Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காத்தான்குடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மஹிந்த

Featured Replies

காத்தான்குடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மஹிந்த

 

 

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

2-DSC_0030.JPG

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். 

2-DSC_0153.JPG

காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜி.எல்.பீரிஸ் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள்,அரசியல் பிரமுகர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

3-DSC_0014__1_.JPG

இங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்களத்திலும், தமிழிலும் காத்தான்குடி மக்கள் மத்தியில் உரையாற்றியதோடு மேடையில் இருந்து இறங்கி மக்களோடும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0005.JPG

7-DSC_0010.JPG

4-DSC_0019.JPG

3-DSC_0038.JPG

http://www.virakesari.lk/article/29956

  • தொடங்கியவர்

மட்டுவில் கொள்ளையிடும் நல்லாட்சியை சாடிய மஹிந்த!!!

 

 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மட்டக்களப்பில் நேற்று  மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்றது.

BATTI-_MAHINDA___10_.JPG

காத்தான்குடி நகரசபை வேட்பாளர் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் போன்றோர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்கள் மத்தியில் உரையாற்றுகையில், 

online_New_Slide__3_.jpg

" இப்போது தேங்காய் விலை என்ன? அரிசி விலை என்ன? எல்லாத்தையும் உயர்த்திவிட்டார்கள் சதிகாரர்கள். இவர்கள் மக்களின் பொருளாதாரத்தை அழித்துவிட்டார்கள்.

கடந்த காலத்திலே நாங்கள் ஒன்றிணைந்து பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டோம்.  இந்த நாட்டிலே சுனாமி ஏற்பட்டது அதில் பல சேதங்கள், உயிரிழப்புக்கள் ஏற்பட்டது. இந்த வேளையில்தான் யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி அந்த யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தோம்.

அந்த யுத்தம் நடைபெற்ற ஒன்பது ஆண்டு காலத்தில் நாங்கள் வயல் பிரதேசத்திற்கு செல்வதானால் இராணுவத்தின் பாதுகாப்பில்தான் சென்றுவர வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.இவ்வாறான காலகட்டத்தில்தான் இந்த யுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தோம்.

எங்கள் ஆட்சிக் காலத்தில் நீர் வசதிகளை சீர் செய்தோம், மின்சார வசதிகளை வழங்கினோம், வீதிகளை செப்பனிட்டோம், பாலங்களை அமைத்தோம் இப்படி பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டோம்.

இன்று மூன்று வருடங்களாக நாட்டிலே இந்தப் பிரதேசம் மட்டுமல்ல முழுப் பிரதேசமும் ஒரு அபிவிருத்தி இல்லாத பிரதேசமாக மந்தகதியிலே தடுமாற்றத்துடன் காணப்படுகின்றது.

உலக நாட்டிலே பாரியளவு வங்கிக் கொள்ளை இடம்பெற்றிருக்குமாக இருந்தால் அது எங்கள் இலங்கை நாட்டில் மத்திய வங்கியிலே இடம்பெற்ற கொள்ளையைத்தான் நாம் கூறவேண்டும்.

இன்று ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில்தான் ஈடுபட்டு வருகின்றது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இவர்கள்  திருடிய பணத்திற்கு நீங்கள் எல்லாம் வட்டி கட்டி வருகின்றீர்கள், இந்தச் சம்பவத்தினால் பொருட்களின் விலை உயர்ந்திருக்கின்றது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/29975

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தனது ஆட்சியில்  எந்தப்பணமும்  கொள்ளை இடவில்லை என கூறப்படுகிறது.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

மகிந்த தனது ஆட்சியில்  எந்தப்பணமும்  கொள்ளை இடவில்லை என கூறப்படுகிறது.tw_blush:

பொய்யி பொய்யி tw_blush:

  • தொடங்கியவர்

உலகத்திலேயே நடைபெறாத கொள்ளை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளது

ff-464c6a74ebc395e9b2ce6ae6e6e13225898bd84a.jpg

 

எங்களுடன் ஒன்றிணையுங்கள் என்கிறார் மஹிந்த

(காங்­கே­ய­னோடை நிருபர்)

பின்­னோக்கி செல்லும் இலங்கை நாட்டை மீட்க அனை­வ­ரும் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அழைப்பு விடுத்தார். காத்­தான்­கு­டியில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை­ நடை­பெற்ற சிறி­லங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறினார். 

காத்­தான்­குடி ஹிஸ்­புல்லாஹ் விளையாட்டு மைதா­னத்தில் நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் தொடர்ந்­து­ரை­யாற்­றிய அவர் தெரி­வித்­த­தா­வது, இன்று நாட்டில் தேங்காய் விலை அதி­க­ரித்­துள்­ளது. அரிசி விலை, பருப்பு விலை சீனி விலை என அனைத்து உணவுப் பொருட்­களின் விலை­களும் அதி­க­ரித்­துள்­ளன. மண்விலையும் அதி­க­ரித்­துள்­ளது.

