Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென் ஆஃப்ரிக்கா: அதிபர் ஜுமா பதவி விலக ஆளும் கட்சி அறிவுறுத்தல்

Featured Replies

தென் ஆஃப்ரிக்கா: அதிபர் ஜுமா பதவி விலக ஆளும் கட்சி அறிவுறுத்தல்

தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்துள்ளததைத் தொடர்ந்து அவரை அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முறைப்படி அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

President Jacob Zumaபடத்தின் காப்புரிமைREUTERS Image captionஜூமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது

இன்று செவ்வாய்க்கிழமை, அதிகாலை முதல் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அவரை அதிபர் பதவியில் இருந்து திரும்ப அழைப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு ஜூமா என்ன பதில் தெரிவித்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. அவரது அலுவலகமும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது 75 வயதாகும் ஜூமா அந்த முடிவுக்கு இணங்கவில்லையெனில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கடந்த 2009 முதல் பதவியில் உள்ள ஜூமா தனது பதவிக்காலத்தில் பெரும்பாலும் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.

அவரைப் பதவியில் இருந்து நீக்க தனது திட்டங்கள் என்னவென்பதை அக்கட்சி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், அக்கட்சியினர் சிலர் இதை தென் ஆஃப்ரிக்க ஊடகங்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஆகியவற்றிடம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஆஃப்ரிக்க தேசிய காங்கிரசின் கூட்டத்திலிருந்து வெளியேறி ஜூமாவைச் சந்திக்க சென்ற அக்கட்சியின் தலைவர் சிரில் ராமபோசா, ஜூமா பதவி விலகாவிட்டால் அவர் திரும்ப அழைக்கப்படுவார் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சந்திப்புக்கு பின்னர் ராமபோசா மீண்டும் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஜூமா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

தனக்குச் சொந்தமான வீட்டுக்கு செலவு செய்த அரசுப் பணத்தை திரும்பச் செலுத்தாததன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஜூமா மீறிவிட்டார் என்று 2016இல் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கூறியது.

ANC President Cyril Rampaphosaபடத்தின் காப்புரிமைEPA Image captionசிரில் ராமபோசா

பின்னர், 1999இல் நடந்த ஆயுத ஒப்பந்தத்தில் ஊழல், முறைகேடு, அச்சுறுத்தி பணம் பறித்தல், சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட 18 குற்ற வழக்குகளை ஜூமா சந்திக்க வேண்டும் என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு கூறியது.

சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களான குப்தா தொழில் குடும்பத்தை அரசின் முடிவுகளில் அவர் அதிகம் தலையிட அனுமதித்ததாக பொதுமக்களின் கோபத்துக்கு ஆளானார். இதை ஜூமா, குப்தா குடும்பத்தினர் ஆகிய இருவருமே மறுத்துள்ளனர்.

ஜூமா பதவி விலக சாத்தியம் உள்ளதா?

தனது கட்சியின் பதவி விலகல் அறிவுறுத்தலை ஜூமா மறுப்பது மிகவும் கடினமான ஒன்று. எனினும், கட்சியின் நம்பிக்கையை இழந்துள்ள போதிலும் அவர் பதவி விலக வேண்டும் என்று சட்டப்பூர்வமான அழுத்தம் எதுவும் இல்லை.

South Africa's president Jacob Zumaபடத்தின் காப்புரிமைAFP

வரும் பிப்ரவரி 22 ஆண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அவர் எதிர்கொள்ளவுள்ளார். அது ஒரு வேளை முன்கூட்டியே நடத்தப்படலாம்.

இதற்கு முன்பு இத்தகைய வாக்கெடுப்புகளில் அவர் தப்பியுள்ளார். ஆனால், இம்முறை அதற்கு அதிக சாத்தியம் இல்லை. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அது அவருக்கு மட்டுமல்லாது அவரது கட்சிக்கும் அவப்பெயரை உண்டாக்கும்.

கடந்த 2008இல் துணை அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமாவுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால், அப்போதைய அதிபர் தாபோ முபேக்கி பதவியில் இருந்து விலகினார்.

