Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரி­ய­வர்கள் விரைவில் கைது செய்­யப்­ப­டு­வார்கள்

Featured Replies

பெரி­ய­வர்கள் விரைவில் கைது செய்­யப்­ப­டு­வார்கள்

 

திரு­டர்­களை பிடிக்­கா­மையே மக்­களின் கோபத்­துக்கு காரணம் என்­கிறார் ராஜித 

(ரொபட் அன்­டனி)

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள், உள்­ளக ரீதி­யா­கவே ஒரு­வ­ருக்­கொ­ருவர் கடு­மை­யாக விமர்­சித்­துக்­கொண்­ட­மையின் கார­ண­மா­கவே எமக்கு தோல்வி ஏற்­பட்­டது. அது­மட்­டு­மன்றி திரு­டர்­களை பிடிப்­ப­தாக கூறி­விட்டு நல்­லாட்­சிக்கு வந்த அர­சாங்கம் அவ்­வாறு செய்­யா­த தன் கார­ண­மாக மக்கள் சிவப்பு சமிக்­ஞையை எங்­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். அதனை நாங்கள் புரிந்து எதிர்­வரும் காலங்­களில் ஆட்­சியை முன்­னெ­டுப்போம் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன அறி­வித்தார்.  

எதிர்­வரும் காலங்­களில் ஊழல் மோச­டிகள் தொடர்­பான விசா­ர­ணைகள் தீவி­ர­மாக நடை­பெறும். கடந்­த­கால கொலைகள் தொடர்­பான விசா­ர­ணை­களும் நடை­பெறும். பெரி­ய­வர்கள் விரைவில் கைது­செய்­யப்­ப­டு­வார்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் ராஜித சேனா­ரட்ன மேலும் குறிப்­பி­டு­கையில்;

கேள்வி: அர­சாங்­கத்­திற்குள் கடு­மை­யான நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றதே?

பதில்: 1977 ஆம் ஆண்டு சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தோல்­வி­ய­டைந்­தது. 1982 ஆம் ஆண்டு பாரிய கட்சித் தாவல்கள் ஏற்­பட்­டன. 1994 ஆம் ஆண்டு ஐ.தே.க. தோல்­வி­ய­டைந்­தது. இவ்­வாறு அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் நெருக்­க­டிகள் ஏற்­ப­டு­வதும் பின்னர் அவை சக­ஜ­நி­லை­மைக்கு வரு­வதும் வழ­மை­யாகும். எனவே இவை மிகப்­பெ­ரிய நெருக்­க­டிகள் அல்ல.

கேள்வி: மொட்டு மலரும் என்று நினைக்­கின்­றீர்­களா?

பதில்: மொட்டு மல­ர­வில்­லையே, பிர­தேச சபை­க­ளைத்தான் மஹிந்த தரப்­பினர் கைப்­பற்­றி­யுள்­ளனர். மாறாக மொத்த மக்­களின் ஆத­ரவை அவர்கள் பெற­வில்லை. அந்த ஆத­ரவு இன்னும் எமக்கே உள்­ளது. ஆனால் மக்கள் எமக்கு சிகப்பு சமிக்­ஞையை தந்­தி­ருக்­கி­றார்கள். அதனை ஏற்று தவ­று­களை திருத்­திக்­கொண்டு பய­ணிப்போம். சிறந்த முறையில் முன்­செல்­வ­தற்­கான வழி தற்­போது கிடைத்­தி­ருக்­கின்­றது. அது­மட்­டு­மன்றி மஹிந்த ராஜ­பக்ஷ 2015 ஆம் ஆண்டு எடுத்த வாக்­கு­களை இம்­முறை எடுக்­க­வில்லை. அந்த வாக்கு வங்­கியில் பாரிய வீழச்சி ஏற்­பட்­டள்­ளது. மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு, முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட அனைத்து கட்­சி­களும் மஹிந்­த­வுக்கு எதி­ரா­கவே உள்­ளன.

கேள்வி: சரி பிர­தேச சபைகள் தோற்­ற­மைக்கு என்­னதான் காரணம்?