 அன்று நாட்டில் எங்கள் மீது பொய்­யான பிர­சா­ரங்­களை கூறி ஆட்­சியைப் பிடித்­தார்கள். இந்தப் பிர­தே­சத்தில் பல்­வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­களை மேற்கொண்­ட­வர்கள் நாங்கள் தான். கடந்த முப்­பது வருட கால யுத்­தத்தில் நாம் பட்ட துன்­பங்­களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நமது மார்க்க கட­மை­களை கூட பாது­காப்­போ­டுதான் செய்ய வேண்­டி­யி­ருந்­தது.

இந்த சூழ்­நி­லை­யில்தான் சுனாமி அனர்த்­தமும் இந்த பிர­தே­சத்தில் ஏற்­பட்­டது. யுத்­தத்தின் அழி­வு­க­ளையும் சுனாமி அனர்­த் தத்தின் அழி­வு­க­ளையும் நாம் புன­ர­மைப்பு செய்து இந்த நாட்டில் பாரிய அபி­வி­ருத்­தி­களை மேற்கொண்டோம். பிள்­ளைகள் பாட­சா­லை­க­ளுக்கு செல்ல முடி­யாத நிலை இருந்­தது. இன்று பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அச்­ச­மில்­லாமல் சென்­று­வரக் கூடிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இன்­றைய அர­சாங்கம் எதை செய்­துள்­ளது. நாங்கள் வீதி­களை செப்­ப­னிட்டோம், அபி­வி­ருத்தி செய்தோம், நீர்­வி­நி­யோ­கத்­தினை மேற்கொண்டோம். மின்சாரத்­தினை வழங்­கினோம். இந்த நிலை யில் தான் எங்கள் மீது தடை ஏற்­பட்­டது.

 கடந்த மூன்று வரு­டங்­க­ளாக எந்த அபி­வி­ருத்­தி­யு­மில்­லாத மந்­த­க­தியில் நாடு காணப்­ப­டு­கின்­றது. உல­கத்தில் எங்கும் இடம்­பெ­றாத பாரிய கொள்ளை இலங்கை மத்­திய வங்­கியில் இடம்­பெற்­றுள்­ளது. அர­சாங்கம் இவ்­வா­றான கொள்ளைச் சம்­ப­வங்­களில் தான் ஈடு­பட்டு வரு­கின்­றது. இதனால் நாட்டு மக்கள் வட்டி செலுத்த வேண்­டிய நிலைய ஏற்­பட்­டுள்­ளது. இத­னால்தான் நாட்டில் பொருட்­களின் விலை­யு­யர்வு ஏற்­பட்­டுள்­ளது. வேலை வாய்ப்­புக்கள் இல்லை. இதனால் பாரிய பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. மக்கள் பின்­ன­டைவை சந்­தித்து வரு­கின்­றனர். உல­கி­லேயே முன்­னேற்­ற­மான நாடாக இலங்கை காணப்­பட்­டது. ஆனால் இன்று இந்த அர­சாங்­கத்தின் வெளி­நாட்டுக் கொள்கை இலங்­கைக்கு பின்­ன­டைவை ஏற்­பட்­டுள்­ளது.

ஒரு­வருக்­கொ­ருவர் கைகோர்த்து செயற்­பட வேண்­டிய தேவை இருக்­கின்­றது. பேரு­வளை பிர­தே­சத்தில் இடம் பெற்ற பிரச்­சி­னையை வைத்து எங்கள் மீது சேறு­பூசி சிலர் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை எடுத்­துக்­கொண்டு சுக­போ­கங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். எங்கள் மீதான சதித்­திட்­டத்­தினை அமைச்சர் ஒருவர் அரங்­கேற்றும் கலந்­து­ரை­யாடல் வீடியோ காட்­சி­யொன்றை நான் இனை­ய­த­ள­மொன்றில் பார்­வை­யிட்டேன்.

அன்று பள்­ளி­வாசல் மீது ஒரு சம்­பவம் இடம்­பெற்ற போது நாட்டின் ஜனா­தி­ப­தி­யான நான் நாட்டில் இருக்­க­வில்லை. பாது­காப்புச் செய­லா­ளரும் நாட்டில் இருக்­க­வில்லை. நாட்­டுக்கு வந்­த­வுடன் உட­ன­டி­யா­கவே நாங்கள் அந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு கொடுத்­த­துடன் அங்கு அழிக்­கப்­பட்ட வீடு­க­ளையும் புன­ர­மைப்பு செய்து கொடுத்­த­துடன் பள்­ளி­வா­ச­லையும் புன­ர­மைப்பு செய்தோம்.

அண்­மையில் நல்­லாட்சி அரசாங்கத்தில் ஜிந்தோட்டையில் முஸ்லிம்களுக்கு பிரச் சினை இடம்பெற்றது. இந்த நல்லாட்சி அரசாங்கம் என்ன நஷ்டஈடு கொடுத்தது. ஒரு சதமேனும் கொடுக்கவில்லை. இது வரைக்கும் அவர்கள் அமைதி காக்கின்றார் கள். எனவே இந்த நிலையில் எங்களோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்; உங்களோடு என்றுமிருப்போம்; உங்களுக்கு உதவுவோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-27#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.