Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், பிலாண்டர்

Featured Replies

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், பிலாண்டர்

 

 
steyn

டேல் ஸ்டெய்ன், ஏ.பி.டிவிலியர்ஸ்.   -  படம். | ஏ.பி.

போர்ட் எலிசபெத் மைதானத்தில் ஜிம்பாபவேவுக்கு எதிராக டிசம்பர் 26-ம் தேதி தொடங்கும், உலகின் முதல் 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், பிலாண்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டிவில்லியர்ஸ் கடைசியாக ஜனவரி 2016-ல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். டேல் ஸ்டெய்னும் பெர்த்தில் கடந்த ஆண்டு தோள்பட்டைக் காயம் அடைந்து அதன் பிறகு ஆடவில்லை.

மோர்னி மோர்கெலும் காயத்திலிருந்து மீண்டுள்ளார். எனவே தென் ஆப்பிரிக்க அணி அதன் அபாயகரமான முழு வலுவுடன் ஜிம்பாப்வேவுக்கு எதிராகக் களமிறங்குகிறது. அதே போல் வெர்னன் பிலாண்டர் முதுகு காயத்திலிருந்து மீண்டுள்ளார்.

அதே போல் அதிரடி ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் மீண்டும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணிக்குள் வந்துள்ளார்.

ஜனவரி 5-ம் தேதி இந்தியா அங்கு முதல் டெஸ்ட்டில் ஆடுகிறது. அப்போது வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான பிட்சில் 7 பேட்ஸ்மென்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணி இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க அணி வருமாறு:

டுபிளெசிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, தெம்பா பவுமா, டி காக், டி புருய்ன், ஏ.பி.டிவிலியர்ஸ், டீன் எல்கர், கேஷவ் மகராஜ், அய்டன் மர்க்ரம், மோர்னி மோர்கெல், ஆண்டில் பெலுக்வயோ, பிலாண்டர், கேகிஸோ ரபாடா, டேல் ஸ்டெய்ன்.

http://tamil.thehindu.com/sports/article21933321.ece

  • தொடங்கியவர்

டெஸ்ட் போட்டி வரலாற்றில் இன்று முக்கியமான நாள்!

தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதும் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

 
 
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய முயற்சியாக 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

 
 
தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதும் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
தென்ஆப்பிரிக்க வீரர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய உற்சாகத்தில் போஸ் கொடுக்கிறார்கள்
போர்ட்எலிசபெத்:

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை தொடரை காரணம் காட்டி தென்ஆப்பிரிக்க மண்ணில் ‘பாக்சிங் டே’ அன்று (அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள்) டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்தது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக ஜிம்பாப்வே அணிக்கு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. அதை ஜிம்பாப்வேயும் ஏற்றுக் கொண்டது.

இதன்படி தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி 4 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட உள்ளது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) அங்கீகாரம் அளித்திருப்பதுடன், 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை 4 நாள் டெஸ்ட் போட்டியை சோதனை முயற்சியாக தொடருவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.

1877-ம் ஆண்டு முதல், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தொடக்கத்தில் குறிப்பிட்ட நாட்கள் என்று நிர்ணயிக்காமல் முடிவு கிடைக்கும் வரை ஆடினர். பிறகு 5 நாட்கள் போட்டியாக மாற்றப்பட்டது. இடையில், உலக லெவன்- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி (2005-ம் ஆண்டு) ஒன்று 6 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டது. ஆனால் அதில் 4 நாட்களிலேயே முடிவு கிடைத்து விட்டது.

இந்த நிலையில் அதிகாரபூர்வ 4 நாட்கள் டெஸ்ட் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்காக புதிய விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக டெஸ்ட் போட்டியில் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் விளையாடுவார்கள். அந்த நேரம் 6½ மணியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல நாள்தோறும் குறைந்தது 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்பது 98 ஓவர்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ‘பாலோ-ஆன்’ ஸ்கோர் வித்தியாசம் 200 ரன்களுக்கு பதிலாக 150 ரன்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. போட்டி பரபரப்பாக நகர வேண்டும், கூடுமானவரை முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் கிரிக்கெட் பகல்-இரவாக நடத்தப்படுவது இது 8-வது முறையாகும். தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல் நிகழ்வாகும்.

