக்கீடாகவோ அல்ல. தந்தை செல்வா அங்கீகரித்த அணுகுமுறையிலேயே ஆகும். முஸ்லிம் அதிகார அலகை அவர் முன்வைத்ததும் கூட தந்தை செல்வாவின் வழிகாட்டல் முறையிலேயே ஆகும். தமிழரின் ஆயுதப்போராட்டம் உருவாகாதிருக்குமாயின் முஸ்லிம் கட்சிகளுக்குரிய தேவை இருந்திருக்காது.

சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முஸ்லிம் அதிகார அலகை ஏற்றுக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

முஸ்லிம்களுக்கு சமச்சீரில்லாத நிலத்தொடர்பற்ற தனி அலகை உருவாக்குவதன் மூலமே இணைப்பு சாத்தியப்படும் என்கிறார். இதன் மூலம் தந்தை செல்வாவின் வழியில் அஷ்ரப் செய்த போராட்டம் சரியென நிரூபணமாகியுள்ளது அல்லவா? முன்பு பாராளுமன்றத்தில் மாவை சேனாதிராஜா முஸ்லிம்கள் தனி இனம் எனும் விடயத்தில் அஷ்ரப்போடு முரண்பட்டதுண்டு. இப்போது அவர் சரி கண்டிருப்பது பெரிய செய்தியாகும்.

இணைப்பு என்பது முதலில் உள்ளத்தால் ஏற்பட வேண்டும். அதன் மூலம் தான் நிலத்தால் ஏற்படும் நிலையே தற்போது காணப்படுகிறது. தமிழரிடம் மேலாதிக்கமும் முஸ்லிம்களிடம் அச்சமும் இருக்கும் நிலையே தற்போது காணப்படுகிறது. இவை முற்றிலும் அகலும் வரை இணைப்பை நடைமுறைப்படுத்துவது கடினமாகவே இருக்கும். எனவே இணக்கப்பாட்டு நூல்களை வெளியிடுவதோடு பத்திரிகைகளில் கட்டுரைகளையும் எழுத வேண்டும். கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தமிழ், முஸ்லிம் உறவுக்கு வகை செய்ய வேண்டும். சந்தேகங்கள் அறவே நீக்கப்பட்டு பரஸ்பர விசுவாசமும் அபிமானமும் உருவாக வேண்டும். இல்லாவிட்டால் இணைந்த நிலமும் பிரிந்துவிடும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உள்ளமே தொடர்பற்று சமச்சீரற்ற நிலையில் இருந்தால் சி.வி.விக்னேஸ்வரன் கூறுவது போல் நிலத்தை இணைப்பது சாத்தியமல்ல. முஸ்லிம் அலகு நியாயமான பங்கீடு எனக்கூறாமல் இணைப்பைச் சாத்தியமாக்குவதற்கான விட்டுக்கொடுப்பு எனக் கூறுவதும் கூட தவறான எடுகோளாகும். இதில் மேலாதிக்கம் காணப்படவே செய்கிறது.

முழு வடக்கு கிழக்கிலும் நிலத்தொடர்பற்ற சமச்சீரற்ற முஸ்லிம் அலகா? அல்லது கிழக்கில் மட்டுமே நிலத்தொடர்பற்ற சமச்சீரற்ற முஸ்லிம் அலகா? என்பதில் தெளிவில்லை. இந்தியாவிலுள்ள புதுச்சேரி எனும் பாண்டிச்சேரியும் தமிழகத்துக்கருகே தமிழ்மொழி பேசியபோதும் தனி மாகாணமாக நிலத்தொடர்பற்று சமச்சீரற்ற முறையிலேயே அமைந்திருக்கிறது. தமிழகமும் புதுச்சேரியும் தமிழ்பேசும் இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணங்களாகும். எனினும் நிலங்கள் இணையவில்லை. புதுச்சேரி நிலத்தொடர்பற்ற சமச்சீரற்ற மாகாணமாகவும் மிகச் சிறியதாகவும் இருந்தும் கூட இணையவில்லை. பிரிட்டிஷ் தமிழகத்தையும் பிரான்ஸ் புதுச்சேரியையும் ஆட்சி புரிந்தபோது அமைந்திருந்தவாறே இப்போதும் அமைந்திருக்கின்றன. ஆக உள்ளங்கள் இணைந்தால்தான் நிலங்கள் இணையும் என்பதற்கே நான் இந்த உதாரணத்தை எடுத்துக்காட்டுகிறேன்.

