Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டத்தை ஆரம்பித்தார் ஹத்­து­ரு

Featured Replies

ஆட்டத்தை ஆரம்பித்தார் ஹத்­து­ரு

 

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக பொறுப்­பேற்­றுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்­க­ளாதேஷ் அணியின் முன்னாள் பயிற்­சி­யாள­ரு­மான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, நேற்று தனது பயிற்­சி­களை ஆரம்­பித்தார்.

hathurusinge.jpg

கொழும்பு ஆர்.பிரே­ம­தாச மைதா­னத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்­ப­மான சந்­திக்­க­வு­ட­னான பயிற்­சியில் தேசிய அணி வீரர்கள் அனை­வரும் கலந்­து­கொண்­டனர்.

எதிர்­வரும் ஜன­வரி மாதம் இலங்கை அணி பங்­க­ளாதேஷ் செல்­ல­வுள்ள நிலையில் பயிற்­சிகள் தீவி­ர­மாக நடை­பெறும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

அதே­வேளை இலங்கை அணியின் தலை­மையும் மாறலாமாம். இலங்கை அணித் தலைவராக மீண்டும் மெத்தியூஸ் அல்லது சந்திமால் நியமிக்கப்படலாம் என்றும் உத்தியோகபூர்வ மற்ற தகவல்கள் தெரிவிக் கின்றன.

http://www.virakesari.lk/article/28727

  • தொடங்கியவர்

இலங்கை அணியால் மீள் எழுச்சி பெறமுடியும் – தலைமைப் பயிற்றுநர் ஹத்துருசிங்க நம்பிக்கை

(நெவில் அன்­தனி)

இலங்கை அணி­யினால் மீண்டும் எழுச்சி பெற முடியும் என புதிய தலைமைப் பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க நம்­பிக்கை வெளி­யிட்டார். அத்­துடன் 2019 உலகக் கிண்­ணத்தை இலக்கு வைத்து அணியைக் கட்டி எழுப்­பு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

Hathursinghe.jpgகெத்­தா­ராம ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் இலங்கை அணி­யி­ன­ருக்கு பயிற்­சியை நேற்று பிற்­பகல் ஆரம்­பித்­ததைத் தொடர்ந்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­போதே அவர் இந்த நம்­பிக்­கையை வெளி­யிட்டார்.

‘‘எம்மால் மீண்டும் திற­மை­யாக விளை­யாட முடியும் என நான் திட­மாக நம்­பு­கின்றேன். இந்தக் குழாத்தில் இடம்­பெ­று­ப­வர்கள் மத்­தி யில் மிகு­தி­யான திறமை இருக்­கின்­றது.

இது எனக்கு உற்­சா­கத்தைக் கொடுக்­கின்­றது. இது அணியின் ஆற்றல் வெளிப்­பாட்­டுக்கு உந்­து­சக்­தி­யாக அமையும். எம்மால் மீண்டும் எழுச்சி அடை­ய­மு­டியும் என நான் 100 வீதம் நம்­பு­கின்றேன்.

இலங்கை அணி­யிடம் உள்ள திற­மையை அதி உச்ச நிலைக்கு கொண்­டு­செல்­வதே எனது குறிக்­கோ­ளாகும். வெள்ளைப் பந்தில் விளை­யா­டப்­படும் ஒருநாள் மற்றும் உலகக் கிண்ணம், இரு­பது 20 போட்­டி­களில் பிர­கா­சிப்­பதும், உலகக் கிண்­ணத்தை வென்­றெ­டுப்­ப­துமே எனது முத­லா­வது குறிக்­கோ­ளாகும்.

அதற்­கான வீரர்­களை இனங்­கண்டு உலகக் கிண்­ணத்­துக்­கான அணியைக் கட்­டி­யெ­ழுப்­ப­வேண்டும். அதன் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் குறித்து கவனம் செலுத்­துவேன்’’ என்றார் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க.

