Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னர் வகையறா திரை விமர்சனம்

Featured Replies

மன்னர் வகையறா திரை விமர்சனம்

மன்னர் வகையறா திரை விமர்சனம்

 
 

மன்னர் வகையறா திரை விமர்சனம்

 

வெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்? பார்ப்போம்.

பெரிய படங்களுக்கு நடுவே பெருமையுடன் இறங்கியிருக்கிறது மன்னர் வகையறா. படத்திற்கு பெருமை சேருமா, பெரும்பான்மை கிடைக்குமா என பார்க்கலாம்.

கதைக்களம்

படத்தின் கதாநாயகன் விமல் சட்டம் படிப்பு படித்து வருகிறார். அதில் தான் அவருக்கு சிக்கல். ஆனாலும் அதை விட பெரும் சிக்கல் படத்தில் அவருக்கு உள்ளது. இவரின் மாமாவாக மட்டுமல்லாமல் நண்பனாக ரோபோ சங்கர் கூடவே இருக்கிறார். படம் முழுக்க இவர்கள் தான்.

ஊரில் மதிக்கத்தக்க தலைவராக இருக்கும் பிரபு மற்றும் அவரின் மனைவி மீரா கிருஷ்ணனுக்கு கார்த்திக், விமல் என இரு ஆண் பிள்ளைகள். பெரிய வகையறா தான்.

அதே போல ஊரில் மிரட்டல் ஆளாக இருக்கிறார் வம்சி கிருஷ்ணா. இவருக்கு சாந்தினி, கயல் ஆனந்தி என இரு தங்கைகள். இவர்களின் அம்மா, அப்பாவாக சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் ஊர் விசயத்தில் வில்லனுக்கும் பிரபுவின் குடும்பத்திற்கும் ஒரு பகை. அதே நேரத்தில் பெரும் பின்னணிக்கு இடையே வில்லனின் தம்பிக்கும் சரண்யாவின் மூத்த மகளுக்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது.

முகூர்த்த நேரத்தில் மணமகள் கடத்தப்படுகிறார். அவரை கடத்தியது முக்கியமான ஒருவர். ஒரு பக்கம் விமலின் அண்ணன் கார்த்திக் விசம் குடித்து உயிருக்கு போராடுகிறார். கதை இப்படியே நகர்கிறது.

இதற்கிடையில் விமல், ஆனந்தி இருவருக்கும் காதல் ஓடிக்கொண்டிருக்கிறது. வில்லனால் விமல் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. விமல் பிழைத்தாரா, அவரது அண்ணனுக்கு என்னானது, கயல் ஆனந்தியின் காதல் கைகூடிதா, மணமகளை கடத்தியது யார் என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ விமலுக்கு என்று ஒரு தனி இளைஞர்கள் பட்டாளம் ரசிகர்களாக இருக்கிறார்கள். சில நாட்களாக ஒரு ஹிட் கொடுக்க போராடுகிறார். அவருக்கென ஒரு கதை பாணி ஆரம்பம் முதலே அமைந்துவிட்டது.

தன் பலத்தை கையில் எடுத்து மன்னர் வகையறாவில் இறங்கியிருக்கிறார். அவரின் முயற்சி இப்படத்தில் நல்ல விதமாய் அமையும் என படம் சொல்லும். தன் மருமகன் “லா” படிக்கிறான் என இவரை வைத்து ரோபோ சங்கர் செய்யும் அட்டகாசம் அடடா தான்.

பிரபுவுக்கு படத்தின் கௌரவமான வேடம். ஊர் தலைவராக மட்டுமில்லாமல் ஒரு குடுமபத்தலைவராக பிரச்சனையான சமயங்களில் பொறுமை காப்பது இவரின் இயல்பு.

ஹீரோயின் கயல் ஆனந்தி இப்படத்தில் தன் தோழிகளுடன் சேர்ந்து வீட்டிலும் காலேஜிலும் குறும்பு செய்யும் கடைக்குட்டி பெண். விமலை வைத்து இவர் விளையாட்டு காட்ட கடைசியில் காதலாகி விடுகிறது.

ஒரு கட்டத்தில் தன் ஆசையை தூக்கி வைத்துவிட்டு இவர் துணிவாக எடுத்த முடிவு எதார்த்தம். தன் திருமணத்தின் போது ஆள் மாயமாகிவிடுகிறார். எங்கு சென்றார் என்பது ட்விஸ்ட்.

அம்மா கேரக்டருக்கு பெயர் பெற்ற சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் தன் குறும்பு கலந்த நடிப்போடு பாசத்தை காட்டுகிறார். ஆனால் ஒரு சம்பவத்தால் மனம் உடைந்து போகிரார். அப்படி என்ன இவரின் மனதிற்குள் என்பதை படத்தில் பாருங்கள்.

