Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது

Featured Replies

41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது

 

 
Chennaibookfair2016

புத்தக கண்காட்சி   -  கோப்புப் படம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி துவங்க உள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தகக் கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் பபாசி புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வரை அமைக்கப்படுகிறது.

இதில் 450 பதிப்பாளர்கள் வரை ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் புத்தக திருவிழா 10 நாட்கள் நடக்கும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் கொண்டாட்டமாக இருக்கும்.

தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்கள் பங்கேற்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் 350 தமிழ் புத்தக பதிப்பகங்களும், 153 ஆங்கிலப் புத்தக பதிப்பகத்தினரும் தங்கள் புத்தகங்களை அரங்குகளில் விற்பனைக்கு வைப்பார்கள்.

கடந்த ஆண்டு கண்காட்சி நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, தினம் வரும் வாசகர்களின் வசதிக்காக 50 மற்றும் 100 ரூபாய்க்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு நுழைவுக்கட்டணம் அரங்குகள் மற்ற விபரங்கள் பற்றி தெரிவிப்பதற்கு வரும் ஜன.5 அன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22365753.ece

  • தொடங்கியவர்

சென்னை புத்தகக் கண்காட்சி: 15 தகவல்கள்

9sepmavanbook10MAFAIRMDUjpg

புத்தக கண்காட்சி   -  கோப்புப் படம்

41-வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது. 706 அரங்குகளுடன் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் 13 நாட்கள் நடக்க உள்ளது.

சென்னை புத்தகக் காட்சி குறித்த 15 தகவல்கள்:

* தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) நடைபெறுகிறது.

* வரும் ஜனவரி 10 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். இதில் தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, எம்.ஏ.எம்.ஆர். முத்தையா உள்ளிட்டோர் விருந்தினர்களாக பங்கேற்கும் விழாவில் பள்ளிக் குழந்தைகள் திரளாக கலந்துகொள்கின்றனர்.

* கண்காட்சி தொடங்கும் முன் ஜனவரி 8 அன்று கண்காட்சி அரங்கில் 2000 பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் ’சென்னை வாசிக்கிறது’ நிகழ்வு நடைபெற உள்ளது. மறுநாள் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வரை அமைக்கப்படுகிறது.

* தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டிமீடியா அரங்குகள் 22, பொது அரங்கு 24 என 708 அரங்குகளுடன் கண்காட்சி தொடங்குகிறது. தமிழ் 236, ஆங்கிலம் 102, மல்டிமீடியா 14, பொதுவானவர்கள் 24 என 376 பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

* சாகித்ய அகதாமி, யூனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேசிய புத்தக நிறுவனம், செம்மொழி தமிழாய்வு நிறுவனம், பப்ளிகேஷன் டிவிசன், உ.வெ.சா. நூல் நிலையம், தஞ்சை சர்ஸ்வதி மஹால், தமிழ்நாடு பாட நூல் நிறுவனம், காந்தியன் லிட்டரேசன் சொசைட்டி போன்ற அமைப்புகளும் இந்த புத்தகக் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

* கண்காட்சி அரங்கில் வாசகர்களைக் கவரும் வண்ணம் பிரமாண்ட வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் திறந்து வைக்கிறார்.

* பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும் நடத்தப்பட உள்ளன.

* இளம் குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களை ஊக்குவிக்கும் வண்ணம் திரையிட புத்தகக் கண்காட்சி வளாகத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திரைத்துறை சார்ந்த முன்னணி இயக்குனர்கள், கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

* வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கு என தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கண்காட்சி நடக்கும் அத்தனை நாட்களும் முன்னணி எழுத்தாளர்கள் வாசகர்களுடன் உரையாட உள்ளனர். இதில் கலந்துகொள்ள பல எழுத்தாளர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

* பாரம்பரிய இசையைப் போற்றும் வகையில் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் 13 நாட்களும் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சி நடக்கும் அனைத்து நாட்களும் தலைசிறந்த ஆளுமைகள், சொற்பொழிவாளர்கள், திரைத்துறையைச்சார்ந்தவர்கள், கவிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

* புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொண்டு பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு விருது வழங்குகிறார்.

* வாசகர்கள் மருத்துவ வசதிக்காக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. வாசகர்கள் பணமெடுக்க வசதியாக 2 ஏடிஎம் இயந்திரங்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வசதிக்காக 15 இடங்களில் ஸ்வைப் மெஷின் வசதி செய்யப்பட்டுள்ளது.

* வைஃபை வசதி, செல்போன் சார்ஜர் வசதி, வாசகர்கள் உணவருந்த தேவையான உணவகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர்களை வரவேற்க ரைட்டர் பாஸ் என தனியாக வழங்கப்படுகிறது.

* நுழைவுக்கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டைப்போலவே ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்க்காக 5 லட்சம் இலவச அனுமதி சீட்டுகள் தயாராக உள்ளன.