நெல்சன் மண்டேலா தலைமையில் 1994இல் ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த 2016இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்தான் ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் குறைந்த வாக்கு விகிதத்தைப் பெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும் என்று திங்களன்று கோரிக்கை விடுத்துள்ளன.

http://www.bbc.com/tamil/global-43046252

  • தொடங்கியவர்

ஜேக்கப் ஜூமா: ஓர் அரசியல் கைதியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்

தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஒரு காலத்தில் 'மக்களின் அதிபர்' என்று அழைக்கப்பட்டார். முறையான கல்வி இல்லாத, வசீகரம் மிக்க அரசியல் கைதியான அவர் தென் ஆஃப்ரிக்க அரசியலின் உச்சத்தை அடைந்தார்.

South African president, Jacob Zuma,படத்தின் காப்புரிமைAFP Image captionஜேக்கப் ஜூமா

ஆனால், தற்போது அவரது பெயரைச் சொன்னாலே ஊழல் என்று பொருள்படும்படி ஆகிவிட்டது.

இந்தியாவைச் சேர்ந்த, பணக்கார குப்தா தொழில் குடும்பத்தை அரசின் முடிவுகளில் அவர் அதிகம் தலையிட அனுமதித்தாக பொதுமக்களின் கோபத்துக்கு அவர் ஆளானார். இதை ஜூமா, குப்தா ஆகிய இரு குடும்பத்தினருமே மறுத்துள்ளனர்.

ஜூமாவின் கிராமப்புற வீட்டை புணரமைக்க பல கோடி டாலர் மக்கள் வரிப் பணம் செலவிடப்பட்ட விவகாரம் ஒன்றும் வெளியானது. அந்த வீட்டின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த செலவிடப்பட வேண்டிய அந்தப் பணத்தில் நீச்சல் குளம், கம்பி வேலி உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. விவகாரம் பெரிதானதும் கூடுதலாக செலவிட்ட பணத்தை திரும்ப செலுத்திவிட்டார் ஜூமா.

கறுப்பர்களுக்கு எதிரான வெள்ளையர்களின் நிறவெறி ஆட்சியின் கீழ் வறுமையில் வளர்ந்தவர் ஜூமா. அவரது தாய் பிற வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். ஜூமா கால்நடைகள் மேய்த்து வந்தார்.

அவரை இரு முறை அதிபராக தென்னாப்பிரிக்க மக்கள் தேர்ந்தெடுக்க இந்த எளிய பின்னணியை காரணம்.

பதின் வயதில் தொடங்கிய அரசியல் பயணம்

ஜூமா தனது பதின் வயதிலேயே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்தார். ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ராபன் தீவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

President Jacob Zumaபடத்தின் காப்புரிமைREUTERS Image captionஜூமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது

அங்கிருந்து விடுதலையான பின் பெரும்பாலான காலத்தை வெளிநாடுகளிலேயே கழித்தார். அப்போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ராணுவத்தில் தொடர்ந்து பதவி உயர்வு பெற்றார்.

சிறுபான்மை வெள்ளை இனத்தவரின் ஆட்சிக்கு முடிவுகட்டி நெல்சன் மண்டேலா அதிபராக பதவியேற்றத்தில் ஜூமாவுக்கு முக்கியப் பங்குண்டு.

தனது நெருங்கிய நண்பர் தாபோ உம்பெக்கி அதிபராக இருந்தபோது துணை அதிபராக ஜூமா பணியாற்றினார். இருவருக்குள்ளும் பிரச்சனை உருவானது. ஊழல் குற்றச்ச்சாட்டின்பேரில் உம்பெக்கி அவரை பதவி நீக்கம் செய்தார்.

இறுதியில் அதிகாரப்போட்டியில் ஜூமா வெற்றி பெற்றார். ஜூமா மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரானார் ஜூமா. ஜூமாவின் முன்னாள் நண்பர் உம்பெக்கி அதிபர் பதவியில் இருந்து விலகப் பணிக்கப்பட்டார்.

அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு கூட அவரது செல்வாக்கைப் பாதிக்கவில்லை. ஜூமா மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனினும், ஒரு பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது தெரிந்தும் அப்பெண்ணுடன் பாலுறவு கொண்டதை ஜூமா ஒப்புக்கொண்டார்.

