Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனின் நியா­ய­மான வலி­யு­றுத்தல்

Featured Replies

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனின் நியா­ய­மான வலி­யு­றுத்தல்

 

தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்­ள­ நெ­ருக்­கடி நிலை தேசிய பிரச்­சினை தீர மக்கள் வழங்­கிய ஆணையை எவ்­வ­கை­யிலும் பாதித்­து­ வி­டக்­கூ­டாது என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தலை­வ­ருமான இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

வெள்­ளிக்­கி­ழமை இரவு ஜனா­தி­ப­தியை அவ­ரது உத்­தி­யோ­கபூர்வ வாசஸ்­த­லத்தில் சந்­தித்த எதிர்க்­கட்சித் தலைவர் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி குறித்து விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இரு­வரும் தனித்து இந்த சந்­திப்­பினை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது, 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் இந்த நாட்டு மக்கள் தெளி­வான ஆணை­யினை உங்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளனர். அந்த ஆணை­யினை நிறை­வேற்­ற­வேண்டும். அதனை நிறை­வேற்­றக்­கூடிய அர­சாங்கம் ஒன்றே அமைக்­கப்­ப­ட­வேண்டும். மக்­க­ளு­டைய இந்த ஆணைக்கு விரோ­த­மா­ன­வர்கள் அர­சாங்­கத்தில் இருந்தால் அந்த ஆணையை நிறை­வேற்ற முடி­யாது போய்­விடும் என்று சம்­பந்தன் ஜனா­தி­ப­திக்கு எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

இந்த சந்­திப்­பு கு­றித்து கருத்து தெரி­வித்­துள்ள எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டு மக்­களால் ஜனா­தி­ப­திக்கு ஒரு ஆணை வழங்­கப்­பட்­டது. அந்த ஆணை ஜன­நா­ய­கத்தை உறு­தி­செய்­வது, சர்­வா­தி­காரப் போக்கை இல்­லா­தொ­ழிப்­பது, தேசிய பிரச்­சி­னைக்கு ஒரு நியா­ய­மான நிரந்­த­ர­மான தீர்வைக் கண்டு சமத்­து­வத்தை நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது, மனித உரி­மைகள்-, அடிப்­படை உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வது, சட்டம் ஒழுங்கு நிறை­வேற்­றப்­ப­டு­வது, சுதந்­தி­ர­மான நீதியை ஏற்­ப­டுத்­து­வது என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தா­கவே இந்த மக்கள் ஆணை அமைந்­தி­ருந்­தது. அந்த ஆணையை அவர் நிறை­வேற்­ற­வேண்டும். அதனை நிறை­வேற்­றக்­கூ­டிய அர­சாங்கம் ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அந்த ஆணைக்கு தடை­யாக இருப்­ப­வர்கள் அல்­லது அதற்கு தடை­போ­டக்­கூ­டி­ய­வர்கள் அர­சாங்­கத்தில் இருந்தால் அந்த ஆணையை நிறை­வேற்ற முடி­யாது. அதனால் மக்கள் எதிர்­பார்ப்­பது அந்த ஆணை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­தே­யாகும் என்­பதை ஜனா­தி­ப­திக்கு இந்த சந்­திப்பின் போது எடுத்­துக்­கூ­றினேன் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தமிழ் மக்கள் ஜனா­தி­பதி மீது நம்­பிக்கை வைத்து ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது பெரு­வா­ரி­யான வாக்­கு­களை அவ­ருக்கு வழங்­கி­யுள்­ளனர். அந்த ஆணையை அவர் நிறை­வேற்­றுவார் எனக் கரு­தியே அவ­ருக்கு தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தனர். இந்த நிலையில் அவர்கள் ஏமாற்­றப்­ப­டக்­கூ­டாது. தமிழ் மக்கள் ஏமாற்­றப்­ப­டாமல் இருக்­கக்­கூ­டிய ஒரு அர­சாங்­கத்தை அமைக்­க­வேண்டும் என்று இந்த சந்­திப்பில் தான் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்த சந்­திப்பையடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் சந்­தித்து பேசி­யுள்ளார். இந்த சந்­திப்பின் போதும் அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை தேசிய பிரச்­சினை தீர மக்கள் வழங்­கிய ஆணை­யினை எவ்­வ­கை­யிலும் பாதித்­து­வி­டக்­கூ­டாது. மக்கள் ஆணை­யினை புறந்­தள்­ளா­த­வ­கையில் நெருக்­க­டிக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்று சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­திலும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது­வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றக்­கு­வ­திலும் முக்­கிய பங்­கினை எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மேற்­கொண்­டி­ருந்தார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வேட்­பா­ள­ராக போட்­டி­யிட திட்­ட­மிட்­டி­ருந்தார். ஆனாலும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனும் ஒன்­றி­ணைந்து கலந்­து­ரை­யாடி பொது வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்­கு­வ­தற்கு வழி­வ­கை­களைச் செய்­தி­ருந்­தனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி பொது வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்­கு­வ­தற்கு களம் அமைத்­துக்­கொ­டுத்­த­வ­ராக இரா. சம்­பந்­தனே விளங்­கி­யி­ருந்தார். இந்த நிலையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­தித்து சம்­பந்தன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளமை முக்­கி­யத்­து­வ­மிக்க விட­ய­மாக அமை­கின்­றது.

