Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள்

Featured Replies

  • தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள்
DSCF2442-750x400.jpg

தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள்

 

உண்டி சுருங்­கு­தல் பெண்டிர்க்கழகு’ எனும் பழ­மொழி எங்­கள் பெண்­க­ளைச் சுட்டியே அமைந்ததொன்று. ஆண்­க­ளுக்கு வழங்கி மீத­மாக, மிஞ்­சிப்­போ­கிற உண­வைத்­தான் வீட்­டி­லுள்ள பெண்­கள் உண்ப தென்பது தமிழ்ப் பாரம்­ப­ரிய, பண்­பா­டாக இருக்­கி­றது. இத­னால் வீட்­டுப் பெண்­க­ளுக்­குச் சரி­யான, நிறை­வான, திருப்­தி­ யான உணவு கிடைப்­ப­தில்லை. இதனை அடி­யொற்­றியே மேற்­படி பழ­மொழி வழக்­கி­ல் அமைந் ததா­கக் கரு­தப்­ப­டு­கி­றது.

ஆண்களும், பெண்களும் இணைந்த இந்­தச் சமூ­கத்­தில் எந்த விட­யத்திலும் பெண்­கள் இரண்­டாம் பட்­ச­மா­கவே கணிக்­கப்­பட்டு வரு­கின்­றார்­கள். குடும்­பத் திலோ, சமூ­கத்­திலோ பெண்­க­ளின் பங்கு காத்­தி­ர­மா­ன­தா­க­வும், ஆண்­களை விடக் கன­தி­யா­ன­தா­க­வும், பெறு­மதி மிக்­க­தா­க­வும் இருக்­கின்­றது. தாயாக, மனை­வி­யாக, சகோ­த­ரி­யாக இந்த உற­வு­க­ளுக்கு அப்­பால் தனி மனு­ஷியா­கப் பெண்­க­ளின் பங்­க­ளிப்பு ஆண்­களை விட மேலா­னது.

ஒரு குடும்­பத்­தில் குடும்­பத் தலை­வ­னாக, உழைப்­புத் தலை­வ­னா­கக் கண­வனோ ஓர் ஆணோ கரு­தப்­பட்­டா­லும், பெண்­க­ளின் மதிப்­பிட முடி­யாத உழைப்பு ஒரு­போ­துமே கணிப்­புக்கு வரு­வ­தில்லை. உடல் உழைப்பை வழங்­கும் ஆண்­க­ளை­விட, பின்­தூங்கி முன்­னெ­ழுந்து உழைக்­கும் பெண்களின் உழைப்பு பணக்­க­ணி­யத்­துக்கு வராத கார­ணத்­தி­னால் பெறு­ம­தி­யில்­லா­மல் போய்­விடு கிறது.

இந்­தப் பின்­ன­ணி­யில் கூலி­வேலை மற்றும், ஏனைய வேலை­க­ளுக்கு ஆண்­க­ளைப் போலவே வேலைக் குச் செல்­லும் பெண்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சம்பளத்­தின் அளவு எப்­ப­டி­யா­னது என்­பது வெளிப்­படை யானது. எத்­த­கைய உட­லு­ழைப்­பி­னைப் பெண்­கள் வழங்­கி­னா­லும், அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும் சம்­ப­ளத்­தின் அளவு ஆண்­கள் பெறும் சம்­ப­ளத்துடன் ஒப்பிடும் போது பெரி­ய­ அளவில் வேறு­பாடு கொண்டதாகவே உள்­ளது. ஆனால் மாற்றமுறும் சமூ­க, அர­சி­யல், பொரு­ளா­தார ரீதி­யான கார­ணங்­க­ளால் பெண்­க­ளைத் தலை­மை­யா­கக் கொண்ட குடும்­பங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

 

ஆண்­கள் இல்­லாத குடும்­பங்­க­ளில் பெண்­களே வேலை செய்து ஏனைய குடும்­ப உறுப்பினர்களைக் காப்­பாற்­றும் நிலை­யில், கந்­த­றுந்து வெட்­டி­யாய் வேலை அற்­றுச் சுற்­றும் ஆண்­க­ளுக்­கா­க­வும் பெண்­கள் வேலை செய்து உழைக்க ­வேண்­டிய சூழ்­நி­லை­யில் பெண்­கள் தொழில் செய்து தங்­க­ளை­யும் தங்­கள் குடும்­பத்­தை­யும் காப்­பாற்­றும் நிலை இன்று நிலவுகிறது.

