Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரும் வாயை திறக்க கூடாது! குடும்பத்தினருக்கு சசி உத்தரவு

Featured Replies

யாரும் வாயை திறக்க கூடாது!
குடும்பத்தினருக்கு சசி உத்தரவு
 
 
 

'தினகரன் தவிர, குடும்பத்தில் உள்ள யாரும் வாயை திறக்கக் கூடாது' என, சிறையில் இருந்து, சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் மவுனமாகி விட்டனர்.

 

A.D.M.K,Sasikala,அ.தி.மு.க,சசிகலா

இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது:ஜெ., மரணத்திற்கு பின், அ.தி.மு.க.,வில் பல சம்பவங்கள் நடந்து விட்டன. அதேபோல், சசிகலா குடும்பத்தினரும், வருமான வரி சோதனை உள்ளிட்ட, பல நெருக்கடிகளை சந்தித்து விட்டனர்.

இதற்கு, குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டுள்ள உரசல் தான் காரணம் என்பதை, சசிகலா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.தினகரன், திவாகரன், விவேக், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் என, பலரும் பேட்டி அளிப்பதும், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதும், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
மேலும், குடும்ப பிரச்னையையும், அவர்கள் வெளியில் விமர்சிப்பதால், மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில், ஜெயா, 'டிவி'யில், அமைச்சர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதும், தி.மு.க.,வினரின்


பேட்டியை வெளியிட்டதும், சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. நடராஜனை பார்ப்பதற்காக, 'பரோலில்' வந்த சசிகலா, தன் குடும்பத்தாரிடம் பேசியதைத் தொடர்ந்து, அவர்கள் வெளியில் வாய் திறப்பது குறைந்தது.சென்னை, ஆர்.கே.நகர்
தேர்தலுக்கு முன், ஜெ., மருத்துவமனையில், சிகிச்சை பெறும் வீடியோவை, தினகரன் ஆதரவாளர் வெளியிட்டதற்கு, இளவரசி மகள், கிருஷ்ண பிரியா, கடும் கண்டனம் தெரிவித்தார்; தினகரனையும் கடுமையாக சாடினார்.

இது, தினகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆர்.கே.நகர் வெற்றிக்கு பின், சிறைக்கு சென்று, சசிகலாவை சந்தித்தார். வெளியே வந்த தினகரன், 'சசிகலா மவுன விரதம் இருக்கிறார்; ஜன., இறுதி வரை, அவர் மவுன விரதத்தை தொடர்வார்; கிருஷ்ணபிரியாவின் பேட்டி, ஜெ., மீதுள்ள அன்பால் கூறியது' என்றார்.

ஆனால், தினகரன் மூலமாகவும், தன்னுடைய வழக்கறிஞர்கள் வாயிலாகவும், குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும், சிறையில் இருந்தபடியே, சில உத்தரவுகளை, சசிகலா பிறப்பித்துள்ளார்.அதன் விபரம்:தினகரன், தவிர மற்றவர்கள், எந்த சூழலிலும் பேட்டி கொடுக்கக் கூடாது.குறிப்பாக, திவாகரன், நடராஜன், விவேக் போன்றோர், செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது.

திவாகரன் மகன் உட்பட யாரும், சமூக வலைதளங்களில், தங்கள் கருத்தையும், மற்றவர் கருத்துக்கான பதிலையும் வெளியிடக் கூடாது. வருமான வரி சோதனை, போலீசார் வழக்கு, சொத்து பிரச்னை என,

எதுவானாலும், வழக்கறிஞர் வாயிலாக, நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தும், மத்திய அரசுக்கு சவால் விடும் வகையிலும் பேசக் கூடாது. வழக்கு விவகாரங்களுக்கு, எவ்வளவு செலவானாலும், கட்சி சாராத, திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும்.

ஜெயா, 'டிவி'யில் மத்திய, மாநில அரசுகள், அமைச்சர்களுக்கு எதிரான செய்திகளை குறைக்க வேண்டும். அவர்களை சீண்டும் வகையில், செய்தி வெளியிட வேண்டாம். மிக விரைவில், நான் வெளியே வருவேன். அதுவரை, ஆட்சி நம்மிடம் இல்லா விட்டாலும், கட்சியை தக்கவைக்கவும்.ஆட்சியை இழந்தால் அல்லது பறிக்கப்பட்டால், பழனிசாமி, பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் விலகுவர். 'நான் வெளியே வந்ததும், கட்சியை தக்கவைக்க, தேவையான நடவடிக்கை எடுப்பேன்' என, சசிகலா கூறி உள்ளார்.இதை ஏற்று, சசி குடும்பத்தினர் அனைவரும், அமைதி காத்து வருகின்றனர்.- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1933991

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.