Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.சி.சி தூசு மாசு சட்டத்தை தூசு துடைத்து நெறிப்படுத்துமா?

Featured Replies

ஐ.சி.சி தூசு மாசு சட்டத்தை தூசு துடைத்து நெறிப்படுத்துமா?

 

இந்­திய உப­கண்­டத்தில் கிரிக்கெட் விளை­யாட்டு பெரும் வர­வேற்பைப் பெற்­றுள்­ளது மட்­டு­மல்ல கிரிக்கெட் விளை­யாட்டை துதிக்கும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ரசி­கர்­களும் காணப்­ப­டு­கின்­ற­னர். பிரித்­தா­னி­யாவில் ஆரம்­பிக்­கப்­பட்ட கிரிக்கெட் இன்று இந்­தி­யாவில் தேசிய விளை­யாட்­டைப்­போல வர­வேற்பைப் பெற்­றுள்­ளது. இங்­கி­லாந்து,அவுஸ்தி­ரே­லியா, நியூஸி­லாந்து வீரர்கள் உட்­பட கிரிக்கெட் விளை­யாடும் நாடு­களைச் சேர்ந்த பல­வீ­ரர்கள் (ஐ.பி.எல்) எனப்­படும் 20 ஓவர்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட போட்­டி­களில் பங்­கு­பற்றி கோடானு கோடி இந்­திய ரூபாக்­களை அள்ளிச் செல்­கின்­றனர். முன்­னொரு காலத்தில் இங்­கி­லாந்து சென்று பிராந்­திய அணி­களில் விளை­யாடி புதிய அனு­­ப­வங்களையும் பணத்­தையும் பெற்ற ஏனைய நாட்டு வீரர்கள் இன்று இந்­தி­யாவை நோக்கி செல்­கின்­றனர். காலம் பல மாறு­தல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. முன்னர் அமெ­ரிக்கா, மேற்கு ஐரோப்பா என காணப்­பட்ட பொரு­ளா­தார அபி­வி­ருத்தி இன்று சீனா, இந்­தியா, பிரேசில் ஆகிய நாடு­களில் துடிததெ­ழும்­பு­வதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இதுவும் காலத்தின் மாற்றம் தான். இங்­கி­லாந்து, அமெ­ரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஐ.நா.வின் பாது­காப்புச் சபை நிரந்­தர நாடுகள் (வீட்டோ அதி­கார நாடுகள்) போன்று சர்­வ­தேச கிரிக்கெட் சம்­மே­ள­ன­மான International Cricket Council இல் இன்­று ­இந்­தி­யா­ மி­கவும் பலம்­வாய்ந்த நாடாக உரு­வெ­டுத்­துள்­ளது. இந்­தி­யாவில் கிரிக்கெட் விளை­யாட்டு வியக்­கத்­தக்க முறையில் வளர்ச்­சி­கண்­டுள்­ளது. தொலைக்­காட்சி உரி­மை­யா­ளர்கள், அனு­ச­ர­ணை­யா­ளர்­களால் இந்­திய கிரிக்கெட் சபைக்கு கணக்­கி­ல­டங்கா வரு­மானம் கிடைக்­கி­றது. அண்­மையில் இந்­திய கிரிக்கெட் வீரர்­களின் வேத­னங்கள் மீள­மைக்­கப்­பட்­டன. மாதாந்த வரு­மானம் கோடி­களைத் தாண்­டி­யுள்­ளது.

