Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயில்கொள்ளும் நிர்வாகம் துயில் மீள்வது எப்போது??

கருத்துக்கள் தொடர்பாக கருத்து 8 members have voted

  1. 1. யாழ்களம் தொடர்பான கருத்துக்களிற்கு நிர்வாகத்தின் கருத்து?

    • நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்.
      5
    • நிர்வாகம் தொடர்ந்து துயிலட்டும்!
      1
    • நிர்வாகம் என்று ஒன்று உள்ளதா?
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

யாழ்களத்தில்அண்மைக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்்திற்கு தாம் ஆதரவு சேர்க்கிறோம் அல்லது மக்களை விழிப்படையச் செய்கிறோம் என்னும் பெயரில் போராட்டத்தை நடத்திச் செல்ல உதவிசெய்து வரும் மக்கள் மத்தியில் விசமப் பிரச்சாரங்களும் அம்மக்களின் மனங்களை விரக்தியில் தள்ளிவிடும் கருத்துக்களும் பதியப்பட்டு வருகின்றன. சில தலைப்புக்்களில் நேரடியாக யாழ் களத்தின் மீதான நேரடியான கேள்விகளுக்்குமே யாழ்கள நிர்வாகம் மெளனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் அர்த்தம் யாழ்கள நிர்வாகத்தவர்கள் யாழ்களத்தில் தம் கவனத்தைச் செலுத்தாது இருப்பதா அன்றி அதன் மூலம் விளம்பரத்தை எதிர்பார்த்்தா? இதற்காவது பதில் தருவார்களா?

தேசியப் போராட்டத்திற்கு உதவி செய்வது என்பது ஒவ்வொருவரதும் கடமையாகும்.கடமை மட்டுமல்ல அது அவர்களின் உரிமை. சில சமயங்களில் கடமை எதுவெனத் தெரியாது இருப்பின் அன்றி அவர்களது உரிமை எதுவெனத் தெரியாதிருப்பின் அதனை அவர்களிற்கு சுட்டிக்காட்டலாம். அன்றி நான் செய்துவிட்டேன் அதனால் நீயும் செய்யவேண்டும், நான் இவ்வளவு செய்தேன் நீ எவ்வளவு செய்தாய் என்று கேட்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமானது. வலதுகையால் கொடுப்பது இடதுகைக்குத் தெரியாது செய்யவேண்டும் என்று எம் முன்னோர்கள் கூறுவார்கள்.

யாழ் இணையமானது தனது நோக்கத்தினை (தனது இலக்கினை அல்லது கொள்கையினை) தெளிவாக அறியத்தருமாயின் அந்நோக்கினை நாமும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

இத்தலைப்பும் முன்பு நிர்வாகம் பற்றிய தலைப்புக்கள் அகற்றப்பட்டது போன்று அகற்றப்படுமா? :lol:

  • தொடங்கியவர்

இவ்விடயத்தினை எழுதியபின்னர் இங்கு குறிப்பிட்ட விடயம் பற்றி இன்னொரு உறவு எழுதியிருந்த இணைப்பும் கண்ணில் பட்டது. அதனை நீங்களும் சென்று பார்வையிட..

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry271661

நான் மட்டும் தான் என்று நினைத்தேன்..நீங்களும் அப்படித்தான் நினைக்கின்றீர்களா? ஆனால் நான் உறுப்பினர்களை பற்றி கதைத்தேன்..நீங்கள் நிர்வாகம் பற்றி சொல்லி இருக்கின்றீர்கள் :lol:

"துயில்கொள்ளும் நிர்வாகம் துயில் மீள்வது எப்போது??" என்ற இந்த தலைப்பு மிகவும் வக்கிரமான முறையில் எழுதப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் "நிருவாகம் பதில் அளித்துக் கொண்டுதான் இருக்கிறது" என்ற தெரிவு வேண்டுமென்று போடப்படவில்லை. இதனால் நான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

"துயில்கொள்ளும் நிர்வாகம் துயில் மீள்வது எப்போது??" என்று இவ்வாறு கேள்விகள் கேட்கும் முன் "நாங்கள் எமது பணிகளை ஒழுங்காகச் செய்கின்றோமா??" என்று எங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டால் அது மிகப் பொருத்தமாக இருக்கும்.

குழப்பகரமான செய்தி அல்லது பிழையான ஒரு தகவல் காணப்படும் போது யாழ் கள உறவுகள் செய்ய வேண்டிய முதலாவது வேலை முறைப்பாடு பட்டனை (ரிப்போர்ட் ஒப்சன்) உடனடியாகக் கிளிக் செய்து நிருவாகத்திற்கு அறிவிப்பது தான்! இதை எத்தனை பேர் செய்கின்றீர்கள்? ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யாது பேசாமல் இருக்கிறீர்கள் அல்லது முட்டாள்தனமான கருத்தை எழுதிய மோட்டுச் சாம்பிராணியுடன் தர்க்கத்தில் ஈடுபடுகின்றீர்கள். இதனால் ஏற்படும் பின்விளைவு என்ன? பிடுங்குப்பாடுதான்!