புதுச்சேரியில் இருக்கும் அமைப்பு 100 வருடங்களாக நிலைத்து வருவதால் மாற்றமுறா வகையில் உறுதியாக இருக்கிறது. வடக்கு கிழக்கில் புதிதாக நிலத்தொடர்பற்ற சமச்சீரில்லாத முஸ்லிம் அலகு சாத்தியமா? என்பது பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும்.

நாம் போராடிப் பாரிய அழிவுகளைச் சந்தித்தவர்கள். சும்மா இருந்துவிட்டு வருவோருக்கு சமபங்கு வழங்க முடியுமா-? எனத் தமிழர்கள் நினைப்பார்களாயின் முஸ்லிம் அலகு நடைமுறையாவது கடினமாகிவிடும். அது மட்டுமல்ல அருகருகே இனரீதியான நிர்வாகப் பிரிவுகள் பரவலாக அமைவதும் கூட பூசல்களையே ஏற்படுத்தும்.

அதனால் தான் அஷ்ரப் அம்பாறை மாவட்டத்துக்குள் மட்டுமே சமச்சீரான நிலத்தொடர்புள்ள முஸ்லிம் அலகு நடைமுறைச் சாத்தியம் என இறுதியாக முடிவுசெய்து அங்குள்ள முஸ்லிம் நகரங்களை மையப்படுத்தி முஸ்லிம் அதிகார அலகுக்கோரிக்கையை முன்வைத்தார். அந்த நிலைப்பாட்டிலிருந்து முஸ்லிம்களை மாற்றியமைப்பது போல் விக்னேஸ்வரனின் கருத்து அமைந்திருக்கிறது. அஷ்ரப்பின் சிந்தனையே முஸ்லிம்களின் நிலைப்பாடுமாகும். கருத்துக் குழப்பத்துக்குள் முஸ்லிம்கள் சிக்கிவிடக்கூடாது.

இத்தகைய உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டுதானா தமிழ் பேசும் வடகிழக்கு அலகில் முஸ்லிம்களுக்கு சமச்சீரில்லாத தனி அலகை உருவாக்குவதன் மூலமே இணைப்பு சாத்தியமாகும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கூறியுள்ளார். முன்பும் இப்படி இவர் கூறித்தான் இருக்கிறார். இப்போது எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவும் உறுதிபடக் கூறிய பிறகே இவர் மீண்டும் புதுப்பித்திருக்கிறார்.

முஸ்லிம் அலகு பற்றி 1957 இல் தமிழரசுக் கட்சியின் திருமலை மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டு பண்டா – செல்வாவின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தபோதும் அஷ்ரப் அதை முன்வைத்த பிறகே அது அவைக்கு வந்திருந்தது.

ஆக, சமஷ்டி ரீதியில் கிழக்கில் முஸ்லிம், அதிகார அலகு உண்டு என்பதை தந்தை செல்வா ஏற்றுக்கொண்டிருந்தார். எனவே 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் அஷ்ரப் கலந்துகொண்டதும் தமிழரின் சுயநிர்ணயத்தையும் தனி இறைமையையும் ஆதரித்ததும் கிழக்கு முஸ்லிம் அலகை முன்னிறுத்தியே ஆகும்.

1949 ஆம் ஆண்டு கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலமும் மலையக தொழிலாளர்களின் குடியுரிமைப் பறிப்பின் மூலமும் பேரின மேலாதிக்கத்தைக் காட்டியதன் காரணமாகவே தந்தை செல்வா வடக்கு, கிழக்குக்கான சமஷ்டியைக் கோரினார். அதற்காக தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். அதில் முஸ்லிம் அலகையும் உத்தரவாதப்படுத்தினார்.