பிபிசி உடனான ஒரு நேர்காணலில் தான் சில தவறுகளைச் செய்துள்ளேன் என்பதை ஒப்புக்கொண்ட ஜூமா, அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதகாகக் கூறினார். ஆனால், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

தாபோ உம்பெக்கிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதாபோ உம்பெக்கி

"இது நீங்கள் செய்யும் தவறு. நான் தற்போது இரு விசாரணைகளை எதிர்கொள்கிறேன். ஒன்று ஊடங்கங்கள் செய்யும் விசாரணை. இன்னொன்று நீதிமன்றத்தின் விசாரணை. நான் மோசமானவன் இல்லை. மோசமானவனாக எப்போதுமே இருந்ததில்லை," என்று அப்போது அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் வறுமையை ஒழித்ததில் அவரது பங்கு அசாதாரணமானது. மிகவும் மதிக்கப்பட்ட நிதி அமைச்சரை அவர் பதவி நீக்கம் செய்தபின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது.

சமீபத்திய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்றில், தன்னுடன் மோதல்போக்கில் உள்ள வெளிநாட்டு சக்திகளே தம்மை கீழே தள்ள முயல்வதாக அவர் கூறினார்.

கடைசியில், அவரது முடிவு அவரது கட்சிக்குள் இருந்தே வந்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆழமான விரிசல்களை உண்டாக்கியது. மக்களிடையே அவரது கட்சிக்கு மிகவும் மோசமான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வரும் 2019இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை ஜூமா தலைமையில் சந்திப்பது அக்கட்சிக்கு மிகவும் ஆபத்தான முடிவாகவே இருக்கும்.

 

http://www.bbc.com/tamil/global-43046347

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்காவிலும் அரசியல் நெருக்கடி: பதவி விலகினார் ஸுமா!

 

 

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெக்கோப் ஸுமா பதவி விலகினார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பேரில், அவரது கட்சியும் ஆளும் கட்சியுமான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அங்கத்தவர்கள் ஸுமாவுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டதையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.

2_Zuma.JPG

தனது பதவி விலகல் குறித்து நேற்று (14) தேசிய தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிய ஸுமா, தனது பெயரால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்றும் தன்னால் தான் சார்ந்த கட்சி பிளவுபடுவதைத் தாம் விரும்பவில்லை என்றும் இந்தக் காரணங்களை முன்னிட்டு தாம் உடனடியாகப் பதவி விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஸுமாவை பதவி விலகுமாறு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளிப்படையாகக் கேட்டிருந்தது. அத்துடன், அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பாராளுமன்றில் கொண்டுவரவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

எழுபத்தைந்து வயதாகும் ஸுமா கடந்த எட்டு வருடங்களாக ஜனாதிபதி பதவியில் இருந்திருக்கிறார். அவரைப் பதவி நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் பலமுறை முயற்சித்தபோதும் அவற்றை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர் ஸுமா என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30632

  • தொடங்கியவர்

ஜூமா பதவி விலக வேண்டுமா? என்ன சொல்கிறார்கள் தென் ஆப்ரிக்க தமிழர்கள்?

 

சாதாரண நிலையில் இருந்து தென் ஆப்ரிக்காவின் அதிபராக உயர்ந்த ஜேக்கப் ஜூமா மீது அந்நாட்டில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், அவரை அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முறைப்படி அறிவுறுத்தியுள்ளது.

ஜூமா பதவி விலக வேண்டுமா?படத்தின் காப்புரிமைAFP

இந்தியாவைச் சேர்ந்த, பணக்கார குப்தா தொழில் குடும்பத்தை அரசின் முடிவுகளில் அவர் அதிகம் தலையிட அனுமதித்ததாக பொதுமக்களின் கோபத்துக்கு அவர் ஆளானார். இதை ஜூமா, குப்தா ஆகிய இரு குடும்பத்தினருமே மறுத்துள்ளனர்.

மேலும், இன்று புதன்கிழமை ஜூமாவுக்கு நெருக்கமான குப்தா தொழில் குடும்பத்தினரின் வீட்டில் அந்நாட்டு பெரும் குற்ற வழக்குகளை கையாளும் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

குப்தா சகோதரர்களில் ஒருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூமா பதவி விலக நடந்த ஆர்ப்பாட்டம்படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTGETTY IMAGES Image captionஜூமா பதவி விலக நடந்த ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்தும், ஜுமா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழ் கூட்டமைப்பின் முன்னாள் துணை தலைவரான நடேஸ் பிள்ளை பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

'குப்தா குடும்பத்தினர் மீதான விசாரணை நல்ல தொடக்கமே'

''தென் ஆப்ரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் கவலை தரும் ஒன்றுதான். ஜேக்கப் ஜூமா மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள சூழலில் அவர் பதவி விலகுவதுதான் சரி'' என்று நடேஸ் பிள்ளை கூறினார்.

