Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நட்சத்திர தத்துவம்

Featured Replies

"ஒருவரை அதிகமாக கொண்டாடுவது என்பது இன்னொருவரை அதே அளவு வெறுப்பதுடன் தொடர்புடையது" - மார்லன் பிராண்டோ.

உலகின் மிகச் சிறந்த நடிகர்களாக கொண்டாடப்படும் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ ஆகியோர் சிறந்த சிந்தனையாளர்கள். திரைப்படத்துக்கு வெளியேயும் தங்கள் கருத்துகளால் சமூகத்தில் சலனத்தை உருவாக்கியவர்கள். இதனாலேயே அதிகார வர்க்கத்தின் அதிருப்திக்கு ஆளானவர்கள். இவர்களை குறித்து எண்ணும்போது நம்மூர் நட்சத்திரங்களின் 'நாவன்மை' நம்மையும் மீறி சிந்தனையில் வந்து போகிறது. அதுவும் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா உதிர்த்து வரும் தத்துவம் (இதனை தத்து பித்து என்றும் வாசகர்கள் தங்கள் செளகரியத்துக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்) வேறு சில நட்சத்திரங்களின் தத்துவ முத்துக்களை ஞாபகப்படுத்துகிறது. ஸ்ரேயாவின் தத்து பித்துவை முன்வைத்து நம் நட்சத்திரங்களின் தத்துவ முத்துகளை ஆராயலாம்.

முதலில் ஸ்ரேயா. ரஜினியுடன் ஜோடி சேர்ந்தபின் நமது நம்பர் ஒன் பத்திரிகைகளின் டார்லிங் ஆகிவிட்டார் இவர். புதிய பொருளாதார கொள்கையா? சீனாவின் மாறிவரும் சோஷலிஸமா? எதுவாக இருந்தாலும் ஒரு வார்த்தை ஸ்ரேயாவிடம் கருத்து கேட்டுதான் பத்திரிகைகள் பொருளாதார நிபுணர்களிடமே செல்கின்றன. இந்த திடீர் 'கவனிப்பில்' தானொரு சமூகவியலாளர் ஆகிவிட்ட நினைப்பு ஸ்ரேயாவுக்கு. இதனால், சமீபமாக தண்ணீர் பிரச்சனைகள் குறித்து மேடைகளில் முழங்கி வருகிறார். தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள், தண்ணீர் உயிர் போன்றது, தண்ணீர் இல்லையேல் தரணி இல்லை இப்படி. இதனை யார் சொல்வது? ஸ்ரேயா! யார் இந்த ஸ்ரேயா? 'மழை' என்ற அர்த்தமில்லாத படத்தில் லாரி கணக்கில் கொட்டப்பட்ட தண்ணீரில் நனைந்தபடி நடனமாடியவர். இந்த படம் முழுக்க பல லட்சம் லிட்டர் தண்ணீர் அனாவசியமாக வீணடிக்கப்பட்டது. இந்த தண்ணீரில் உடை உடலோடு ஒட்ட ஆடியும் பாடியும் நடித்த அதே ஸ்ரேயாதான் தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள் என அறிவுரை கூறுகிறார். மகா ஜனங்களே ஸ்ரேயா சொல்லிவிட்டார்... தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள். ஏனெனில் ஸ்ரேயா லாரி லாரியாக குளிப்பதற்கு தண்ணீர் வேண்டும்!

"சோம்பேறித்தனமும் சின்னச் சின்ன ஒழுங்கீனங்களும்தான் நாட்டை கெடுக்கிறது. இதனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பதே இந்தியாவை முன்னேற்ற ஒரே வழி!"

யார் இதைச் சொன்னது, அப்துல் கலாமா? அமர்தியா சென்னா? இல்லை, நமது சீயான் விக்ரம். எப்போது? பார்க்கில் தூங்கியவனையும் பாதையில் எச்சில் துப்பியவனையும் எண்ணெயில் பொரித்து எடுத்தாரே அந்நியன் படத்தில், அப்போது உதிர்த்த முத்துக்கள் இவை.