எனவே சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்த அவரது பெயரால் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ்ப் பேரினவாதத்தைத் தோற்றுவித்தமை அவரது அடிப்படை நோக்கத்துக்கு முரணானதாகும். இந்தியாவில் அதிகாரம் கிடைக்கவிருந்த தறுவாயில் காங்கிரஸார் மேலாதிக்க உணர்வு பெற்றிருந்தது போலவே இலங்கையில் அதிகாரம் கிடைத்தபின் சிங்களவர் மேலாதிக்க உணர்வைப் பெற்றிருந்தார்கள். இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஆயுத வலிமை பெற்ற பின்பே மேலாதிக்க உணர்வு தோன்றியது. இந்தியாவின் மேலாதிக்கத்தால் பாகிஸ்தான் உருவானது. பாகிஸ்தானின் மேலாதிக்கத்தால் பங்களாதேஷ் உருவானது. இந்திய – பாகிஸ்தான் பிளவில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தானே இரு நாடுகளாகப் பிரிந்தார்கள். பாகிஸ்தானும் பங்களாதேஷமும் மேற்குப் பாகிஸ்தானாகவும் கிழக்குப் பாகிஸ்தானாகவும் இருந்தவை. ஆக ஒரே நாடாக இருந்தவை முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவை ஏன் பிரிந்தன? மேற்கு பாகிஸ்தானின் மேலாதிக்கமே காரணமாகும். முஸ்லிம்களுக்கு Asymmetri cal (சமச்சீரற்ற) தனி அலகை சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்துகிறார் அல்லவா? வடக்கையும் கிழக்கையும் முழுதாக இணைத்து அதில் சமச்சீரற்ற அலகா? கிழக்கிலுள்ள முஸ்லிம் பகுதிகளை மட்டும் உள்ளடக்கிய சமச்சீரற்ற அலகா?

அஷ்ரப் முஸ்லிம் அலகு பற்றி நான்கு வகையில் சிந்தித்திருந்தார். முதலில் யாழ்ப்பாண முஸ்லிம் பகுதியையும் உள்ளடக்கியதாகவே கிழக்கு முஸ்லிம் பகுதிகளையும் சேர்த்து மன்னாரையும் வன்னியையும் சேர்த்துள்ள முஸ்லிம் பகுதிகளையும் முஸ்லிம் அலகாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு கிழக்கிலுள்ள முஸ்லிம் பகுதிகளை மட்டும் உள்ளடக்கியதாக சமச்சீரற்ற முஸ்லிம் அலகைக் கோரினார். அப்போதெல்லாம், தமிழ் ஆயுதப் போராளிகள் வடக்கிலும் கிழக்கிலும் பரவி வாழ்ந்ததால் இது நடைமுறை சிக்கலானது என்பது அவருக்குப் புரிந்தது.

இதனால்தான் அம்பாறை மாவட்டத்துக்குள்ளேயே சமச்சீரான முறையில் முஸ்லிம் அலகைக் கோரினார். இது சிக்கலற்ற முறையில் இலகுவாக நடைமுறையாகக்கூடிய கோரிக்கையாகும். அம்பாறை மாவட்டத்திலேயே அவர் முன்பு கரையோர மாவட்டத்தையும் கோரியிருந்தார்.

