Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்கா வழக்கில் ஜெயலலிதாவுக்கு டிஜிபி எழுதிய ரகசியக் கடிதம்: போயஸ் கார்டனில் சிக்கியதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தகவல்

Featured Replies

குட்கா வழக்கில் ஜெயலலிதாவுக்கு டிஜிபி எழுதிய ரகசியக் கடிதம்: போயஸ் கார்டனில் சிக்கியதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தகவல்

 

 
download%2010

குட்கா, வருமான வரித்துறை பிரமாண பத்திரம்   -  படம்: சிறப்பு ஏற்பாடு

குட்கா வழக்கில் புதிய திருப்பமாக அப்போதைய டிஜிபி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய டாப் சீக்ரெட் கடிதம் சசிகலா அறையிலிருந்து கைப்பற்றியதாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தை உலுக்கிய குட்கா வழக்கில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய காவல் உயர் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பிருப்பதாக வருமான வரித்துறை ஆணையர் எழுதிய கடிதம் மற்றும் சிக்கிய டைரியின் பக்கங்களை ஆதாரமாக வைத்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அதன் பின்னர் தான் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். டிஜிபி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வைத்து குட்கா விவகாரத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் வருமான வரித்துறை புலானாய்வுத்துறை முதன்மை இயக்குனர் சுசீ பாபு வர்கீஸ் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

வருமான வரித்துறை பிரமாண பத்திரத்தில் நாங்கள் குட்கா நிறுவன மேலாளர் மாதவ்ராவிடம் பிரிவு 132(4)-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் எச்.எம் மற்றும் சிபி (HM&CP) என குறிப்பிட்டது ஹெல்த் மினிஸ்டர் மற்றும் கமிஷனர் ஆஃப் போலீஸ் என்பதன் சுருக்கம் ஆகுமென்று தெரிவித்திருந்தார்.

2016 ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் 15, 2016 வரையிலான காலகட்டத்தில் ரூ.56 லட்சத்தை கொடுத்ததாகவும், மேலும் பல்வேறு நபர்களுக்கு 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 6 -2016 வரையிலான காலகட்டத்தில் கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது குறித்த தகவல் வருமான வரித்துறை புலானாய்வுத்துறை முதன்மை இயக்குனர் அப்போதைய டிஜிபி அஷோக்குமாருக்கு 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி எழுதிய கடிதத்தை வைத்து அப்போதைய டிஜிபி அஷோக்குமார் ‘முக்கிய ரகசியம்’ என்று முதல்வருக்கு 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி எழுதினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குட்கா விவகாரம் வெளிவந்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வருமானவரித்துறை அதிரடியாக போயஸ் இல்லத்தில் உள்ள வேதா நிலையத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது சசிகலாவின் அறைகள் சோதனையிடப்பட்டது.

சசிகலாவின் அறையில்  முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு அஷோக்குமார், செப்.2-ம் தேதி எழுதிய குட்கா விவகாரம் குறித்த கடிதம் சிக்கியது என வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை முதன்மை இயக்குநரின் அறிக்கையுடன் இணைத்து அப்போதைய டிஜிபி அஷோக்குமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ‘டாப் சீக்ரெட்’ கடிதத்தையும் கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி ‘டாப் சீக்ரெட்’ என டிஜிபி அஷோக்குமார் என்ன எழுதியிருந்தார் என்பது குறித்து வருமான வரித்துறை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் குட்கா விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22430603.ece?homepage=true

  • தொடங்கியவர்
ஜெ., வீட்டில் சிக்கிய ரகசிய கடித விபரம்
என்ன?: வருமான வரித்துறை, 'பகீர்' தகவல்
 
 
 

ஜெயலலிதா வீட்டில் நடத்திய சோதனையின் போது, வரித்துறையிடம் ரகசிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், 'குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்போது, டி.ஜி.பி.,யாக அசோக்குமார் பரிந்துரை செய்திருந்த தகவல் அம்பலமாகி உள்ளது.

