Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் கேப்டனாகக் களமிறங்கப்போகும் மேத்யூஸ்... தோல்வியின் பிடியிலிருந்து மீளுமா இலங்கை!

Featured Replies

மீண்டும் கேப்டனாகக் களமிறங்கப்போகும் மேத்யூஸ்... தோல்வியின் பிடியிலிருந்து மீளுமா இலங்கை!

 
 

Angelo Mathews

இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த ஓர் ஆண்டாகவே தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மெட்களிலும் தோல்வி மேல் தோல்வி. விளைவு, தொடர்ச்சியாக கேப்டனை மாற்றி, புதுப்புது உத்திகளைக் கையாண்டுவருகிறது அணி நிர்வாகம். ஆனால், எந்த உத்திக்கும் பழைய ரிசல்ட் மட்டும்தான் கிடைக்கிறது. இந்நிலையில், எல்லாம் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணி,  ஒருநாள் தொடரில் மண்ணைக் கவ்வியவுடன், அணியின் கேப்டனாக இருந்த மேத்யூஸ் பதவி விலகினார். அதன் பின்னர், உபுல் தரங்கா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது, பெரேரா கேப்டனாக உள்ளார். ஆனால் இலங்கை, வெற்றியை மட்டும் எட்டியபாடில்லை. 

 

 இக்கட்டான  இந்தச் சூழ்நிலையில்தான், புதிய பயிற்சியாளராக சந்திரிகா ஹதுருசிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, அணியின் கேப்டனாக ஒருவர் நியமிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு நடக்க உள்ள உலகக்கோப்பையில் அவரே அந்தப் பதவியில் தொடர வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அது, மேத்யூஸாக இருக்க வேண்டுமென்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். மேத்யூஸும், தான் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கத் தயார் என்று கூறியுள்ளதாகத் தகவல். எனவே, சீக்கிரமே இலங்கை அணியை மேத்யூஸ் லீட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

https://www.vikatan.com/news/sports/112989-sri-lanka-have-ended-the-experiment-with-thisara-perera-as-their-limitedovers-captain.html

  • தொடங்கியவர்

அணித் தலைவராகவுள்ள மெதிவ்ஸ் உடற்தகுதி சோதனையில் தேர்வு

angelo mathews
 

ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (07) நடைபெற்ற உடற்தகுதி சோதனையை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதாக ThePapare.com க்கு நம்பகமான வகையில் தெரியவருகிறது.

டிசம்பர் மாதம் இந்தோரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது T-20 போட்டியின்போது பின்தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் தற்பொழுது சுகம்பெற்றுள்ளார்.  

 

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஐ.சி.சி. உலகக் கிண்ண போட்டி வரை உடற்தகுதியுடன் இருப்பதை கருத்தில் கொண்டு காயங்களை தவிர்ப்பதற்காக மெதிவ்ஸ் மீண்டும் பந்து வீசாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன.  

அவர் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணிக்கு மீண்டும் ஒருமுறை தலைவராக நாளை (ஜனவரி 9) நியமிக்கப்படுவார் என நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதேபோன்று அவர் அடுத்த உலகக் கிண்ணம் வரை இலங்கை அணிக்கு தலைவராக செயற்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

ஜிம்பாப்வேயுடனான ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இலங்கை தோற்றதை அடுத்து மெதிவ்ஸ் கடந்த ஜூலை மாதம் மூன்று வகை கிரிக்கெட்டிற்கான இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். அவர் இதுவரை 98 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைமை வகித்துள்ளார். அதில் அணி 47 போட்டிகளில் வென்றுள்ளதுடன் 45 போட்டிகளில் தோற்றுள்ளது.  

மெதிவ்ஸின் ராஜினாமாவை அடுத்து இலங்கை ஒரு நாள் அணிக்கு சரியான தலைமை இல்லாமல் போனதால் உபுல் தரங்க, சாமர கபுகெதர, லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா என நான்கு வீரர்கள் மாறி மாறி தலைமை வகித்தனர்.  

பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணியும் பங்கேற்கின்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி வரும் 13ஆம் திகதி நாட்டில் இருந்து பயணமாகவுள்ளது. இந்த முத்தரப்பு தொடரை அடுத்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு T-20 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன.  

 

மெதிவ்ஸ் தலைவராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் அவர் மூவர் கொண்ட தேர்வுக் குழுவில் ஒருவராக இடம்பெறுவார். இதில் புதிய தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோரும் அடங்குகின்றனர்.  

“சுற்றுப்பயணத்தின்போது இறுதி பதினொரு வீரரை அவரால் (ஹதுருசிங்க) தேர்வு செய்ய முடியும். அணியின் முகாமையாளர் மற்றும் அணித் தலைவரும் சக தெரிவாளர்களாக இருப்பார்கள்” என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.    