இலங்கை அணி­யி­ன­ருடன் லசித் மாலிங்­கவும் பயிற்­சியில் ஈடு­ப­டு­கின்­றாரா? அவ­ரது நிலை என்ன? எனக் கேட்­ட­போது, ‘‘அவர் சம்­பந்­தப்­பட்ட விடயம் பிர­தம தெரி­வா­ள­ரிடம் கேட்­கப்­ப­ட­வேண்­டி­யது. அவ­ருக்கு கழகப் போட்டி இல்­லா­ததால் இங்கு வந்­துள்ளார். யாருக்கும் இங்கு வர­மு­டி யும். லசித் தனது ஆர்­வத்­தினால் இங்­கு­வந்தார். அதனை நான் விரும்­பு­கின்றேன்.

அவர் இலங்­கைக்­காக விளை­யா­டி­யவர். எனவே அவ­ரது அனு­ப­வத்தைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளலாம். எல்­லா­வற்­றுக்கும் மேலாக குமார் சங்­கக்­கார, மஹேல ஜய­வர்­தன, முரளி போன்ற வீரர்­க­ளிடம் இருக்கும் அனு­ப­வங்­களை, திற­மை­களை எமது வீரர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க நிச்­சயம் முயற்­சிப்பேன்.

அவர்­க­ளுக்கு நேரம் இருக்­கும்­போது தேவைக்­கேற்­ற­வாறு அவர்­க­ளது சேவையைப் பயன்­ப­டுத்­திக்­கொள்வேன்’’ எனவும் ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார்.

Sri-Lank-cricket-team.jpg

இலங்கை அணியை பங்­க­ளா­தே­ஷுக்கு அழைத்துச் செல்­வது குறித்து பேசிய அவர், ‘‘பங்­க­ளா­தே­ஷுக்கு இலங்கை அணியைக் கொண்டுசெல்­வது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அது மிகப் பெரும் சவா­லா­கவும் அமை யும்.

ஏனெனில் நமது அணி திற­மைக்­கேற்ப சிறப்­பாக இல்லை. பங்­க­ளாதேஷ் அணியோ கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக சொந்த மண்ணில் மிகவும் பலம்­வாய்ந்­த­தாகத் திகழ்­கின்­றது. எனவே, இது மிகுந்த சவா­லாக அமையும். அத்­துடன் முன்­னேற்­றத்தை நோக்கி நகர்ந்­து­கொண்­டி­ருக்கும் ஸிம்­பாப்பே மூன்­றா­வது நாடாக பங்­கு­பற்­று­கின்­றது.

எனக்குக் கீழ் உத­வி­யா­ளர்­க­ளாக இருந்த ஹீத் ஸ்ட்ரீக் மற்றும் பங்­க­ளாதேஷ் பயிற்­று­நர்கள் மிகத் திற­மை­யாக பயிற்சி வழங்­கக்­கூ­டி­ய­வர்கள். எனவே, இந்தத் தொடர் கடும் சவால் மிக்­க­தாக அமையும்’’ என பதி­ல­ளித்தார்.

‘‘வீரர்கள் மத்­தியில் சிறந்த மனோ­நி­லையைக் கட்­டி­யெ­ழுப்பும் வகையில் அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து டாக்டர் பில் ஜொன்சி என்ற மனோதத்துவவியலாளர் அழைக்கவுள்ளேன்.

என்னுடன் நான்கு வருடங்கள் இணைந்து பணியாற்றிய அவர் எதிர்வரும் 3ஆம் திகதி வருகை தந்து பத்துத் தினங்கள் வீரர்களுக்கு அறிவுரைகளை வழங்கவுள்ளார். அவரை வருடத்திற்கு நான்கு தடவைகள் அழைத்து பயிற்சி அளிக்க எண்ணியுள்ளேன்’’ எனவும் அவர் தெரிவித்தார்.

http://metronews.lk/?p=19435

  • தொடங்கியவர்

கொழும்பில் பயிற்சிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த ஹத்துருசிங்க

DSC_0415-1-696x464.jpg
 

2017இல் மோசமான தோல்விகளை தழுவி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை அணிக்கு, புதிய பயிற்சியாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டமை அனைவரது மத்தியிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் 2018ஆம் ஆண்டுக்கான புதிய கிரிக்கெட் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் வீரர்களின் உளவியல், உடலியல் மற்றும் போட்டித் தன்மையை சிறந்த முறையில் எதிர்கொள்ளும் வகையில் இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தனது பயிற்சிகளை உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்தார்.