ரோபோ சங்கர் படம் முழுக்க ஹீரோவுடன் செய்யும் காமெடி காட்சிகளை நிறைவாக்குகிறது. அதே போல சிங்கம் புலி விமல் குடும்பத்தில் இருந்து டைமிங் பஞ்ச் அடித்து சிரிக்க வைப்பது ரசனையானது.

கடைசியில் வந்து கச்சிதமாக காமெடி செய்கிறார் யோகி பாபு. வந்ததும் சிரிப்பு தான். வாய் திறந்து பேசினால் இன்னும் சிரிப்பு தான். தானாக வந்துவிடுகிறது.

தனுஷ், விஷால் ஆகியோரை வைத்து படம் எடுத்த இயக்குனர் பூபதி பாண்டியன் தற்போது கதைக்கான ஹீரோவை சரியாக தான் தேர்ந்தெடுத்துக்கிறார். ஃபேமிலி செண்டிமெண்ட்.

படத்திலுள்ள ஒரு பாடலை அவரே எழுதியிருக்கிறார். பாடல்கள் கேட்கும் விதம். அதில் ஒரு பாடலின் மெட்டு பின்னணி இசையாக பட காட்சிகளை ரசிக்க வைக்கிறது.

கிளாப்ஸ்

படத்திற்கு கதைக்கேற்றவாரு காட்சிகளை அமைத்த விதம் நன்று.

சீனியர் நடிகர், நடிகைகள் முதல் நடித்தவர்கள் அனைவருக்கும் இயல்பான நடிப்பு.

காமெடி தான் கலர்ஃபுல். ரோபோ சரியான கவுண்டர். அதிலும் ஜாதி பற்றி சரியான பஞ்ச் கொடுப்பார்.

ஒரே மாதிரியான பின்னணி இசையாக இருந்தாலும் படத்தில் எளிமையாக இருந்தது.

பல்ப்ஸ்

முதல் பாதியில் ஹீரோ, ஹீரோயின் அதிகமாக உரையாடும் காட்சிகள் எப்போது முடியுமோ ரகம்.

படத்தை காட்சிகள் அமைப்பதில் இன்னும் பிளான் செய்திருக்கலாம்.

சரண்யாவின் அண்ணன் அண்ணன் என அடிக்கடி சொல்லி கடைசியில் அவரை பற்றி எதுவுமே காட்டவில்லை.

முதல் பாதியில் அடுத்தடுத்து மூன்று பாடல்கள். முடியலப்பா சாமி.

 

 

 

மொத்தத்தில் மன்னர் வகையறா. காமெடி வகையறா. மனம் நிறைவு.

 

 

http://www.cineulagam.com/films/05/100912?ref=reviews-feed

  • தொடங்கியவர்

காமெடி ஓ.கே... மத்ததெல்லாம்...?! - ’மன்னர் வகையறா’ விமர்சனம்

 
 

வக்கீலுக்கு பரிட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாண்புமிகு மாணவன் விமல். விமலுக்கு ஆனந்தியைப் பார்த்ததும் ஆங்... அதேதான் கண்டதும் காதல். விமலின் அப்பா பிரபு ஊரிலேயே, ஆங்... அதேதான் நல்ல மனிதர். ஊர் பிரச்னைகளுக்காக போராடுபவர். அப்ப பிரபுவுக்கு ஒரு வில்லன் இருக்கணும்ல. ஆங்.. ஒரு வில்லன் இருக்கார். அவருக்கு கெட்டது பண்றது தான் வேலை. விமலோட அண்ணன் கார்த்திக். அவருக்கு ஒரு காதலி. அந்த காதலியோட தங்கச்சி ஹீரோயின். ஆனா, ஹீரோயினும் வில்லனும் சொந்தம்.  

மன்னர் வகையறா விமர்சனம்

 

அப்புறம் காமெடி, ஃபைட்டு, பாட்டு,காமெடி , ஃபைட்டு, பாட்டு, ஃபைட்டு, பாட்டு,ஃபைட்டு, பாட்டு, ஃபைட்டு,காமெடி, சுபம் . ஹீரோ குடும்பம், வில்லன் குடும்பம், ஹீரோயின் குடும்பம் மூணும் சேர, விலக, யார் கடைசியா யார் கூட சேர்றாங்கன்னு நடக்கற களேபரம் தான் 'மன்னர் வகையறா'.

