Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலுக்குப் பின் நடக்கப்போவது என்ன?

Featured Replies

தேர்தலுக்குப் பின் நடக்கப்போவது என்ன?

Mahinda-Sirisena-Ranil--5c120f17e0ac49eca0bb2b984e2aa247f38ea0f9.jpg

 

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு இன்­னமும், ஆறு நாட்­களே இருக்­கின்ற நிலையில் அர­சியல் கட்­சி­களும், சுயேட்சைக் குழுக்­களும் உச்­சக்­கட்டப் பிர­சா­ரங்­களில் இறங்­கி­யுள்­ளன.

இந்தத் தேர்­தலில் ஒரு­வரை ஒருவர் தாக்­கு­வ­தற்கும், பழி­போ­டு­வ­தற்கும் தான் பிர­சா­ரங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

நாளை மறுநாள் பாரா­ளு­மன்­றத்தின் சிறப்பு அமர்வில், ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் குறித்த விவாதம் நடக்­க­வுள்ள நிலையில், தனிப்­பட்ட முறை­யி­லான குற்­றச்­சாட்­டுகள், சேறு பூசல்­க­ளுக்­கான வாய்ப்பு இன்னும் அதி­க­மாக இருக்கப் போகி­றது.

வரும் 8ஆம் திகதி பிர­சா­ரங்கள் ஓய்ந்த பின்னர், தேர்­த­லுக்­காக செய்­யப்­பட்ட பிர­சா­ரங்­களை ஒரு­முறை மீளாய்வு செய்யும் வாய்ப்பு வாக்­கா­ள­ருக்குக் கிடைக்கும்.

பெப்­ர­வரி 10ஆம் திகதி உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், என்ன நடக்கப் போகி­றது- அதனால் தங்­க­ளுக்கு என்ன நடக்கப் போகி­றது- பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்தி எப்­படி சாத்­தி­ய­மாக்­கப்­படும் என்­றெல்லாம் அவர்­களின் முன்­பாக எண்­ணங்கள் ஓட வேண்டும்.

ஏனென்றால், இது உள்ளூர் அர­சி­ய­லையும், அபி­வி­ருத்­தி­யையும் மாத்­திரம் மையப்­ப­டுத்தி நடக்­கின்ற தேர்தல். ஆட்­சி­முறை பற்­றியோ, அர­சியல் வழி­மு­றைகள் பற்­றியோ தீர்மானங்­களை எடுக்­கக்­கூ­டிய தேர்தல் அல்ல.

ஆனால், வாக்­கா­ளர்­க­ளுக்கு பிர­தேச அபி­வி­ருத்தி பற்­றிய எந்த நம்­பிக்­கை­யையும் கொடுக்­காத- தேர்தல் பிர­சா­ரங்கள் தான் இம்­முறை பொது­வாக எல்லாக் கட்­சி­க­ளாலும் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில், யார் சிறந்த திட்­டத்தை முன்­வைத்­தவர் என்று சிந்­திக்க வேண்­டிய தேவை­யொன்றும் வாக்­கா­ளர்­க­ளுக்கு இருப்­ப­தாகக் கூற முடி­யாது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலை முன்­வைத்து ஒவ்­வொரு அர­சியல் கட்­சியும் முன்­வைத்த அர­சியல் விமர்­ச­னங்­களும், எச்­ச­ரிக்­கை­களும், வாக்­கு­று­தி­களும், தேர்­த­லுக்கு பின்னர் அர­சி­யலில் என்ன நடக்கப் போகி­றது என்ற கேள்­வியைத் தான் வாக்­கா­ளர்கள் மத்­தியில் எழுப்­பி­யி­ருக்­கி­றது.

தேர்தல் பிர­சா­ரங்­களின் போது, ஒவ்­வொரு கட்­சி­களும் கூறிய குற்­றச்­சாட்­டு­க­ளையும், வாக்­கு­று­தி­க­ளையும் எடுத்துப் பார்த்தால், தேர்­த­லுக்குப் பிந்­திய அர­சியல் சூழல் கொதி­நிலை கொண்­ட­தாகத் தான் இருக்க வேண்டும்.

