Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமி­ழ­ரி­ட­மிருந்து முல்லைத்தீவு பறி­போ­கும் அபா­யம்!! எச்­ச­ரிக்­கி­றார் ரவி­க­ரன்

Featured Replies

  •  
  • தமி­ழ­ரி­ட­மிருந்து முல்லைத்தீவு பறி­போ­கும் அபா­யம்!!
150929160016_mullaithivu_512x288_bbc_noc

தமி­ழ­ரி­ட­மிருந்து முல்லைத்தீவு பறி­போ­கும் அபா­யம்!!

எச்­ச­ரிக்­கி­றார் ரவி­க­ரன்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமி­ழர்­க­ளின் காணி­க­ளில் சிங்­கள மக்­கள் குடி­யேற்­றப் படு­வ­தும் புதிய குடி­யேற்றங்­களை இலக்­கா­கக்­கொண்டு அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தும் தடுக்­கப்­ப­டா­விட்­டால் தமி­ழர்­கள் அந்த மாவட்­டத்தை இழக்­கும் நிலை ஏற்­ப­டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் எச்­ச­ரிக்­கின்­றார்.

முல்­லைத்­தீ­வின் சூரி­ய­னாறு, பெரி­யாறு என்­ப­வற்றை மறித்து கிவுல் ஓயா என்ற பெய­ரில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் பெரும் நீர்ப்­பா­ச­னத் திட்­டம் தடுத்து நிறுத்­தப்­ப­டா­விட்­டால் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமி­ழர்­க­ளின் இருப்பு கேள்­விக்­கு­றி­யா­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இந்­தப் பிரச்­சினை தொடர்­பான தீர்­மா­னம் ஒன்றை இன்று அவர் மாகாண சபை­யில் கொண்­டு­வ­ர­வுள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­தா­வது:

காலங்­கா­ல­மா­கத் தனித்­த­னமை வாய்ந்த பண்­பாட்டு அடை­யா­ளங்­க­ளோடு இருந்த பட்­டிக்­கு­டி­யி­ருப்பு, மரு­தோடை, ஒதி­ய­மலை, தண்­டு­வான், குமு­ழ­முனை, நெடுங்­கேணி, சாம்­பன்­கு­ளம், வேப்­பங்­கு­ளம்,கோட்­டைக்­கனி,ஆமை­யங்­கு­ளம், ஆலங்­கு­ளம், கண்­ணாட்டி, அக்­க­ரை­வெளி எனப் பழைய கால ஊர்­க­ளும் குளங்­க­ளும் அதனை அண்­டிய வயல்­கள் குடி­யி­ருப்­பு­க­ளு­டன் அமைந்­துள்­ளது மட்­டு­மன்றி கடல் வள்­ளங்­க­ளை­யும் மிகை­யா­கக் கொண்ட கொக்­கி­ளாய், கொக்­குத்­தொ­டு­வாய், கரு­நாட்­டுக்­கேணி போன்ற பாரம்­ப­ரிய இடங்­கள் தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரிய குடி­யி­ருப்­புக்­க­ளாக இருந்­தன.

 
 

எனி­னும் இதற்­குள் சிங்­க­ளக்­கு­டி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அவற்­றுக்கு புதிய சிங்­கள பெயர்­கள் சூட்­டப்­பட்டு தமி­ழர்­க­ளின் அடை­யா­ளங்­கள் அளிக்­கப்­ப­டு­கின்­றன.

அந்­த­வ­கை­யில் மண்­கிண்டி மலை அல்­லது மறிச்­சுக்­கட்­டிக்­கு­ளம்– ஜன­க­புர, ஆமை­யன் குளம் — கிரி­பன்­வெவ, முந்­தி­ரி­கைக் குளம் அல்­லது உந்­து­ரா­யண் குளம் — நெலும்­வெவ, சிலோன் தியேட்­டர்ஸ் பண்­ணை–­க­ஜ­பா­புர அல்­லது நவ­க­ஜ­பா­புர, கென் பண்­ணை–­கல்­யா­ண­புர, வெடி­வைத்­த­கல்லு – -நிக்­க­வெவ, மயில்­கு­ளம்–­மொ­ன­ர­வெவ, வவு­னியா வடக்கு பிரி­வு­கள் சில ஹகட்­டு­கஸ்­வெவ என சிங்­க­ளத்­திற்­குப் பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளன.