இந்தப் பின்­ன­ணியில் தற்­போது இந்­தி­யாவில் நடை­பெறும் இலங்கை இந்­திய தொடர் போட்­டி­களை அணு­க­வேண்­டி­யுள்­ளது. இந்­தியா சிறி­து ­கா­லத்­திற்கு முன்னர் இலங்கை வந்து டெஸ்ட் போட்­டிகள், ஒருநாள் போட்­டிகள், ரி- 20 போட்­டி­களில் விளை­யாடி இலங்­கையை துவம்சம் செய்­தது. இலங்கை ரசி­கர்கள் வேதனை அடைந்­தனர். இலங்கை விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் விசேட மா­நாடு ஒன்றை ஏற்­பாடு செய்து கிரிக்கெட் விளை­யாட்டின் தரத்தை உயர்த்த மேற்­கொள்ள வேண்­டிய வழி­வ­கைகளை ஆராய நிர்ப்­பந்­திக்­கப்­பட்டார். செப்டெம்பர் 15ஆம் திகதி பத்­த­ர­முல்லையில் பிர­ப­ல­மான ஹோட்டல் ஒன்றில் இக்­கூட்டம் நடை­பெற்­றது. பின்னர் ஐக்­கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இடம்­பெற்ற இரண்டு டெஸ்ட் போட்­டி­களில் இலங்கை வெற்­றி­வாகை சூடி­யதால் இர­சி­கர்கள் மகிழ்ந்­தனர். ஆனால் ஒருநாள் போட்­டி­க­ளிலும் ரி 20 போட்­டி­க­ளிலும் இலங்கை தோல்வி கண்­டது. இச் சூழ்­நி­லையில் இலங்கை, இந்­தி­யா­வுக்கு தற்­போது சுற்­றுப் பயணம் மேற்­கொண்­டுள்­ளது. மூன்று டெஸ்ட் போட்­டி­க­ளிலும், மூன்று ஒருநாள் போட்­டி­க­ளிலும் மூன்று ரி 20 போட்­டி­க­ளிலும் விளை­யாடி வரு­கின்­றது. இலங்­கையில் முன்னர் நடை­பெற்ற போட்­டி­களில் மோச­மாக விளை­யா­டிய இலங்கை அணியை இந்­திய மண்ணில், இந்­திய அணி எளி­தாக வென்­று­விடும் என கணிப்­புக்கள் வெளியி­டப்­பட்­டன. ஆனால் அவ்­வாறு நிக­ழ­வில்லை மூன்று டெஸ்ட் போட்­டி­களில் ஒரு போட்­டியில் மட்டும் இந்­திய அணி வென்­றது. ஏனைய இரு போட்­டி­களும் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தன. ஒரு­வ­கையில் இது இலங்­கைக்கு வெற்­றி­யென்றே குறிப்­பி­டலாம். இவ்­வாரம் நடை­பெற்ற முத­லா­வது 50 ஓவர் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­ஒ­ருநாள் போட்­டியில் இலங்கை அபா­ர­மாக விளை­யாடி இந்­திய அணியை மண்­கவ்வச் செய்­தது. இரண்­டா­வது போட்­டியில் இந்­திய அணி வெற்­றி­பெற்­றது. ஒரு நாள் தொடரின் வெற்றி தோல்­வியை நிர்­ண­யிக்கும் இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யே­யான நாளை விசா­க­பட்­டி­னத்தில் நடை­பெ­ற­வுள்ள மூன்­றா­வது போட்டி மிகவும் விறு­வி­றுப்­பாக அமையும் என எதிர்­பார்க்­கலாம்.