இன்­றைய நிலவரத்தின்படி, பெண்­கள் பல்­வேறு தளங்­க­ளி­லும் தமது கல்­வி­ய­றிவு ஏனைய துறை­சார்ந்த பட்­ட­றி­வு­க­ளால் சமூ­கத்­தில் பல்­வேறு துறை­க­ளில் முன்­னேறி நிலைத்து நின்­றா­லும், முழு­மை­யான, ஒரு திருப்­தி­யான நிலையை பெண்­கள் இன்­ன­மும் அடைந்து விட­வில்லை. இந்த இரண்­டாம்­தர நில­மையை வைத்­துக்­கொண்டே பல­ரும் பெண்­க­ளின் உழைப்பை யும், நலன்­க­ளை­யும் சுரண்டி வரும் நிலை யைக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

பல்­வேறு உதா­ர­ணங்­களை உங்­கள் முன் வைக்­கா­மலே, சமூ­கத்­தில் உயர் நிலை­யி­லும் இல்­லா­மல், தாழ் நிலை­யி­லும் இல்­லா­மல் இடைப்­பட்ட நிலை­யில் எமது சமூ­கத்­தில் நட­மா­டும் தொழில் பார்க்­கும் பெண்­க­ளைப் பாருங்­கள். அதி­கம் படிக்­கா­மல் குறை­வா­க­வும் படிக்­கா­மல், 8,9,10, மற்றும் 11ஆம் வகுப் புக்­க­ளில், மிஞ்சி மிஞ்­சிப் போ­னால், க.பொ.த. உயர்­த­ரம்வரை படித்து அவற்­றில் முழு­ மை­யா­கச் சித்­தி­ய­டை­யா­ மல் பல்­வேறு விநோதப் பொருள் கள் விற்பனை நிலை யங்களி லும் (Fancy goods), மருந்­துக் கடை­க­ளி­லும், புட­வைக் கடை­க­ளி­லும் இது போன்­றி­ருக்­கும் இன்­னும் பல கடை­க­ளி­லும் பணி­பு­ரி­யும் பெண்­க­ளைப் பாருங்­கள்.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள சிறு பெட்­டிக் கடை­கள் முதல் பார்ப்­ப­தற்­குப் பிர­மாண்ட மாகத் தோற்­ற­ம­ளிக்­கும் புட­வைக்­க­டை­கள் வரை எத்­த­கைய நிலை­யில் பெண் பிள்­ளை­கள் வேலை செய்­கி­றார்­கள்? என்பதை எம்மால் கண்கூடாகக் காண முடிகிறது. வேலை செய்­தால் தான், தானும் சாப்­பிட்டு நோயா­ளி­யான தாயை­யும், இய­லாத தந்தையையும், ஊர்­சுற்­றும் அண்­ணன், தம்­பி­மா­ரை­யும் தாங்­கிக் கொள்­ள­வேண்டிய நிலையில் எத்­தனை பெண்­கள் வேலை செய்­கி­றார்­கள் என்­பது புரி­யும்.

அத்­தனை பெண்­க­ளுக்கும் தாம் பார்க்கும் வேலை­கள் திருப்­தியா­க, சரி­யா­ன பொரு­ளா­தார நலன்­கள் தருபவையாக அமை கின்ற னவா என்­ப­தைப் பற்­றிச் சிறிது ஆராய விரும்­பி­னோம். இந்த விடயம் குறித்து நாம் சந்தித்துப் பேசிய ஒரு சிலர் கூறிய கருத்­துக்­க­ளைக் கீழே தொகுத்­துத் தரு­கின்­றோம்.