பொதுவாக போர்ட் எலிசபெத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். ஆனால் மின்னொளியின் கீழ் இளஞ்சிவப்பு நிற பந்தை எதிர்கொள்ளும் போது, ஆடுகளத்தன்மை எந்த மாதிரி இருக்கும் என்பதை கணிப்பது கடினமே.

முதுகுவலி பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கடந்த வாரம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பயிற்சியில் ஈடுபட்டாலும் இன்னும் அவர் முழு உடல்தகுதியை எட்டவில்லை. இந்த டெஸ்டில் பங்கேற்கும் வாய்ப்பு 60 சதவீதம் மட்டுமே உள்ளதாக பாப் டு பிளிஸ்சிஸ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். ஒருவேளை அவர் உடல்தகுதி பெற முடியாமல் போனால் டீன் எல்கர் அணியை வழிநடத்துவார்.
 
201712261426518130_1_stayin._L_styvpf.jpg


ஓராண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் அவருக்கு மோர்னே மோர்கல் போட்டியாக நிற்கிறார். இதுவரை 417 விக்கெட்டுகளை சாய்த்துள்ள ஸ்டெயின், இன்னும் 5 விக்கெட் எடுத்தால் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்ஆப்பிரிக்க பவுலர் என்ற பெருமையை பெறுவார்.

கிரேமி கிரிமர் தலைமையில் களம் காணும் ஜிம்பாப்வே அணியில் ஹாமில்டன் மசகட்சா, பிரன்டன் டெய்லர், சிகந்தர் ராசா போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனாலும் உள்ளூரில் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிப்பார்களா? என்பது சந்தேகம் தான். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்த டெஸ்ட் தொடங்குகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/26055648/1136683/South-Africa-vs-Zimbabwe-4-day-Test-cricket-starts.vpf

  • தொடங்கியவர்

நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

 

ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 
நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
 
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தென்ஆப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது. காயம் குணமடையாததால் தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளிசிஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் டி வில்லியர்ஸ் கேப்டனாக களம் இறங்கினார்.

டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்டெயினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டெயின் களம் இறங்கவில்லை. பிலாண்டர் இடம்பிடித்துள்ளார்.

201712261809409995_1_4devilliers001-s._L_styvpf.jpg

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டீன் எல்கர், 2. மார்கிராம், 3. ஹசிம் அம்லா, 4. டி வில்லியர்ஸ், 5. பவுமா, 6. டி காக், 7. பிலாண்டர், 8. பெலுக்வாயோ, 9. கேஷவ் மகாராஜ், 10. ரபாடா, 11. மோர்னே மோர்கல்.

ஜிம்பாப்வே அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. சிபாபா, 2. மசகட்சா, 3. டெய்லர், 4. எர்வின், 5. மூர், 6. சிகந்தர் ரசா, 7. புர்ல், 8. கிரிமர், 9. ஜார்விஸ், 10. மோஃபு, 11. முசாரபனி.

டீன் எல்கர், மார்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்கா அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/26180941/1136830/Four-Day-test-south-africa-won-toss-select-Batting.vpf

 

3.png&h=42&w=42

 
 
309/9d * (78.3 ov)
 
  • தொடங்கியவர்

நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 309/9 - ஜிம்பாப்வே திணறல்

 

 
 

ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டை இழப்புக்கு 30 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

 
நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 309/9 - ஜிம்பாப்வே திணறல்
 
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தென்ஆப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது. காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் இடம்பெறாததால், அவருக்குப் பதிலாக டி வில்லியர்ஸ் கேப்டனாக களம் இறங்கினார்.

டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். டீன் எல்கரும், மார்கிராமும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
இந்த ஜோடி 72 ரன்கள் குவித்த நிலையில் எல்கர் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய டி வில்லியர்ஸ், பவுமா ஆகியோர் ஓரளவு ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மார்கிராம் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
201712270425479238_1_tb36iw8i._L_styvpf.jpg


டி வில்லியர்ஸ் 53 ரன்களிலும், பவுமா 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 78.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

ஜிம்பாப்வே தரப்பில் ஜார்விஸ், மோஃபு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கிரீமர் 2 விக்கெட்டுகளும் விழ்த்தினர்.

இதையடுத்து, ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மசகட்சாவும், சிபாபாவும் களமிறங்கினர்.

ஆனால், தென் ஆப்பிரிக்கா அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் ஜிம்பாப்வே வீரர்கள் தொடக்க வீரர்களை இழந்து தடுமாறி வருகிறது.

முதல் பந்திலேயே ஜிம்பாப்வே அணி விக்கெட்டை இழந்தது. மார்கல், பிளெண்டரின் சிறப்பான பந்துவீச்சில் 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

இறுதியில், ஜிம்பாப்வே அணி 16 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் மோனே மார்கல் 3 விக்கெட்டும், பிளெண்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/27042548/1136862/south-africa-first-innings-3099-for-four-day-test.vpf

  • தொடங்கியவர்

9.png&h=42&w=42

 

68 & 96/7 * (36 ov) (f/o)

  • தொடங்கியவர்
  •  
South Africa won by an innings and 120 runs
 
 

4 நாள் டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிந்து விட்டது.

  • தொடங்கியவர்

நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட்: 120 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

 

ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

 
நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட்:  120 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி
 
 
ஜொகனஸ்பெர்க்:
 
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.  தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இப்போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் தொடங்கியது. 
 
டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். டீன் எல்கரும், மார்கிராமும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 72 ரன்கள் குவித்த நிலையில் எல்கர் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய டி வில்லியர்ஸ், பவுமா ஆகியோர் ஓரளவு ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மார்கிராம் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 
டி வில்லியர்ஸ் 53 ரன்களிலும், பவுமா 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், தென்னாப்பிரிக்கா அணி 78.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் ஜார்விஸ், மோஃபு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கிரீமர் 2 விக்கெட்டுகளும் விழ்த்தினர்.
 
201712272203089115_1_savzim1._L_styvpf.jpg
 
இதையடுத்து, ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மசகட்சாவும், சிபாபாவும் களமிறங்கினர். ஆனால், தென் ஆப்பிரிக்கா அணியினரின் துல்லியமான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல்  ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே 16 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. 
 
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வேக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணியில் ரியான் பர்ல் 16 ரன்களும், கைல் ஜார்விஸ் 23 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலும், ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மார்னே மார்கல் 5 விக்கெட்களும், ககிசோ ரபாடா, அண்டிலே பேலுக்வாயோ தலா 2 விக்கெட்களும், வெர்னான் பிலாண்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த ஜிம்பாப்வே பாலோ ஆன் பெற்று மறுபடி களமிறங்கியது. இந்த முறையும் எதிரணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் இந்த முறை சற்று தாக்குபிடித்து விளையாடிய ஜிம்பாப்வே 121 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த முறை கிரேக் எர்வின் 23 ரன்களும், கிரெம் கிரீமர் 18 ரன்களும், பிரண்டன் டெய்லர் 16 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
 
201712272203089115_2_kesavmaharaj._L_styvpf.jpg
 
இதனால் தென்னாப்ரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. தென்னாப்ரிக்கா பந்துவீச்சில் கேஷவ் மகராஜ் 5 விக்கெட்களும், அண்டிலே பேலுக்வாயோ 3 விக்கெட்களும், பிளாண்டர், ரபாடா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/27220309/1137033/South-africa-beat-Zimbabwe-by-innings-and-120-runs.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.