Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமையை இழந்ததால் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுப்போனவர்கள் தான்

Featured Replies

  • ஒற்றுமையை இழந்ததால் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுப்போனவர்கள் தான்
ஒற்றுமையை இழந்ததால்  தமிழர்கள் தொடர்ந்தும்  தோற்றுப்போனவர்கள் தான்
 
 

ஒற்றுமையை இழந்ததால் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுப்போனவர்கள் தான்

 

தமி­ழர்­கள் ஒற்­று­மை­யா­க­வும் பலத்­து­ட­னும் இல்­லா­விட்­டால் அவர்­கள் ஒட்­டு­மொத்­த­மாக அழியும் நிலையே உரு­வா­கும். இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்­றார், அமைச்­சர் மனோ­க­ணே­சன். அவர் யதார்த்த நிலை­யைப் புரிந்து கொண்­டு­தான் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

இந்த அழ­கிய சிறிய நாட்­டில் சுமார் எழு­பது வீத­மா­ன­வர்­கள் சிங்­கள மொழி பேசு­கின்ற மக்­க­ளா­வர். சிறு­பான்மை இனத்­த­வர்­கள் அனை­வ­ரும் எஞ்­சிய முப்­பது வீதத்­தி­னுள் அடங்­கு­கின்­ற­னர். இவர்­க­ளில் இலங்­கைத் தமி­ழர்­கள், இந்­திய வம்­சா­வ­ழித் தமி­ழர்­கள், முஸ்­லிம் மக்­கள், மலா­யர், பறங்­கி­யர் எனப் பல இனத்­த­வர்­கள் அடங்­கு­கின்­ற­னர்.

இலங்­கைத்­த­மி­ழர்­கள் நாட்­டின் வடக்­கை­யும், கிழக்­கை­யும் தமது தாயக பூமி­யெ­னக் கூறு­கின்­ற­னர். திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­க­ளால்
கிழக்கு மாகாணம் தமி­ழர்­க­ளின் கைக­ளி­லி­ருந்து நழு­வி­விட்­டதை ஒப்­புக்­கொள்­ளத்­தான் வேண்­டும். வடக்கு மட்­டுமே தமி­ழர்­க­ளின் முழு ஆதிக்­கத்­தின் கீழ் காணப்­ப­டு­கின்­றது. இதற்­கும் இடை­யூறு ஏற்­ப­டுத்­து­கின்ற செயற்­பா­டு­கள் இடம்­பெ­றா­ம­லில்லை. தலை நக­ரான கொழும்­பி­லும் பெரு­ம­ளவு இலங்­கைத் தமி­ழர்­கள் செறிந்து வாழ்­கின்­ற­னர்.

பல்­வேறு வேறு­பா­டு­க­ளைக் கொண்­ட­வர்­களாக 
இலங்­கைத் தமி­ழர்­க­ளும் இந்­திய வம்­சா­வ­ளித் தமி­ழர்­களும்

இந்­திய வம்­சா­வ­ளித் தமி­ழர்­கள் மலை­ய­கத்­தைத் தமது வாழ்­வி­ட­மா­கக் கொண்­ட­வர்­கள். தலை­ந­க­ரான கொழும்பு உட்­பட நாட்­டின் ஏனைய பிர­தே­சங்­க­ளி­லும் பர­வ­லாக வாழ்­கின்­ற­னர். இனத்­தா­லும் மொழி­யா­லும் ஒன்­று­பட்­டுள்­ள­போ­தி­லும், இலங்­கைத் தமி­ழர்­க­ளும் இந்­திய வம்­சா­வ­ழித்­த­மி­ழர்­க­ளும் கலா­சா­ரம் மற்­றும் பழக்க வழக்­கங்­க­ளில் வேறு­பட்­டுக்­கா­ணப்­ப­டு­கின்­ற­னர்.

