Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் செலவு விவகாரம் தினகரன் பதவிக்கு சிக்கல்

Featured Replies

தேர்தல் செலவு விவகாரம்
தினகரன் பதவிக்கு சிக்கல்
 
 
 

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, 20 ரூபாய், 'டோக்கன்' வழங்கியதாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், தினகரன் எம்.எல்.ஏ., பதவிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

 

தேர்தல்,செலவு,விவகாரம்,தினகரன்,பதவிக்கு,சிக்கல்


சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், தேர்தல் பிரசாரத்தின் போது,பணத்தை வாரி இறைத்தார்.

 

தகுதி நீக்கம்



அவர் பிரசாரத்திற்கு, எவ்வளவு பேர் வந்தனர்; அவர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது
என்ற விபரங்களை, தேர்தல் பார்வையாளர்கள், ஆதாரத்துடன் சேகரித்துள்ளனர். அவற்றை, தங்களது பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அதிகபட்சமாக, 28 லட்சம் ரூபாய் வரை செலவு

செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்தது நிரூபிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படு வார்.தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், பதவி பறிக்கப்படும். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்கவும் தடை விதிக்கப்படும்.


தற்போது, செலவின பார்வையாளர்கள் சமர்ப்பித்து உள்ள அறிக்கையின்படி, தினகரன், தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள உச்ச வரம்பை தாண்டி, செலவு செய்துள்ளார். அத்துடன், தேர்தலுக்கு முந்தைய நாள், தினகரன் ஆதரவாளர்கள், வீடு வீடாக, 20 ரூபாய் நோட்டை வினியோகம் செய்துள்ளனர்.


அந்த ரூபாய் நோட்டில், பாகம் எண், வீட்டில் எத்தனை ஓட்டுகள் உள்ளன என்ற விபரத்தை குறிப்பிட்டுள்ளனர். அந்த ரூபாய் நோட்டில் உள்ள பதிவெண்ணை, தினகரன் ஆட்கள் எழுதி
வைத்துள்ளனர். ஓட்டு போட்டு வந்து, 20 ரூபாய் நோட்டை கொடுத்தவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளனர். சில இடங்களில் பணம் வழங்க முடியாமல் உள்ளது. அங்குள்ள மக்கள், பணம் கேட்டு, தினகரன் ஆதரவாளர்களை நச்சரித்துவருகின்றனர்.

இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் நடந்த மோதல் தொடர்பாக, தினகரன் ஆதரவாளர்கள், நான்கு பேரை, ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள், 450 பேருக்கு, 20 ரூபாய் நோட்டை, 'டோக்கன் அட்வான்ஸ்' ஆக கொடுத்தது,

 

விசாரணையில் தெரிய வந்துள்ளது.இது குறித்த விபரங்களையும், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது. இதுவும், தினகரன் செலவு கணக்கில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. தினகரன், இறுதி செலவு கணக்கு சமர்ப்பிக்க, ஒரு மாதம் அவகாசம் உள்ளது.


அவர் கணக்கை சமர்ப்பிக்கும் போது, தேர்தல் பார்வையாளர்கள் கணக்குடன் ஒப்பிட்டு, கூடுதல் செலவிற்கு, அவரிடம் விளக்கம் கேட்கப்படும். உரிய விளக்கம் அளிக்காமல், கூடுதல் செலவு செய்தது நிரூபணமானால், வாக்காளர்களுக்கு, அவரது ஆட்கள் பணம் கொடுத்தது உறுதியாகும்; அதன் காரணமாக, அவர், எம்.எல்.ஏ., பதவியை இழக்க நேரிடும் என, தேர்தல் கமிஷன் வட்டாரம் தெரிவித்தது.


- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1927495

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.