Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கடற்படை பயம்! கடலில் குதித்து அகதி பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்படை பயம்! கடலில் குதித்து அகதி பலி

ராமேஸ்வரம் - மார்ச் 19, 2007 : இந்திய கடற்படையினரைப் பார்த்து விட்டதால் கடலில் குதித்த இலங்கை அகதி பரிதாபமாக பலியானார்.

இலங்கையிலிருந்து அதிக அளவில் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். இதுபோல அகதிகளாக படகுகளில் வருபவர்கள், ஒரு படகுக்கு 30 பேர் மட்டுமே பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் இதற்கும் அதிக அளவில் சில நேரங்களில் அகதிகளை அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையிலிருந்து ஒரு படகில் 32 பேர் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கடலில் அந்தப் படகு வந்தபோது தொலைவில் இந்திய கடற்படை ரோந்துப் படகு வந்துள்ளது. இதைப் பார்த்த படகை ஓட்டி வந்த மீனவர்கள், அகதிகளில் இருவரை கடலில் குதிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து திவாகரன், பாஸ்கரன் ஆகிய இருவரும் கடலில் குதித்துள்ளனர். இவர்களில் திவாகரன் நீந்திக் கரை சேர்ந்து விட்டார். ஆனால் பாஸ்கரன் பரிதாபமாக கடலில் மூழ்கி இறந்தார். அவரது உடல் இன்று காலை ராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

இந்தியக் கடற்படைக்குப் பயந்து அகதி ஒருவர் கடலில் குதித்து பரிதாபமாக பலியானது அவருடன் வந்த அகதிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-தற்ஸ்தமிழ்

இந்தச் செய்தியை வாசிக்கும் போது 90களில் கிளாலியிலும், பாக்குநீரிணைப் பகுதியிலுமாக வைத்துக் கொல்லப்பட்ட, இறந்த நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் நினைவுதான் வருகின்றது.

முன்பு ஒருமுறை இவ்வாறு அப்பாவி தமிழ் மக்கள் கொல்லபட்ட நிகழ்வில் ஒரு தந்தையினதும், மகளினதும் உடலங்கள் ஒன்றை ஒன்று கட்டியணைத்தபடி கரையொதிங்கியது.

கொழும்புக்கு போகிறோம், இந்தியாவுக்கு போகிறோம் என்று சொல்லிவிட்டு பயணம் போன உறவுகள் சில நாட்களில் வயிறு ஊதிப் பெருத்து, உருக்குழைந்த உடலங்களாக கரையொதுங்கினர்.

இந்தக் கலியுககாலத்தில் இதைவிட வேறு எதை அப்பாவித் தமிழர்கள் எதிர்பார்க்க முடியும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் இணையத்தளம் இவ்வாறு சொல்கிறது

தமிழகம் செல்லும் வழியில் கடலில் மூழ்கி இலங்கை அகதி பலி

இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்கு படகில் வந்து கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகளில் ஒருவர் கடலில் மூழ்கி இறந்துள்ளார்.

இறந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் ஆபத்தான கடற் பயணத்தை மேற்கொண்டு தமிழகம் வரும் இலங்கை தமிழ் அகதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவும் திங்கட்கிழமை காலையிலும் இரண்டு வெவ்வேறு படகுகளில் மொத்தம் 53 தமிழ் அகதிகள் இலங்கையிலிருந்து தமிழக கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர்.

இவர்களை ஏற்றிவந்த இரண்டு படகுகளுமே, அந்த அகதிகளை தமிழக கடற்கரையில் இறக்காமல், கடலில் இருக்கும் மணல் திட்டுக்களை ஒட்டி இறக்கி விட்டதாக தெரிய வருகிறது. இப்படி இறக்கி விடப்பட்ட அகதிகள் அனைவரும் கடலில் நீந்திக் கரை சேர்ந்துள்ளனர்.

இதில் வவுனியாவிலிருந்து வந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 21 அகதிகள், அரிச்சல்முனை என்கிற திட்டுப்பகுதியில் விடப்பட்டதாகவும், அங்கிருந்து அவர்கள் தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தவிர, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 33 பேரை ஏற்றிவந்த படகு, தனுஷ்கோடியை ஒட்டிய மணல் திட்டில் அவர்களை இறக்கிவிட்டதாகவும், அவர்களில் 32 பேர் தமிழகக் கடற்கரையை அடைந்த நிலையில், பாஸ்கரன் என்பவர் மட்டும் கரைசேரவில்லை என்றும், அவரது நண்பர் திவாகரன் தகவல் தெரிவித்தார். இன்று காலை பாஸ்கரனின் சடலம் ராமேஸ்வரம் கடற்கரையில் தரையில் ஒதுங்கியது.

கடந்த சில மாதங்களில் இலங்கையிலிருந்து தமிழகம் வரும்போது, கடலில் மூழ்கி தமிழ் அகதிகள் இறப்பது இது மூன்றாவது சம்பவம். இதற்கு முன்பு இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கடலில் மூழ்கி இறந்தனர் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

http://www.sooriyan.com/index.php?option=c...101&Itemid=

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.