அந்த வகையில், தெற்கின் அர­சி­யலை மையப்­ப­டுத்­தி­யுள்ள இரண்டு விட­யங்கள், யார் யாரெல்லாம் சிறைக்குப் போகப் போகி­றார்கள் என்­பது முதன்­மை­யான விடயம். யார் ஆட்­சியில் இருக்கப் போகிறார் என்­பது இரண்­டா­வது விடயம்.

தேர்­த­லுக்குப் பின்னர் நடை­பெறக் கூடிய மாற்­றங்கள் என இந்த இரண்­டையும் சுற்றித் தான் பெரும்­பாலும், வாக்­கு­று­திகள் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. மோச­டி­யா­ளர்­களை சிறைக்குள் தள்­ளாமல் விட­மாட்டேன் என்­பது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின வாக்­கு­றுதி. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வாக்­கு­றுதி, மோச­டி­யா­ளர்­களைக் காப்­பாற்­ற­மாட்டேன் என்ற வகையில் இருக்­கி­றது.

இங்கு மோச­டி­யா­ளர்கள் என்­பது யார்? முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் கொள்­ளை­யிட்­ட­வர்­களா - இப்­போ­தைய ஆட்­சிக்­கா­லத்தில் கொள்­ளை­யிட்­ட­வர்­களா அல்­லது இரண்டு பேருமா? என்­பது தான் கேள்வி.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ, முன்­னைய தற்­போ­தைய ஆட்­சிக்­கா­லத்தில் கொள்­ளை­ய­டித்­த­வர்­களைப் பற்றித் தான் பேசு­கிறார்.

ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போ­தைய ஆட்­சிக்­கால மோச­டி­யா­ளர்­க­ளையும் சேர்த்தே கூறு­கி­றாரா என்று தெரி­ய­வில்லை. ஏனென்றால் இப்­போ­தைய ஆட்­சியில் நடந்த மோச­டி­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்கள் அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளா­கவும், அவ­ரது கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவும் இருக்­கி­றார்கள்.

மஹிந்த ராஜபக் ஷவைத் தாம் காப்­பாற்றப் போவ­தில்லை என்று வெளிப்­ப­டை­யாகக் கூறும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ரவி கரு­ணா­நா­யக்­கவைக் காப்­பாற்றப் போவ­தில்லை என்று அடித்துக் கூறும் நிலையில் இல்லை.

மஹிந்த ராஜபக் ஷவின் மீதுள்ள குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்டால், அவ­ரது குடி­யு­ரிமை பறிக்­கப்­படும் என்ற பிர­சா­ரங்­களும், முடிந்தால் அதைச் செய்­யட்டும் பார்க்­கலாம் என்ற பிர­சா­ரங்­களும் தேர்தல் களத்தில் மேலோங்­கி­யி­ருந்­தன.

அதை­விட சிறை செல்­வதில் இருந்து மஹிந்த ராஜபக் ஷவைக் காப்­பாற்றப் போவ­தில்லை என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவின் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்டு, அவரைக் காப்­பாற்ற ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ, நட­வ­டிக்கை எடுக்­காது போனால், தேர்­த­லுக்குப் பின்னர் அவர் சிறைக்குச் செல்ல வேண்­டி­யி­ருக்கும்.

அவ்­வாறு நடந்தால் இலங்­கையின் வர­லாற்றில் சிறைக்குச் சென்ற முத­லா­வது முன்னாள் ஜனா­தி­பதி என்ற நிலையை பெறுவார்.

அது­போ­லவே, பிணை முறி மோச­டியில் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்கள் குற்­ற­வா­ளி­க­ளாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால், ரவி கரு­ணா­நா­யக்க போன்­ற­வர்கள் சிறைக்குச் செல்ல நேரிடும்.

இது ஐ.தே.க.வுக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும், குறிப்­பாக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தரப்பை பல­வீ­னப்­ப­டுத்தும்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது வலது கையாக ரவி கரு­ணா­நா­யக்­கவை வளர்த்து வந்தார்.