மொழி­யைப் பேசு­வ­தி­லும் கூட வேறு ­பாடு காணப்­ப­டு­கின்­றது. மலை­ய­கத் தமி­ழர்­கள் பல ஆண்­டு­க­ளாக இலங்­கை­யில் வாழ்­கின்­ற­போ­தி­லும், இந்­தி­யக் கலா­சா­ரத்தை மறந்து விட­வில்லை. அதை ஒட்­டி­ய­தா­கவே தமது வாழ்்க்கை முறை­களை அவர்கள் அமைத்­துக் கொண்­டுள்­ள­னர். ஏதோ­வொரு பல­மான சுவர் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்­கும், இந்­திய வம்­சா­வ­ளித்­த­மி­ழர்­க­ளுக்கு மிடையே எழுந்து நிற்­ப­தைக் காண முடி­கின்­றது. இதன் கார­ண­மா­கவே இந்த இரண்டு இனத்­த­வர்­க­ளும் ஒன்­றாக இணைந்து வாழ்­வ­தைக் காண முடி­ய­வில்லை.

இவர்­க­ளது அர­சி­யல் செயற்­பா­டு­க­ளும் வேறு­பட்ட கோணங்­களை மைய­மா­கக் கொண்­டுள்­ளன. அத்­து­டன் ஏரா­ள­மான தொழிற் சங்­கங்­கள் மலை­ய­கத்­தில் முளைத்து மக்­க­ளைப் பிள­வு­ப­டுத்தி வரு­கின்­றன.

இந்­திய மக்­க­ளது ஒற்­று­மையே
அவர்­கள் சுதந்­தி­ரம் பெற உத­வி­யது

இனக் கல­வ­ரங்­கள் ஏற்­ப­டும் வேளை­ க­ளில் மலை­ய­கத்­தில் வாழ்­கி்ன்ற இந்­திய வம்­சா­வ­ளித் தமி­ழர்­கள், இலங்­கைத்­த­மி­ழர்­கள் என்ற வேறு­பாடு காட்­டப்­ப­டு­வ­தில்லை. தமி­ழர்­கள் என்ற வகை­யில் இந்த இரண்டு இனத்­த­வர்­க­ளும் பாதிப்பை எதிர்­கொள்­கின்­ற­னர். வடக்­குக் கிழக்­கில் வாழ்­கின்ற தமி­ழர்­க­ளும் ஒற்­று­மை­யாக இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. அர­சி­யல் ரீதி­யாக மட்­டு­மல்­லாது பிர­தேச மற்­றும் சமூக ரீதி­யா­க­வும் அவர்­க­ளி­டையே பிள­வு­கள் காணப்­ப­டு­கின்­றன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நெருங்­கும் வேளை­யில் பிள­வு­கள் மேலும் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்­றன. ஆச­னப்­பங்­கீட்­டில் குழப்­பம், வேட்­பா­ளர் தெரி­வில் இழு­ப­றி­நிலை, ஒரே கட்­சிக்­குள் மோதல்­கள் என வெவ்­வேறு பரி­ணா­மங்­க­ளில் தமி­ழர்­கள் தமக்­குள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் எதிரி­க­ளாக மாறி நிற்­கின்­ற­னர். பதவி மோகம் இவர்­க­ளது கண்­களை மறைத்து நிற்­கின் றது. இன உணர்வு மழுங்கி வேத­னை­யைத் தரு­கின்­றது. ஒர் இனத்­தின் அழி­வுக்கு அந்த இனத்­தின் மத்­தி­யில் நில­வும் ஒற்­று­மை­யீ­னம் ஒன்றே போது­மா­னது. அண்­ணல் மகாத்­மா­காந்தி தலை­மை­யி­லான இந்­தி­யச் சுதந்­தி­ரப்­போர் வெற்­றி­ய­டைந்­த­மைக்கு அன்று இந்­திய மக்­க­ளிடம் இருந்த ஒற்­று­மையே கார­ண­மாக அமைந்­தது.

