Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுதான் காதல் என்பதா?

Featured Replies

இதுதான் காதல் என்பதா?

 

 
kd13

செகந்த்ராபாத் ரயில்வே ஸ்டேஷன். ஆட்டோ வந்து நிற்க, அருணும், கோபியும் இறங்கிக் கொண்டார்கள். மீட்டர் பார்த்து பணம் கொடுத்து விட்டு, உள்ளே வந்து, ஐந்தாம் நம்பர் பிளாட்ஃபாமிற்கு வந்து சேர்ந்தார்கள். சென்னை செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. எஸ் - 7 கோச்சைத் தேடி ஏறி, தங்களது சீட் நம்பரை பார்த்து இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். ரயில் புறப்படுவதற்கு பத்து நிமிஷங்கள் இருந்தது. அங்கும் இங்குமாக தமிழும் தெலுங்கும் கலந்த குரல் கேட்டுக் கொண்டிருந்தது. அருண், அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். 
அப்போது, ஒரு பெண், இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தையை, தனது இடது கையால் அணைத்துப் பிடித்தபடி, வலது கையில் ஒரு சூட்கேûஸ சுமந்தபடியும், அவர்கள் உட்கார்ந்திருக்கும் அதே கோச்சில் வேக வேகமாக வந்து ஏறினாள். சீட் நம்பரைப் பார்த்து, இவர்களுக்கு எதிரே உட்கார்ந்தாள். அவளைப் பார்த்ததும் அருண் ஆச்சரியம் அடைந்தான். அவள் வினோதினிதானே? அவளும் அவனைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்தாள். அவன் அருண்தானே? இருவருக்கும், சிறிது நேரம் பேச்சு வரவில்லை. கோபி அவர்களைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அருண்தான் முதலில் பேச ஆரம்பித்தான்.


""வாட் ஏ சர்ப்ரைஸ்! உன்னை நான் இங்க எதிர்ப்பார்க்கல வினோதினி''
""நான் கூட உங்களை எதிர்ப்பார்க்கல... இது நிஜமான்னு இன்னும் எனக்கு சந்தேகமா இருக்கு''
""நிஜம்தான்...நோ டவுட்... எப்படியிருக்க?...உன் குழந்தையா?''
"ம்... நல்லாருக்கேன்... என் குழந்தைதான்...''
அருண், குழந்தையின் கன்னத்தை லேசாகக் கிள்ளி முத்தமிட்டு விட்டு "என்ன பேர் வச்சுருக்க?'' எனக் கேட்டான்.
"அருணகிரி...ஷார்ட்டா அருண்னு கூப்பிடுறோம்''
அதைக்கேட்டதும், அருண் ஷாக்கடித்தவன் போல், அவளை நிமிர்ந்து பார்த்தான்.
"என்ன அப்படி பாக்குறீங்க''
"என்னை, நீ இன்னும் மறக்கல, இல்ல...''
"எப்படி மறக்க முடியும்... மறந்துட்டா, நடந்ததெல்லாம் உண்மையில்லன்னு ஆயிடுமா...''
ரயில் புறப்பட்டது. பிளாட்ஃபாமில் நின்று கையசைத்தவர்கள், பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிலரது கண்களில் கண்ணீர் தெரிந்தது. பிரிவு எத்தனை துயரமானது. அருணும், வினோதினியும் கூட, ஒருநாள் இப்படி பிரிந்து சென்றவர்கள்தானே.

 