 

புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றதன் பிறகு, பங்களாதேஷ் தொடரை இலக்காகக் கொண்டு தெரிவுசெய்யப்பட்ட 23 வீரர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சிகளை நேற்று(28) ஹத்துருசிங்க ஆரம்பித்தார். இக்குழாமில் ஏற்கனவே இடம்பெற்ற அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதை காரணமாக கலந்துகொள்ளாவிட்டாலும், குறித்த குழாமில் இடம்பெறாத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இணைந்துகொண்டு வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வீரர்களுடன் மிகவும் சிறந்த முறையில் கருத்துக்களை பரிமாறிக்கொண்ட ஹத்துருசிங்க தனது பயிற்சிகளை வீரர்களுக்கு உத்வேகத்துடன் வழங்கியிருந்தமையைக் காணமுடிந்தது. இதில் பிரேமதாஸ மைதான ஆடுகளத்தில் உபுல் தரங்க, குசல் ஜனித் பெரோ, குசல் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு துடுப்பாட்ட பயிற்சிகளை பந்துவீச்சு இயந்திரம் மூலம் வழங்கியிருந்தார்.

srilanka-team-4.jpgஅதேபோல பயிற்சிகளை ஆரம்பிக்க முன்னர் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஹத்துருசிங்க, தமக்கு தெரிந்த நுணுக்கங்களை மைதானத்தில் செய்து காட்டும் படி அறிவுரை வழங்கியிருந்தார்.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சிகளின் பிறகு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஹத்துருசிங்க பதிலளித்தார்.

நான் நான்கு முக்கிய பிரிவுகளாக வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன். வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் துடுப்பாட்டத்தில் எவ்வாறு ஈடுபடுவது, துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு பந்தை எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவிப்பது உள்ளிட்ட பிரதான விடயங்களை முதலில் சொல்லிக் கொடுக்க எதிர்பார்த்துள்ளேன்.

போட்டியொன்றில் பிடியெடுப்புகளை தவறவிடுவதோ அல்லது பொருத்தமில்லாத தீர்மானங்களை எடுப்பதோ தோல்விகளுக்கு காரணமல்ல. முதலில் வீரர்கள் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால் நீங்கள ஒரு பிடியெடுப்பை தவறவிட்டால் அதுவே தோல்விக்கு காரணமாக இருக்கலாம். இதனால் மற்றுமொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். இதற்கு பந்துவீச்சார்களும் விதிவிலக்கல்ல. எனவே நாம் அனைத்து துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு வீரர்களுக்கு நன்கு பயிற்சிகளை வழங்குவதோடு அவர்களிடம் நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கான சூழலை விரைவில் ஏற்படுத்துவதற்கு நான் எதிர்பார்த்துள்ளேன். அதேபோல வீரர்களுடன் சிறந்த தொடர்பாடலையும் விரைவில் ஏற்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

ஒரு பயிற்றுவிப்பாளராக எனக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தர்ப்பமாக இதை கருகிறேன். சிறந்த பயிற்சிகளின் மூலம்தான் நான் வீரர்களின் திறமைகளை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன். நாம் சிறப்பாக விளையாடாத காரணத்தால் தான் இந்த நிலைக்கு பின்தள்ளப்பட்டோம். ஆனால் தற்போதுள்ள அணியில் திறமையான வீரர்கள் இருக்கின்றனர் என்றார் புதிய பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க.

எனினும், கடந்த காலங்களில் பெற்ற தோல்விகளுக்கு வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தாதது காரணமல்ல என தெரிவித்த அவர், உலகில் முதல் 5 அல்லது 10 இடங்களில் இடம்பெறக்கூடிய திறமையான வீரர்கள் இலங்கையில் இருப்பதாகவும், அவர்களது திறமை இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை அணியால் மீண்டும் புத்துயிர் பெற முடியும் என நம்பிக்கை வெளியிட்ட ஹத்துருசிங்க, 2019 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு அணியை கட்டியெழுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எம்மால் மீண்டும் திறமையாக விளையாட முடியும் என நாம் திடமாக நம்புகிறேன். தற்போதுள்ள இலங்கை அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். இது எனக்கு உற்சாகத்தைக் கொடுப்பதுடன், அவர்களது ஆற்றல் வெளிப்பாட்டுக்கு உந்துசக்தியாகவும் அமையவுள்ளது. எனவே எமது வீரர்களின் திறமைகளை அதிஉச்சத்துக்கு கொண்டு செல்வதே எனது குறிக்கோளாகும். அதிலும் 2019 உலகக் கிண்ணத்தை வெல்வதே எனது முதல் கனவாகும் எனவும் தெரிவித்தார்.