இப்­பின்­ன­ணியில் இரு அணி­க­ளுக்­கு­மி­டையில் டில்­லியில் நடை­பெற்ற மூன்­றா­வது டெஸ்ட் போட்டி விளை­யாட்­டுடன் நேர­டி­யாக சம்­பந்­த­மில்­லாத ஒரு கார­ணத்­திற்­காக அனை­வ­ரி­னதும் கவ­னத்தையும் பெற்­றிருந்தது. டில்­லியில் கார்த்­திகை, மார்­கழி,தை மாதங்­களில் காணப்­படும் தூசுப்­ப­ர­வலே இதற்­குக்­கா­ர­ண­மாகும். டில்­லியில் காணப்­படும் மாசுப்­ப­ரவல் ஏற்­க­னவே அவ­தா­னத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளது. இத­னால் சில போட்­டிகள் (உள்ளூர்)் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளன. இலங்கை - இந்­தி­யா­விற்கும் இடை­யே­யா­ன­ மூன்­றா­வது டெஸ்ட் போட்டி மார்­கழி மாதம் 2-ஆம் ,6ஆம் திக­தி வரை நடை­பெற்­றது. இலங்கை வீரர்கள் முகத்­துக்கு தூசு­ உட்­பு­காத உறை­களை அணிந்து விளை­யா­டினர். ஒருவர் பின் ஒரு­வ­ராக வாந்­தி­யெ­டுத்­தனர்,தங்­கு­ம­றைக்குச் சென்­றனர். ஒரு­கட்­டத்தில் பத்துப் பேர் மட்­டுமே களத்­த­டுப்பில் ஈடு­பட்­டனர்.நடு­வர்கள், மத்­தி­யஸ்தர் தலை­யிட்­டனர். இச்­சூழ்­நி­லையில் இந்­திய வர்ணனை­யா­ளர்­களால் பல­மான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­ட­ன. இலங்கை வீரர்கள் விளை­யாட்டின் நெறி­மு­றை­களை பின்­பற்­ற­வில்­லை­யென்றும், அணித்­த­லைவர் விராட்கோஹ்லி முந்நூறு ஓட்­டங்­களை எடுக்­காமல் செய்­வ­தற்கே இந்த நாடகம் எனக் கூட சில வர்­ண­னை­யா­ளர்கள் கூறினர். இலங்கை அணி பயிற்­றுநர், முகா­மை­யா­ளர்கள் தூசினால் வீரர்­க­ளுக்கு ஏற்­பட்ட அவஸ்­தை­களை எடுத்­துக்­கூ­றினர். விளை­யாட்­டுத்­துறை வைத்­தி­யர்­களும் ஏற்­றுக்­கொண்­டனர். அதே போட்­டியில் இந்­திய வேகப்­பந்­து­வீச்­சாளர் மொஹமட் சமியும் வாந்­தி­யெ­டுத்தார். தொலைக்காட்சி இர­சி­கர்­களும் இதனை நேர­டி­யா­கப்­பார்த்­தார்கள். முன்னாள் அதி­ரடி துடுப்­பாட்ட வீரரும் சர்ச்­சை­க­ளுக்­குள்­ளா­கா­த­வ­ரு­மான விரேந்தர் சேவாக் இலங்கை அணி வீரர்­களை பெரிதும் கண்­டித்தார்.

சிறிய நாடுகள்,பல­மான நாடுகள் என்ற வேற்­று­மையும் பல­மான நாடு­களின் மேலா­திக்கம் அர­சியல், இரா­ணுவ உற­வு­களில் மேலோங்­கிய நிலைமை நடை­மு­றையில் காணப்­ப­டு­கின்­றது என்­பது வெளிப்­ப­டை­யான உண்­மை­யாகும். அதே தொனியில் தான் மாசு சர்ச்­சையும் மேலோங்கி நிற்­கி­றது. கிரிக்கெட் உலகின் ஜாம்­பவான் இந்­திய கிரிக்கெட் அணி­யாகும்.. முன்னாள் வீரர்­களின் விமர்­ச­னத்­திலும் ஆதிக்க மனப்­பாண்மை வெளிப்­ப­டு­கின்­றது. இந்­திய அணியின் ஆரம்ப துடுப்­பாட்ட வீரர் தவானின் கூற்று திருப்தி தரு­வ­தாக அமைந்­துள்­ளது. இலங்கை அணி­யி­னரின் வேதனை நியா­ய­மா­னது எனக் கூறி­யுள்ளார். பிர­ப­ல­மான உலக வீரர் சுனில் கவாஸ்கர் ஏனைய வர்­ண­னை­யாளர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் நியா­ய­மாக தூசுப் பிரச்­சி­னையை கையாண்­டுள்ளார். பிர­ப­ல­மான பத்­தி­ரி­கைகள் கூட நடு­வு ­நி­லை­மை­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளன. விமர்­ச­னங்கள் யாவும் ஒருங்­கு­சேர்ந்து இலங்கை வீரர்­களின் உளதிறனை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளன. அதன் வெளிப்­பாடே முத­லா­வது ஒருநாள் போட்­டியில் இந்­தி­யாவை இலங்கை அணி திண­ற­டித்­த­மை­யாகும்.