சென்னையிலுள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில், அருண் சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக வேலைப் பார்த்தான். அதே கம்பெனியில் வினோதினியும் வேலைக்கு வந்து சேர்ந்தாள். ஒரு பெரிய மருத்துவமனைக்கு தேவையான சாஃப்ட்வேரை தயாரிக்கும் பொருப்பை, நிர்வாகம் அருண், வினோதினி இருவரிடமும் ஒப்படைத்தது. இருவரும், நேரம் காலம் பாராமல், பசி, தூக்கம் பாராமல், சேர்ந்து உழைத்தார்கள். அந்த உழைப்பில், ஒருவரின் ஆற்றலை மற்றொருவர் வியந்து பார்த்தார்கள். எப்போதாவது ஓய்வு கிடைக்கும் போது, ஒருவரைப்பற்றி ஒருவர், பர்சனலாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். 
அருண் அவனது பெற்றோருக்கு ஒரே பையன். அதனால் செல்லமாக வளர்க்கப்பட்டவன். அவன் கேட்டது எல்லாமே கிடைத்திருக்கிறது. இப்போதும், இரவில் அவன் வீட்டிற்கு வருவதற்கு தாமதமானால், அவனது அப்பா, வீட்டிலிருந்து டின்னர் எடுத்துக் கொண்டு, ஆபிஸýக்கு வந்துவிடுவார். எப்போதுமே, அதில் இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்கு டிபன் வைக்கப்பட்டிருக்கும். முன்பெல்லாம் கோபிதான் அவனுடன் ஷேர் பண்ணி சாப்பிடுவான். வினோதினி வந்ததற்கு பிறகு, அவள்தான் அவனுடன் ஷேர் பண்ணுகிறாள். ஒவ்வொரு முறையும், அருண் அம்மாவின் கைப்பக்குவத்தை மனம் விட்டு பாராட்டுவாள். அதுபோல் சாப்பிட்டு முடித்ததும், அந்தக் கேரியரை அவளே கழுவி வைக்கவும் செய்வாள். அவளுக்கு அப்பா கிடையாது. ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அம்மா மட்டும்தான். மற்றும் இரண்டு தங்கைகள். அவள், படித்து முடித்து வேலைக்கு வருவதற்கு முன்பு வரை, அவளது மாமா ராஜேஷ்தான் அந்தக் குடும்பத்திற்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டான். 
ஒருநாள் அருண், வினோதினியிடம் "இந்த உலகத்திலேயே உனக்கு ரொம்ப புடிச்ச விஷயம் எது வினோ...?'' எனக் கேட்டான்.


""நீதான்...'' அவள் கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னாள்.
அருண், ஒரு நிமிடம் தடுமாறிப் போனான்.
"இப்படி ஒரு பதிலை நான் எதிர்பாக்கல...''
"நானும் எதிர்பார்க்கலதான்... என்னமோ பட்டுன்னு வந்துடுச்சு...''
"அது எப்படி பட்டுன்னு வரும்... மனசுல ஏற்கனவே விதை விழுந்துருதாதான் அப்படி வரும்''
"சரி.. விழுந்ததாதான் வச்சுக்கங்களேன்''
அவன், மேலும் தடுமாறிப் போனான்.
"ஏய்.. என்னப்பா சொல்ற? நீ சொல்ற வார்த்தைக்கு, மீனிங் புரிஞ்சுதான் பேசுறியா...''
"எஸ்.. புரிஞ்சுதான் பேசுறேன்''
"அப்ப... யூ ஆர் இன் லவ் வித் மீ''
"எஸ்''


அருண் வாயடைத்துப் போய் நின்றான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனதில் நூறு தடவை யோசித்து, ஆயிரம் தடவை ஒத்திகைப் பார்த்து, சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை, கொஞ்சமும் தயக்கமில்லாமல், ஒரு விநாடியில் போட்டு உடைக்கிறாளே?
"என்ன சைலன்ட் ஆயிட்டிங்க...உங்களுக்கு விருப்பம் இல்லையா?'' அடுத்த கேள்வியையும் அதிரடியாகக் கேட்டாள்.
"விருப்பம் இல்லன்னு சொன்னேன்னா என்ன பண்ணுவ?''


"சூசைட் பண்ணிக்குவேன்னு மட்டும் எதிர்ப்பாக்காதீங்க... அப்பவும் உங்களைதான் லவ் பண்ணுவேன். நீங்க அக்சப்ட் பண்ணிக்குற வரை லவ் பண்ணிகிட்டே இருப்பேன்''
அவளது ஆழமான நேசிப்பு, அவனுக்குப் புரிந்தது. "அவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டாம்... இப்பவே பண்ணிக்க...'' என்றான். அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை. ""தாங்ஸ்...'' என்று கூறி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். அதுவும் அவன் எதிர்பாராததுதான். எல்லாவற்றிலும் வேகமாக இருக்கிறாள். 
அன்று முதல், இருவரும், தனித் தனி அல்ல, ஒன்று என நினைக்க ஆரம்பித்தார்கள். அவன், அவளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அப்பா அம்மா இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அவள் அவனது அம்மாவின் கையைப் பிடித்து "அருமையா சமைக்கிறீங்க ஆன்ட்டி'' என்று கூறி, முத்தமிட்டாள். அப்பா ""நான்தான் பாராட்டிகிட்டு இருப்பேன்... இப்ப நீயும் வந்து சேர்ந்துகிட்டியா... இனிமே புரவிஷன் பில்தான் எகிறப்போவுது. உங்க ஆன்ட்டி நெய்யும், முந்திரி பருப்பும் இல்லாம எந்தப் பலகாரமும் பண்ண மாட்டா...'' என்று சொல்லி சிரித்தார். பதிலுக்கு வினோதினி ""ஹோட்டலுக்கு போற செலவு மிச்சமாகுதுல்ல அங்கிள். அதோட வயித்துக்கும் கெடுதல் இல்லாம இருக்குல்ல'' என்றாள். அவள் அப்படி பேசியது, அவர்கள் இருவருக்கும் பிடித்துப் போனது. அடிக்கடி அவனது வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். ஒரு சில நாள்களில் அவர்களுக்குள் எந்த இடைவெளியும் இல்லாமல் போனது. அருண் எங்கேயாவது வெளியூர் போக நேர்ந்தால் அவள் அங்கு வந்து படுத்துக்கொள்வாள். அவன், சுவரில் அவளது போட்டோவை மாட்டி வைத்து, அதில் "ஐ லவ் யூ வினோ' என எழுதி வைத்திருப்பதை பார்த்துப் பார்த்து சந்தோஷமடைந்து கொள்வாள். யாருக்கு கிடைக்கும் இப்படியொரு லைஃப்?