இன,மத மொழி வேறு­பா­டின்றி அனைத்து இந்­தி­யர்­க­ளும் அண்­ணல் காந்தி தலை­மை­யில் ஒன்று திரண்டு போரா­டி­ய­தால் அந்­நி­யர்­கள் இந்­தி­யாவை விட்டு வில­கிச் சென்­ற­னர். இந்­திய மக்­கள் சுதந்­தி­ரக் காற்­றைச்­சு­வா­சித்­த­னர். இந்த நாட்­டி­லும் தமி­ழர்­கள் தமது உரி­மை­க­ளுக்­காக ஆயு­த­மேந்­திப் போரா­டி­னார் கள். மிக நீண்­ட­கா­லம் இவர்­க­ளது போராட்­டம் நீடித்­தது. ஆனா­லும் இறு­தி­ யில் தோல்­வியே மிஞ்­சி­யது. தமி­ழர்­கள் ஒற்­று­மை­யாக ஒரே­ய­ணி­யில் இணைந்து போரா­டி­யி­ருந்­தால் இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்க மாட்­டாது.

தென்­னா­பி­ரிக்­கா­வில் தமது இன­மக்­க­ளின் ஆத­ரவு இல்­லாது நெல்­சன் மண்­டே­லா­வி­னால் தமது நாட்­டுக்­குச் சுதந்­தி­ரத்­தைப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்க முடி­யாது. ஒற்­று­மையே பலம் என்­பதை மேற்­கு­றிப்­பிட்ட சம்­ப­வங்­கள் எமக்கு எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

இலங்­கைத் தமிழ் மக்­கள்
வேறு­பா­டு­களை மறந்து 
ஒன்­றி­ணை­தல் வேண்­டும்

ஆகவே இலங்­கை­யில் வாழ்­கின்ற தமி­ழர்­க­ளா­கிய நாம் இனி­யா­வது எமக்­குள் நில­வும் வேறு­பா­டு­களை ஒதுக்கி வைத்­து­விட்டு ஒற்­று­மை­யு­டன் வாழப்­ப­ழ­கிக் கொள்ள வேண்­டும். அடம்­பன் கொடி­யும் திரண்­டால் மிடுக்கு என்­பார்­கள். இதற்கு ஏற்­றாற்­போன்று தமி­ழர்­கள் ஒன்­று­
தி­ரண்டு எமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டும்­போது வெற்றி நிச்­ச­ய­மா­ கக்­கிட்­டவே செய்­யும். இதை­வி­டுத்து ஒற்­றுமை இழந்­த­ நிலை காணப்­பட்­டால் முழு இன­முமே அழிவை நோக்­கிச் செல்ல நேரி­டும். தமி­ழர்­கள் பலம்­பெற்று விளங்­கி­னால் இன­வா­தி­கள் அடங்­கி­யி­ருக்­கவே செய்­வார்­கள்.

ஆனால் தமிழ் மக்களின் பல­வீ­னத்தை அவர்­கள் நன்­றா­கவே பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­ற­னர். கேட்­ப­தற்கு எவ­ரு­மே­யில்­லாத நாதி­யற்ற இனம் தமிழ் இனம் என அவர்­கள் நினைப்­ப­தால், அவர்களது இன­வா­தச் செயற்­பா­டு­க­ள் தடை­யின்­றித் தொடர்­கின்­றன.

தமி­ழர்­க­ளா­கிய நாம் இனி­யா­வது விழித்­துக்­கொள்ள வேண்­டும். எங்­க­ளைச் சுற்­றி­யுள்ள பகை­யைக் களைந்து எறி­வ­தற்கு ஒற்­று­மை­யு­டன் செயற்­பட வேண்­டும். இது வொன்றே எமது இனத்தை மீ்ட்சிப்­பா­தைக்கு இட்டுச்­செல்­லும்.

http://newuthayan.com/story/58650.html

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு இந்தியாவுக்கு ஓடிப் போய் கதைத்து அவர்களின் வழி நடக்காமல் நம்மவர்களுடன் இருந்து கதைக்க வேண்டும்.

ஒற்றுமை வேண்டுமென்றிருந்தால் கூட்டணியை அரசியல் கட்சியாக பதிவு செய்திருக்கலாமே?

தேர்தல் என்று வரும் போது மக்களின் முதிகிலேறி சவாரி செய்ய மட்டும் தான் ஒற்றுமை தேவைப்படுகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தேர்தல் ஞானம். நிலைத்து நிக்காது பாருங்கோ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.