''குப்தா குடும்பத்தினர் மீது இன்று தொடங்கிய விசாரணை ஒரு நல்ல தொடக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும், இனி பல விஷயங்கள் வெளிவருவதற்கு இது ஒரு தொடக்கமாக அமையும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூமா மற்றும் குப்தா குடும்பங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பு?படத்தின் காப்புரிமைGALLO IMAGES Image captionஜூமா மற்றும் குப்தா குடும்பங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பு?

குப்தா தொழில் குடும்பத்தினருக்கும், ஜுமாவுக்கு உள்ள தொடர்பு குறித்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது பதிலளித்த அவர், ''இந்த குற்றச்சாட்டு முழுவதும் உண்மையா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, ஜுமாவின் மகன் குப்தா குழுமத்துடன் இணைந்து பணியாற்றியதும், குறுகிய காலத்தில் அவர் பெரும் செல்வந்தராக உருவெடுத்ததும் சந்தேகத்தை எழுப்புகிறது'' என்று குறிப்பிட்டார்.

'குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க ஜுமாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்'

ஜூமா பதவி விலகினாலும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே தென் ஆப்ரிக்க இந்திய சமூகத்தினரின் கருத்து என்றும் அவர் கூறினார்.

''மற்ற நாடுகளில் உள்ள அரசியல் சூழலை இதனுடன் ஒப்பிடமுடியாது. தென் ஆப்ரிக்க அரசியல் சூழல் வேறு. இனியும் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்தால் சட்டரீதியான நடைமுறைகள் மூலம் அவர் பதவி நீக்கப்படலாம்'' என்று நடேஸ் பிள்ளை மேலும் கூறினார்.

ஜூமா பதவி விலக சாத்தியம் உள்ளதா?படத்தின் காப்புரிமைAFP

ஜூமா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நீண்ட காலமாக வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்தவரான ஹேமேந்திரன் படையாச்சி பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

''ஜேக்கப் ஜூமாவை பதவி விலகுமாறு ஆளுங்கட்சி வலியுறுத்தியது தென் ஆஃப்ரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும். இந்தியப் பார்வையில் கூற வேண்டுமானால் இது தொழில்துறைக்கு நன்மையாக அமையும்'' என்று ஹேமேந்திரன் தெரிவித்தார்.

'இனியும்ஜூமா பதவி விலக மறுத்தால்

''இந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தினர் தங்களுக்கு ஜூமாவுடன் இருந்த நெருக்கத்தால் அவரை பயன்படுத்தி சில ஆதாயங்கள் அடைந்துள்ளனர். ஜூமா மீது ஊழல் கறை படிந்ததற்கு அவர்களும் காரணம்'' என்று அவர் மேலும் கூறினார்.

ஆளுங்கட்சி கேட்டுக்கொண்ட பின்னரும் ஜூமா பதவி விலக மறுத்துள்ள நிலையில், இச்சூழலையும் இந்திய அரசியல் நிலையையும் ஒப்பிட்டு பேசிய ஹேமேந்திரன், ''பதவி மீது அதிகாரவர்க்கத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் உலகெங்கும் ஒரேமாதிரியான மனநிலையில்தான் உள்ளனர்.இவர்களுக்கு தங்களின் பதவி மட்டுமே குறி'' என்று குறிப்பிட்டார்.

ஜூமா பதவி விலக வேண்டுமா?படத்தின் காப்புரிமைAFP

''இனியும் ஜூமா பதவி விலக மறுத்தால் அவர் மீது நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியால் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சட்டரீதியான முறைகளால் அவர் பதவிநீக்கம் செய்யப்படும் வாய்ப்புள்ளது'' என்று ஹேமேந்திரன் கூறினார்.

ஜூமா பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், தென் ஆப்ரிக்காவில் முதலீடுகள் அதிகரித்து நாட்டில் பொருளாதார வளம் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global-43055013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.