அதே­நேரம் இந்­தியா, இலங்­கையின் கிரிக்கெட் அபி­வி­ருத்திக்குச் செய்த சேவை அளப்­ப­ரி­யது. இலங்கை கிரிக்கெட்டின் அபி­வி­ருத்­தியில் இந்­திய கிரிக்கெட் சபை­களின் ஆத­ரவு முன்னர் பெரும் பங்­காற்­றி­யது. இந்­தி­யாவில் குறிப்­பாக தமிழ்­நாட்டில் நடை­பெற்ற கோபாலன் வெற்­றிக்­கிண்ணம் போன்ற சுற்­றுப்­போட்­டி­களில் இலங்கை அணியும் பங்­கு­பற்­றி­யது. இதன் கார­ண­மாக இலங்கை–இந்­திய கிரிக்கட் உறவு மிகச்­சி­றப்­பாக இருந்­தது. இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யிலும் இலங்கை டெஸ்ட் அந்­தஸ்து கிடைப்­ப­தற்கு முன்னர் அடிக்­கடி போட்­டிகள் நடை­பெற்­றன. அண்­மையில் இலங்கை, இந்­திய அணிகள் விளை­யாடும் போது இலங்­கையின் விளை­யாட்டு சிறப்­பாக அமை­யா­ததைக் கண்டு வர்­ண­னை­யா­ளராகக் கட­மை­யாற்­றிய பிதா­மகன் சுனில் கவாஸ்கர் மிகவும் வேத­னை­ய­டைந்­த­வ­ராகக் காணப்­பட்டார். சிறந்த வீரர்­களை உரு­வாக்­கிய இலங்கை தாழ்­நி­லைக்கு வந்­து­விட்­டதே என்று வருந்­தினார். நிச்­ச­ய­மாக இந்தத் தற்­கா­லிக வீழ்ச்­சி­யி­லி­ருந்து இலங்கை மீண்­டெழும் என்று ஆருடம் தெரி­வித்தார். இலங்கை இந்­திய வீரர்கள் மிகவும் நட்­பு­ற­வு­டனும்,நெருக்­கத்­து­டனும் இருக்­கின்­றார்கள். தூசுப் பிரச்­சி­னை­களை அள­வுக்கு அதி­க­மாகக் கதைப்­ப­வர்கள் சில வர்­ண­னை­யா­ளர்­களும் பத்­தி­ரி­கை­க­ளுமே ஆகும். நடந்து முடிந்த இரண்­டா­வது ஒருநாள் போட்­டியில் அணித்­த­லைவர் ரோஹித் சர்மா மிக அற்­பு­த­மாக துடுப்­பெ­டுத்­தாடி இரு­நூறு ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்­த­துடன் இந்­திய அணியை வெற்­றிப்­பா­தைக்கும் இட்டுச் சென்றார். அவரின் பெருந்­தன்­மைக்கு அண்­மையில் நடந்த ஒரு சம்­பவம் உதா­ர­ண­மா­கின்­றது. இலங்­கை­யி­லி­ருந்து போட்­டி­களை இர­சிப்­ப­தற்கு இந்­தியா சென்ற மொஹமட் ­நி­லாம் என்ற இலங்­கையர் தந்­தை­யா­ருக்கு ஏற்­பட்ட இரு­த­ய­வலிப் பிரச்­சினை கார­ண­மாக இலங்­கைக்குத் திரும்ப வேண்­டி­யி­ருந்­தது. இதனை அறிந்த ரோஹித் சர்மா அவர் இலங்கை திரும்­பு­வ­தற்­கான விமானச் சீட்­டுக்­களை உவந்­த­ளித்­தது மட்­டு­மல்­லாது இலங்கை ரசி­கரின் தந்­தை­யா­ருக்கு இரு­தய சத்­திர சிகிச்­சைக்குத் தேவை­யான பணத்தை தரு­வ­தாகக் கூறினார். இலங்கை ரசிகர் அதற்கு விமானப் பய­ணச்­சீட்டே எனக்குப் போது­மா­னது என்று கூறி நன்றி தெரி­வித்தார். வெற்றி தோல்­விக்கு அப்பால் ரோஹித் சர்மா போன்ற வீரர்­க­ளு­டைய பெருந்­தன்­மை­யான செயற்­பா­டுகள் என்­றுமே நிலைத்­தி­ருக்­கக்­கூ­டி­யவை.