பதில்: தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள், உள்­ளக ரீதி­யா­கவே ஒரு­வ­ருக்­கொ­ருவர் கடு­மை­யாக விமர்­சித்­துக்­கொண்­ட­மையின் கார­ண­மா­கவே எமக்கு தோல்வி ஏற்­பட்­டது. அது­மட்­டு­மன்றி திரு­டர்­களை பிடிப்­ப­தாக கூறி­விட்டு நல்­லாட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் அவ்­வாறு செய்­யா­ததன் கார­ண­மாக மக்கள் சிகப்பு சமிக்­ஞையை எங்­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

கேள்வி: நீங்கள் சொல்லும் இந்த பொறுப்­பு­மீ­றலை ஜனா­தி­ப­தி­தானே செய்தார். அவர் தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்­து­கொண்டு எப்­படி ஐக்­கிய தேசியக் கட்­சியை விமர்­சிக்­கலாம்?

பதில்: ஜனா­தி­பதி சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர். எனவே அவர் தனது கட்­சியை பலப்­ப­டுத்­த­வேண்­டிய கட்­டா­யத்தில் இருக்­கிறார். இதனால் இந்த நிலைமை ஏற்­பட்­டது. ஆனால் நான் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் அர­சாங்­கத்­தையும் பாது­காப்­ப­தற்­காக பாடு­பட்டு வரு­கின்றேன். குரல் கொடுத்து வரு­கின்றேன். ஒரு­சிலர் அமைச்­ச­ர­வைக்குள் ஒன்றும் பேசாமல் வெளியில் வந்து தமது வீரத்தைக் காட்­டு­கின்­றனர். சந்­தி­ரிக்கா காலத்தில் ஜே.வி.பி. இத­னையே செய்­தது. நான் அமைச்­ச­ர­வைக்குள் பல தட­வைகள் போரா­டி­யி­ருக்­கின்றேன். சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை எதிர்க்­க­வேண்­டி­யது கட்­டா­யம்தான்.

கேள்வி: உங்கள் அர­சாங்கம் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்­லையே?

பதில்: நீங்கள் அவ்­வாறு கூற முடி­யாது. 19 ஆவது திருத்த சட்­டத்தை நிறை­வேற்­றினோம். சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்தோம். அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் அதி­க­ரித்தோம். ஓய்­வூ­தி­யத்தை அதி­க­ரித்தோம். சமுர்த்தி வழங்­கினோம். எரி­பொருள் விலை குறைப்பு செய்தோம். தக­வ­ல­றியும் சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வந்தோம். அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களை குறைத்தோம். ஊடக நிறு­வ­னங்கள் எரிக்­கப்­ப­ட­வில்லை. பிர­தம ஆசி­ரி­யர்கள் கொல்­லப்­ப­ட­வில்லை. ஊட­க­வி­ய­லா­ளர்கள் நாட்டை விட்டு வெளி­யே­ற­வில்லை.

கேள்வி: லசந்­தவை கொன்ற கொலை­யா­ளி­களை இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்­லையே?

பதில்: நான் லசந்த கொல்­லப்­பட்­ட­போதே மஹிந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு முயற்­சித்தேன். ஆனால் அது­தொ­டர்பில் நீதி­யான விசா­ரணை நடத்­து­வ­தாக மஹிந்த உறு­தி­ய­ளித்­ததால் வில­காமல் இருந்தேன். பின்னர் அவர்கள் விசா­ரணை நடத்த மாட்­டார்கள் என்­பது புரிந்­தது. அதனால் காலம் வரும் வரை காத்­தி­ருந்து தீர்மானத்தை எடுத்தோம்.

கேள்வி: நல்லாட்சியில் இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தவில்லையே.?

பதில்: அதில் ஒரு சிக்கல் இருக்கின்றது என்பதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். இனி விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். பெரியவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி: மக்கள் ஏன் மொட்டுக்கு வாக்களித்தனர்?

பதில்: நாங்கள் கொலை மற்றும் கொள்ளைக்காரர்களை பிடிக்காததால் கோபத்தில் மொட்டுக்கு வாக்களித்தனர். ஆனால் இனி மாற்றங்கள் நடக்கும். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.