முல்­லைத்­தீ­வின் சூரி­ய­னாறு, பெரி­யாறு என்­ப­வற்றை மறித்து கிவுல் ஓயா என்ற பெய­ரில் பெரும் நீர்ப்­பா­ச­னத் திட்­டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.இத்­திட்­டத்­திற்­காக இரா­மன் குளம், கொட்­டோ­டைக் குளம், வெள்­ளாங்­கு­ளம், ஓயா­ம­டுக்­கு­ளம், ஆகிய குளங்­கள் மற்­றும் அதற்­கு­ரிய வயல் நிலங்­கள் யாவும் மூடப்­பட்டு மேற்­படி திட்­டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்­தப் பகு­தி­யில் இருந்த நிலங்­கள் யாவும் தமிழ் மக்­க­ளின் பூர்­வீக நிலங்­கள் ஆகும். உரு­வாக்­கப்­ப­டும் இந்­தப் புதிய திட்­டத்­தின் மூலம் 6 ஆயி­ரம் ஏக்­கர் வயல் நிலங்­க­ளுக்கு நீர் பாய்ச்­சக்­கூ­டிய விதத்­தில் சுமார் ஆயி­ரம் மில்­லி­யன் ரூபாய்க்கு மேல் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டே இந்த வேலைத்­திட்­டங்­கள் நடை­பெ­று­கின்­றன.

தமிழ் மக்­கள் பல­ரின் கைக­ளில் தமது பூர்­வீ­கக் காணி­க­ளுக்­கான சான்­றா­வ­ணங்­கள் இருந்த நிலை­யி­லும் கடந்த அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­பாக குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு புதிய அனு­ம­திப் பத்­தி­ரத்தை முன்­னைய ஆட்­சி­யா­ளர்­கள் மயில்க்­கு­ளம் பகு­தி­யில் வைத்து வழங்­கி­யி­ருந்­தார்­கள்.

மகா­வலி(ட)
மகா­வலி(ட)வல­யம் தொடர்­பான வர்த்­த­க­மானி பிந்­திய அறி­வித்­தல்­கள் 1982, 1988, 2014 ஆகிய ஆண்­டு­க­ளில்­வெ­ளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இவற்­றின் அடிப்­ப­டை­யில் மகா­வலி)(ட) வல­யம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் மாங்­கு­ளம் வீதி உள்­ள­டங்­க­லாக முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கப் பகு­தி­வ­ரை­யும் விரி­வாக்­கப்­பட்­டுள்­ளது. இவை­கள் மாவட்­டத்­தின் அபா­யத்தை உணர்த்­து­வ­தா­க­வுள்­ளன.

முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தின் கடந்த வருட புள்­ளி­வி­வ­ரத்­தின்­படி 39 ஆயி­ரத்து 590 தமிழ்க் குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 24 ஆயி­ரத்து 735 தமிழ் மக்­க­ளுக்கு ஒரு மாதி­ரி­யும் குடி­யேற்­றப்­பட்ட 3 ஆயி­ரத்து 336 சிங்­க­ளக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஒரு இலட்­சத்து ஆயி­ரத்து 189 சிங்­கள மக்­க­ளுக்கு வேறு மாதி­ரி­யா­க­வும் அர­சின் செயற்­திட்­டங்­கள் அமை­கின்­றன.

இதே நிலை நீடித்­தால் நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமி­ழின இருப்பு குலைக்­கப்­பட்டு சிங்­கள மக்­க­ளைப் பெரும்­பான்­மை­யி­ன­ரா­கக் கொள்­ளும் மாவட்­ட­மாக மாறும் நிலை ஏற்­ப­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/64542.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் 39,590 குடும்பம் 124,735 நபர்கள் சராசரி 3.15

சிங்களம் 3,336 குடும்பம் 101,189 நபர்கள் சராசரி 30.33

???????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.