Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலுக்குப் பின்னர் அரசின் நிலை என்ன?

Featured Replies

தேர்தலுக்குப் பின்னர் அரசின் நிலை என்ன?

tttt-46daf6845dd9386b0040eea97fb1a5ce8ca97667.jpg

 

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் கொழும்பு அர­சியல் களம் எப்­ப­டி­யான மாற்­றத்தைச் சந்­திக்கும் என்ற கேள்வி பர­வ­லாக எதி­ரொ­லிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

இப்­போது ஆட்­சியில் உள்ள கூட்டு அர­சாங்கம் நிலைத்­தி­ருக்­குமா? இல்­லையா? என்­பதே முதற் கேள்­வி­யாக இருக்­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் செய்து கொண்ட கூட்டு அர­சாங்­கத்தை அமைக்கும் உடன்­பாடு டிசம்பர் 31ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யாகி விட்­டது. அதனை இரண்டு கட்­சி­களும் புதுப்­பிக்­க­வில்லை.

உடன்­பாட்டை நீடிப்­பது தொடர்­பான ஆவணம் ஏதும் தனக்கு அனுப்­பப்­ப­ட­வில்லை என்று சபா­நா­யகர் கரு ஜய ­சூ­ரிய பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்­துள்ளார்.

கூட்டு அர­சாங்கம் பத­வியில் இருப்­பதைக் காரணம் காட்­டியே அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அர­சாங்கம் அதி­க­ரித்து வைத்­தி­ருக்­கி­றது.

முன்­ன­தாக இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­த­போது, அமைச்­ச­ர­வையில் இடம்­பெறும் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை குறைப்போம் என்ற வாக்­கு­று­தியைக் கொடுத்­தது. பின்னர் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம், அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை குறைக்கும் விதி­மு­றை­களும் கொண்டு வரப்­பட்­டன.

அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கு அமைய, அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள 30 அமைச்­சர்­களை மாத்­தி­ரமே அர­சாங்கம் நிய­மிக்க முடியும்.

ஆனால், தற்­போ­தைய அர­சாங்­கத்தில், ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட 46 பேர் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளாக இருக்­கின்­றனர். இவர்­களை விட, 23 இரா­ஜாங்க அமைச்­சர்­களும், 21 பிரதி அமைச்­சர்­களும் உள்­ளனர்.

ஒரு தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை பாரா­ளு­மன்­றத்தின் மூலம், வரை­யறை செய்ய முடியும் என்று 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் கூறப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய, தற்­போ­தைய கூட்டு அர­சாங்கம், 45 அமைச்­ச­ரவை அந்­தஸ்­து­டைய அமைச்­சர்­க­ளையும், பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை 48 ஆகவும் வைத்துக் கொள்ள முடிவு செய்­தது.

கூட்டு அர­சாங்கம் தொடர்­பான உடன்­பாடு நீடிக்­கப்­ப­டா­விடின், அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை 30 ஆக குறைக்க வேண்டும் என்­பது கூட்டு எதி­ர­ணியின் வாத­மாக இருக்­கி­றது.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் தான், கூட்டு அர­சாங்கம் தொடர்­பான உடன்­பாட்டை நீடிப்­பதா -இல்­லையா என்று முடி­வெ­டுக்கும் நிலைப்­பாட்டில் இருக்­கி­றது ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி.

ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இப்­போது இரட்டை எதி­ரிகள். ஐ.தே.க ஒன்று, மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீ­லங்கா பொது­ஜன முன்­னணி மற்­றொன்று.

இந்த இரண்டு எதி­ரி­க­ளையும் வீழ்த்தி, உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வெற்­றியைப் பெறும் கடி­ன­மான இலக்­குடன் பய­ணிக்­கி­றது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி.

இந்தத் தேர்­தலில் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி, எந்­த­வொரு கட்­சி­யிடம் தோல்­வி­யுற்­றாலும், அது கட்­சிக்குள் குழப்­பத்­தையும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மைத்­து­வத்­துக்கு ஆபத்­தையும் ஏற்­ப­டுத்தும்.

ஐ.தே.க. பல­ம­டைந்தால், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மைத்­துவம் பல­வீ­ன­மா­னது என்ற கருத்து கட்­சிக்குள் மேலோங்கும். அது மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மைத்­து­வத்தை நோக்கி கட்­சி­யி­னரை சாயச் செய்யும்.