சீயானுக்குள் இவ்வளவு அரிய சிந்தனையா என புல்லரித்து அவர் பேட்டியை வெளியிட்டன பத்திரிகைகள். மூன்றே மாதம்..... அந்நியனிடமிருந்து வந்தது ஆப்பு. "சின்னச் சின்னதா திருடுறதுல ஒரு த்ரில்லே இருக்கு". யார் இதை சொன்னது? ஒழுங்கீனங்களே கூடாது என்று சொன்ன அதே அந்நியன் விக்ரம்தான் இந்த திருட்டு தத்துவத்தை மொழிந்தவர். காரணம்? அந்நியனுக்கு அடுத்து இவர் நடித்த 'மஜா' படத்தில் இவருக்கு திருடன் வேடம். இதிலிருந்து கிடைக்கும் சீயான் நீதி என்னவென்றால், விக்ரம் திருடனாக நடிக்கும்போது திருட்டு ஒரு குற்றமல்ல. தாராளமாக நீங்கள் திருடலாம். அதுவே அவர் காக்கி சட்டை போட்டு நடிக்கும்போது பொண்டாட்டியை தனியாக தியேட்டருக்கு அனுப்புவதும் மகாபாவம். உங்களை ஸ்டேஷனுக்கு வரவழைத்து கும்மியயெடுப்பார். ஏன் எதற்கு என்று நீங்கள் கேள்வியெல்லாம் கேட்க முடியாது. ஏனென்றால் இவர்கள் ஏற்கும் வேடத்தை வைத்துதான் சட்டம் ஒழுங்கு தீர்மானிக்கப்படுகிறது.

வேறு சிலர் இருக்கிறார்கள். இவர்களின் பொழுதுபோக்கு வாயில்லா ஜீவன்களுக்கு வக்காலத்து வாங்குவது. முன்னாள் நடிகை அமலாவும் இந்நாள் நடிகை த்ரிஷாவும் இதில் முக்கியமானவர்கள். நல்ல விஷயம், பாராட்டவேண்டிய காரியம். தெரு நாய்களை அது வெறி நாயாக இருந்தாலும் துன்புறுத்தக்கூடாது என்று சொல்லும் இவர்களது மிருகநேயத்திற்கு முன்னால் காந்தியும் புத்தரும் ஏசுவும் வெறும் ஜூஜூபி.

ஆனால் ஒரு சந்தேகம். நாய்களுக்கு மட்டும் ஏனிந்த கரிசனம்? இவர்கள் தினம் லஞ்ச் பிரேக்கில் அடித்து உள்ளே தள்ளும் ஆடும் கோழியும் வாயில்லா ஜீவன்கள் இல்லையா? அட, எல்லா உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்றால் சமண துறவிகள் மாதிரி கொசுவையும் கரப்பான் பூச்சியையும் கூட கொல்லக் கூடாதே. ஆனால், நடிகைகளின் கரிசனம் தெரு நாய்களுடன் நின்று போவது ஏன்? வெறிநாய் கடியால் சிறுவர்கள் உயிரிழப்பது சமீப காலத்தில் அதிகரித்திருக்கும் நிலையிலும், நாய்களை ஒன்றும் செய்யலாகாது என பல நடிகைகள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம் இவர்கள் யாரும் தெருவில் நடப்பதில்லை. நேருக்கு நேராக தெருநாய்களை எதிர்கொள்வதில்லை. இவர்கள் அனைவரும் காரில் சஞ்சரிப்பவர்கள். தெரு நாய்களின் கோரப் பற்களுக்கு எட்டாத தொலைவில் இருப்பவர்கள். வெறிநாய்களால் உயிரிழப்பது அப்பாவி தெருவாசிகள். நடிகைகளின் நாய் கரிசனத்துக்கான அடிப்படை காரணம் இதுதான். நாலு நாள் காரைவிட்டு இறங்கி தெருவில் நாய்களுக்கு மத்தியில் நடக்கவிட்டால் நாறிவிடும் இவர்களது நாய் பாசம்!

ஆனால் ஒரு சந்தேகம். நாய்களுக்கு மட்டும் ஏனிந்த கரிசனம்? இவர்கள் தினம் லஞ்ச் பிரேக்கில் அடித்து உள்ளே தள்ளும் ஆடும் கோழியும் வாயில்லா ஜீவன்கள் இல்லையா? அட, எல்லா உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்றால் சமண துறவிகள் மாதிரி கொசுவையும் கரப்பான் பூச்சியையும் கூட கொல்லக் கூடாதே. ஆனால், நடிகைகளின் கரிசனம் தெரு நாய்களுடன் நின்று போவது ஏன்? வெறிநாய் கடியால் சிறுவர்கள் உயிரிழப்பது சமீப காலத்தில் அதிகரித்திருக்கும் நிலையிலும், நாய்களை ஒன்றும் செய்யலாகாது என பல நடிகைகள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம் இவர்கள் யாரும் தெருவில் நடப்பதில்லை. நேருக்கு நேராக தெருநாய்களை எதிர்கொள்வதில்லை. இவர்கள் அனைவரும் காரில் சஞ்சரிப்பவர்கள். தெரு நாய்களின் கோரப் பற்களுக்கு எட்டாத தொலைவில் இருப்பவர்கள். வெறிநாய்களால் உயிரிழப்பது அப்பாவி தெருவாசிகள். நடிகைகளின் நாய் கரிசனத்துக்கான அடிப்படை காரணம் இதுதான். நாலு நாள் காரைவிட்டு இறங்கி தெருவில் நாய்களுக்கு மத்தியில் நடக்கவிட்டால் நாறிவிடும் இவர்களது நாய் பாசம்!

