Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் எதிர் இலங்கை டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இலங்கைக்கு அதிக வாய்ப்பு

roshen-silva-696x464.jpg AFP
 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் நிறைவின் போது பங்களாதேஷை குறைவான ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இலங்கை வீரர்கள் எதிரணியை விட 312 ஓட்டங்களால் முன்னிலையும் பெற்றிருக்கின்றனர்

 

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற இந்த ஆட்டம் நேற்று (08) டாக்காவில் ஆரம்பமாகியிருந்தது.

முதல் நாளில் போட்டியில் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் காணப்பட்டிருந்த காரணத்தினால் 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்தது. அதாவது, முதல் இன்னிங்சில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி 222 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்ததுடன், இதன் பின்னர் மைதான சொந்தக்காரர்களான பங்களாதேஷ் அணியினர் அவர்களின் முதல் இன்னிங்சில் துடுப்பாடி 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலை ஒன்றை ஆட்ட நேர முடிவில் அடைந்திருந்தனர். களத்தில் லிடன் தாஸ் 24 ஓட்டங்களுடனும், மெஹிதி ஹசன் 5 ஓட்டங்களுடனும் நின்றிருந்தார்கள்.

 

166 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இப்போட்டியில் தம்முடைய முதல் இன்னிங்சைத் தொடர்ந்த பங்களாதேஷ் அணிக்கு இரண்டாம் நாளின் முதல் விக்கெட்டைக் கைப்பற்றி சுரங்க லக்மால் மோசமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். லக்மாலினால் பங்களாதேஷ் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் லிடன் தாஸ் போல்ட் செய்யப்பட்டு 25 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

எனினும், ஐந்தாம் விக்கெட்டுக்காக மெஹிதி ஹசனுடன் இணைந்து கொண்ட அணித் தலைவர் மஹ்மதுல்லா தனது தரப்பின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை நூறைத் தாண்ட வைத்திருந்தார். இந்த நிலையில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் பந்துவீசத் தொடங்கியிருந்த அகில தனஞ்சய தன்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட்டாக மஹ்மதுல்லாவை போல்ட் செய்தார். இதனால் பங்களாதேஷ் அணியின் தலைவர் 17 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பியதோடு, பங்களாதேஷுக்கு நம்பிக்கை தரத் தொடங்கியிருந்த மெஹிதி ஹசன் – மஹ்மதுல்லா ஜோடி இணைப்பாட்டமும் 34 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.

மஹ்மதுல்லாவின் விக்கெட்டைத் தொடர்ந்து அதே ஓவரில் சபீர் ரஹ்மானின் விக்கெட்டையும் ஓட்டமெதுவுமின்றி தனஞ்சய கைப்பற்றினார். தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களையும் அபாரமான பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திய இலங்கை அணி ஆட்டமிழக்கச் செய்ய முடிவில், 45.4 ஓவர்களில் 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் மதிய போசண இடைவேளைக்கு முன்பாகவே பறிகொடுத்திருந்தது.

 

 

இறுதி 5 விக்கெட்டுக்களையும் வெறும் 3 ஓட்டங்களுக்கு பறிகொடுத்திருந்த பங்களாதேஷ் அணியில், பொறுப்பான முறையில் ஆடியிருந்த ஓரே வீரரான மெஹிதி ஹசன் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும், தில்ருவான் பெரேரா 2  விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து 112 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 9 ஓட்டங்களுடன் வெற்றிகரமாக மதிய போசணத்தை எடுத்துக் கொண்டது.

மதிய போசணத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்தது. முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரே அந்த மூன்று விக்கெட்டுக்களாக காணப்பட்டிருந்தனர். இதில் தனஞ்சய டி சில்வா மாத்திரம் 20 ஓட்டங்களைக் கடந்திருந்தார்.

எனினும், தேநீர் இடைவேளை வரை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்ன மற்றும் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் களத்தில் இருந்தனர். இதனால், இன்றைய நாளின் தேநீர் இடைவேளையில் இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு கிட்டவான முன்னிலையுடன் காணப்பட்டிருந்தது.

 

இன்றைய நாளுக்கான போட்டியின் இறுதி இரண்டு மணி நேரங்களில் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரம் காட்டினர். இதனால் தேநீர் இடைவேளையை அடுத்து முதல் விக்கெட்டாக திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். கருணாரத்வை அடுத்து தினேஷ் சந்திமாலின் (30) விக்கெட்டும் வீழ்ந்தது. தொடர்ந்து இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்களில் ரொஷேன் சில்வா தவிர்ந்த அனைவரும் மோசமான துடுப்பாட்டம் ஒன்றை வெளிக்காட்டியிருந்தனர்.

ரொஷேன் சில்வா போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி பெற்றுக் கொண்ட அரைச் சதத்துடன், 300 ஓட்டங்களுக்கு மேல் பங்களாதேஷ் அணியை விட முன்னிலை அடைந்து கொண்ட இலங்கை அணி போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில், 62 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து இரண்டாம் இன்னிங்சில் காணப்படுகின்றது.

இப்போட்டியின் மூலம் தொடர்ச்சியாக தனது இறுதி நான்கு டெஸ்ட் இன்னிங்சுகளிலும் 50 இற்கு மேலான ஓட்டங்களை பெற்றிருக்கும் ரொஷேன் சில்வா 58 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

பங்களாதேஷ் அணியின் சார்பில் பந்துவீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களையும், தய்ஜூல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

ஸ்கோர் விபரம்

 

 

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வங்காள தேசத்துடனான 2-வது டெஸ்டில் இலங்கை வலுவான முன்னிலை

வங்காள தேசத்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 312 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான முன்னிலை வகிக்கிறது.