சர்­வ­தேச கிரிக்கெட் சம்­மே­ளனம் கிரிக்கெட் விளை­யாட்டை முகாந்­திரம் செய்யும் அமைப்­பாகும். கிரிக்கெட் விளை­யாட்டில் புதிய, புதிய விதி­களை உரு­வாக்கி விளை­யாட்டை செம்­மைப்­ப­டுத்தி வரு­கி­றது.உதா­ர­ண­மாக, நடுவர் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைமை (Umpire Review System) கிரிக்கெட் விளை­யாட்டை ஒரு­படி உயர்த்­தி­யுள்­ளது. நடு­வர்கள் சில சம­யத்தில் தீர்ப்­புக்­களில் தவ­று­களை மேற்­கொள்­கின்­றனர்,அவர்­களும் மனி­தர்­களே. மனிதத் தவ­றுகள் இடம்­பெ­று­வது தவிர்க்க முடி­யா­தது. விஞ்­ஞானத் தொழில்­நுட்­பத்தின் வளர்ச்­சி­யால்­தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைமை சிறப்­பாக இயங்­கு­கின்­றது.

கிரிக்கெட் விளை­யாட்டு பல சூழ்­நி­லை­களில் விளை­யா­டப்­ப­டு­கின்­றது. குளிர் நாடுகள், வெப்­ப­வ­லய நாடுகள் குறைந்த வெப்­ப­நிலை நாடுகள், சூரிய வெளிச்ச காலம், ஈரப்­பதன் காலம் கரு­மே­க­வானம் எனப் பல சூழ்­நி­லை­களில் விளை­யா­டப்­ப­டு­கின்­றது. சில சந்­தர்ப்­பங்­களில் சூரிய ஒளி மங்­க­லான நேரங்­களில் நடு­வர்கள் மானியைப் பயன்­ப­டுத்தி சூரிய ஒளி போதாது எனக் கரு­தினால் போட்­டியை இடை­நி­றுத்­து­வார்கள். காரணம் என்­ன­வெனில் பந்­தினை துடுப்­பாட்ட வீரர்கள் துல்­லி­ய­மாக கவ­னிக்க முடி­யா­த­தினால் அவர்­க­ளுக்கு ஆபத்து விளை­யலாம் என்­பதே. அதே போன்று விளை­யாட்டு மைதா­னத்தின் சில பகு­திகள் மழை ஓய்ந்த பின்­னரும் வழுக்கும் நிலையில் இருந்தால் வீரர்கள் விழுந்து காயங்கள் ஏற்­ப­டலாம். அவையும் ஆபத்­தான சூழ்­நி­லை­களே. அதே போன்­றுதான் தூசினால் ஏற்­படும் மாசும் உடல் நலத்­திற்கு கேடு விளை­விக்­கக்­கூ­டி­யவை. மனி­தர்கள் பழைய புத்­த­கங்கள், கட­தா­சி­களை அடுக்கும் போது அல்­லது துப்­புர­வாக்கும் போது மூக்கில் துணியை மூடி செய­லாற்­று­வது எல்­லோரும் அறிந்த விட­ய­மாகும். டில்லி மைதானம் தூசுக்குப் பேர் போனது. முன்­னரும் அம்­மை­தா­னத்தில் சில உள்ளூர் போட்­டிகள் கூட இரத்துச் செய்­யப்­பட்­டன. இதில் குறிப்­பாக கார்த்­திகை, மார்­கழி மாதங்கள் தூசு அதி­க­மாக வெளிவரும் கால­மா­கையால் இப்­பி­ரச்­சினை கூடு­த­லாக கவ­னத்­திற்கு உள்­ளாக்­கப்­பட வேண்டும். சில இந்­திய பத்­தி­ரி­கை­களின் விமர்­சனங்கள் ஒரு தலைப்­பட்­ச­மா­னவை. இந்­திய வீரர்கள் விளை­யா­டி­னார்கள் தானே. இலங்கை வீரர்கள் பெரி­து­ப­டுத்­து­வது ஏன்? கிரிக்கெட் விளை­யாட்டு கனவான் தனத்­துடன் விளை­யாட வேண்டும் என்­கின்ற தோர­ணையில் விமர்­சித்­தன. களத்­த­டுப்பின் போது முகத்­திற்கு உறை போட்­டார்கள், துடுப்­பெ­டுத்­தாடும் போது உறை அணிந்­தார்­களா?