Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டப்பேரவையில் தனி ஒருவராக அமர்ந்திருக்கும் தினகரன்!

Featured Replies

சட்டப்பேரவையில் தனி ஒருவராக அமர்ந்திருக்கும் தினகரன்!

 
 
Chennai: 

சென்னை தலைமைச் செயலகத்தில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்றைய சட்டப்பேரவையில், இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பின், டி.டி.வி. தினகரன் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், தமிழக ஆளுநராகப் பதவியேற்றப்பின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இது. 

தினகரன்
 

 

தினகரன் சட்டப்பேரவைக்கு வந்தபோது வெளியே அவரது தொண்டர்கள் ’வருங்கால முதல்வர் நாளைமுதல்வர் வாழ்க’ என்று கோஷங்கள் எழுப்பினர். நான்காம் கேட் வழியாக தினகரன் உள்ளே சென்றார். அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ   ரத்தனசபாபதி மற்றும்  விருத்தாச்சலம் தொகுதி எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோர் அருகில் தினகரன் அமர்ந்தார். திமுகாவை சேர்ந்த நேரு தினகரனுக்கு வாழ்த்து கூறினார். தினகரன் 148வது சீட்டில் அமர்ந்து கொண்டார்.  
 

தினகரன்

தினகரன் ஆதரவு  முன்னாள் எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. தங்கதமிழ்செல்வன் சட்டப்பேரவை காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படாததால் எதிர்கட்சி வரிசையில் தினகரன் தனி ஒருவராக அமர்ந்திருந்தார். 

https://www.vikatan.com/news/tamilnadu/113000-dinakarans-first-tamilnadus-legislative-meet.html

  • தொடங்கியவர்

சட்டப்பேரவையில் தனி ஒருவராக அமர்ந்திருக்கும் தினகரன்!

தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் டி.டி.வி.தினகரன். அ.தி.மு.க கட்சியும் இரட்டை இலைச் சின்னமும் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டாலும், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற முடியவில்லை என்ற வருத்தம் இவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். இந்தச் சூழலில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராகத் தொண்டர்கள் புடைசூழ சட்டப்பேரவைக்குத் தினகரன் வருகை தந்தது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கும் அமைச்சர்களுக்கும் எரிச்சலூட்டியது என்கிறது கட்சி வட்டாரம்.

  • தொடங்கியவர்

 

தமிழக சட்டசபை: முதல் நாளில் தினகரன் செய்தது என்ன தெரியுமா ?

ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ஏற்று கொண்டார். இன்று அவர் முதன் முதலாக சட்டசபை கூட்டத்துக்கு பங்கேற்க வந்தார். சென்னை, சட்டசபை வளாகத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரனும் சந்தித்துக்கொண்டனர். தினகரனுக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் கை குலுக்கி வாழ்த்தும் தெரிவித்தனர்.

  • தொடங்கியவர்

`என்னைப் பேசவிடவில்லை' - பேரவையில் தினகரனின் முதல் வெளிநடப்பு

 
 

''என் மீதான புகார்குறித்துப் பேச அனுமதியளிக்கப்படாததால் வெளிநடப்பு செய்தேன்'' என்று சுயேச்சை எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

b7c1fe06-7be8-4b7a-942e-00f6afa1b501_144

 

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர். இந்தநிலையில், பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், `தி.மு.க-வுடன் கூட்டணி என்று என்மீது குற்றம்சாட்டினர். என் மீதான குற்றச்சாட்டுக்கு நான் பதிலளிக்க அனுமதி கேட்டபோது, அனுமதி மறுத்தனர். அமைச்சர் தங்கமணி, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து பேசியதற்கும் பதில் சொல்ல அனுமதி கேட்டேன். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தேன்' என்று தெரிவித்தார். 

https://www.vikatan.com/news/tamilnadu/113141-ttvdinakaran-walkout-from-tn-assmbly.html

  • தொடங்கியவர்

தமிழக சட்டசபை: முதல்வர் எடப்பாடியை கிண்டலடித்து டி.டி.வி தினகரன் !

இன்று சட்டசபையில் சிறுது தாமதமாக வந்தார் தினகரன். சிரித்த முகமாக எப்போதும் காணப்படும் தினகரன் இன்று கொஞ்சம் கோபத்துடன் காணப்பட்டார். தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் தினகரன் பேச அனுமதி அளித்தார் ஆனால் சபாநாயகர் முறுத்தார் அதை தொடர்ந்து வெளிநடப்பு செய்தார் தினகரன் அவரை தொடர்ந்து ஸ்டாலினும் வெளிநடப்பு செய்தார். வெளிவந்த தினகரன் முதலமைச்சர் பழனிசாமியை கிண்டலடித்தார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.