 
வங்காள தேசத்துடனான 2-வது டெஸ்டில் இலங்கை வலுவான முன்னிலை
 
டாக்கா:

வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டாக்கா ஆடுகளம் முதல் ஓவரில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், ரோசன் டி சில்வா ஆகியோர் அரைசதம் அடித்தனர். வங்காள தேசம் அணி சார்பில் அப்துர் ரசாக், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

அதன்பின்னர், வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். அந்த அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல்
வங்காள தேசம் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல், அகிலா தனஞ்செயா ஆகியோர் 3 விக்கெட்டுகளும், தில்ருவான் பெரார 2 விக்கெட்டும் கைப்பற்ரினர்.

இதையடுத்து, 112 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. வங்காள தேச வீரர்கள் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர். இதனால் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.

ரோஷன் சில்வா 58 ரன்களுடனும், சுரங்கா லக்மல் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து, இலங்கை அணி வங்காள தேசத்தை விட 312 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான முன்னிலையில் உள்ளது.

வங்காள தேசம் அணி சார்பில் முஸ்தபிகுர் ரகுமான் 3 விக்கெட்டும், தாஜுல் இஸ்லாம், ஹசன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும், அப்துர் ரசாக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/10050026/1145096/srilanka-lead-by-312-runs-against-bangladesh-in-second.vpf

  • தொடங்கியவர்

வங்கப்புலிகளை சொந்தமண்ணில் அடக்கியது இலங்கையின் சிங்கங்கள்

 

 

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டியில் 215 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது.

bangaladesh.jpg

ரங்கண ஹேரத் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் சுழலில் மிரட்ட பங்களாதேஷின் 2 ஆவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

28052816_10209005158320880_1058926031_n.

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது.

 

பங்களாதேஷுக்கு  கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகின்றது.

இரு அணிகளுக்குமிடையில் சிட்டகொங்கில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் டாக்காவில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

110 ஓட்டங்களால் முன்னிலை வகித்த இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.

தனது 2 ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்துவிக்கெட்டுளையும் இழந்து 226 ஓட்டங்களைப்பெற்றது.

இதையடுத்து 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்டது.

இன்று போட்டியின் 3 ஆவது நாளில் 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப்பெற்று 215 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய அகில தனஞ்சய 5 விக்கெட்டுகளையும் ரங்கண ஹேரத் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடரின் ஆட்டநாயகனாகவும் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் ரொஷான் சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.

இதில், அடுத்தடுத்த ஆட்டங்களில் அருமையாக ஆடிய ரொஷேன் சில்வா தொடர்ச்சியாக தனது நான்கு அரைச் சதங்களைக் பூர்த்தி செய்தார்.

இந்நிலையில் சுழல் மன்னன் ரங்கண ஹேரத் டெஸ்ட் வரலாற்றிலேயே அதிதிறமையான இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனை படைத்தள்ளார். அவர் இது வரை 415 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30484

  • தொடங்கியவர்

இரண்டரை நாளில் முடிந்த டாக்கா டெஸ்ட்: வங்காள தேசத்தை துவம்சம் செய்தது இலங்கை

 
அ-அ+

இரண்டரை நாட்களிலேயே முடிவடைந்த டாக்கா டெஸ்டில் வங்காள தேசத்தை 215 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-0 எனக் கைப்பற்றியது இலங்கை. #BANvSL

 
இரண்டரை நாளில் முடிந்த டாக்கா டெஸ்ட்: வங்காள தேசத்தை துவம்சம் செய்தது இலங்கை
ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய தனஞ்ஜெயா
வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று முன்தினம் டாக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் இருந்ததால், இரு அணிகளும் தலா ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது.

குசால் மெண்டிஸ் (68), ரோசன் சில்வா (56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காள தேச அணி சார்பில் அப்துர் ரசாக், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டும், முஸ்டாபிஜூர் ரஹிம் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காள தேசம் 110 ரன்னில் சுருண்டது. மெஹிது ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார்.

112 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தது, ரோசன் சில்வா 58 ரன்னுடனும், லக்மல் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201802101524497081_1_imrulkays-s._L_styvpf.jpg
ஹெராத் பந்தில் ஆட்டமிழந்து சோகமாக வெளியேறும் இம்ருல் கெய்ஸ்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய லக்மல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெராத் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இலங்கை அணி 226 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ரோசன் சில்வா 2-வது இன்னிங்சில் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 338 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் வங்காள தேச அணிக்கு 339 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸிங் செய்வது எளிதானதல்ல. இதனால் வங்காள தேசத்தின் தோல்வி உறுதியானது.

201802101524497081_2_herath-s._L_styvpf.jpg
நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஹெராத்தை பாராட்டும் சக வீரர்கள்

கடின இலக்குடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மாயாஜாலம் காட்ட 29.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காள தேசம் 123 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.

2-வது இன்னிங்சில் அறிமுக வீரரான தனஞ்ஜெயா 5 விக்கெட்டும், ஹெராத் நான்கு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த ரோசன் சில்வா ஆட்டநாயகன் விருதையும், தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/10152455/1145189/BANvSL-Dhaka-test-sri-lanka-beats-bangladesh-by-215.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.