 

ஒருநாள், அந்த லைஃபிற்கும் இடையூறு வந்தது. ராஜேஷ் தனது அக்காவிடம் வினோதினியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள விரும்புவதாகச் சொன்னான். அதைக் கேட்டு, வினோதினி அதிர்ந்து போனாள். ஆனால், அவளது அம்மா "பண்ணிக்கடா...நா என்ன மாட்டேன்னா சொல்லப் போறேன். அவர் இறந்ததுக்கப்புறம் இந்த குடும்பத்தோட நல்லது கெட்டதையெல்லாம் நீதான எடுத்துப் பண்ண... நீ மட்டும் இல்லன்னா, மூணு பொம்பளைப் புள்ளைகளை வச்சுகிட்டு, நான் நடுத்தெருவுக்குதான் வந்திருக்கணும்...'' என்று சொன்னாள். அவளது கண்களில் நன்றி பெருக்கு தெரிந்தது. ராஜேஷ் "நீ சொல்லிட்ட... வினோதினி என்ன சொல்லுவான்னு தெரியலையே...'' என்றான். அதற்கும் அவள் "அவ என்ன சொல்லப் போறா... நடந்ததெல்லாம்தான் அவளுக்கும் தெரியுமே... நீ கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலையப் பாரு...'' என அதிகாரப்பூர்வமாகச் சொன்னாள். வினோதினி அப்படியே உறைந்து போனாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 
ராஜேஷ் நல்லவன்தான். அவளது அப்பா இறந்ததற்கு பிறகு, அந்த குடும்பத்தை தாங்கிப் பிடித்தவன். வயதுக்கு வந்ததற்கு பிறகு ஒரு தடவை கூட அவளை அவன் நிமிர்ந்து பார்த்ததில்லை. அத்தனை நாகரீகமானவன். அப்படிப்பட்டவனை வேண்டாம் என எப்படி நிராகரிக்க முடியும். அதை அம்மாதான் தாங்கிக் கொள்வாளா? மாமா மனதில் இப்படியொரு ஆசை இருக்கிறது என்பது முன்பே தெரிந்திருந்தால், அருணை காதலிக்கலாமாவது இருந்திருக்கலாம். இப்போது அவருக்கு என்ன பதில் சொல்வது. அவரே சரி என ஏற்றுக் கொண்டாலும், அவரை பிரிந்து, தன்னால் நிம்மதியாக வாழ முடியுமா? கடவுளே இது என்ன சோதனை... இதை நானும் அருணும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்.


அதிகம் தள்ளிப் போடாமல் அன்று மாலையே அருணிடம் விஷயத்தைச் சொன்னாள். அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பின் "எல்லாத்துலயும் உனக்கு அவசரம்... அதுதான் இப்ப உன்னை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு... நாம ரெண்டு பேரும் சின்னப் பசங்க இல்ல... வீட்டுல இருக்குறவங்களோட உணர்வுகளை மதிக்காம நடந்துக்குறதுக்கு... நீ உன் மாமவையே கல்யாணம்
பண்ணிக்க...அதுதான் நல்லது... என்னடா இப்படி சொல்றானேன்னு நினைக்காத... அவங்களை காயப்படுத்திட்டு நாம ஒண்ணு சேரணும்ன்னு நினைச்சோம்ன்னா, சத்தியமா நம்மளால நிம்மதியா வாழ முடியாது...சரி பிரியிறது மட்டும் சாத்தியமான்னு கேட்டின்னா, அதுவும் வலிக்கும்தான்... ஆனா, அவங்க வலியோட கம்பேர் பண்ணும்போது நம்ம வலி கம்மிதான்... போ... போய் வீட்டுல ஒத்துக்க...'' எனத் தெளிவாகக் கூறினான். அவள் அவனை கட்டிக் கொண்டு அழுதாள். சிறிது நேரம் அழவிட்டு, பின் தன்னிடமிருந்து அவளைப் பிரித்தெடுத்தான்.
"ஆல் த பெஸ்ட் வினோ...'' என்றான்.