 

ஜெ., வீட்டில் சிக்கிய ரகசிய கடித விபரம் என்ன? வருமான வரித்துறை, 'பகீர்' தகவல்


இந்தக் கடிதத்தை அப்போது மறைத்துள்ள சசிகலா கும்பல், அசோக்குமாரை பதவியில் இருந்தும் விரட்டியடித்துள்ளது.
சென்னையில், 2016 ஜூலையில், குட்கா வியாபாரிகள் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, எம்.டி.எம்., என்ற, குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான, மாதவ ராவ் வீட்டில், டைரி ஒன்று சிக்கியது. அதில், தமிழக அமைச்சர்; டி.ஜி.பி., அந்தஸ்தில் இருந்த இரு போலீஸ் அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகள்; 55 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கு உதவிய, மத்திய கலால் துறை அதிகாரிகள்; மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
தடை செய்யப்பட்ட குட்காவை விற்க அனுமதிப்பதற்காக, அந்த தொகை தரப்பட்டதாக, விசாரணையில், மாதவ ராவ் தெரிவித்திருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறை, முதன்மை இயக்குனர், பாலகிருஷ்ணன் வாயிலாக, 2016 ஆகஸ்டில், தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவிடம் அந்த

விபரங்களை தந்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டது.மேலும், அந்த விபரங்களை இணைத்து, அப்போது, சட்டம் - ஒழுங்கு, டி.ஜி.பி.,யாக இருந்த, அசோக்குமாருக்கும் கடிதம் எழுதியது.
 

அழித்துவிடுவர்



இது தொடர்பாக, சிறப்பு பிரிவு விசாரணை கோரி, தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில்,ஜூலை, 27ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, அப்படி ஒரு கடிதம் எழுதப்படவே இல்லை என, தமிழக அரசு தெரிவித்தது; வரித்துறை அதை ஏற்கவில்லை.
இதற்கிடையில், கோர்ட் உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்புத்துறை, அந்த வழக்கை விசாரிக்கத் துவங்கியது. அவர்கள், அந்த ஆவணங்களின் அசல் நகலை தரக்கேட்டு வரித்துறையினரை நச்சரித்தனர். ஆனால், ஒரே ஆதாரத்தை அழித்துவிடுவர் என்பதால், தர மறுத்தனர். பின், மதுரை உயர் நீதிமன்ற கிளையில், அந்த ஆவணத்தை வரித்துறையினர் தாக்கல்
செய்தனர்.

இந்நிலையில், 2017 நவம்பரில், சசி கும்பலிடம் சோதனை நடத்திய வரித்துறை, அதன் தொடர்ச்சியாக, ஜெ., வசித்த, போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடத்தியது.
அப்போது, சசிகலா அறையில் ரகசிய கடிதம் ஒன்று சிக்கியது. அது, வருமான வரித்துறை, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது உண்மை என்பதை நிரூபிக்கும் ஆதாரமாகும்.
இந்த தகவலை, வருமான வரித்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜன., 12ல் தெரிவித்தது. இது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடிதத்தில் இருந்தவிபரங்கள் குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
 

கட்டாய பணி ஓய்வு



இது குறித்து, வரித்துறையினர்

கூறியதாவது:'வரித்துறை கடிதமே எழுதவில்லை' என, தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் கூறியது. பின், ஒரு பேட்டியில், 'அந்த கடிதம் எழுதப்பட்டது உண்மை' என, ராமமோகன ராவ் கூறியிருந்தார். 2016 ஆகஸ்டில், தமிழக, டி.ஜி.பி.,யாக இருந்த அசோக்குமாருக்கும், குட்கா வழக்கில் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் குறித்து, கடிதம் எழுதியிருந்தோம்.அதன் அடிப்படையில், லஞ்சப் புகாருக்கு ஆளான உயர் போலீஸ் அதிகாரிகள் மீது, நடவடிக்கை கோரி, முதல்வராக இருந்த ஜெ.,க்கு, டி.ஜி.பி., அசோக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம், 2016 செப்., 2ல் எழுதப்பட்டு உள்ளது; அது தான், எங்களிடம் சிக்கியது. அந்த கடிதம், ஜெ., கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என கருதுகிறோம்.
இந்த மர்மமான சூழலில், ஜெ.,விடம் பெற்ற நன்மதிப்பு காரணமாக, பதவி நீட்டிப்பில் இருந்த, டி.ஜி.பி., அசோக்குமார், கட்டாய பணி ஓய்வில் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார். அவர், செப்., 7ல், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
எங்களின் கடிதம், ஜெ., கவனத்திற்கு செல்லாமல் மறைக்கப்பட்டு உள்ளது. இல்லையேல், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். மாறாக, அந்த கடிதம், சசிகலா கும்பலிடம் கிடைத்ததால், லஞ்ச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நினைத்த அதிகாரியே பலிகடா ஆகியுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1941882

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.