Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’அரசியலிலிருந்து விலகப்போவதில்லை’

Featured Replies

’அரசியலிலிருந்து விலகப்போவதில்லை’
 

image_d1cce4f8a9.jpg

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில், இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எவ்வாறாயினும் அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களுடன், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தற்போது நடைபெற்றுவரும் சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அரசியலிலிருந்து-விலகப்போவதில்லை/150-210814

  • தொடங்கியவர்

பௌத்த குருமாரின் செயற்பாடுகள் குறித்து வெட்கமடைவதாக கூறுகின்றார் ஜனாதிபதி

 

பௌத்த பிக்குமாரின் செயற்பாடுகள் தொடர்பாக வெட்கமடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பௌத்த குருமாரின் செயற்பாடுகளை அவதானித்து ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதம செய்தி ஆசிரியர்கள் ஆகியோருடனான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததுடன் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்வதாக சுட்டிக்காட்டி கவலையும் வெளியிட்டுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்கள் ஆகியோரின் கேள்விகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்தார்.

குறிப்பிட்ட சில பௌத்த குருமாரின் நடவடிக்கைகள் இலங்கை அரசியலில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. உலக நாடுகள் பௌத்த குருமாரின் செயற்பாடுகளை அவதானித்து வருகின்றன. ஆனால் இது சிலருக்குத் தெரிவதில்லை என்று ஜனாதிபதி கூறினார்.

கேள்வி ஒன்றுக்கு பதலிளித்த ஜனாதிபதி ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலத்தி வருகின்றது எனவும் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை முன்னுதாரணமாக இருப்பதாக சர்வதேச பிரதிநிதிகள் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் மனித உரிமைகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் இதனை சர்வதேச நாடுகள் வெளிப்படையாக கூறியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபை, ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச பொது அமைப்புகள் கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

மற்றுமொரு கேள்விக்கு பதலிளித்த ஜனாதிபதி மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எப்போது தன்டனை வழங்கப்படும் என்பது குறித்து கூற முடியாது என்றும் ஆனாலும் விசாரணைகள் துரிதமாக இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு தன்டனை வழங்கும் இறுதி முடிவு எவ்வாறு அமையும் என்று தன்னால் கூற முடியாது என்றும் ஆனாலும் முடிவுகள் உறுதியானதாக இருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லையெனவும், ஆனாலும் அரசியலிலிருந்து ஒய்வு பெறப்போவதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/politics/President-met-Madia

6 minutes ago, நவீனன் said:

பௌத்த பிக்குமாரின் செயற்பாடுகள் தொடர்பாக வெட்கமடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பௌத்த குருமாரின் செயற்பாடுகளை அவதானித்து ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

என்னமோ தாங்கள் அவர்களைவிட திறம் போல கதைவிடுறார்!

  • தொடங்கியவர்

பிணைமுறி விடயங்கள் பெரும் சவாலானது ; குற்றவாளிகளுக்கு தண்டனை நிச்சயம் ; ஜனாதிபதி

 

 

 

பிணைமுறி தொடர்பான விடயங்கள் எனக்குப் பெரும் சவாலாக இருந்தாலும் விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் அதேவேளை, பாரிய ஊழல் மோசடி தொடர்­பான  ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithripala.jpg

இதேவேளை, அரசாங்க கட்சிகளுக்கிடையிலுள்ள பிணக்குகளினால் புதிய அரசியல் யாப்பில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகையில் அனைத்து பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட முடியுமா என்பதை தீர்மானிக்காவிட்டாலும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன். எதிர்வரும் ஆட்சிக்காலங்களில் நான் பதவியை எதிர்பார்க்க மாட்டேன். ஜனாதிபதி பதவி இருக்குமோ. இல்லையோ நான் பதவியை எதிர்பார்க்க மாட்டேன்.

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆகிய இரண்டும் ஒன்றாக வெளிவருமென நான் எதிர்பார்க்கவில்லை. 

 

ஆனால் இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின்  அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துமாறு கோரியவர்கள் பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்ததும் விவாதம் நடத்துமாறு கோரியவர்கள் அனைவரும் அமைதியாகவுள்ளனர்.

ரவி கருணாநாயக்க இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின்  அறிக்கை பொய்யானதெனவும் அது தொடர்பில் நான் ஆற்றிய உரை தவறானதெனவும் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணிகள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவினரை வைத்துத் தான் அறிக்கை தொடர்பான உரை தயாரிக்கப்பட்டது.

பிணைமுறி தொடர்பான விடயங்கள் எனக்குப் பெரும் சவாலாக இருந்தாலும் விரைவில் இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கையில் பங்கங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவது பொய்யானது. அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

எனது ஆட்சிக்காலத்தின் கடந்த 3 வருடங்களில் மனித உரிமைக்கு எதிரான எவ்வாறான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. ஆனால் இப்போது ஐ.நா. சென்று சிலர் எனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமைக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றதாக முறையிடுகின்றனர்.

இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமைக்கு எதிரான செயற்பாடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தேவை. அதை நாம் சர்வதேசத்திடம் கேட்டிருந்தோம். சர்வதேசமும் எம்மில்  நம்பிக்கை வைத்து மேலதிகமாக இரண்டு வருடங்கள் தந்துள்ளது.

மனித உரிமை தொடர்பான நடவடிக்கைளை அவசரமாக செய்யமுடியாது. அவ்வாறு நாம் செய்யமுற்படும் போது இனங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முதலில் நாம் நல்லிணக்கத்தை உருவாக்கிய பின்னர் தான் ஏனைய பயணங்களைத் தொடர முடியும் காலங்கடந்தாலும் இதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.

கடந்த 10 வருடங்களில் வெளிநாட்டுக்கடன் தொகை 10 திரிலியனாக அதிகரித்துள்ளது. இவ்வாறு நிதி பெறப்பட்டமை தொடர்பாக எவ்வித கணக்கறிக்கைகளையும் காணவில்லை. ஆனால் ஒரு திரிலியன் நிதி பெறப்பட்டமைக்கான கணக்கறிக்கை மாத்திரமே உள்ளது. அரச வருமானங்கள் வீணாக இழக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.

தேர்தல்காலங்களில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தல் நிறைவடைந்த பின்னர் மத்தியகுழு கூடி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் சட்டமா அதிபரிடம் கேட்டுள்ளளேன். ஒருவருக்கு மாத்திரமல்ல குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

தற்போது அரசாங்க கட்சிகளுக்கிடையிலுள்ள பிணக்குகளினால் புதிய அரசியல் யாப்பில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. அரசியல் யாப்பென்பது பாராளுமன்றத்துடன் தொடர்புடைய விடயம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/29933

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.