hathuru-coming.jpg2010இற்குப் பிறகு மீண்டும் கிடைத்த பதவி

இலங்கை அணிக்கு மீண்டும் பயிற்றுவிக்க கிடைத்தமை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல சரியான காலத்தில்தான் நான் இலங்கை அணியை பொறுப்பேற்றுள்ளேன். உண்மையில் இலங்கை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதற்கு 100 சதவீதம் பங்களிப்பினை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன். எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் வீரர்களை நாடும் ஹத்துருசிங்க

இலங்கை அணியின் தொடர் பின்னடைவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அணியை மறுசீரமைப்பதற்கும் முன்னாள் வீரர்களான சங்கக்கார, மஹேல மற்றும் முரளிதரனின் பங்களிப்பு முக்கியமானது என இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த முன்னாள் வீரர்களின் அனுபவங்களை எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளேன். எனக்கு அதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் நான் இருக்கும்போது சங்கக்காரவின் உதவியை பல தடவைகள் பெற்றுக்கொண்டுள்ளேன். எனவே, இவ்வாறு முன்னாள் வீரர்களின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள தவறும் பட்சத்தில் எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை வீணடிப்பதாக அமைந்துவிடும். எனவே சங்கா, மஹேல மற்றும் முரளி உள்ளிட்டோருக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

குசல் மெண்டிஸின் வருகை

இலங்கை அணியில் உள்ள திறமையான வீரர்களில் குசல் மெண்டிஸும் ஒருவர். அவருடைய திறமையை இவ்வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான தொடர்களின் வாயிலாக கண்டுகொள்ள முடிந்தது என்றார்.

kusal-hathuru.jpgஒரு நாள் மற்றும் T-20 அணித்தலைமை

இலங்கை அணியுடன் 2019 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் வரை மாத்திரம் என்னை ஒப்பந்தம் செய்யவில்லை. என்னுடைய பதவிக்காலம் 2020 வரை உள்ளது. அதேபோல ஒவ்வொரு போட்டித் தொடருக்கும் ஒவ்வொரு தலைவரை நியமித்தால் எனக்கும் அணியை கையாள்வது இலகுவாக இருக்கும். ஆனால் கீழ் மட்டத்தில் இருந்துதான் எமக்கு முன்னேறிச் செல்ல முடியும். எனவே அணித் தலைமை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தற்போது என்னிடம் எந்தவொரு தகவலும் கிடையாது.

 

 

அதேபோல இலங்கையில் உள்ள விளையாட்டு சட்டத்தின் பிரகாரம் அணியொன்றில் கடமையாற்றுகின்ற பயிற்றுவிப்பாளருக்கு அணியொன்றை தெரிவு செய்யவோ, பெயரிடவோ முடியாது. எனினும், என்னுடைய கருத்துக்களுக்கும் அவர்கள் செவிசாய்ப்பார்கள் என நான் கருகிறேன். அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமுறைகளுக்கமைய இறுதி 11 வீரர்களை தெரிவுசெய்யும் போது என்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

லசித் மாலிங்கவின் திடீர் பிரசன்னம்

பங்களாதேஷ் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் லசித் மாலிங்க இடம்பெறாமை குறித்து தெரிவுக்குழு தலைவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவருக்கு தற்போது எந்தவொரு போட்டிகளும் இல்லாத காரணத்தால் பந்துவீச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக இன்று இங்கு வந்தார். அவருடைய முயற்சியை நான் மிகவும் விரும்புகிறேன். அதேபோல மாலிங்கவைப் போல எந்தவொரு வீரருக்கும் இங்கு வந்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

malinga-2.jpgஉள்ளுர் போட்டிகளில் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