தத்துவம் என்று வந்த பிறகு இசைஞானியும் சூப்பர் ஸ்டாரையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இருவரும்தான் தமிழ் சினிமாவில் தத்துவத்தில் டாக்டரேட் வாங்கிய சூப்பர் சீனீயர்கள். இவர்கள் இருவரும் ஒன்றிணையும் புள்ளி ஆன்மீகம். மேடையும் மைக்கும் கிடைத்துவிட்டால் போதும். பணம் மாயை, புகழ் மாயை, எல்லாமே மாயை என்று பரவசப்பட்டு அப்ளாஸ்களை அள்ளிக் கொள்வது இவர்களது வாடிக்கை.

பணமும் புகழும் மாயை என்றால் தங்களிடம் இருக்கும் அளவுக்கு மீறிய செல்வங்களை கட்டிக் கொண்டு அழுவானேன்? இல்லாதவர்களுக்கு அள்ளி எறிவதுதானே? ஆனால், அதை மட்டும் செய்யமாட்டார்கள். தங்களுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு பேரக்குழந்தைகளுக்கு என மூன்று தலைமுறைக்கு சேப்டி செய்துவிட்டு பணம் மாயை புகழ் மாயை என ஆன்மீக கொட்டாவி விடுவது யாரை ஏமாற்ற? இன்னொரு சந்தேகம். அளவுக்கு மீறிய செல்வம், தகுதிக்கு மீறிய புகழ் இரண்டும் கிடைத்து வானத்துக்கு கீழ் உள்ள அனைத்தையும் சொந்தமாக்கும் தகுதி வந்த பிறகே இவர்களுக்கு இந்தமாதிரி கொட்டாவிகள் வருகின்றன. வாய்ப்புக்காக படக்கம்பெனிகளின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது இந்த கொட்டாவிகள் எங்கே போயிருந்தன?

விழா ஒன்றில் தான் இமயமலைக்குப் போவதை பற்றி இப்படி விளக்கமளித்தார் ரஜினி. "நமது வீட்டில் படுக்கையறைக்கு சென்றால் தூங்க தோன்றும். சமையலறைக்குப் போனால் சாப்பிட தோன்றும். பூஜையறைக்குப் போனால் சாமி கும்பிட தோன்றும். அதே மாதிரி இமயமலைக்குப் போனால் பக்தியாக இருக்க தோன்றும்." ஆஹா.... அற்புதமான ஆன்மீக விளக்கம்! அதாவது சாமி அறைக்கும் இமயமலைக்கும் போகும்போது மட்டும் ஆன்மீகம் இருந்தால் போதும். அதனால்தான் ஊருக்குள் கொள்ளையடித்து உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். கடவுள் சந்நிதியில் மட்டும் நல்ல பிள்ளையாக இருந்தால் போதுமே! ஆகவேதான் ஆன்மீக செம்மலாக இமயமலைக்கு செல்லும் ரஜினியால் 'சந்திரமுகி' போன்ற கச்சடா படங்களில் நடிக்க முடிகிறது. அடுத்தவன் மனைவியை தங்கச்சி என்று அழைத்துக்கொண்டே ஒரே போர்வைக்குள் ஆவிபிடித்தபடி 'காலை உள்ளுக்கு இழுத்து டைட்டா வச்சுக்கோ. அப்பதான் நல்லாயிருக்கும்' என நாலாந்தர டபுள்மீனிங் வசனம் பேச முடிகிறது.

ஆனால் ஆன்மீகம் என்பது சாமியறையில் மட்டும் வரும் சமாச்சாரம் அல்ல. அது சுவாசம் மாதிரி! எங்கு போனாலும் இருக்கக் கூடியது. அப்படியொரு ஆன்மீகம் சித்திக்கப் பெற்ற ஒருவரால் மேலே பார்த்த டபுள் மீனிங் வசனத்தை பேச முடியாது. அப்படியே பேசினாலும் மேக்கப்பை கலைத்ததும் கடயோகம் பாபா மகிமை என புல்லரிக்க முடியாது. அப்படி இரண்டையும் ஒருவரால் செய்யமுடிகிறது என்றால் அது வேஷமாகவே இருக்கமுடியும்.

நன்றி: சினிசவுத்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.