அதே­வேளை, மஹிந்த ராஜபக் ஷ அணி வெற்றி பெற்­றாலும் கூட, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியில் இருப்­பதில் இனிப் பய­னில்லை என்று பலரும் வெளி­யேறும் நிலை ஏற்­ப­டலாம்.

அப்­ப­டி­யான நிலையில், ஆட்­சியைத் தொடர்­வ­தற்கு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மீண்டும் ஐ.தே.க.வுடன் உடன்­பாட்டை நீடித்துக் கொள்ள வேண்­டிய தேவை ஏற்­படும்.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்­னரே, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி தனித்துச் செயற்­ப­டு­வதா, கூட்டு அர­சாங்­கத்தில் இணைந்­தி­ருப்­பதா என்று முடிவு செய்யப் போகி­றது.

கூட்டு அர­சாங்­கத்தில் இணைந்­தி­ருப்­ப­தாயின், இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு உடன்­பாட்டை அதி­கா­ர­பூர்­வ­மாக நீடித்துக் கொள்ள வேண்டும். அவ்­வாறு நீடிக்­காமல் கூட்டு அர­சாங்கம் 46 அமைச்­சர்­களை பத­வியில் வைத்­தி­ருக்க முடி­யாது.

அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை 30 ஆக குறைக்க முடி­வெ­டுத்தால், இரண்டு பிர­தான கட்­சி­க­ளுமே ஆட்டம் காணும். அமைச்சர் பத­வியை இழப்­ப­வர்கள், எதிர் அணிக்கு ஓடிச் செல்லக் கூடிய அபாயம் இருக்­கி­றது.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் அர­சாங்­கத்தின் ஒவ்­வொரு நகர்­வு­க­ளுமே, முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்கும். எடுக்­கப்­படும் ஒவ்­வொரு முடி­வு­களும், பல எதிர்­வி­னை­களை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­வை­யா­கவும் இருக்கும்.

இதனால் தான், பல முக்­கி­ய­மான விட­யங்­களில் முடி­வு­களை எடுக்­காமல் ஆறப் போட்டு வரு­கி­றது அர­சாங்கம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட பல சம­யங்­களில் சாதா­ரண அர­சி­யல்­வா­தி­களின் நிலைக்குக் கீழ் இறங்கி விடு­கிறார். பல்­வேறு அதி­ரடி அறி­விப்­பு­களை வெளி­யிட்டு வாக்­கா­ளர்­களைத் தன் பக்கம் இழுக்க முயற்­சிக்­கிறார்.

நிதி முகா­மைத்­து­வத்தை கையில் எடுத்துக் கொள்ளப் போவ­தாக ஓர் அறி­விப்பை வெளி­யிட்டார். ஆனால் அவ்­வாறு நிதி முகா­மைத்­து­வத்தை ஜனா­தி­ப­தியின் கையில் எடுத்துக் கொள்­வ­தற்­கான அதி­காரம் அர­சி­ய­ல­மைப்பில் அவ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­கிறார் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ்.

 தவறு செய்­த­வர்­களைத் தண்­டிக்க நட­வ­டிக்கை எடுப்பேன். அதனைச் செய்த பின்­னரே பத­வியை விட்டு வில­குவேன் என்று மற்­றொரு சப­தமும் எடுத்­துள்ளார் ஜனா­தி­பதி. 

தவறு செய்­த­வர்கள் முன்­னைய அர­சாங்­கத்தில் மாத்­தி­ர­மல்ல இப்­போ­தைய அர­சாங்­கத்­திலும் இருக்­கி­றார்கள். அதனை ஜனா­தி­ப­தியும் கூட ஏற்றுக் கொள்­கிறார்.

ஏனென்றால், முன்­னைய அர­சாங்­கத்­தி­னதும், இப்­போ­தைய அர­சாங்­கத்­தி­னதும் திரு­டர்கள் ஒன்று கூடிப் பேசி, உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் தான், ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் மீது விவாதம் நடத்­து­வது என்று முடி­வெ­டுத்­தி­ருக்­கி­றார்கள் என்று அவரே கூறி­யி­ருக்­கிறார்.