நான் பிழையான தகவல்கள், கருத்துக்கள் காணப்படும் போது உடனடியாக நிருவாகத்திற்கு ரிப்போர்ட் மூலம் அறிவிக்கின்றேன். அவர்களும் மிகக் குறுகிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கின்றார்கள்.

இதைவிட, மிகச் சிக்கலான விடயங்களை நிருவாகத்திற்கு தனிமடலில் அறிவிக்கின்றேன். அவர்கள் குறுகிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

நீங்கள் உங்கள் கடமைகள் ஒன்றையும் ஒழுங்காகச் செய்யாது, நிருவாகம் ஏதோ ரோபோ சுப்பர்மான் மாதிரி களத்தில் நடக்கும் பிரச்சனைகளையெல்லாம் மோப்பம் பிடித்து கண்டுபிடித்து தீர்த்துவைக்க்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

மேலும், தினமும் எழுதப்படும் நூற்றுக்கணக்கான கருத்துக்களை வாசித்து விளங்கி அவற்றை நிருவகிப்பது என்பது மிகக் கடினமான விடயம்.

எனவே, யாழ் கள உறுப்பினர்களாகிய நாங்கள்தான் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும்போது நிருவாகத்திற்கு அறிவிக்க வேண்டும். இது ஒவ்வொரு யாழ் கள உறவுகளினதும் கடமை. இதைவிடுத்து நிருவாகத்தை பற்றி வம்புக்கிழுப்பது சுத்த அபத்தம்! இதை என்னால் ஏறுக்கொள்ள முடியாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நுனிப்புல் மேய்பவனல்ல.என்னைப்பொறுத்தவர

யாழ்களத்தில்அண்மைக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்்திற்கு தாம் ஆதரவு சேர்க்கிறோம் அல்லது மக்களை விழிப்படையச் செய்கிறோம் என்னும் பெயரில் போராட்டத்தை நடத்திச் செல்ல உதவிசெய்து வரும் மக்கள் மத்தியில் விசமப் பிரச்சாரங்களும் அம்மக்களின் மனங்களை விரக்தியில் தள்ளிவிடும் கருத்துக்களும் பதியப்பட்டு வருகின்றன.

உண்மையிலேயே நான் அந்த குறித்த கருத்துகளை மனதார வரவேற்கின்றேன். காரணம் அவையே உங்களை இத்தனை தூரம் பாதித்துள்ளன என்பதால். பலரும் போராட்டத்திற்கு பணம் கொடுத்துவிடுவதோடு தமது பங்களிப்பு குறித்து திருப்தி அடைகின்றனர். அத்துடன் நின்று விடாது மக்களின் அவலத்தில் பங்கு கொள்ள முயல வேண்டும். அம்மக்கள் இன்று தமது பாதுகாப்பு குறித்து விரக்தியின் விழிம்பில் நிற்கிறார்கள். அவர்களின் வேதனை தங்களின் வேதனையாக உணர்ந்து கொள்வதே, பல்வேறு கூறுகளாக, கட்சிகளாக பிரிந்து நிற்கும் எமது சமுகத்தை ஒன்றுபட வைக்க உதவும் ஆயுதமாகும். ஆகவே எவரும் தமது பங்களிப்பில் திருப்தியடையாது தயவுசெய்து மேலும் முயற்சி செய்து, ஈழ மண்ணில் மேலும் உயிர்கள் பலியிடப்படுவதை தடுக்க உதவவேண்டும்

தனிப்பட்ட நபர் ஒருவரின் கருத்தை எதிர்ப்பதற்காக நிர்வாகத்தை தூண்டும் இந்தச் செயல் அருவருக்கத்தக்கது.

அனைவரும் தாம் விரும்பியவாறு இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் வேறுபட்டவர்களை ஓரம் கட்டுவது போன்ற செயற்பாடுகள் ஒற்றுமைக்கு வித்திடாது. மாறாக பிரிவினையையே வளர்க்கும்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மாப்பிள்ளையின் கருத்தினை ஏற்கிறேன். ஏனென்றால் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்களது வேலைகளுக்கு மத்தியில் 24 மணித்தியாலமும் யாழினை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நானும் எதாவது பிழை என்று கண்டால் தனிமடலில் நிர்வாகத்தினருக்கு அறிவிப்பேன். அவர்கள் உடனே அவற்றினை சரி செய்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.