நிதி­ய­மைச்சர் பத­வியில் இருந்து, வெளி­வி­வ­கார அமைச்சர் பத­விக்கு மாற மறுத்த போது கூட, எல்லாத் துறை­க­ளிலும் தலை­மைத்­துவ அனு­ப­வத்தைப் பெற வேண்டும் என்று கூறியே அவரைச் சமா­தா­னப்­ப­டுத்­தி­யி­ருந்தார். 

அத்­த­கைய ரவி கரு­ணா­நா­யக்க கட்­சியின் உப தலைவர் பத­வியில் இருந்து கீழ் இறக்­கப்­பட்டு, சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­படும் போது, ஐ.தே.க.வுக்குள் ஏற்­க­னவே இருந்த புகைச்­சல்கள் மேலெழும்.

தலைமைப் பத­வியைக் குறி­வைத்­தி­ருக்கும் சஜித் பிரே­ம­தாச அண்­மைக்­கா­ல­மாக அமை­தி­யாக இருக்­கிறார். ரவி கரு­ணா­நா­யக்­கவின் வெளி­யேற்றம், சஜித் பிரே­ம­தா­சவின் கையைப் பலப்­ப­டுத்தும்.

உப­த­லைவர் பத­வியில் இருந்து, ரவி கரு­ணா­நா­யக்க நீக்­கப்­பட வேண்டும் என்று கூறி­யுள்ள திலக் மாரப்­பன குழு, உள்­ளக மோதல்­களை தடுக்க, சஜித் பிரே­ம­தாச வகிக்கும் பிரதி தலைவர் பத­வி­யையும் இல்­லாமல் செய்ய வேண்டும் என்று பரிந்­து­ரைத்­தி­ருக்­கி­றது.

இது சஜித்தை சீண்டி விடும் செய­லா­கவும் அமை­யலாம். அவ­ரது அண்­மைய அமை­தியை அது கலைத்து விடவும் கூடும். எனவே தேர்­த­லுக்குப் பின்னர் ஐ.தே.க.வுக்குள் குழப்­பங்கள் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புகள் ஏற்­ப­டலாம்.

அதே­வேளை, தேர்­த­லுக்குப் பின்னர் கோத்­தா­பய ராஜபக் ஷவைக் கைது செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் நிறை­வ­டைந்­தி­ருப்­ப­தாக அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருக்­கிறார். அமெ­ரிக்­காவில் இருந்து 12 ஆம் திகதி நாடு திரும்­பி­யதும் அவர் கைது செய்­யப்­படக் கூடும். அவ­ரது கைது, சிங்­களக் கடும் போக்­கா­ளர்­களை உசுப்பி விடு­வ­தாக இருக்கும்.

அதே­வேளை, உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மஹிந்த அணி வெற்றி பெற்று விட்டால், அதனை வைத்துக் கொண்டு அர­சுக்கு எதி­ரான போராட்­டங்கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­ப­டலாம்.

மக்­களின் ஆத­ரவை இழந்து விட்ட அர­சாங்­க­மாக அடை­யா­ளப்­ப­டுத்தி, அதனை செய­லற்ற நிலைக்குக் கொண்டு செல்­லவும் மஹிந்த ராஜபக் ஷ தயங்­க­மாட்டார். ஏற்­க­னவே ஒரு­முறை அவர், கொழும்பில் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி, நகரின் பல பகு­தி­களை செய­லற்ற நிலைக்கு கொண்டு சென்­றி­ருந்தார்.

அடுத்­த­முறை இது­போல சும்மா விட்டுப் போக­மாட்டோம், கொழும்பு வீதி முழு­வ­தையும் ஆத­ர­வா­ளர்­களால் நிரப்­புவோம் என்றும் அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தனக்கு மக்­களின் ஆத­ரவு இருக்­கி­றது என்­பதை மஹிந்த உறு­திப்­ப­டுத்திக் கொண்டால், அத்­த­கை­ய­தொரு உத்­தியைக் கையா­ளவே முனைவார். ஏனென்றால் தனக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கை­களில் இருந்து விரை­வாகத் தற்­காத்துக் கொள்ள வேண்­டிய அவ­சியம் அவ­ருக்கு இருக்­கி­றது.

