Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி பிரியங்க நாடு திரும்பவுள்ளார்.

Featured Replies

லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி பிரியங்க நாடு திரும்பவுள்ளார்.

 

 

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார்.

இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால் பாரிய சர்ச்சைகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டது.

அன்றைய தினம் அவரது சேவை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்தார்.

குறித்த இராணுவ அதிகாரி மரண அச்சுறுத்தல் விடுத்தார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் ரயன், சிமோன் மெக்டெனோ மற்றும் போல் ஸ்கலி ஆகியோர் குற்றம் சுமத்தினர்.

எனினும் குறித்த இராணுவ அதிகாரி தவறு ஒன்றையும் செய்யவில்லை என பாதுகாப்பு லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவினால் குறிப்பிடப்பட்டது.

இந்த சம்பவம் ஓரளவு மூடி மறைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் மீண்டும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பிரித்தானியா பொதுநலவாய சபை அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழர்களின் எதிர்ப்பின் பின்னர் பிரிகேடியர் பிரியங்க இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மீள அழைக்கப்பட்டமைக்கான காரணம் மர்மமாகவே உள்ளது.

 

http://www.tamilwin.com/uk/01/174873?ref=home-imp-parsely

  • தொடங்கியவர்

சர்ச்சைக்குரிய பிரிகேடியர் இலங்கைக்கு அழைக்கப்படுகிறார் ; காரணம் இது தான் !

 

(ரொபட் அன்டனி)

சர்ச்சைக்குட்பட்ட   பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ  அதிகாரி பிரிகேடியர் பிரியங்க  பெர்னாண்டோ கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக்கப்படுகின்றார்.  

Brigadier-Priyankara-Fernando_-Sri-Lanka

அதனை விடுத்து அவருக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கையோ விசாரணையோ  முன்னெடுக்கப்படாது என்று இராணுவப் பேச்சளார்  பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். 

தகவல் திணைக்களத்தில்  இன்று நடைபெற்ற செய்தியாளர்  சந்திப்பிலேயே  இதனைக் குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கேள்வி: பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ ஏன் இலங்கைக்கு  அழைக்கப்படுகின்றார்?

IMG-20180210-WA0005.jpg

பதில்: ஆலோசனை கலந்துரையாடல் ஒன்றுக்காக அவரை இராணுவத் தளபதி அழைக்கின்றார். 

 

கேள்வி: அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?

 

பதில்: இல்லை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. 

IMG-20180210-WA0004.jpg

அவர் பாரிய குற்றங்கள் எதையும் செய்ததாக கருதவில்லை.  அந்த இடத்தில்   பிரபாகரன்  மற்றும்  தனி ஈழம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேசியிருக்கின்றனர். 

 

அதனால் அந்த அதிகாரி அவ்வாறு நடந்துகொண்டிருக்கின்றார்.  அதில் எந்தப் பெரிய தவறையும் நாங்கள்  காணவில்லை. 

http://www.virakesari.lk/article/30873

  • தொடங்கியவர்

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்தப்படாது – இராணுவம்

Lt.-Colonel-Priyanka-Fernando-33.jpg?res
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வரும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிடம் விசாரணை எதுவும் நடத்தப்படாது என இராணுவம் அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது, புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தறுத்து கொலை செய்வதாக சைகை மூலம் காண்பித்தார் என பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரிகேடியர் பிரியங்கவை அரசாங்கம், நாட்டுக்கு மீள அழைத்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறு மீள அழைக்கப்பட்டமை விசாரணைகளுக்காக அல்ல எனவும் சில விடயங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக மட்டுமே எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது

http://globaltamilnews.net/2018/67831/

  • தொடங்கியவர்

கலந்துரையாடலுக்காகவே பிரியங்க அழைக்கப்படுகிறார்

7-191377480902904a0019ecc380dccf6d3ac5a767.jpg

 

(ரொபட் அன்டனி)

சர்ச்சைக்குட்பட்ட பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ  கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக் கப்படுகின்றார்.  

அதனை விடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையோ விசாரணையோ முன்னெடுக்கப்படாது.என்று இராணுவப் பேச்சளார் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.  

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

கேள்வி: பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ ஏன் இலங்கைக்கு அழைக்கப்படுகின்றார்?

பதில்: ஆலோசனை கலந்துரையாடல் ஒன்றுக்காக அவரை இராணுவத் தளபதி அவரை அழைக்கின்றார்.

கேள்வி: அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: இல்லை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

அவர் பாரிய குற்றங்கள் எதையும் செய்ததாக கருதவில்லை. அந்த இடத்தில் பிரபாகரன் மற்றும் தனி ஈழம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேசியிருக்கின்றனர். அதனால் அந்த அதிகாரி அவ்வாறு நடந்துகொண்டிருக்கின்றார். அதில் எந்தப் பெரிய தவறையும் நாங்கள் காணவில்லை.

கேள்வி: அவர் செய்தது சரியா பிழையா?

பதில்: அவர் மிகப்பெரிய தவறை செய்யவில்லை என்று கூறினேன் அல்லவா?

கேள்வி: அவரை இலங்கைக்கு மீள் அழைக்குமாறு சர்வதேசம் அழுத்தம் பிரயோகித்ததா?

பதில்: அவ்வாறான அழுத்தங்களுக்காக நாம் அவரை அழைக்கவில்லை. இதுஒரு வழமையான அழைப்பு. இங்கு ராஜதந்திர நிலைமைகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கேள்வி: ஏனைய இராணுவ வீரர்களை மனத்தாக்கம் அடைவார்களே?

பதில்: அதற்காக எமது வழமையான பணிகளை முன்னெடுக்காமல் இருக்க முடியாது. நாம் அவருக்காக முன்னிற்கின்றோம். அவர் தொடர்பில் எந்த விசாரணையும் ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.