* புத்தகக் கண்காட்சி தினமும் மதியம் 2.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் நடைபெறும். கண்காட்சி முழு ஏற்பாடுகளையும் பபாசி குழுவே செய்து வருகிறது என அதன் தலைவர் வயிரவன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாச்சலம் ஆகியோர் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22374966.ece?homepage=true

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா ஐரோப்பாவிலையிருந்து கன இலக்கியவாதிகள் போயிருப்பார்கள். :rolleyes:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சென்னை புத்தகக் காட்சி: பெண் வாழ்வைப் பேசும் புத்தகங்கள்

 

 
book%20fair

படம்: ஆர். ரவீந்திரன்   -  THE HINDU

ர் திருவிழாவைப் போல் மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது சென்னைப் புத்தகக் காட்சி. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களும் புத்தகத் திருவிழாக்களுக்கு வந்தால் புத்தகங்களின் முக்கியத்துவத்தையும் வாசிப்பின் மகத்துவத்தையும் உணர்த்திவிடுகின்றன இங்கு பரவிக் கிடக்கும் கடைகளும் கடைகளை நிறைக்கும் புத்தகங்களும்.

தமிழுக்கு 428

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி 40 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. 41-வது புத்தகக் காட்சி, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கி வரும் 22-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இங்கு 428 தமிழ்ப் புத்தக அரங்குகள், 234 ஆங்கிலப் புத்தக அரங்குகள், 24 பொதுக் கடைகள், 22 மல்டிமீடியா கடைகள் என மொத்தம் 706 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகக் காட்சியில் இலக்கியம், சமூகம், பெண்ணியம், குழந்தை வளர்ப்பு, ஆன்மிகம், அரசியல், சாதியம், வரலாறு, சுற்றுச்சூழல், சினிமா, கல்வி உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் புத்தகக் காட்சியில் அதிக அளவு விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் பெண்கள் சார்ந்த புத்தகங்களுக்குத் தனியிடம் உண்டு. இந்த ஆண்டும் பல்வேறு பதிப்பகங்களின் சார்பில் பெண்கள் சார்ந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

தமிழ்ப் பண்பாட்டில் பெண்

மூத்த எழுத்தாளர் அம்பை எழுதிய ‘உடல் எனும் வெளி’ நூலைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொன்மை வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டில் பெண்கள் எப்படிப் பார்க்கப்பட்டுள்ளனர், பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சிலும் மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு அணுகப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. விலை ரூ.140.

இஸ்மத் சுக்தாய் படைப்புகள்

எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் இரண்டு புத்தகங்கள் எதிர் வெளியீடு பதிப்பில் இந்தப் புத்தகக் காட்சியில் இடம்பிடித்துள்ளன. ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’ புத்தகம் (விலை ரூ.400) இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவரான இஸ்மத் சுக்தாய் போராட்டங்களுடன் கழித்த தன் இளமைக்காலம் குறித்தும் அவரது வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் விளக்குவதாகவும் உள்ளது. இந்தப் புத்தகத்தை சசிகலா பாபு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஜி. விஜயபத்மா மொழிபெயர்த்துள்ள ‘இஸ்மத் சுக்தாய் கதைகள்’ புத்தகம் (விலை ரூ.500), இஸ்மத் சுக்தாயின் முக்கியமான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

அரசியல், ஊடகம், நாட்டார் வழக்காற்றியல்

காலச்சுவடு பதிப்பகம், பெண்கள் தொடர்பாக மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து மூத்த எழுத்தாளர் வாஸந்தி எழுதிய ‘ஜெயலலிதா: மனமும் மாயையும்’ புத்தகம் (விலை ரூ.195), ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்வையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. மதவாத சக்திகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் எழுதியவற்றை அவருடைய நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான சந்தன் கெளடா தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ள கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது நவ்யானா பதிப்பகம். அதை ‘கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்’ (விலை ரூ.150) என்ற தலைப்பில் பொன். தனசேகரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

வரலாற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள் எழுதியுள்ள ‘சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு’ (காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.225) என்ற புத்தகம் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் மூலப் பகுதியில் இருந்து விலகிச் செல்லும் நாட்டார் வழக்காற்றியல் சம்பவங்களை மையப்படுத்துகிறது.

கவிதையின் பாதையில்

மைத்ரி புக்ஸ் வெளியீட்டில் வந்திருக்கும் ‘கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்’ (விலை ரூ.140), தென்னிந்தியாவைச் சேர்ந்த 17 தலித் பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மூல மொழிகள் மற்றும் ஆங்கிலம் வழி வ.கீதா, சுகுமாரன், க.மாதவ், பிரேமா ரேவதி ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சாதியத்தை எதிர்க்கும் வலுவான குரல்களில் தலித் பெண்ணியக் குரல் முக்கியமானது. வீட்டிலும் சமூகத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் குரலாகவும் இது வெளிப்படுகிறது என்பதை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் உணர்த்துகின்றன.

அணங்கு பெண்ணியப் பதிப்பகம் சார்பில் வெளியாகியிருக்கிறது மாலதி மைத்ரியின், ‘முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை’ (கவிதைகள், விலை ரூ.90) புத்தகம். பின்காலனிய நிலத்தின் பெண்ணுடல்களின் மொழியைப் பிரதியெடுக்கும் கவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. பழைய உலகிலிருந்து வெளியேறிய பெண் உடலைக் கலைத்து அடுக்கும் கவிதைகள் இவை.

எத்தனையோ நவீன மாற்றங்களுக்குப் பிறகும் இரண்டாம்பட்சமாக நடத்தப்பட்டுவரும் பெண்கள் தங்கள்மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக் கயிறுகளை அறுத்தெறியும்வரை பேனா என்னும் கூர்வாளால் அவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதைத்தான் இந்தப் புத்தகங்கள் உணர்த்துகின்றன.

http://tamil.thehindu.com/society/women/article22436350.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.