 

இது நடந்து இரண்டு வருடமாகிறது. அவள் கல்யாணத்திற்கு கூட அவன் போகவில்லை. அதன் பிறகு, அவளை, இதோ, இப்போதுதான் பார்க்கிறான்.
"உன் மாமா வரலியா?''
"என் முதல் தங்கைக்கு நிச்சயதார்த்தம்... அதுக்காகத்தான் சென்னைக்கு போயிட்டு இருக்கேன்... அவருக்கு ஆபிஸ்ல டைட் ஒர்க்... ரெண்டு நாள் கழிச்சு ஃபிளைட்ல வந்துடுவாரு''
"ஓ! அப்படியா''
"நீங்க எப்படி இருக்கீங்க அருண்... கல்யாணம் ஆயிடுச்சா?'
"ம்...' 
அவள் முகத்தில் நிம்மதி படர்வது தெரிந்தது.
"அவங்க பேரு.. என்ன பண்றாங்க?''
"கெளசல்யா... ஹவுஸ் ஒய்ஃப்தான்...''
"குட்.. என்னை விட நல்லா இருப்பாங்களா?''
அவன் சற்று யோசித்து விட்டு "ம்... நல்லா இருப்பாங்க...'' என்றான்.
அவள் மேலும் நிம்மதி அடைவது தெரிந்தது.
""குழந்தைங்க''
"ஒரு குழந்தை... பொண்ணு...''
"என்ன பேரு வச்சுருக்கீங்க...'' அவசரமாகக் கேட்டாள்.
""வினோதினி...''
கோபி திரும்பி அருணைப் பார்த்தான். 
வினோதினியின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
""தாங்ஸ் அருண்... இந்த நினைவுகள் போதும், மீதி நாள்களை சந்தோஷமா வாழ...'
அப்போது அவளது குழந்தை அழ ஆரம்பித்தது. அவள் அதை அருணிடம் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு, ஃபிளாஸ்க்கிலிருந்து ஒரு டம்ளரில் பால் ஊற்றி, அதில் சர்க்கரையை போட்டு கலக்கினாள். பின், அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு, அதற்கு பாலை ஊட்ட ஆரம்பித்தாள்.

 

சென்னை சென்ட்ரல். ரயில் வந்து நின்றது. மூவரும் இறங்கி வெளியில் வந்தார்கள். அருண் ஆட்டோ பிடித்து அதில் வினோதினியையும், குழந்தையையும் ஏற்றி அனுப்பி வைத்தான். பின், வேறொரு ஆட்டோ பிடித்து அதில் அவனும் கோபியும் ஏறிக் கொண்டார்கள். 
ஆட்டோ புறப்பட்டதும், கோபி, முதல் வேலையாக, அருணிடம், "எதுக்குடா இத்தனை பொய்...?'' எனக் கேட்டான்.
அருண் அமைதியாக இருந்தான்.
"கல்யாணமாயிடுச்சு... குழந்தை இருக்கு... அது இதுன்னு... நீ பாட்டுக்கு அள்ளி விட்டுட்டு வர்ற...''
அவன், அதற்கும் அமைதியாக இருந்தான்.
"என்னடா... சைலன்ட்டா இருக்க...? எதுக்காக அப்படிச் சொன்ன?''
"வேணும்ன்னுதான்டா சொன்னேன்... அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு... ஹஸ்பென்ட் குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்கா... நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு தெரிஞ்சுது... நம்பளாலதான இவர் இப்படி இருக்கார்ன்னு நெனைச்சு ரொம்ப வருத்தப்படுவா... காரணம், அவதான முதல்ல லவ் பண்ணா... அவதான பிரிஞ்சு போனா... அந்தக் குற்றஉணர்ச்சி அவ மனசுல என்னிக்குமே இருந்துட்டு காயப்படுத்திட்டு இருக்கும். அதனாலதான் அப்படியெல்லாம் பொய் சொன்னேன். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு நான் சொன்னதும் அவ முகத்துல ஒரு நிம்மதி தெரிஞ்சுதே... அதைப் பாத்தியா? அந்த நிம்மதி அவகிட்ட நிரந்தரமா இருக்கணும்... அதுதான் எனக்கும் நிம்மதி...'' என்று சொல்லி கண் கலங்கினான். 
கோபி, அவனைத் தனது தோளில் ஆதரவாக சாய்த்துக் கொண்டான்.

 

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.