Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வடக்கை குறி வைத்திருக்கும் விடுதலைப் புலிகள்'

Featured Replies

வடபகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றிற்கான ஒத்திகைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றனர்" என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

"கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான விடுதலைப் புலிகள் வடக்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அங்கு மிகத் தீவிரமான போர்த் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

புதிய படையணிகள் பயிற்றுவிக்ப்பட்டுள்ளனர். மண் மூட்டைகள் கொண்டு மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் படையணிகள் தமது ஒத்திகைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகளவான கைத்துப்பாக்கி வீரர்களும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அவர்கள் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்கக்கூடும். இந்த தயாரிப்புக்களுக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகளினால் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் அவர்கள் வடக்கில் தமது கவனத்தை செலுத்தியிருப்பதை தெளிவாக காட்டுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியின் 10 அவது பட்டாலியன் நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்த விடுதலைப் புலிகள், அவர்கள் மீது 81 மி.மீ மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் கப்டன் - 1, லெப்ரின்கள் - 2, படையினர் - 3 என 6 படையினர் கொல்லப்பட்டும், 23 படையினர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலாகும். இதன் மூலம் படையினரை பதில் தாக்குதலுக்கு தூண்டியுள்ளனர். இதன் தொடர்ச்சி மணலாறு வரை விரிவாக்கப்படலாம். மணலாற்றில் உள்ள கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். 10 ஆவது பட்டாலியன் மீது நேற்றும் மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் போரிடும் வலுவை இழந்து விட்டதாக கூறப்படுகின்றது. இது அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் ஏற்பட்ட கருத்தாகும். அவர்கள் தமது சொந்த பிரச்சாரங்களையே நம்ப தலைப்பட்டுள்ளனர்.

ஆனால் விடுதலைப் புலிகள் தமது கவனத்தை வட போர்முனையில் செறிவாக்குவது தெளிவாக புரிகின்றது. தமிழ் - சிங்கள புதுவருடம் வரப்போகும் எதிர்வரும் கிழமைகளில் இந்த உண்மைகள் வெளிவரலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.

thanks for puthinam

விடுதலப் புலிகள் எங்கே தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்று அரசு உட்பட எல்லோருக்கும் புதிராக உள்ளதால், இப்படியான செய்திகள் மூலம் அவர்களை திசைதிருப்ப முயற்சிக்கலாம்.

விடுதலப் புலிகள் எங்கே தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்று அரசு உட்பட எல்லோருக்கும் புதிராக உள்ளதால், இப்படியான செய்திகள் மூலம் அவர்களை திசைதிருப்ப முயற்சிக்கலாம்.

புலி வருது புலி வருதுனு கதைதன், எதிர் பாக்காத நேரத்தில எதிர் பாக்காத இடத்தில அடிகிறதுதான் புலிகள்ட ஸ்டைல், அடிக்கும் போது பாக்கட்டும் :P

புலிகளைப்பற்றி தெரிஞ்சும்,தெரியாததப்போல் கதக்கினம்--இதநினைச்சா வேடிக்கையாகத்தான்

இருக்கு :lol::lol:

அரசுக்கும் குழம்பம் ஆய்வாளர்களுக்கும் குழப்பம்.

புலிகளின் குறி வடக்கில்

புலிகளின் குறி மட்டக்களப்பில்

புலிகளின் குறி கொழும்பில்

புலிகளின் குறி சர்வதேச விமானநிலையத்தில்

இலங்கைப் புலனாய்வுத்துறை இந்தியப் புலனாய்வுத்துறை இராணுவ ஆய்வாளர்கள்

இப்படிப் பலபேர் புலிகள் குறி வைக்குமிடங்களை துளல்லியமாகக் கூறுகின்றார்களாம்.

ஆனால் அடிப்படையில் புலிகளின் குறி இவ்வளவு காலப் போராட்ட வரலாற்றினால்

இவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாதுள்ளதா?

புலிகளின் குறி எது?

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது புலிகளின் தந்திரோபாயத்தை சரியாக விளங்கிகொள்ள முடியாதவர்கள் தங்களுடைய படையை எந்த இடத்திலும் தாக்குதல் நடக்கலாம் எனவே தயாராக இருங்கள் என்ற தகவலை பரப்புவதற்காக ஊடகங்களை பயன்படுத்தும் முறை.. இது பல நாடுகளில் பல யுத்தங்களில் இப்பவும் பயன்படுத்துகிறார்கள்..

அதுபோல தான் இதுவும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.