அவர்­களை நோக்கி, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாடா­ளு­மன்ற விவா­தத்தை உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்னர் நடத்த முடி­யுமா என்று அப்­பா­வித்­த­ன­மாக சவால் விடு­வ­தையும் காண முடி­கி­றது.

நிறை­வேற்று அதி­கா­ரங்­களை முழு­மை­யாக இழக்­காத ஜனா­தி­பதி, இப்­படி ஒரு சவாலை பகி­ரங்­க­மாக விடுக்கும் அள­வுக்கு பல­வீ­ன­மா­ன­வ­ராக காணப்­ப­டு­கிறார்.

தமது தரப்பில் யாரும் தவறு செய்­ய­வில்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அவர், ஏனைய இரண்டு தரப்­பு­களின் திரு­டர்­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு முனை­கிறார்.

அதே­வேளை, அவ­ரது தரப்­பிலும் திரு­டர்கள் உள்­ளனர் என்று நிரூ­பிக்கும் ஆவ­ணங்­க­ளுடன் ஐ.தே.க.வின் பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள். குழு­வொன்று தயார் நிலையில் இருக்­கி­றது.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்­ன­தாக, ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் தொடர்­பாக பாரா­ளு­மன்ற விவாதம் நடத்த தயாரா என்று ஜனா­தி­பதி எழுப்­பு­கின்ற கேள்வி, அவரை ஒரு ஆளு­மை­யுள்­ள­வ­ராக அதி­காரம் படைத்­த­வ­ரான தோற்­றத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. மாறாக, சாதா­ரண அர­சி­யல்­வா­தி­யாக சவால் விடு­வ­தான தோற்­றப்­பாட்­டையே காண்­பிக்­கி­றது.

கூட்டு அர­சாங்­கத்­துக்குள் முரண்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ள­தா­யினும், இந்தக் கூட்டு தொடர வேண்டும் என்ற எண்ணம் தலை­வர்­க­ளுக்கு மத்­தியில் இருக்­கி­றது. அதனை இன்­னமும் பல அமைச்­சர்­களும் வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

அதே­வேளை, இந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு தனித்து ஆட்­சி­ய­மைப்போம் என்ற கருத்தில் இருப்­ப­வர்­களும் உள்­ளனர்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இந்தக் கூட்டு அர­சாங்கம் தொடர வேண்­டி­யது அவ­சியம்.

ஏனென்றால், அவர்கள் பத­விக்கு வரும் போது கொடுத்த வாக்­கு­று­திகள் இன்­னமும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல் கூட்டு அர­சாங்­கத்தை விட்டு நழு­வு­வது தமது அர­சியல் செல்­வாக்கைப் பாதிக்கும் என்று அவர்கள் நிச்­சயம் எதிர்­பார்ப்­பார்கள்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் ஒரு கூட்­டத்தில் உரை­யாற்­றிய போது, தவறு செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை பெற்றுக் கொடுத்து விட்டே அர­சி­யலில் இருந்து வில­குவேன் என்று கூறி­யி­ருந்தார்.

அடுத்த பத­விக்­கா­லத்­துக்கும் அவர் அடித்­தளம் போடு­கிறார் என்ற கருத்­துக்­களை இது வலுப்­ப­டுத்­தி­னாலும், கொடுத்த வாக்­கு­று­தி­களைத் தான் காப்­பாற்­ற­வில்லை என்ற எண்ணம் அவ­ருக்குள் இருப்­ப­தையும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அவ்வாறு தவறு இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டுமாயின், தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும்.

இந்த அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் தோல்வியடைந்தால், அந்த வாக்குறுதியை ஜனாதிபதியால் காப்பாற்ற முடியாது.

அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலிலும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற சிக்கல் இரண்டு கட்சிகளின் தலைமைகளுக்கும் உள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மோதிக்கொள்ளும் இந்தக் கட்சிகள், தேர்தலுக்குப் பின்னரும் இதே போக்கைத் தான் கடைப்பிடிக்குமா என்பதைப் பொறுத்தே, அரசாங்கத்தின் உறுதித்தன்மை அமைந்திருக்கும்.

இந்தநிலையில், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்ற கருத்தை அவ்வளவாக தட்டிக்கழித்து விட முடியாது என்ற நிலையே இப்போது காணப்படுகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-01-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.