Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதை மாறும் கொடிகள்

Featured Replies

முதன்முதலாய்

உன்னருகே நான்.

உன் போதை விழிகள்

என் உடலில் எழுதின

எனக்கான தலைவிதி.

உன் மனமெப்படியோ

அப்படியே செல்ல

என் வாழ்க்கை

பயணிக்கும் போது

இடையிடையே

இரவுத் தீண்டல்களில்

பாதை தடுமாறும்.

உனக்காக பட்டினி

கிடந்தேன் பல நாட்கள்

மனநிறைவாய் வருவாய்.

எனக்கென இருநாட்கள்கூட

உன் மனம் தாங்காது

சலித்துப் போய்

நடுநிசியில்

யாருமில்லாத வானத்தை

வெறுப்பாக பார்ப்பதும்

கொண்டாட்டமில்லா இரவுகளை

அடியோடு தொலைப்பதும்

இன்றைய சூழ்நிலையாக்கினாய்.

உன் விஷமம் அறிந்தும்

உன்னுயிரோடு ஒட்டுகிறேன்

பிளாஸ்டிக் பை நீராக...

நீ என்னோடு எழுதிய கவிதைகள்

என் அருகே உறங்குகின்றனவே!

ஆ.. காதலிற்காக பட்டினி கிடப்பதா?

நம்மாள முடியாது சாமி!

தாங்கள் காதலை ஒரு தவமாகச் செய்யும் பெரிய முனிவர் போல் இருக்கிறது!

வணக்கம் சுவாமிஜி!

  • கருத்துக்கள உறவுகள்

உன் விஷமம் அறிந்தும்

உன்னுயிரோடு ஒட்டுகிறேன்

பிளாஸ்டிக் பை நீராக...

உங்கள் கவிதை அழகு

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கருத்து எழுதிய உங்கள் இருவருக்கும் மற்றும் பார்வையிட்ட இடாத அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்....

ஆகா..இது காதல் கவியா...

சூப்பர்...

எங்கே நெடுக்ஸ் தாத்தாவை காணவில்லை???

"உனக்காக பட்டினி

கிடந்தேன் பல நாட்கள்

மனநிறைவாய் வருவாய்.

எனக்கென இருநாட்கள்கூட

உன் மனம் தாங்காது"

நான் இரசித்தபடி இது காதல் கவிதைபோல் எனக்குத் தெரியலை.

அதற்கும் ஒரு படி மேலை. என்ன சரியா ஆதவா?

கவிதை ரொம்ப அழகு. தொடர வாழ்த்துகிறேன்.

ஆரொக்கியமா கவி வரிகள்

தொடர்க

http://tamil4u.wordpress.com/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நன்றிகள் நண்பர்களே!!.

இது காதல் கவிதை அல்ல. கணவனின் வெறுப்பை பிள்ளைகளுக்காக தாங்கும் மனைவி பற்றிய கவிதை. இந்த கோணத்தில் மீண்டும் பாருங்களேன். சரி வரும் என்று நினைக்கிறேன்..

நன்றி அனைத்து உள்ளங்களுக்கும்..

ஆதவா உங்கள் எல்லா கவிதையும் நன்றாக உள்ளது

நிறைய எழுதுங்கள்

உன் விஷமம் அறிந்தும்

உன்னுயிரோடு ஒட்டுகிறேன்

இந்த வரிகள் அற்புதம்

உனக்காக பட்டினி

கிடந்தேன் பல நாட்கள்

மனநிறைவாய் வருவாய்.

எனக்கென இருநாட்கள்கூட

உன் மனம் தாங்காது

கவிதை நல்லா இருக்கு பட்டினி எல்லாம் இருந்தனீங்களா நம்மாள முடியாது

:o

  • தொடங்கியவர்

நன்றி கஜந்தி மற்றூம் ஜமுனா..

பட்டினி என்பது வேறுவகைப் பட்டினி.. வயிற்றுப் பட்டினி அல்ல....

நன்றி..

உன் விஷமம் அறிந்தும்

உன்னுயிரோடு ஒட்டுகிறேன்

அழகிய கவிதை அர்த்தமுள்ள வரிகள் தொடர்ந்து நல்ல கவியோடு வாருங்கள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

thanks friends for comments

(Please change it to tamil. i have some problem using tamil software)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.