ஒரு மாவட்­டத்­துக்­குள்­ளேயே அதி­கார அலகும் கரை­யோர மாவ ட்­டமா எனக் கேட்­கப்­பட்ட நிலை­யில்தான் அவர் அகால மர­ண­முற்றார். அதன் பின் அவ­ரது கொள்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இவ­ரது பங்­க­ளிப்பு எவ்­வா­றி­ருந்­தது என்­பதைப் பார்க்­க­வேண்டும். தமி­ழரின் சுய­நிர்­ண­யத்­தையும் தனி இறை­மை­யையும் அண்ணன் அமிர்­த­லிங்கம் பெற்­றுத்­த­ரா­விட்டால் தான் பெற்றுத் தரு­வ­தா­கவும் சூளு­ரைத்­தி­ருந்தார். இதற்­கெனக் கிழக்கில் முஸ்­லிம் ­வாக்­கு­களைப் பெற்றும் கொடுத்­தி­ருந்தார். இது இந்­திய சுதந்­தி­ரத்தின் போது முஹம்­ம­தலி ஜின்னா காங்­கி­ரஸை முதலில் ஆத­ரித்­தது போன்ற நிலை­யி­லேயே இருந்­தது. சுதந்­திரம் கைகூடும் நிலை அண்­மித்­ததும் காங்­கி­ரஸார் பேரினம் சார்ந்து மேலா­திக்க உணர்வை வெளிப்­ப­டுத்­தி­யதன் பிறகே முஹம்­ம­தலி ஜின்னா பாகிஸ்தான் கோரிக்­கையை முன்­வைத்தார். இலங்­கையில் தமிழ், முஸ்லிம் சிறு­பான்­மைகள் பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளோடு இணைந்து வாழவே பெரும்­பான்மைச் சமூக முகா­மைத்­து­வத்தின் கீழ் டொமி­னியன் சுயா­தீ­னத்தைப் பெற இசைந்­தனர். தமிழ் மக்கள் முரண்­பட்­ட­போதும் முஸ்லிம் சமூகம் பெரும்­பான்மைச் சமூ­கத்தை அதிகம் சார்ந்து நின்­றதால் தமி­ழரும் இசைய வேண்­டி­ய­தா­யிற்று. இந்­நி­லையில் தந்தை செல்வா தமிழ் காங்­கி­ரஸில் இருந்தார். அக்­கட்­சியின் தலைவர் ஜி.ஜி.பொன்­னம்­பலம் டி.எஸ்.சேனா­நா­யக்­கவின் அமைச்­ச­ர­வையில் இருந்தார். அந்த அரசு அதி­காரம் கிடைத்­ததும் பேரி­ன­மா­கி­யது. தந்தை செல்வா பிரிந்தார்.  

இந்­திய சுதந்­திரக் கோரிக்­கை­யின்­போது முஹம்மத் அலி ஜின்னா முதலில் காங்­கி­ரஸை ஆத­ரித்த நிலையில் சுதந்­திரம் கைகூடும் நிலை ஏற்­பட்­டதும் மதப்­பே­ரி­ன­வாதம் குறுக்­கிட்­ட­தா­லேயே பிரி­வினை ஏற்­பட்­டது என நான் முன்பு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன்.

இந்­தி­யாவின் மேலா­திக்­கத்தால் பாகிஸ்தான் உரு­வா­ன­தல்­லவா? பின்னர் பாகிஸ்­தானின் மேலா­திக்­கத்தால் பங்­க­ளாதேஷ் உரு­வா­னது. பாகிஸ்­தானின் நிலை என்ன? இந்­திய பாகிஸ்தான் பிளவில் முஸ்லிம் நாடாக அது பிரிந்­த­போதும் இந்­தியா மத­சார்­பற்ற நாடா­கவே தன்னைக் கூறிக்­கொண்­டது. அதற்கு இந்த உணர்வு முன்பே இருந்­தி­ருந்தால் பிரி­வினை ஏற்­பட்­டி­ருக்­காதே

முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு நாடு என்­றுதான் முஹம்மத் அலி ஜின்னா பாகிஸ்­தானை உரு­வாக்­கினார். பஞ்சாப் மேற்கு பாகிஸ்­தா­னா­கவும் வங்­காளம் கிழக்கு பாகிஸ்­தா­னா­கவும் அழைக்­கப்­பட்டு ஒரே பாகிஸ்­தா­னா­கவே ஆகி­யது. இரண்­டிலும் பெரும்­பான்­மை­யாக முஸ்­லிம்­களே வாழ்ந்­தனர். எனினும் மேற்கு பாகிஸ்­தானின் மேலா­திக்­கத்தால் கிழக்கு பாகிஸ்தான் பங்­க­ளாதேஷ் எனும் பெய­ருடன் தனி­நா­டாகப் பிரிந்­து­போ­னது. ஆக முஸ்­லிம்­களே பிரிந்­தார்கள். தனித்­துவ இரு சமூ­கங்­களை மதத்­தாலும் ஒன்­று­ப­டுத்த முடி­ய­வில்லை. மனித உரிமை மீறல்தான் இதற்கு கார­ண­மாகும் என்­ப­தனை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.