மன்னர் வகையறா, மொய் எழுதுற இடத்துல ஜாதிய சொல்லி பெருமை பேசுதல், கலப்புத் திருமணம் பண்ணினவங்களை போலீஸ் ஸ்டேசன்லயே அடிச்சு பொளக்கறதுன்னு ஜாதி வெறியர்களை கொம்பு சீவும் காட்சிகளையும் ஏகத்துக்கு வைத்திருக்கிறார்கள். அதே போல், இன்னும் எத்தனை நாளைக்கு 'புஷ்பா புருசன் யாரு', காலைல ரமேஷ், மாலைல சுரேஷ் போன்ற வசனங்களை காமெடி என சொல்லி திரையில் அரங்கேற்றுவார்கள் என தெரியவில்லை. 

ஆனால், இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு பார்த்தால், படம் ஜாலியாகவே செல்கிறது. ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, சரண்யா பொண்வண்ணன், ஜெயபிரகாஷ் என ஒரு ஊரே படத்தின் காமெடிக்கு தீனி போட்டாலும், படம் முழுக்க கலக்கி இருப்பவர் ஆனந்தி தான். அவர் வரும் காட்சியில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பு சத்தம் கொட்டுகிறது. அவ்வளவு சின்ன பெண்ணாய் இருக்கிறார். பள்ளியில் படிப்பதாக சொன்னாலும் நம்பும் அளவுக்கு இருக்கிறது அவரது முகம். ஆனந்தியின் முந்தைய படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் படத்தில் இருந்து கமர்ஷியல் ஹீரோயினாக வளர்ந்திருக்கிறார்.

மன்னர் வகையறா விமர்சனம்

விமல் இந்தப் படத்தை தானே தயாரித்து நடித்துள்ளார். இது அவருக்கு 25வது படமும் கூட. எப்படியாவது படத்தை ஹிட்டடித்து விட வேண்டும் என தயாரிப்பாளராக பல செலவும், நடிகராக தனது முழு உழைப்பையும் கொட்டியுள்ளார். அவை இரண்டுமே ஸ்கீரினில் நன்றாக தெரிவது என்பதே அவருக்கு வெற்றி.

இயக்குநர் பூபதி பாண்டியன் , தான் காமெடியில் எப்போதுமே கிங் என்பதை மற்றுமொரு முறை நிரூபித்திருக்கிறார். படத்தில் வரும் பாட்டியில் இருந்து எல்லா துணை நடிகர் கதாபாத்திரத்திலும் காமெடி துணுக்குகளை அள்ளி வீசியிருக்கிறார். அது பல இடங்களில் க்ளிக்கும் ஆகி இருக்கிறது. விமல் - ஆனந்தி மொபைல் காமெடி, பிரபு வீட்டுக்கு சரண்யா குடும்பம் வருவது, பரிட்சை ஹால், கல்யாண மேடை என படம் முழுக்க அவ்வளவு காமெடி இருந்தும், சற்று தூக்கலாய் வரும் சண்டைக் காட்சிகளும், பாடல்களும் ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்திவிடுகிறது. 

மன்னர் வகையறா விமர்சனம்

இருக்கிற பாடல்கள் போதாது என நினைத்தாரோ என்னவோ, 'கட்டாயக் கவிஞர் ' இயக்குநர் பூபதி பாண்டியன் எழுதியது என சொல்லி ப்ரோமோ பாடல் வேறு படத்தில் வருகிறது. எதுக்க்க்க்க்க்க்க்கு! . அது போக அரிவாள் சண்டை, வேல் சண்டை, கார் சேஸ் சண்டை, முகமூடி போட்ட சண்டை என ரகத்துக்கு ஒன்று வருகிறது. 

'மாப்ள பரிட்சை நல்லா எழுதி இருக்கேல' என விமலை கேட்டுக்கொண்டே இருப்பார் ரோபோ சங்கர். வழக்கம் போல விமல் பரிட்சையில், அது ஸ்பாய்லர் சொல்ல முடியாது. காமெடியிலேயே 70 மார்க்குக்கு மேல் வாங்கும் பூபதி பாண்டியன், தேவையில்லாமல், அதிக பேப்பர் வாங்கி பாடல், சண்டை என எழுதி ரசிகர்களை கடுப்பேற்றி, இறுதியில் ஜஸ்ட் பாஸ் வாங்குகிறார். 

 

வீக்கெண்டில் ஜாலி மூடில் ஒரு படத்துக்கு சென்று திரும்பலாம், என நினைப்பவர்கள் நிச்சயமாய் மன்னர் வகையறாவுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.

https://cinema.vikatan.com/movie-review/114747-mannar-vagaiyara-movie-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.