யாழ்ப்­பாண நக­ருக்­குள் இருக்­கும் ஒரு பிர­பல புத்­தகசாலை அது. அதன் முன் வாயி­லில் நின்று தன்னை மொய்த்­துப் பிடித்­து­விட்ட வாடிக்­கை­யா­னர்­க­ளைச் சமா­ளித்து வியா­பா­ரம் செய்து கொண்­டி­ருந்த பெண்­பிள்ளை அவர். அந்த இடர்­பாட்­டுக்­குள் கிடைத்த சிறி­ய­தொரு இடை­வெ­ளிக்­குள் எங்­க­ளு­டன் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். பெயர் வித்­தியா. வயது 22. இடம் சங்­கானை. அவர் குறித்த தனிப்பட்ட விவ­ரங்­களை எடுத்தாயிற்று. தனது மனஆதங்­கத்தை, தான் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னையை அவர் இப்­ப­டிச் சொன்­னார், ‘‘எனக்கு 6.30க் குப் பிற­கு­தான் வேலை முடி­யி­றது. வீட்டை போற­துக்­குக் கடைசி பஸ்­ஸைத்­தான் என்­னாலை பிடிக்க முடி­யும். இரவு பஸ். அதிலை குடிச்­சுப்­போட்டு வாற ஆள்­க­ளுக்கு முகம் குடுக்­கே­லாமல் இருக்­குது. தைரி­யத்தை வர வைத்­துக் கொண்டு அவர்­க­ளைத் தள்ளி நிக்­கச் சொன்­னால், கெட்ட வார்த்­தை­க­ளாலை ஏசுகினம்’’ என்றார் வித்தியா.

உழைத்­துக் களைத்து வீடு திரும்­பும் வேளை யில் பெரும்பாலான நாள்களில் வித்­தியா இப்­படி ஏரா­ளம் கஷ்டங்­களை எதிர்­கொண்­டா­லும், இது ஒன்­றைத்­தான் எங்­க­ளுக்­குத் துணிந்து கூறு கிறார் என்பது தெரிந்­தது. அவ­ரது அன் றாட அவஸ்­தை­யாக அது மேலெ­ழுந்து நிற்­ப­தும் எங்­க­ளுக்­குப் புரிந்­தது.

புதிய சந்­தைக் கட்­ட­டத் தொகு­திக்­குள் புகுந்­தோம். அழகு சாத­னக் கடை ஒன்­றில் நின்ற அந்­தப் பெண் ஏதோ ஒரு அவஸ்­தைக்­குள் அகப்­பட்­டி­ருப்­பது புரிந்­தது. அவ­ரது முகம் அதை இனங்­காட்டியது. பெயர் விதுரா என்­றார். அவ­ரு­க் கு வயது 24. அல்­லைப்பிட்­டி­யைச் சேர்ந்­த­வர். ‘‘பாத்­ரூம் பிரச்­சினை­தான் இஞ்சை பெரும் பிரச்­சினை. இதுக்­குள்ள வேலை செய்­யிற எல்­லாப் பிள்­ளை­ய­ளுக்­கும் அது­தான் பெரிய பிரச்­சினை’’ என்­றார். நாங்­கள் உத­ய­னில் இருந்து வரு­கி­றோம் என்று எங்­களை அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்­டோம். ‘‘இந்­தப் பிரச்­சி­னையை உங்­க­ளுக்­குச் சொல்­லு­ற­தாலை தீர்வு கிடைக்­கும் என்ட நம்­பிக்­கை­யில சொல்­லு­றன்’’ என்று அவர் தொடர்ந்­தார்.
‘‘கீழை இருக்­கிற பாத்­ரூம் ஒண்­டுக்­கும் உத­வாத ஒண்­டாய்ப் போச்­சுது. அதைப் பற்றி உரிய ஆக்­கள் எவரும் அக்­க­றை எடுப்பதில்லை. இவ்­வ­ளவு நாளும் மேலை இருக்­கிற பாத்­ரூ­மைப் பாவிச்­ச­னாங்­கள். இப்ப மேலை திருத்த வேலை நடக்­கி­ற­தால, அங்க போக ஏலாது. எந்த ஒரு மாற்று வச­தி­யும் இல்லை. ஒவ்­வொரு நாளும் பெரிய கஷ்டம் இது’’
விதுரா மாத்­தி­ர­மன்றி அந்­தச் சந்­தைக் கட்­ட­டத் தொகு­திக்­குள் இருக்­கும் கடை­க­ளில் பணி புரி­யும் இவர்­போன்ற மேலும் சில பெண்­க­ளும் இந்­தக் கழிப்­ப­றைப் பிரச்­சினை­யைத் தான் முதன்­மைப்ப ­டுத்­திக் கூறி­னர் என்­ப­தை­யும் இங்கு குறிப்பிட்டுத் தானாக வேண் டும்.