எனவே, அர­சாங்­கத்­துக்குள் இருந்து ஆட்­களை தன்­பக்கம் இழுத்து, அரசைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­துடன், அதனை செயற்­பட முடி­யா­மலும் சூழலை அவர் ஏற்­ப­டுத்தக் கூடும்.

அதே­வேளை, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வென்று விட்டால், மஹிந்த ராஜபக் ஷ மீதான நட­வ­டிக்­கைகள் இறுக்­க­ம­டை­யலாம். ஆனால் அது அர­சாங்­கத்தைப் பலப்­ப­டுத்­துமா என்ற கேள்வி இருக்­கி­றது.

தேர்­த­லுக்குப் பின்னர் பிர­தமர் பத­வியில் இருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்க வேண்டும். அதற்கு ஐ.தே.க. தோல்­வி­டைய வேண்டும் என்று அமைச்சர் டிலான் பெரேரா கூறி­யி­ருக்­கிறார்.

அவ்­வாறு ஐ.தே.க.வின் தோல்­வியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வெற்­றியும் சாத்­தி­ய­மா­கு­மே­யானால், தனித்து ஆட்­சி­ய­மைக்க மைத்­தி­ரி­பால சிறி­சேன முயற்­சிக்கக் கூடும். அதற்­காக ஐ.தே.க.வினர் பலரை விலைக்கு வாங்கக் கூடும். அதன் கூட்­ட­ணி­யி­னரை விலை­பேசக் கூடும்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைத்தால், நிச்­ச­ய­மாக மஹிந்த ராஜபக் ஷவோ, கோத்­தா­பய ராஜபக் ஷவோ தண்­டிக்­கப்­ப­டு­வதில் இருந்து தப்பி விடு­வார்கள். ஏனென்றால் அவர்­களின் அனு­தா­பிகள் இன்­னமும் அந்தக் கட்­சிக்குள் பல­மாக இருக்­கி­றார்கள். அவர்கள், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சுதந்­தி­ர­மாகச் செயற்­பட விட­மாட்­டார்கள்.

அது­மாத்­தி­ர­மன்றி, மஹிந்­தவை பிர­தமர் ஆக்க வேண்டும் என்று போர்க்­கொடி உயர்த்­தி­னாலும் ஆச்­ச­ரி­யப்­பட முடி­யாது.

அதற்­காக மஹிந்த ராஜபக் ஷவை ஐ.தே.க. தண்­டிப்­ப­தற்கு உறுதி பூண்­டி­ருக்­கி­றது என்­றெல்லாம் கூற முடி­யாது, தேர்தல் காலம் வரை அவர்கள் அதனைக் கூறுவார்களே தவிர, தேர்தலுக்குப் பின்னர் அதனைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது, எனவே, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அரசியலில் பெரும் கேள்விக் குறியொன்று ஏற்படலாம்.

கூட்டு அரசாங்கம் நிலைத்திருக்குமா என்ற பிரச்சினை ஏற்படலாம் என்பதையே தேர்தல் கால பிரசாரங்களில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

அதேவேளை, அமைச்சர் ராஜித சேனாரத்ன 'ஜனாதிபதி - பிரதமர்' இடையிலான மோதல்கள் எல்லாம், தேர்தலுக்குப் பின் ஓய்ந்து விடும், இந்த ஆட்சி 2020 வரை தொடரும் என்று கூறியிருக்கிறார்.

அப்படியாயின், இந்த பிரசாரப் போர் வெறும் தேர்தல் மாயையாகத் தான் முடிந்து போகப் போகிறதா? வாக்காளர்களை ஏமாற்றும் தந்திரம் தானா?

பிரசாரங்களின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் உண்மையானால், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நிறையவே அரசியல் மாற்றங்கள் நிகழ வேண்டும். அவ்வாறு நிகழாது போனால், அதன் அர்த்தம், என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-02-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.