பங்களாதேஷ் போட்டித் தொடருக்கு இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன. அதிலும் குறிப்பாக நாங்கள் முதலில் வெள்ளை நிறப் பந்தில் விளையாடவுள்ளோம். அதேபோல தற்போது உள்ளுர் பருவகாலப் போட்டிகள் சிவப்பு நிறப் பந்தில் நடைபெற்றுவருகின்றன. எனவே அது 4 நாட்கள் கொண்ட போட்டியாக இருப்பதால் பங்களாதேஷ் தொடருக்காக அறிவிக்கப்பட்ட குழாமில் இடம்பெற்ற வீரர்களை கழகங்களுக்காக விளையாட வேண்டாம் என அறிவித்தேன்.

வீரர்களுக்கான புதிய ஒழுக்க விதிமுறைகள்

வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் எதிர்காலத்தில் ஏற்படாது. யாருக்காவது பயிற்சிகளின் போது பாட்டு கேட்கவோ அல்லது பேஸ்புக் பார்க்கவோ விரும்பினால் பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டி ஏற்படும். கடந்த காலங்களில் அவர்கள் எவ்வாறு இருந்தது என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் தற்போது எனக்கு தேவை என்ன என்பது தொடர்பில் அவர்கள் நன்கு அறிவர். எனவே எதிர்காலத்தில் இதன் மாற்றத்தை நன்கு உணரலாம் எனத் தெரிவித்தார்.

உளவியலாளரை உபயோகிக்கும் ஹத்துருசிங்க

வீரர்களுக்கு மத்தியில் சிறந்த மனோநிலையை கட்டியெழுப்பும் வகையில் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்டி தண்டர் அணிகளுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கிய பிரிஸ்பேனைச் சேர்ந்த உளவியலாளர் வைத்தியர் பில் ஜொன்சியின் உதவியை இலங்கை அணிக்கு பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

என்னுடன் 4 வருடங்கள் இணைந்து பணியாற்றிய அவர், அவுஸ்திரேலிய ஒலிம்பிக் அணி மற்றும் பேஸ்போல் அணிக்காக சேவையாற்றியவர்.

 

 

இதன்படி, எதிர்வரும் 3ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து 10 நாட்கள் தங்கியிருந்து வீரர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கவுள்ளார். அதேபோல அவரின் உதவியை வருடத்திற்கு 4 தடவைகள் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணி தொடர்பில் ஹத்துருவின் நிலைப்பாடு

எனது முதல் சுற்றுப் பயணமாக பங்களாதேஷுக்கு இலங்கை அணியைக் கொண்டு செல்வது என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. அது மிகப் பெரிய சவாலாகவும் அமையவுள்ளது. ஏனெனில் எமது அணி திறமைக்கேற்ப சிறப்பாக இல்லை. ஆனால் அதுதொடர்பில் பேசுவதற்கு இது பொருத்தமான காலம் கிடையாது. ஊடகங்களுக்கு நல்லதை மாத்திரம் சொல்லக்கூடியவனாகவே நான் இருந்து வருகிறேன்.

அதேபோல, பங்களாதேஷ் அணி கடந்த 2 வருடங்களாக சொந்த மண்ணில் மிகவும் பலமிக்க அணியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதேபோல அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டுவரும் ஜிம்பாப்வே அணியும் இத்தொடரில் பங்கேற்பதும் சவால்தான். அத்துடன், எனக்கு கீழ் பணியாற்றிய ஹீத் ஸ்ட்ரீக் மற்றும் பங்களாதேஷ் அணியின் ஏனைய உதவி பயிற்றுவிப்பாளர்கள் மிகத் திறமையானவர்கள். எனவே இந்தத் தொடர் மிகவும் போட்டித்தன்மை மிக்க,  சவாலான தொடராக அமையும் என தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பயிற்சி முகாமில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளரான ருமேஷ் ரத்னாயக்க மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான திலான் சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததுடன், இன்றைய தினமும் இவ்விசேட பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ள இலங்கை அணி, முத்தரப்பு ஒரு நாள், 2 T-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.