மணிக்­கூட்­டுக் கடை­யில் மற்றொரு பெண்­பிள்­ளை­யைச் சந்­தித்­தோம். மயூரா அவ­ரு­டைய பெயர். 23 வயது. காரை­ நக­ரைச் சேர்ந்­த­வர். பெண்­க­ளுக்­குப் பெண்­க­ளாலதான் பிரச்­சினை. தாங்­கள் நல்ல பெயர் எடுக்­கி­ற­துக்­கா­கச் சக வேலை­யாள்­க­ளைப் பற்றி முத­லா­ளி­மா­ரி­டம் தவ­றாய்ச் சொல்­லு­றது. அடுத்­த­வ­ருயை தனிப்­பட்ட விஷ­யத்­தில தலை­யி­டு­றது என்று வேலைத்­த­ளத்­தில் பெண்­க­ளுக்கு இப்­ப­டி­யு­மொரு பிரச்­சினை இருப்­பதை அவர் வெளிப்படுத்தி வைத்தார்.

அடுத்­த­டுத்து இருந்த பான்சி கடை களுள் ஒன்றுக்குள் நுழைந்­தோம். மாதங்கி என்று தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திய அவர், மிக­வும் சிறிய பெண்­ணா­கத் தென்பட்­டார். வயது18 என்ற றிந்து திருப்­தி­ய­டைந்து கொண்­டோம். ‘‘ஆக்­க­ளுக்கு முன்­னால வைச்­சுப் பேசு­றது கஷ்ட­மாக் கிடக்­கும். நேரத்­துக்­குச் சாப்­பிட முடி­யிற இல்லை. முந்தி இன்­னொரு பிள்ளை இஞ்சை வேலை செய்­தது. இப்ப நான் தனி­யத்­தான் வேலை செய்­யி­றன். சாப்­பி­டுற நேரம் வாடிக்­கை­யா­ளர் வந்தா, அவை­யளைக் நல்லாய்க் கவ­னிக்­க­வே­ணும். இவை­ய­ளோடை வேலை செய்­யி­றது கஷ்டமாய் இருக்கு. சம்­ப­ள­மும் குறைவு. இதை­விட, நல்லாய்ப் படிச்­சி­ருந்தா நல்­ல­நி­லை­மைக்கு வந்­தி­ருக்­க­லாம் எண்டு இப்­ப­தான் நினைக் கிறன்’’ என்­றார் மாதங்கி.

மருந்தகம் ஒன்­றுக்­குள் நுழைந்­தோம். அங்கு வேலை செய்யும் சாம்­பவி என்ற பெண்பிள்ளையைச் சந்தித்தப் பேச முடிந்தது . முத­லாளி என எண்­ணும்­ப­டி­யா­ன­ ஒருவரும் அங்கே நின்­றார். தனக்கு 28வய­தெனவும், தான் புங்­கு­டு­ தீ­வைச் சேர்ந்­த­வர் என்­றும் சாம்­பவி சொன்­னார். ‘‘வேலை முடிய நேரம் செல்­லு­ற­தும், சில வேளை­யில பஸ்ஸை ‘மிஸ்’ பண்­ணு­ற­தும் அதாலை ‘லேற்றா’ வீட்டை போற­தும், நெடு­க­லும் எனக்­கி­ருக்­கிற பிரச்­சனைதான்’’ என்­றார்.