1973 இலங்கை விளையாட்டு சட்டத்தில் பயிற்சியாளருக்கு தேசிய தெரிவாளராக செயற்பட அனுமதி இல்லை. என்றபோதும் இந்த மாற்றத்திற்கு நேற்றைய சிறப்பு பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தேசிய தேர்வுக் குழுவால் குழாம் தேர்வுசெய்யப்படும்போது தலைமை பயிற்சியாளருக்கு தீர்மானம் எடுக்க அனுமதி இல்லை.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மீண்டும் தலைவரானார் மெத்தியூஸ்

 

 

 

இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

angelo-mathews.jpg

அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 அணிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அணித் தலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/29136

  • தொடங்கியவர்

அணித் தலைமையை மீண்டும் ஏற்றுக்கொண்டமைக்கான காரணத்தை பகிர்ந்தார் மெத்தியூஸ்

 

 

 

ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான இலங்கை அணிக்கு அஞ்­சலோ மெத்­தியூஸ் மீண்டும் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

mathews.jpg

இந்தப் பத­வியும் நிரந்­த­ரமா என்று கேட்­ட­தற்கு, இனி எந்த மாற்­றமும் தலைமைப் பத­வியில் நேராது என தேர்­வுக்­குழுத் தலை­வரும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவரும் உறு­தி­யாக தெரி­வித்­து­விட்ட னர்.

இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த ஓர் ஆண்­டா­கவே தொடர் சரிவைச் சந்­தித்­து­வ­ரு­கி­றது. 

டெஸ்ட், ஒருநாள், இரு­ப­துக்கு என அனைத்து வகைக் கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் தோல்­விக்கு மேல் தோல்வி. விளைவு, தொடர்ச்­சி­யாக அணித் தலை­வரை மாற்றி, புதுப்­புது உத்­தி­களைக் கையாண்­டு­வந்­தது இலங்கைக் கிரிக்கெட் நிர்­வாகம். 

ஆனால், எந்த உத்­திக்கும் பலன் கிடைத்­த­பா­டில்லை.அதே தோல்­வி­களைத் தான் சந்­தித்­தது. இந்­நி­லையில், எல்லாம் ஆரம்­பித்த இடத்­தி­லேயே வந்து நிற்­கி­றது இலங்கை கிரிக்கெட் நிறு­வனம். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிம்­பாப்வே அணிக்கு எதி­ராக இலங்கை அணி,  ஒருநாள் தொடரில் மண்ணைக் கௌவி­ய­வுடன், அணியின் தலை­வ­ரா­க­வி­ருந்த அஞ்­சலோ மெத்­தியூஸ் பதவி வில­கினார். 

அதன் பின்னர், உபுல் தரங்க அணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார். இறு­தி­யாக, திஸர பெரேரா தலை­வ­ராக்­கப்­பட்டார். ஆனால் இலங்கை, வெற்­றியை மட்டும் எட்­டி­ய­பா­டில்லை. 

 இக்­கட்­டான  இந்தச் சூழ்­நி­லை­யில்தான், புதிய பயிற்­சி­யா­ள­ராக சந்­திக்க ஹத்து­ரு­சிங்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

அவ­ருக்கு, அணியின் தலை­வ­ராக ஒருவர் நிய­மிக்­கப்­பட்டு, எதிர்­வரும் 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்­ண போட்டிகள் வரை அவரே அந்தப் பத­வியில் தொடர வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யி­ல் மீண்டும் விட்ட இடத்­தி­லேயே அனைத்தும் தொடங்­கி­யுள்­ளன. அதன்­படி மீண்டும் அஞ்­சலோ மெத்­தி­யூ­ஸையே அழைத்து வந்து தலைவர் பத­வியில் அமர்த்­தி­யுள்­ளது இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம்.

இந்த அறி­வித்­தலை விடுக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று கிரிக்கெட் நிறு­வ­னத்தில் நடை­பெற்­றது.

இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த புதிய இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ், மீண்டும் தலைவர் பத­வியை பெற்­றுக்­கொள்ளும் நோக்­கத்­தோடு நான் அன்று பத­வியை துறக்­க­வில்லை.

இளம் வீரர் ஒருவருக்கு அணியைக் கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு விலகுவதுதான் சரியென்று அன்று நான் நினைத்தேன். 

ஆனால் பயிற்­சி­யா­ளரும், இலங்கைக் கிரிக்கெட் நிர்­வா­கமும் கேட்­டுக்­கொண்­ட­தற்­கி­ணங்க மீண்டும் தலைவர் பொறுப்பை இப்போது ஏற்­றுள்ளேன்.

நான் கடந்த பத்து வரு­டங்­க­ளாக விளை­யா­டு­கின்றேன். இந்த கிரிக்கெட் எனக்கு நிறைய தந்திருக்கிறது.

இக்­கட்­டான இந்த நிலையில் நான் இலங்கை கிரிக்­கெட்­டுக்கு சேவை­யாற்ற கிடைத்த வாய்ப்பை உதறித் தள்­ளினால் துரோகம் செய்­த­வ­னா­கி­வி­டுவேன். அத­னால்தான் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்றேன் என்றார்.