என சிறு­பிள்­ளைத்­த­ன­மான வினாக்­களைத் தொடுத்­தார்கள். வீரர்கள் களத்­த­டுப்பின் போது அழ­கான கண்­ணா­டி­களை அணிந்து விளை­யா­டு­வதைக் காண்­கின்றோம். ஆனால் அக்­கண்­ணா­டி­களை துடுப்­பெ­டுத்­தாடும் போது அணி­வ­தில்லை. அத்­துடன் துடுப்­பெ­டுத்­தாடும் போது முகத்­திற்கு உறை அணிந்தால் சக துடுப்­பாட்ட வீர­ருடன் உரை­யா­டு­வது கடி­ன­மாகும். ஓட்டம் பெறு­கையில் வீரர்கள் ஒருவர் ஒரு­வ­ருடன் கதைப்­பது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். இது இவ்­வா­றி­ருக்க தூசின் மாசுத் தாக்­கத்­தினால் சில இலங்கை வீரர்கள் இன்னும் பூர­ண­மாக குண­ம­டை­ய­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இவ்­வி­ட­யங்கள் குறிப்­பாக தூசின் மாசு­ப­டுத்தல் தொடர்­பான தாக்­கங்கள் விவா­தித்து அல்­லது கதைத்து நீரூ­பிக்­கப்­ப­டக்­கூ­டி­யது அல்ல. தகுதி வாய்ந்த வைத்திய அதிகாரிகள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் விஞ் ஞான ரீதியாக தூசின் மாசுத் தாக்கத்தை துல் லியமாக அறிந்து கொள்வார்கள். ஆபத் தான, நியாயமற்ற சூழ்நிலைகளில் விளை யாட்டைத் தற்காலிகமாக நிறுத்தல் என் கின்ற தலைப்பின் கீழ் முக்கியமான விதி யொன்று ஐ.சி.சி. சட்டத்தொகுப்பில் உள்ள டக்கப்பட்டுள்ளது. அச்சட்டப் பிரிவு 2.2.8 ஆகும். அந்தச் சட்டம் அல்லது விதி பின்வ ருமாறு கூறுகின்றது. காலநிலை அல்லது ஒளி அல்லது வேறு ஏதாவது காரணங்க ளினால் ஆபத்தான, நியாயமற்ற சூழ்நிலை கள் உருவாகினால் நடுவர்கள் போட்டி மத்தியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து விளையாட்டை இடைநிறுத்துவது தொடர் பான நடவடிக்கைகளை மேற் கொள்வர். இந்தமுறை தூசினல் ஏற்பட்ட மாசின் போது நடுவர்களால் உடனடியாக ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் அதிக நேரம் விரயமானது. ஐ.சி.சி.சட்டம் ஏனைய விடயங்களில் தெளி வாக இருப்பது போன்று தூசு மாசு விடயத்திலும் தெளிவான சட்ட விதியை ஏற்படுத் தியிருந்தால் இந்த நிலை ஏற்ப ட்டிருக்காது. இச்சூழ்நிலைகளில் ஐ.சி.சி. யின் அடுத்த கூட்டத்தில் இது பற்றி ஆராயவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின் றன. எவ்வாறெனினும் தூசு மாசு பிரச் சினை சம்பந்தமாக ஐ.சி.சி விரைவில் தெளிவான சட்டத்தை நிறைவேற்றி டில்லி போன்ற மைதானங்களில் சர்வதேச, உள்ளூர் போட்டிகளை நடத்துவது தொடர்பாக கூடிய கவனமெடுக்க வேண்டும் என கிரிக் கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-16#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.