புட­வைக்கடை­யில் வேலை செய்­து­கொண்­டி­ருந்­தார் ஒரு பெண். அவ­ரது பெயர் அமுதா. வயது34. ‘‘பஸ்­ஸில போகேக்க ஆம்­பி­ளை­யள் சேட்­டை­யள் செய்­யி­னம். வேலைக்கு வந்து போறது கஷ்­ட­மாய் இருக்கு’’ என்­றார். அவ­ர் வேலை செய்த கடைக்கு அரு­கி­லி­ருந்த கடை­யில் வேலை செய்யும் பெண்ணொருவர் தன்­னைச் சாந்தி என்று அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்­டார். ‘‘ஓய்வு இல்­லா­மல் வேலை பாக்­கி­ற­தால ஒரே களைப்பாய் இருக்­குது. வாற வாடிக்­கை­யா­ள­ர்களைச் சரி­யாக் கவ­னிக்­கே­லாமை இருக்­கும். பஸ் போய்விடும் எண்ட பயத்­திலை அவ­சர அவ­ச­ர­மாய் பஸ்­சுக்கு ஓடு­ற­து­தான் நெடுக இருக்­கிற பிரச்­சினை’’ இவர்­கள் இரு­வர் மாத்­தி­ர­மன்றி இங்­குள்ள பெரும்­பா­லான பெண்­க­ளின் பேச்­சுக்­கள் பஸ் பய­ணத்­தின்­போது ஏற்­ப­டும் பிரச்­சி­னை­கள் குறித்தும், முத­லாளி மார் இவர்­களை வைத்து அதிக நேரம் வேலை வாங்­கு­வ­து குறித்த அவர்க ளது மன ஆதங்கத்தையுமே உணர்த் தின.

ஆனால், பாமி­னி­யின் பிரச்­சினை இவர்­க­ளில் இருந்து சற்று வேறு­பட்­டுத்­தான் இருந்­தது. ‘‘ நான் வேலை செய்யும் கடை ஒரு சிறிய கடை எண்ட படி­யால நான் ஒரு ஆள்தான் வேலைக்கு நிக்­கி­றன். வியா­பா­ரம் இல்­லாத நேரத்­தில எதை­யா­வது யோசிச்­சுக் கொண்டு தனி­மை­யிலை இருக்­கி­றன்’’ என்­றார். இறு­தி­யா­கச் சந்­தித்த பொன்­மதி மாத்­தி­ரம் இப்­ப­டிச் சொன்­னார். ‘‘நேரத்­துக்கு சாப்­பி­டே­லாது, செய்­யிற வேலைக்கு ஏற்ற சம்­ப­ளம் கிடைக்­கி­றேல்லை, சம்­ப­ளம் சரி­யான குறைவு.
வீட்­டி­லை­யும் நிறை­யப் பிரச்­சினை கள். எல்­லாத்­தை­யும் சமா­ளிக்க வேண்­டி­யி­ருக்கு. சம்­ப­ளத்­தைக் கூட்­டித் தரச் சொன்­னால், வேலையை விட்டு நிப்­பாட்­டிப் போடு­வி­னம் எண்ட பயத்­திலை பேசா­ம­லி­ருக்­கி­றன்’’ என்­றார் பொன்மதி. இவ்விதம் வியாபார நிலையங்களில் உதவியாளர்களாக, விற்பனையாளர்களாகத் தொழில் பார்க்கும் அனைத்­துப் பெண்­க­ளுக்­கும் இத்தகையோர் போன்ற பிரச்­சி­னை­கள் ஏரா­ளம் இருப்­பது உண்­மை­தான். ஆனால் அவர்­க­ளில் சிலரே துணிந்து தாம் எதிர்சொகொள்ளும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து உரையாடுகிறார்கள். மற்றையோர் தமது நிலைமை குறித்து உண் மையை வெளிப்படுத்த வெட்கம் காரணமாகத் தயங்குகின்றனர் என்பதை எம்மால் தெளிவாக உணரமுடிகிறது.

https://newuthayan.com/story/59325.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.