அஞ்சலோ மெத்தியூஸாவது நீண்டகாலத் தலைவராக நீடிப்பாரா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, தேர்வுக்குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய், இனி எந்தவித தலைவர் மாற்றமும் நிகழாது. அது நிச்சயம் என்றார்.

http://www.virakesari.lk/article/29172

  • தொடங்கியவர்

ஹத்துருசிங்கவின் வேண்டுகோளை நிறைவேற்றிய மெதிவ்ஸ்

Angelo-1-696x464.jpg
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், எதிர்வரும் 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை அணிக்கு புதிய அணித் தலைவர் நியமிக்கப்படுவார் எனவும், அப்பதவிக்கு அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் ஆகியோரின் பெயர்களை இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவினால் தெரிவுக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

 

 

இதன்படி, பங்களாதேஷில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் மற்றும் குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் புதிய தலைவர் யார் என்பது தொடர்பிலும் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று (09) நடைபெற்றது.

இதன்போது, 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவின் வேண்டுகோள் மற்றும் ஊக்குவிப்பு காரணமாகவே மீண்டும் அணித்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதாக குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அஞ்செலோ மெதிவ்ஸ் கருத்து வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், ”2019 உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டு புதிய தலைவருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் நான் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தேன். நான் பதவி விலகும் போது மீண்டும் அணித் தலைமையை ஏற்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் இந்திய தொடரின் பிறகு கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் தெரிவுக் குழுவினர் மீண்டும் அணித் தலைமையை ஏற்றுக் கொள்ளுமாறு என்னிடம் பேசினர். இதுதொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு நான் சில காலம் எடுத்துக் கொண்டேன். இறுதியில் நாட்டிற்காகவும், அணியின் நன்மை கருதியும் அணித் தலைமையை மீண்டும் ஏற்க முடிவு செய்தேன்.

இந்த நாட்டின் கிரிக்கெட்டுக்காக நான் பல விடயங்களை கொடுத்துள்ளேன். எனவே இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும் தலைமைப் பதவியை ஏற்காவிட்டால் இலங்கை கிரிக்கெட்டுக்கு செய்கின்ற மிகப் பெரிய அசாதாரணமாக அமைந்துவிடும். இன்னும் 18 மாதங்களில் நாம் உலகக் கிண்ணத்துக்கு முகங்கொடுக்கவுள்ளோம். அண்மைக்காலமாக பல்வேறு காரணங்களால் அணியின் நிலைப்பாட்டை உறுதியாக வைத்துக் கொள்ள முடியாமல் போனது. அதிலும் குறிப்பாக புதிய தலைமைத்துவத்தின் கீழ் அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல முயற்சி செய்தோம். அவர்களும் தம்மால் முடிந்தவற்றை செய்திருந்தார்கள்.

 

ஆனாலும் 2019 உலகக் கிண்ணத்துக்கு உறுதியான அணியொன்றை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அதுமாத்திரமின்றி, இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க எவ்வாறு செயற்படுவார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவருடன் பணியாற்றுவது மிகவும் இலகுவானது. சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அணியில் நான் விளையாடிய போது அவர் பயிற்சியாளராக செயற்பட்டிருந்தார்.

அதேபோல இலங்கை தேசிய அணியின் நிழல் பயிற்சியாளராக இருந்த காலத்திலும், நான் அவரிடம் பயிற்சிகளைப் பெற்றேன். எனவே அணியின் நன்மைக்காக நாம் இருவரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதுடன், அணியின் வெற்றிக்காக எம்மால் முடிந்தவற்றைப் பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம். ஆனாலும் எமது மீள் வருகையானது சிலருக்கு பிடித்திருந்தாலும், ஒரு சிலர் அதை ஏற்க மறுப்பார்கள். அதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது” எனவும் மெதிவ்ஸ் தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கை அணியின் இளம் தலைவராக நியமிக்கப்பட்ட மெதிவ்ஸ், 98 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தி 47 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

எனினும், ஜிம்பாப்வேயுடனான ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இலங்கை தோற்றதை அடுத்து மெதிவ்ஸ் கடந்த ஜூலை மாதம் மூன்று வகை கிரிக்கெட்டிற்கான தலைமைப் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்தார்.

 

 

இதனையடுத்து இலங்கை ஒரு நாள் அணிக்கு உபுல் தரங்க, சாமர கபுகெதர, லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோரை தலைவராக நியமிப்பதற்கு தெரிவுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அது வெற்றியளிக்கவில்லை.

இது இவ்வாறிருக்க உபாதை காரணமாக ஓய்வு பெற்று வந்த மெதிவ்ஸ், கடந்த வருட இறுதியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இருவகை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் மீண்டும் களமிறங்கியிருந்தார்.

மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்திய அவர் ஆரம்ப பந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயற்பட்டார். தொடர்ந்து இரண்டாவது சர்வதேச T-20 போட்டியின்போது சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருக்கையில் மீண்டும் உபாதைக்குள்ளானார்.

இந்நிலையில், பங்களாதேஷில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒரு நாள் தொடரில் மெதிவ்ஸ் பங்குபற்றுவது தொடர்பில் சந்தேகம் நிலவியது. எனினும் நேற்றுமுன்தினம் (07) நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் முன்னேறியதை அடுத்தே மெதிவ்ஸுக்கு மீண்டும் தலைமைப் பதவியை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

 

http://www.thepapare.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.