Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`ஜெயலலிதா எப்போது இறந்தார்?' - திவாகரன் அதிர்ச்சி தகவல்

Featured Replies

`ஜெயலலிதா எப்போது இறந்தார்?' - திவாகரன் அதிர்ச்சி தகவல்

 
 

death_long_17482.jpg

ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவலைச் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

 

சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் தேதி செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பின்னர், டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இதனிடையே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போது இருக்கிற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூறினர். இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் திடீரென, அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சியைத் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.

divakaran_long_18291.jpg

இந்த விவகாரம் அடங்குவதற்குள் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார். மன்னார்குடியில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் அவர் பேசும்போது, ஜெயலலிதா கடந்த 2016-ம் தேதி டிசம்பர் 4-ம் தேதியே இறந்துவிட்டார். அப்போலோ மருத்துவமனை பாதுகாப்புக்காக ஒரு நாள் தாமதமாக மரணம் அறிவிக்கப்பட்டது. உடனடியாக ஏன் அறிவிக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, எங்களது மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் எனக் கூறினார்கள்" என்று தெரிவித்தார்.

 

ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/news/tamilnadu/113818-divakaran-tells-at-what-time-jayalalithaa-was-dead.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது: அப்பல்லோ மருத்துவமனை

 

ஜெயலலிதா மரணத்தை அறிவித்ததில் மருத்துவ நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. #JayalalithaDeath #ApolloHospitals

 
ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது: அப்பல்லோ மருத்துவமனை
 
சென்னை:

அதிகாரபூர்வ அறிவிப்புக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார் குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் திவாகரன் கூறியதாக எழுந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது என்று அப்பலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. 2016 டிச.5-ம் தேதி ஜெயலலிதா மரணத்தை அறிவித்ததில் மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன எனவும், ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது எனவும் டிசம்பர் 5-ம் தேதி தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மையைதான் தெரிவித்து உள்ளோம் என்றும் அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, ஜெயலலிதா மரணம் பற்றிய தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திவாகரனும் விளக்கம் அளித்து இருந்தார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/17222735/1140757/Apollo-hospitals-says-controversy-in-jaya-death-is.vpf

  • தொடங்கியவர்

காலையில் பேசியதை இரவில் மறுத்த திவாகரன்

 

 
DIVAKARANjpg

மன்னார்குடியில் நேற்று காலையில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய திவாகரன், அப்போலோ மருத்துவமனை அறிவிப்பதற்கு முதல்நாளே, அதாவது டிச.4-ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், நேற்றிரவு சுந்தரக்கோட்டையில் நிருபர்களை சந்தித்த திவாகரன், காலையில் தான் பேசியதை மறுத்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

 

 

மருத்துவத் துறையில் கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத் என இருவகை உண்டு. அப்போலோ மருத்துவமனையில் டிச.4-ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இது கிளினிக்கல் டெத் என கூறுவர்.

இதைத் தொடர்ந்து கருவிகள் உதவியோடு பயாலஜிக்கல் டெத் ஆகிவிடாமல் உயிரைக் காப்பாற்ற முடியுமா என மருத்துவர்கள் முயற்சி எடுத்து வந்தனர். அப்போலோ மருத்துவர்களிடம் இருந்துதான் நான் இந்த தகவலை தெரிந்துகொண்டேன். அப்போலோ மருத்துவர்களிடம் கேட்டோம் என்று சொன்னாலே அது ரெட்டியிடம் கேட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது.

மருத்துவத்தில் கிளினிக்கல் டெத் ஆனவர்களை 24 மணி நேரத்துக்குமேல் பயாலஜிக்கல் டெத் ஆகாமல் பாதுகாக்க முடியாது என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

இதையடுத்து, சிகிச்சையில் இருந்தவர் முதல்வர் என்பதால், அரசு விதிப்படி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து நரம்பியல் மருத்துவர்கள் வந்து அவரது இறப்பை டிச.5-ம் தேதி உறுதிப்படுத்தினர். அதன் பின்னர்தான் அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதாவின் இறப்பை அறிவித்தது. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டன.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், சிலர் அரசியல்ரீதியாக எடுத்த முயற்சிகளை தொண்டர்களுக்கு விளக்குவதற்காகவே மேற்கண்ட கருத்துகளை கூறினேன். அது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. எனது நோக்கம், அப்போலோ நிர்வாகத்தின் மீதோ, பிரதாப் ரெட்டி மீதோ அல்லது வேறு யார் மீதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பது இல்லை என்றார்.

 

அப்போலோ மறுப்பு

இந்நிலையில், ‘ஜெயலலிதா இறந்தது தொடர்பாக தவறான தேதி, நேரம் பரப்பப்படுகிறது. ஜெயலலிதா டிச.5-ம் தேதிதான் இறந்தார். அவருடைய இறப்பு அனைத்து மருத்துவ நடைமுறைகளையும் பின்பற்றித்தான் அறிவிக்கப்பட்டது’ என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22461252.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.