தற்­போ­தைய நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி இன்­னமும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி வில­க­வேண்­டு­மென்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்த அமைச்­சர்கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி விலகி ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை சேர்ந்த மற்­றொ­ரு­வ­ருக்கு பத­வியை வழங்­க­வேண்­டு­மென்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கோரி­யி­ருந்தார். ஆனால் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியோ ஜனா­தி­ப­தியின் கோரிக்­கைக்கு இணங்­கா­மை­யினால் தனி­யாட்சி அமைப்­ப­தற்கு சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் தீவிர பிர­யத்­தனம் காட்டி வரு­கின்­றனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ

­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யி­னரும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு எதி­ர­ணி­யி­லி­ருந்து கொண்டு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கு­வ­தாக தெரி­வித்­துள்­ளனர். இந்த நிலையில் சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையைப் பெறும் வகையில் உறுப்­பி­னர்­களை தம்­பக்கம் இழுப்­ப­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இந்த நிலையில் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து தான் வில­கப்­போ­வ­தில்லை என்றும் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் ஆட்­சியை முன்­னெ­டுத்து செல்வேன் என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார்.

இவ்­வா­றான நிலையில் இன்று பாரா­ளு­மன்­றமும் கூடு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் கட்சித் தாவல்கள் இடம்­பெ­றலாம் என்ற நிலைப்­பாடும் காணப்­ப­டு­கின்­றது. இந்த இழு­பறி நிலையில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினால் பெரும்­பான்மை நிரூ­பிக்­கப்­பட முடி­யா­த­வி­டத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்சி தொடரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது; அமைச்­ச­ர­வையில் மாற்­றங்கள் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யங்­களும் காணப்­ப­டு­கின்­றன.

உண்­மை­யி­லேயே 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் 62 இலட்சம் மக்கள் பொது எதி­ர­ணி­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர். பொது எதி­ர­ணி­யினால் முன்­வைக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நம்­பியே இந்த ஆத­ரவு வழங்­கப்­பட்­டது. எனவே, மக்­க­ளுக்கு வழங்­கிய இந்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். அதற்­கேற்ப மக்­களின் ஆணையை நிறை­வேற்றும் வகை­யில் நல்­லாட்­சி­யா­னது செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

ஆனால் தற்­போ­தைய நிலையில் அர­சியல் நெருக்­கடி கார­ண­மாக ஆட்­சியில் மாற்­றங்­களை கொண்­டு­வர முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ

பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்கு முயன்று வரு­கின்­றது. இவ்­வா­றான அர­சாங்கம் ஒன்று உரு­வா­கு­மானால் தமிழ் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை ஜனா­தி­ப­தி­யினால் நிறை­வேற்ற முடி­யுமா என்ற கேள்வி எழு­கின்­றது. இந்த விடயம் தொடர்­பி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவை சந்­தித்த எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­கின்­றது.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் தீர்வைக் காண்பதற்குரிய நடவடிக்கைகளை காலதாமதத்தின் மத்தியில் எடுத்து வந்தது. புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த முயற்சிகளுக்கு எதிராக பொது எதிரணி கடுமையாக செயற்பட்டு வந்தது. இவ்வாறான நிலையில் பொது எதிரணியுடன் இணைந்து சுதந்திரக்கட்சி ஆட்சி அமைக்குமானால் மக்களின் ஆணையை நிறைவேற்ற முடியாத சூழல் நிச்சயமாக உருவாகும்.

எனவே, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படவேண்டும். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் நிலைப்பாடானது நியாயமானதாகவே காணப்படுகின்றது. எனவே, அவரது கோரிக்கையை ஜனாதிபதியும் பிரதமரும் பரிசீலிக்கவேண்டியது இன்றியமையாதது என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-19#page-4

  • தொடங்கியவர்

சரியான நிலைப்­பாடு!!

 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணைந்து அமைத்­துள்ள கூட்டு அரசு நீடிக்க வேண்­டும் என்ற தனது நிலைப்­பாட்டை அரச தலை­வ­ரி­ட­மும், தலைமை அமைச்­ச­ரி­ட­மும் வலு­வாக முன்வைத்­துள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் இரா.சம்­பந்­தன்
உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் மகிந்த தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் அதிர்ச்சி வைத்­தி­யம் கொடுத்­ததை அடுத்து கூட்டு அரசு வலு­வா­கவே ஆட்­டம் காணத் தொடங்­கி­யுள்­ளது. ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மகிந்த தரப்­பு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ளது, தலைமை அமைச்­சர் பத­வி­யில் இருந்து ரணில் விலக்­கப்­ப­ட­வுள்­ளார் என்­றெல்­லாம் தொடர்ச்­சி­யான செய்­தி­கள் வெளி­யா­கிக் கொண்­டுள்­ளன. கொழும்பு உச்­சக்­கட்­டப் பர­ப­ரப்­பில் உள்­ளது. இத்­த­கைய பின்­ன­ணி­யில் இரா.சம்­பந்­தன் தலைமை அமைச்­சர், அரச தலை­வர் இரு­வ­ரை­யும் தனித்­த­னி­யா­கச் சந்­தித்து தனது நிலைப்­பாட்டை முன்­வைத்­துள்­ளார்.