ஆக மனு­நீதி கோட்­பாடு எங்­கெல்லாம் மீறப்­ப­டு­கின்­றதோ அங்­கெல்லாம் மனிதர் மத்­தியில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டவே செய்யும். மொழி அடிப்­ப­டையில் தமி­ழ­கமும் பாண்­டிச்­சே­ரியும் தமிழ்­மொ­ழி­யையே அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றன. தமி­ழ­கத்தை ஆங்­கி­லேயர் ஆட்சி புரிந்­த­போது பாண்­டிச்­சே­ரியை பிரான்­சியர் ஆட்சி புரிந்­தனர். எனினும் இந்­தியா சுதந்­திரம் பெற்­ற­பின்னும் இரண்டும் வெவ்­வே­றான மாகா­ணங்­க­ளா­கவே இயங்­கு­கின்­றன. மொழியின் அடிப்­ப­டையை வைத்து ஒன்­றி­ணைக்­கப்­ப­ட­வில்லை. இதை அந்­தந்த மாகாண தமி­ழர்கள் விரும்­பவும் இல்லை.

ரஷ்­யா­விலும் கூட அண்­மையில் முஸ்லிம் பகு­தி­க­ளான அஸர்­பைஜான், தஜி­கிஸ்தான், துர்க்­மே­னிஸ்தான் முத­லிய பகு­திகள் தனித்­த­னி­யாகப் பிரிந்­தன. மலே­சி­யாவும் சிங்­கப்­பூரும் இணங்­கியே பிரிந்­தன. இந்­தோ­னே­ஷி­யாவில் கிழக்­குத்­திமோர் ஐ.நா வால் பிரிக்­கப்­பட்­டது. இலங்­கையில் இணங்கி வந்­தோரை வாழ்­விக்­கவும் இல்லை. தாமாக அவர்கள் வேறாகி வாழவும் முடி­யாது எனவும் விதிக்­கப்­ப­டு­கி­றது. இரண்டும் மனித உரி­மைக்கும் மனு­நீ­திக்கும் புறம்­பா­ன­வை­யாகும். வலுக்­கட்­டா­ய­மாக எவ­ரையும் யாரும் தடுத்து வைத்­தி­ருக்க முடி­யாது.

தற்­போது வடக்கு கிழக்கின் அர­சி­யலின் நிலை எப்­படி இருக்­கி­றது. மாந­கர, நகர, பிர­தேச உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­காக இப்­போது தமிழ் கட்­சி­களும் களத்தில் இறங்­கி­யி­ருக்­கின்­றன. இந்த சபைகள் உரு­வாக்­கப்­பட்­டதன் நோக்கம் என்ன? மாந­கர, நகர, பிர­தேச அபி­வி­ருத்­தியை உரு­வாக்­கு­வ­தற்­கா­கத்­தானே இதனால் போரி­னாலும் புறக்­க­ணிப்­பாலும் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் சமூ­கத்தின் வாழ்­வா­தா­ரங்­களை வளப்­ப­டுத்த முடியும் அல்­லவா?வடக்கு, கிழக்கு மாகாண சபை­களும் இவ்­வாறே அமைந்­தி­ருக்க வேண்டும். மத்­திய அர­சோடு கடு­மை­யான எதிர்ப்பு நிலைப்­பாட்டை கொண்­டி­ருந்தால் வாழ்­வா­தார அபி­வி­ருத்­திக்­கான செயற்­பாடு நிறை­வே­றாது. கத்தி களத்தில் தான் விளை­யாட வேண்டும் கனிகளைக் காயப்படுத்தக் கூடாது. மாகாண சபையே முழுமையான அதிகாரப்பரவலைக் கொண்டதல்ல. இந்நிலையில் மாநகர, நகர, பிரதேச சிறு சிறு அதிகாரங்களுக்காக எதிர்க்கட்சி தலைமையை பலவீனப்படுத்த வேண்டுமா? உள்ளூராட்சி தேர்தல்களில் பல்வேறு கட்சிகளும் மாறுபட்ட கொள்கைகளோடு அடிபிடிபட்டு எதைச்சாதிக்கப் போகிறார்கள். அடிமட்டத்திலிருந்து தமிழ் சமூகத்தை மேலும் பிளவுபடுத்தவே இது உதவும். பச்சை மரமே பற்றி எரியும்போது பட்ட மரம் என்ன செய்யும் என்று பைபிள் குறிப்பிடுகிறது.

 

ஏ.ஜே.எம்.நிழாம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-09#page-4

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பார்த்தால் ...இலங்கையே இனி உங்கடைதான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.