Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் 945 காளைகள்

Featured Replies

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் 945 காளைகள்

99587880e0800d19-0c3d-49f8-95a8-ec8f7c86

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.

9958812072c5820a-cd69-4389-bcc9-d5c4c071

ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

9958787965f627a0-8a72-424b-b914-12fba730

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மாடுப்பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

995878755baab4a3-8611-42b2-b288-87d18df9

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 945 அதிகமான காளைகள் பங்கேற்றுள்ளன.

இதில் கலந்துக்கொண்ட அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமரின் காளை பத்து நிமிட்ங்களுக்கு மேல் களத்தில் நின்று வென்றுள்ளது.

இது குறித்து ராமர், "இரண்டு பொங்கல் பானை, மிக்ஸி, பட்டுப் புடவை பரிசாக என் காளை வென்றுள்ளது."என்கிறார்.

99588113962d61e3-0e7f-4cde-9b34-685de350

இது வரை 70 காளைகள் களம் கண்டுள்ளன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article22440330.ece

  • தொடங்கியவர்

விறுவிறுப்பாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு! - டிவி, ப்ரிட்ஜ் அள்ளும் வெற்றியாளர்கள்

 
 
Madurai: 

இன்று காலை 8 மணிக்கு தொடஙகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது வரை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அவனியாபுரம் ஜல்லிகட்டுக்கு வந்த மொத்த காளைகள்- 678. பல்வேறு சோதனைகளால் நிராகரிக்கப்பட்ட காளைகள் 57. மீதியுள்ள  621 காளைகளில் 267 காளைகள் களம் இறங்கியுள்ளது.

விறுவிறுப்பாக

 

ஒரு ரவுண்டுக்கு 75 வீரர்கள் என்ற கணக்கில் இதுவரை 375 வீரர்கள் களம் இறங்கி உள்ளனர்.150 வீரர்கள் காத்திருக்கின்றனர். இதுவரை 2 பேர் காயம்  அடைந்துள்ளனர். 4 மணியுடன் போட்டி நிறைவடைந்துவிடும் என்பதால் தங்கள் காளைகள் இடம்பெறுமா என்ற கவலையில் உரிமையாளர்களும், காளையை அடக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்குமா என்று வீரர்களும் காத்திருக்கிறார்கள். 

கலெக்டர் வீரராகவராவே மேடையில் அமர்ந்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டும் விதிகளை மைக் பிடித்து அறிவித்து போட்டியை நடத்தி வருகிறார். விதியை கடைபிடிக்காத வீரர் ஒருவர் வெளியேற்றப்பட்டார்.

வெற்றி பெற்ற வீரர்களும், பிடிக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களும் டிவி, ப்ரிட்ஜ், பீரோ, வாஷிங் மெஷின், கட்டில், அண்டா என்று பரிசுகளை அள்ளி சென்றார்கள்.  மருத்துவக்குழு, மீட்புக்குழுவினர் வாடி வாசல் அருகே தயார் நிலையில் இருந்தனர்.மதுரை அரசு மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு வார்டு என்று இன்று மட்டும் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/113575-prizes-distributed-at-avaniyapuram-jallikattu.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.