தமிழ் மக்­க­ளின் முக்­கிய பிர­தி­நி­தி­யும், நீண்ட அர­சி­யல் அனு­ப­வ­மும் கொண்­ட­வ­ரான சம்­பந்­தன், கூட்டு அரசு தொடர வேண்­டும் என்று வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளமை காத்­தி­ர­மா­னது, சரி­யா­னது, ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யது.

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி மக்­கள் வழங்­கிய ஆணையை மீறக்­கூ­டாது என்­றும் மைத்­தி­ரி­யி­டம் சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார். இந்­தப் பத்­தி­யில் முன்பு ஒரு­த­டவை குறிப்­பிட்­ட­தைப் போன்று, கடந்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் மைத்­தி­ரிக்கு தமிழ் மக்­கள் தமது பெரும் ஆத­ரவை வழங்கி முன்­னாள் அரச தலை­வர் மகிந்­தவை வீட்­டுக்கு அனுப்பி வைத்­தமை மைத்­தி­ரி­யின் மீதுள்ள நம்­பிக்­கை­யால் மட்­டு­மல்ல.

 

மகிந்­த­வுக்கு இருந்த எதிப்­ப­லை­யும்­தான் அவ­ருக்கு எதி­ரான வாக்­கு­க­ளா­க­மாறி மைத்­தி­ரிக்கு வெற்­றி­யைத் தேடிக் கொடுத்­தன. மைத்­தி­ரியை அரச தலை­வர் என்ற நிலைக்கு உயர்த்­தின. அதுவே தமிழ் மக்­க­ளின் ஆணை­யா­க­வும் அமைந்­தி­ருந்­தது.

இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில் தற்­போது கூட்டு அர­சைக் குலைத்து விடக்­கூ­டிய தக­வல்­கள் வெளி­வந்­து­கொண்­டி­ருப்­பது அது­வும் மைத்­தி­ரி­யும் மகிந்­த­வும் இணைந்து ஆட்­சி­ய­மைக்­கும் சமிக்­ஞை­கள் வெளிப்­பட்­டி­ருப்­பது சம்­பந்­தன் சொன்­ன­தைப் போன்று மக்­க­ளின் ஆணையை மீறும் செயலே.

கூட்டு அர­சு­டன் இணைந்து புதி­ய­தொரு அர­ச­மைப்பை ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­யில் முழு­மூச்­சா­கச் செயற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. கூட்­ட­மைப்­புக் கேட்­டுக்­கொண்­டுள்ள, வடக்கு – கிழக்கு இணைப்பு, மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள் திரும்­பப் பெறப்­பட முடி­யாத இறுக்­க­மான பொறி­மு­றை­யூ­டாக அதி­கா­ரப் பகிர்வு, நிதித்­து­றைச் சுதந்­தி­ரம் ஆகி­ய­வற்­று­டன்­கூ­டிய அர­ச­மைப்பு உரு­வா­வது என்­பது சாத்­தி­ய­மல்ல என்ற நிலையே கிட்­டத்­தட்ட தற்­போது உரு­வா­கி­யுள்­ளது.

இவ்­வா­றி­ருக்க கூட்­ட­ரசு குலைந்­து­விட்­டால் அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் மேலும் பின்­ன­டை­வைச் சந்­திக்­கும். புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான பணி­கள் நிரந்­த­ர­மாக முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வும் வாய்ப்­புக்­கள் உள்­ளன.
தமிழ் மக்­க­ளின் ஏனைய கோரிக்­கை­கள், போர்க் குற்­றம் தொடர்­பி­லான பொறுப்­புக் கூற­லுக்கு ஐ.நா. வழங்­கி­யுள்ள அவ­கா­சம் ஆகி­வற்­றைக் கருத்­திற் கொண்­டா­லும் இந்த ஆட்சி நீடிக்க வேண்­டிய தேவை உள்­ளது.

ஆக, உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­களை கருத்­திற்கொண்டு அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லி­லும், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும் மக்­கள் வழங்­கிய ஆணையை மைத்­திரி – ரணில் கூட்டு அரசு புற­மொ­துக்­கி­வி­டக் கூடாது. அதுவே தமிழ் மக்­க­ளின் தேவை­யும் எதிர்­பார்ப்­பும்­கூட. அதையே இரா.சம்­பந்­த­னும் வலி­யு­றுத்­து­கி­றார்.

http://newuthayan.com/story/69919.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.